Saturday, June 18, 2016

இன்னம்பூரான் பக்கம் [6] பெண்ணியம்: புதிய பார்வை [2]

இன்னம்பூரான் பக்கம் [6] 
பெண்ணியம்: புதிய பார்வை [2]



பிரசுரம்: http://www.vallamai.com/?p=69673
Saturday, June 18, 2016, 19:01
இன்னம்பூரான்
ஜூன் 16, 2016

கொள்ளிவாய் பிசாசு, பேய், குட்டிச்சாத்தான் ஆகியவை கண்டு அஞ்சுபவர்கள் ஆண் வர்க்கத்தைக் கண்டு நடுங்கவேண்டியதில்லை. ஆண்வர்க்கம் பேய்,பிசாசுகளுக்கு விலக்கு. ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்பார்கள். ஆண்வர்க்கம் கிறங்குவதுடன் சரி.

சில வருடங்களுக்கு முன் ஒரு மஞ்சள் நீராட்டு விழாவுக்கு அழைப்பு வரவே, எனக்கு செல்லமான அந்த சிறுமிக்கு என்ன பரிசு வாங்கலாம் என்று புரியவில்லை. தருணம் கிடைத்த போது, அவளையே கேட்டேன். ‘… உங்களிடம் கேட்க எனக்கு தயக்கம் இல்லை. எனக்கு இதெல்லாம் என்ன என்றே புரியவில்லை. கொஞ்சம் கிலியாகக் கூட இருக்கிறது. அம்மா ஏதோ கொஞ்சம் சொன்னாள். சரியாக புரியவில்லை. இதையெல்லாம் விளக்கிக் கூறும் புத்தகம் ஒன்றும், ஷீலா அணிந்திருக்கும் நெளி (ஒரு அழகிய வகை மோதிரம்) போல ஒன்று வாங்கி வரவும்…’ என்றாள். [‘பெரியவளான‘ அவள் ஒரு சிறுமி.] 

அவளை, சந்தேகங்கள் மட்டுமல்ல. இனம் தெரியாத பயம் ஒன்றும் சூழ்ந்திருந்தது. அது சில பழைய உண்மை சம்பவங்களை முன் கொணர்ந்தது. கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கு முன் ஒரு கர்நாடகமான குடும்பத்து சிறுமி ஒருவள் பூப்படைந்ததும், குடும்பமே ஒன்று திரண்டு, அந்த நிகழ்வை மறைத்து, உடனடியாக கிடைத்த மாப்பிள்ளைக்கு அவளை வரித்தார்கள்; அவனும் அற்பாயுளில் மறைந்தான். இது எந்த தெய்வத்துக்குப் பிரீதி என்று இன்று கூட எனக்கு புரியவில்லை. அது போகட்டும். அந்த காலகட்டத்து மற்றொரு செய்தியும் கிடைத்தது. பூப்படைந்தவுடன் தனிமை படுத்தப்பட்ட சிறுமிக்கு ஒன்றுமே புரியவில்லை. அச்சமும், பயமும், பீதியும் அவளை ஆட்கொண்டன. ஒரே உதறல். நோ ஆறுதல். பெற்றோர்களுக்கு பட்டு வாங்கவும், புட்டு அவிக்கவும் தான் நேரம் இருந்தது. பாவப்பட்ட அந்த ஜென்மம் துணைக்கு அமர்த்தப்பட்ட சிறுமியை தழுவியவாறு தூங்கினாளாம். இதற்கும் முந்திய இங்கிலாந்து கதை ஒன்று உளது. பூப்படைந்ததை, யாரும் விளக்காததால், ஒரு மர்மமான விகாரமாகக் கருதி ஒரு சிறுமி தன்னையே மாய்த்துக்கொண்டாள். அந்த சோகமான நிகழ்வு ஒரு நன்செயலுக்கு வித்திட்டது. ‘Befrienders International’ என்ற புனிதமான தன்னார்வ அமைப்பு உருவாகி, எத்தனையோ மன சஞ்சலங்களை நிவர்த்தி செய்து, பலரின் வாழ்க்கையை சீர்படுத்தியுள்ளது. அதன் மறுபதிப்பாகத் தான் ‘ஸ்நேஹா’ என்ற அமைப்பு சென்னையில் அற்புதமான சேவை செய்து வருகிறது. சரி, விஷயத்துக்குத் திரும்பி வருவோம்.

பெண்ணியத்தின் புதிய பார்வைக்கு, பெண்ணினம் செய்யக்கூடிய பணிகள் கொஞ்சநஞ்சமில்லை. இந்த தொடரில் ஆணாதிக்கம், வன்முறை, பெண்ணின் மேன்மை, இருபாலாரும், எதிரும் புதிருமாக நிற்காமல் இணைந்து வாழ்வதின் மகிமை, மேலும் பற்பல விஷயங்கள் பேசப்படும். பட்டியலிட்டு, கோர்வையாக எழுதினால் தான் தெளிவு கிடைக்கும். அதனால், எந்ததொரு பகுதியும் பெண்ணியத்தின் புதிய பார்வையின் முழுமையான புத்தகமாக அமையாது. அந்த எல்லையை புரிந்து கொண்டு வரக்கூடிய கருத்துக்கள் மிகவும் உதவும். அவை தாராளமாகவே மாற்றுக்கருத்துக்களாக இருக்கலாம், வசை பாடாமல்.

சிறார்கள் வளர்வதற்கும், சிறுமிகள் வளர்வதற்கும் இடையே பல வித்தியாசங்கள் இருக்கின்றன. அரும்பு மீசையும், கனத்த குரலும், அலை பாயும் கண்களும், முரட்டுத்தனமும் சிறார்கள் வளரும்போது தோன்றும் சின்னங்கள். அவை நல்வரவுகளே. அவனை அவை பாதித்து அலக்கழிப்பதில்லை. கொஞ்சம் விட்டுப்பிடித்தால் (திட்டமிட்டு) அவர்களை சமாளித்து விடலாம். உடலும், மனமும் நன்கு உரமிட்டு வளர உதவமுடியும். சிறுமிகளின் வனப்பு கூடுவதை கலையுணர்வுடன் பார்த்தால் அது ஒரு கண்கொள்ளாக்காட்சி. இறைவனின் வரம். இருபாலாருக்கும் பாலியல் ஈர்ப்பு ஏற்படுவது திண்ணம். அது இயற்கை. உடனுக்குடன் பாலியல் கனவு நனவாகுவது எந்த சமூகத்திலும் இயலாது என்பதால், கலக்கம், குழப்பம், சகபாடிகளிடமிருந்து தப்பும் தவறுமான செய்திகள் ஆகியவை இருபாலாரையும் பாடாய் படுத்தும். இது நாம் யாவரும் அனுபவத்தில் கண்டது தான். 

ஆனாலும் பூப்பெய்வது எப்போது நிகழும் என்பது தெரியாது என்பதாலும், சில பெற்றோர்கள் தக்கதொரு ஆலோசனை அளிப்பதைத் தள்ளிப்போடுவதாலும், அதனுடைய உடனடி பாதிப்பு பீதி அளிப்பதாக இருப்பதாலும், இந்த வாழ்வியல் நிகழ்வை பற்றி ஆண்கள் அறிந்து கொண்டதும், அதற்கு அனுசரித்து நடப்பதும் மிக குறைவு. சற்றே ஆங்கிலம் கலப்பதில் தவறு ஒன்றுமில்லை. செய்தி சேரவேண்டும். அவ்வளவு தான்.முன்னோடியாக ஒரு ஜோக். புருஷனும் பொஞ்சாதியும் (ஷிகாகோ சாதி நூல் நினைவுக்கு வருகிறது.)பலமுறை ஒத்திகை (பெண்ணரசியிடம் பேசவேண்டியதை) பார்த்த பின் அம்மாக்காரி மென்மையாக அணுகி, ‘இந்த பாலியல் விவகாரம்…’ என்று ஆரம்பித்தவுடன், பெண் சொன்னாளாம், ‘உனக்கு என்ன தெரிய வேண்டும். ஆண்டவனை – கூகிளாண்டவனை கேட்டு சொல்கிறேன்’ என்றாளாம் !

“…As knowledge has accumulated about human development during puberty and beyond, and about the development of the brain in particular, it has become clear that the notion of adolescence as a stage of sexual maturation is far too simplistic.

1. Many interlinked neuroendocrine changes and processes influence adolescent behaviour, as well as the way young adults think and make decisions.

2.A better understanding of these changes and their dynamic extension into early adult life offers not only an opportunity for a new approach to minimising risks to health and wellbeing, but also a moment to engage young people during years that have such far-reaching consequences for their future adult life, and even for future generations…”.

சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, June 17, 2016

Nine decades, eighty-eight stories The Hindu

Return to frontpage

FEATURES » METROPLUS

Published: June 17, 2016 16:00 IST | Updated: June 17, 2016 16:00 IST  CHENNAI, June 17, 2016

Nine decades, eighty-eight stories

  • Subashree Krishnaswamy and Dilip Kumar Photo: V. Ganesan.
    THE HINDU
    Subashree Krishnaswamy and Dilip Kumar Photo: V. Ganesan.
  • Cover of The Tamil Story
    Cover of The Tamil Story

The Tamil Story, edited by Dilip Kumar and translated by Subashree Krishnaswamy, celebrates regional authors of the short story form

Sometime in 1949, S.V. Vijayaraghavachari, more popularly known to his legion of readers as SVV, wrote about a couple that sits down to calculate the month’s expenditure on milk. They start off having a conversation, bicker, and, finally, the husband walks out in a huff, saying only an accountant would be able to help her. In just about four pages, you get a peek into the life of the man and his wife. The cow and buffalo milk they buy, the people who came visiting, the places they’ve travelled to, what they owe the milkman, their attitude. The story appears on page 81 of the 572-page The Tamil Story — Through the Times, Through the Tides, but you laugh long after you’ve read the tome.
There’s a vein of humour through the book, filled with lovely short stories that have been curated with an affection for the Tamil short story form.
The book follows an earlier attempt (featuring three decades) also edited by Dilip, published in 1999. Its reception made it clear that a book delving into the birth and growth of the form in Tamil would be more than welcome.
Edited by Dilip Kumar and translated by Subashree Krishnaswamy, the book is an attempt to encapsulate in these pages, the works of the pioneering stalwarts of the Tamil short story, and those who have kept it alive over the years. It spans nine decades (from 1913-2000), offering the reader a ringside view of what life used to be. Short stories are geographical indicators and historical pointers to the life and times they are set in, and these stories fulfil that task.
The best part is that the book also features authors who we must read today, simply because of their historical significance in the context of the short story. For instance, the very first story, Ammani Ammal’s ‘Expectation and the Event’ (Sankalpamum Sambavamum, 1913) about a tree that is chopped off. There’s hope, yearning, aspiration, and finally philosophical resignation. A tree also appears as the protagonist in Va Ve Su Iyer’s ‘Peepul Tree by the Tank’ (Kulanthangarai Arasamaram), written in 1915. How will a tree react when it sees a child, who’s played in its shade and walked past as a pretty young girl and bride, dead?
Seated in Dilip’s office near Ramakrishna Mutt, Mylapore, he and Subashree discuss the process that went into creating this treatise, over a period of six years. Their smiles reflect the inner joy of people who’ve read sublime prose, re-read it, and presented it to a whole new audience. “This is a very special book — educative, enjoyable, and we are the richer for it,” says Dilip. As for Subashree, the guiding principle was that the book must do justice to the authors and bring them to the spotlight.
“There was joy, but also a great deal of responsibility. I did not want to do anything that would let them down,” she says.
The stories also speak of a time when it was possible to discuss caste divisions and repression with conviction and present varied perspectives. Did they ever wonder how they will go down now?
“Not really. These are stories that have been written and accepted in that time and era. Today, due to the prevailing circumstances, it is difficult to socially place a character. So, we have ended up sanitising stories, and removed them of all nativity. But, it is important to read these stories that show how people sought emancipation, how they put their point across, how cosmopolitan we were,” says Dilip.
The book is scented with Tamil words, and even some colloquial phrases. “That’s because the language is rich and has varied forms of kinship terms; in Tamil, for uncle, you have a mama, chithappa, periyappa… you have to place them in context. Also, you can’t stick to the formal language structure in a story such as ‘Kannan’s Grand Mission’ (Aa Madhavaiah, Kannan Perunthoothu, 1925) about five Brahmin women walking by chatting after a dip in the Tamaraparani. It has to be informal and chatty to convey the jovial nature of the exchange,” says Subashree.
What amazed both Dilip and Subashree during the process of putting together the compilation was how the early writers had adopted and perfected the short story form. “We stopped with translating; nothing has been added or deleted,” she says.
Another aspect the two of them looked for while choosing the stories — and there was a wealth of them — was the universality of the idea. “They had to provide a new dimension to those receiving it, give them something novel to ponder about,” says Dilip.
The stories, a judicious mix of authors and thoughts, draw from everyday motifs to colour your imagination. There’s an interplay of various things — irony, wry wit, philosophy, acceptance, dignity… “Also, they are layered and nuanced,” says Subashree.
The book is a labour of love, and could not have found better people to handhold it. Dilip, a Gujarati, is self-taught and sought refuge in books as a young boy. Today, he’s an expert curator, culling out gems from a sea of hopefuls. Subashree has been editor and translator for long, and that helped the two of them quickly finish processes that might have taken time. “Each story took us about a week to 10 days. By the end of that, Subashree would have a near-final draft,” says Dilip. But for that, the book would have taken longer, he adds.
But what the book surely does is transport you to a Tamil Nadu of yore, and map its progress and concerns. It’s almost like travelling back to understand better where we stand today.
The book, published by Tranquebar Press, an imprint of Westland, is priced at Rs. 799.




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, June 16, 2016

Hearing loss

This is the Editor's choice article in the latest Issue of Lancet. In view of the widespread prevalence of hearing loss, I reproduce that article below,
as I believe in sharing verified information.
*

Hearing loss: an important global health concern

“Deafness separates people from people”, said the deaf-blind American author Helen Keller. Hearing loss can have profound effects not only on interpersonal communication, but also on health, independence, wellbeing, quality of life, and daily function. In 2012, WHO estimated that 360 million people (5·3% of the world's population) were living with disabling hearing loss, while around 15% of the world's adult population had some degree of hearing loss. Disabling hearing loss is unequally distributed across the world, with the greatest burden in the Asia-Pacific area, southern Asia, and sub-Saharan Africa. Despite the fact that hearing loss can be prevented and treated, many people with hearing loss in both resource-poor and high-income settings do not seek or receive hearing health care, and the current production of hearing aids meets less than 10% of the global need.
Recognising the high unmet need of hearing health care in the USA, on June 2, the American National Academies of Sciences, Engineering, and Medicine issued a new report—Hearing Health Care for Adults: Priorities for Improving Access and Affordability. Establishing hearing loss as an important public health and societal concern is one of the key messages of the report, whereby hearing loss should no longer be regarded as an individual problem, but must be addressed by actions at multiple levels engaging individuals and families, the health-care community, non-profit organisations, industries, and government. The report identifies the major barriers to widespread use of hearing health care, including the high costs of hearing health care, lack of insurance coverage, the stigma associated with hearing difficulties and wearing hearing aids, and limited awareness of hearing health and the range of available options. Notably, nearly all of the costs of hearing health care are covered by the individual in the USA. Navigating the hearing health-care system can be confusing and frustrating for people living with hearing loss, as they can be left with no clear guidance on what will best fit their financial, health, social, and hearing needs, as pointed out by Dan G Blazer, chair of the Committee on Accessible and Affordable Hearing Health Care for Adults.
Accordingly, 12 recommendations to guide and mobilise the efforts of all the relevant stakeholders in the hearing health-care system are highlighted in the report. For instance, all the relevant agencies of hearing health care need to collaborate to improve population-based information on hearing loss and hearing health care, to develop and promote measures to assess and improve quality of hearing health-care services, and to empower consumers and patients in their use of hearing health care. Furthermore, the report acknowledges that evidence on the effectiveness of interventions and outcome evaluation are strikingly absent, and proposes a series of research needs and priorities such as randomised controlled clinical trials evaluating the efficacy of hearing aids and well-designed longitudinal population-based studies that adequately control for confounders to determine the effect of hearing loss on individuals, families, and society.
Although initially developed to inform hearing health care in the context of the USA, the report has global implications in terms of prevention and treatment, particularly when addressing hearing loss as an important global health challenge. However, one extremely important area the report fails to address is the serious health concern of children living with hearing loss. Worldwide, 9% of people living with hearing loss are children younger than 15 years, and the prevalence of disabling hearing loss in children in some low-income and middle-income regions can be several times that of high-income regions. The effect of hearing loss on a developing child is quite different from the effects of hearing loss that occurs in adulthood, with substantial negative influences on children's development and educational achievement. However, hearing loss in children can be mitigated through public health measures such as immunisation, avoiding the use of ototoxic drugs, and early identification and intervention for both acute and chronic ear conditions.
Hearing loss has been ranked as the fifth leading cause of years lived with disability in the Global Burden of Disease Study 2013, higher than many other chronic diseases such as diabetes, dementia, and chronic obstructive pulmonary disease. However, hearing loss receives limited research funding and public awareness. Global multidisciplinary and collaborative efforts are urgently needed to address the health needs of the child and adult with hearing loss. Hearing loss cannot and must not continue to be a silent epidemic.
Thumbnail image of Figure. Opens large image
Science Photo Library


Foot Note. In UK, National Health Service lends hearing aids on long term basis - practically for life time and renders free servicing also.இன்னம்பூரான்

Sunday, June 12, 2016

பெண்ணியம்: புதிய பார்வை [1]இன்னம்பூரான் பக்கம் [6]

இன்னம்பூரான் பக்கம் [6]
 பெண்ணியம்: புதிய பார்வை [1]


Monday, June 13, 2016, 5:12:
பிரசுரம்: http://www.vallamai.com/?p=69579

இன்னம்பூரான்
ஜூன் 11, 2016

பல வருடங்களாக பெண்ணியத்தைப் பற்றி பலர் எழுதுவதைப் படித்து வருகிறேன். எனக்கும் அது பற்றி ஆழமான கருத்துக்கள் உண்டு. சமுதாயத்தின் பல படிநிலைகளில் வாழும் மனிதர்களுடன், குறிப்பாக பெண்பாலாருடன் என்னால் இயல்பாகப் பழக முடிவதால், பெண்பாலாரில் பலரின் கருத்துக்களம், எண்ணவோட்டம், நினைவலைகள், உள்ளக்கிடக்கை, செயல்பாடுகள், அணுகுமுறை, வாழ்க்கை வழங்கிய மர்மங்கள் ஆகியவற்றை, சட்டப்பூர்வமான ஆலோசகன், நண்பன், நேசன், காதலன், கணவன், உடன்பிறப்பு, வாரிசுகள் என்ற பலவித கோணங்களில் ஓரளவு புரிந்து கொள்ளும் வாய்ப்பு பல வருடங்களாக எனக்குக் கிட்டியிருந்ததாலும், தனிப்பட்ட முறையில் பகிரப்பட்ட ரகசியங்களை பாதுகாப்பேன் என்று மகளிர் என்னிடம் நம்பிக்கை வைத்திருப்பதாலும், என்னுடைய ஆழமான கருத்துகள் அசைக்கப்பட்டுள்ளன, கிளரப்பட்டுள்ளன. முரண் தோன்றி மறைந்ததும் உண்டு. இனியும் மாறலாம், தீவிரமான சிந்தனைகள் பகிரப்பட்டால். என் பேச்சுரிமை தங்கு தடையில்லாமல் இயங்கும்.

பெண்ணியம் ஒரு மென்மையான சமுதாய சிந்தனை, நடைமுறை, எதிர்பார்ப்பு. மெல்ல, மெல்ல நடக்கும் புரட்சி. உலகெங்கும் பெண்களுக்கு பல நூற்றாண்டுகளாக நியாயம் கிடைக்கவில்லை. என் பாட்டி பள்ளி சென்றதில்லை. ஆனால், அவளுடைய தெளிவு வீட்டு ஆண்மகன்களில் சிலருக்கு சுத்தமாக இல்லை. என் அத்தையை படிக்கவைத்திருந்தால், அவர் கண்டிப்பான நிர்வாகத்தை வழி நடத்தியிருப்பார். ஏன்? தானே பக்கோடா பொட்டல காகிதத்தைப் பின்னர் படித்து வியக்கும் வகையில் விமர்சனம் செய்வார். பல மொழிகள் கற்றுக்கொண்டார். என் தங்கைகளின் படிப்பு படி தாண்டவில்லை. அடுத்த தலைமுறையில் முனைவர்களும், கலைஞர்களும், நிர்வாகிகளும் தலை எடுத்தனர்: என் பாட்டி படித்திருந்தால், நாங்கள் எங்கேயோ போயிருப்போம். சுற்றத்தில் இந்த முன்னேற்றம் குறைவு. ஆனால், காதலித்து கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் உண்டு. யாருமே குற்றம் காணவில்லை.

தலித்துகளில் கடை நிலை எனப்படும் ஆதி அருந்ததி குடும்பம் ஒன்று எங்களுடன் வாழ்கிறது. தலைவியை இந்திரா காந்திக்கு ஒப்பிட்டால், மிகையாகாது. சாக்கடையை துப்புறவு செய்யும் அவரும், அவரது பெருந்தன்மை கணவரும், தங்கள் குக்கிராமங்களிலிருந்து வறுமையான குடும்பங்களை வரவழைத்து, வேலை வாங்கிக்கொடுத்து, பற்பல உறவினர் முன்னேற ஏற்பாடு செய்தார்கள். [அவர்கள் இப்போது இல்லை]. பிராமணகுடும்பங்களில் இதைக் கண்டிருக்கிறேன், மிக சொற்பமாக. ஆனால், பெண்கள் பின் தள்ளப்படுவார்கள். அப்படி வந்த இரண்டாம் தலைமுறை வாரிசு, இன்றளவும் எங்களுடன் 40 வருடங்களாக தொடர்பில் இருக்கிறார். அத்தகைய குடும்பங்களில் கணவன்மார் குடிபோதையில் இருப்பார்கள். வீட்டுக்கு சல்லிக்காசு கொடுக்கமாட்டார்கள். மகனும், மகளும் படித்து முன்னேறக்கூடாது என்ற எண்ணத்தால் தலித் சான்றிதழ்களை கூட தர மறுத்தான், அவளுடைய கணவன். என்னிடம் செம்மையாக அடி வாங்கின பின் தான் தந்தான். ஒரு பிரபல தலித் உத்தியோகஸ்தர் உதவியுடன், ஒரு ஐயங்கார் வந்து சிறார்களுக்கு சான்றிதழ் வாங்க உதவினார். ஆனாலும் நம் தலைவிக்கு பெண்ணை படிக்க வைக்க ஆர்வமில்லை; கணவன் கிடைக்கமாட்டான் என்ற கவலை. என் மனைவி வஸந்தா அடம் பிடித்து, அந்தப் பெண்ணை படிக்க வைத்தாள். அந்தப் பெண் தடபுடலாக ஆங்கில இலக்கியத்தில் முது நிலை பட்டம் வாங்கியுள்ளாள். சுருங்கச்சொல்லின், பெண்மையை நசுக்க விரும்புவது ஆண் வர்க்கம்; உதவி அந்தந்த தலை முறை பெண் சமுதாயம்.

இன்று கூட, ஒரு மேல்மட்டத்தை சார்ந்த முதிய பெண்மணி ‘பெண்கள் இருக்கும் இடம் தெரியக்கூடாது; வேலைக்கு செல்வது கற்பை குலைக்கிறது என்றார். எனக்கு வேண்டப்பட்ட ஒரு செல்வந்தர், நாயக்கர் இனம். தன் பெண்ணின் திருமணத்துக்கு என்னை அழைக்க வந்தார், குடும்பத்துடன். எல்லாரிடம் அவருடைய நன்கு படித்த மணப்பெண் வேலைக்கு செல்வாள் என்று சொல்லி விடுங்கள் என்ற சத்தியப்பிரமாணம் வாங்கினேன். என்னிடம் சம்மதம் சொல்லி விட்டு, அங்கு திட்டமிட்டு, அதை கோட்டை விட்டார். இது எல்லாம் 2016ம் வருடம். இது நிற்க.

இவ்வாறு என்னை எழுதத் தூண்டியது சில மணி நேரம் முன்னால் வந்த ஒரு நாளிதழ் செய்தி. டாடா உலகளாவிய ஒரு மாபெரும் தனியார் மூலாதார நிறுவனம். அதன் பிரிவுகள் பல. ஒவ்வொன்றும் பெரிய தொழிற்சாலைகள், ஹோட்டல், மற்றும் பற்பல. அந்த மூலாதார கம்பெனியில் 1.45 லட்சம் பெண்கள் ஊழியத்தில் இருந்தும் உயர்ந்த பதவிகள் அவர்களுக்குக் கிட்டுவது அரிது. பலர் பொறுப்பான பதவிகள் வகிக்கிறார்கள், ஒரு எல்லைக்கு உட்பட்டு. ஒரு ஆணுக்கு அந்த எல்லையில்லை. ஒரு நிறுவனத்திலாவது தலைமை பொறுப்பு பெண்ணினத்துக்குக் கொடுக்கப்படவில்லை.

இது மகிழ்ச்சி தரும் செய்தி அல்ல. தற்காலம் முதன்மை பொறுப்பு ஏற்று இருக்கும் திரு.சைரஸ் மிஸ்திரி அவர்கள் 2020ம் ஆண்டுக்குள் ஆயிரம் மேலாண்மை பொறுப்பு பெண்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று திட்டமிட்டு, இப்போது 300 பெண் அதிகாரிகளுக்குத் தீவிரபயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். அதன் நுட்பம் யாதெனில், எல்லாவிதமான துறைகளின் தலைவர்கள் பயிற்சி அளிப்பதால், இந்த பெண்ணரசிகள் எல்லாத் துறைகளிலும் துரிதமாக முன்னேற முடியும் என்பதே. திரு.சைரஸ் மிஸ்திரி அவர்களின் கனவு நனவு ஆகட்டும் என வாழ்த்துவோம்.

சீரும் சிறப்புமாகவும் முன்னோடியாகவும் திகழும் டாடா நிறுவனத்திலேயே இந்த கதி. மற்றவர்களை பற்றி கேட்கவேண்டாம். ஆண் சுவபாவத்தை பற்றி ஒரு உண்மை விளம்பல். எங்கள் தணிக்கைத்துறையில் அல்லி ராஜ்யம் என்று சொல்லலாம். பெண் அதிகாரிகள் தான் அதிகம். நான் 1955ல் சேர்ந்த போது பெண் அதிகாரிகள் பத்து பேர்கள் கூட இல்லை. ஆரம்பகாலத்தில் பெண் அதிகாரிகளிடம் வேலை செய்வதை நான் தட்டிக்கழிக்கப் பார்த்தேன். ஆனால், பெண் அதிகாரிகளுக்கு நல்ல பயிற்சி அளிக்க வாய்ப்பு கிடைத்தது. பெண்ணினத்தின் திறன் புரிந்தது. 25-30 வருடங்கள் முன்னால், ஆணாதிக்கம் கொடி கட்டி பறந்த ஒரு அலுவலகத்தில், ஒரு இக்கட்டான நிலையை சமாளிக்க ஒரு பெண்ணதிகாரிக்கு நான் கொடுத்தப் பொறுப்பு மிகுந்த பக்குவத்துடன் கையாளப்பட்டது. அதனால், எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அது பெரிய கதை. யாராவது கேட்டால், பார்த்துக்கொள்ளலாம்.
பல காலகட்டங்களில் நிகழ்ந்தவற்றை நான் இணைத்து வழங்கியதின் காரணம்: 

பெண்ணியம் தலையெடுக்க சமுதாயம் திருந்த வேண்டும். மேலும் திடுக்கிடும் அட்டூழியங்களைப் பற்றி எழுத விருப்பம். பார்க்கலாம். வெறும் பேச்சு வீண்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, June 6, 2016

6 6 66 இன்னம்பூரான் பக்கம் 1 [3] சமுதாயமும், நீயும், நானும், அவரும். [3]

இன்னம்பூரான் பக்கம் 1 [3] 
சமுதாயமும், நீயும், நானும், அவரும். [3]

6 6 66
இன்னம்பூரான்
6. 6. 2016

பிரசுரம்: http://www.vallamai.com/?p=69484 
Monday, June 6, 2016, 22:10 





[Try watching this video on www.youtube.com
, or enable JavaScript if it is disabled in your browser.]



“பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க…முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை…ஒப்பிலாத சமுதாயம்…உலகத்துக்கொரு புதுமை…” என்று பாடிய மகாகவி சுப்ரமண்ய பாரதியார்…தனியொருவனுக் குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் “ என்றும் சூளுரைத்தது ஆவேசம் மட்டுமல்ல. அதனுள் ஒரு பொருளியல் தத்துவம் அடங்கியுள்ளது. அந்த தத்துவம் உலகுக்கு பொதுமை. நடைமுறை அவ்வாறு இல்லாததால், ஏழ்மையும் திரவிய செருக்கும் எல்லா நாடுகளிலும், அக்கம்பக்கத்தில் பரவி வாழ்கின்றன. இது நிற்க.

இந்தியா விடுதலை பெற்ற 1947ம் வருடம் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய். அந்த டாலரை 67 ரூபாயில் வாங்க, இன்று சிங்கி அடிக்க வேண்டி இருக்கிறது. அரசியல் பொருளியலாகவும், பொருளியல் அரசியலாகவும் மக்களை அலக்கழித்தால், ஏன் ரூபாய் தம்பிடியாகாது! ‘ஸப்ஸே படா ருபையா’ என்று மகமூது 1976ல் எடுத்த சினிமா ஒரு பொருளியல் விசாரணை: பாரத சமுதாயம் வாழ்கவேண்டும் என்றால் மக்களிடையே/ உலக சந்தையில் ரூபாய் மதிக்கப்படவேண்டும் என்பதே. இதுவும் நிற்க.

தலைப்புத்தேதியை 6 . 6. 66. கவனிக்கவும். என் சம்பந்தப்பட்டவரை அது மறக்க முடியாத தேதி. எனக்கு ‘உகாய்’ என்ற அடைமொழி ஒன்று உண்டு. தபதி நதியில் உகாய் என்ற பழங்குடி கிராமத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டுப்பணி , மற்றும் பல அரசு ஊழியங்களிலும் நிதி ஆலோசகராக பணி ஏற்றத் தருணம். நிதி தான் தட்டுப்பாடு. 6.6.66 அன்று மத்திய அரசு திடீரென்று ரூபாயின் மதிப்பை 37.5% சரித்து விட்டதால், நாங்கள் ஒப்பந்தம் போட்டிருந்த எல்லா வெளிநாட்டு கனரக ஊர்திகளின் இறக்குமதி செலவு விண்ணை தொட்டது. முதல்வர் என்னை அழைத்து ‘சிக்கனம் செய்வாயாக’ என்று ஆணையிட்டார். நானும் கோடிக்கணக்கில் செலவை குறைத்தேன். அப்படியும் போறாக்குறை தான். இதுவும் நிற்க.

கி.பி. ஆறாவது நூற்றாண்டிலேயே ரூபாய் நாணயம் உருவெடுத்தது. ஷெர்ஷா சூரி என்ற மாமன்னரின் காலத்தில் தான் (16வது நூற்றாண்டு) வெள்ளி ரூபாய் அச்சடிக்கப்பட்டது. (அவர் தான் நாடு முழுதும் நீண்ட ராஜபாட்டை அமைத்தார்.). இந்தியா முழுதும் வணிகம் பொருட்டு, லேவாதேவி பொருட்டு பண நடமாட்டம் கனஜோராக 18ம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்தது. வழிப்பறி கொள்ளையும் அடக்குமுறையும் நிலுவையில் இருந்தன.

விடுதலை பெற்ற காலகட்டதில் நம்மிடையே பிரபல நிதி அமைச்சர்கள் இருந்த போதிலும், ‘ the monkey called ‘money’ – in Crowther’s words) பற்றிய நுட்பங்கள் ஆளுமையில் உற்றதொரு இடம் பெற்றதாகத் தெரியவில்லை. அரசியல் சோவியத் ரஷ்யாவை நாடியது. அமெரிக்காவுடன் உறவாட இந்தியாவும் தயங்கியது. சோவியத் ரஷ்யாவும் கவனத்துடன் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இறக்குமதி ஒவ்வாமையை, போதிய காரணமில்லாமல் இந்தியா, கடை பிடித்ததால், தளவாட இறக்குமதியெல்லாம் ரஷ்யாவிடமிருந்து; ரூபிள்-ரூபாய் நீண்டகால ஒப்பந்தம் இந்தியாவை தலையெடுக்கவிடவில்லை.

இந்த அழகில், பொன்னும், பவுனும் ரூபாய்க்கு அடிப்படை என்ற கொள்கை இருந்தது. 1947ல் ஒரு ரூபாய்க்கு 4.15 க்ரைன் பொன் வாங்கலாம். 6.6.66. அன்று அது 1.83 க்ரைன் ஆக குறைந்தது. ஒரு நாள் முன்னால் ஒரு டாலரின் விலை ரூ.4.75. 6. 6. 66. அன்று அது ரூ.7.50 ( 57%) ஆக எகிறியது. இதற்கு காரணம், இங்கிலாந்து பவுன் உடன் இணைந்து ஏறி இறங்கியது ரூபாய். பவுனோ, டாலருடன் இணைந்து ஏறி இறங்கியது. ஆகஸ்ட் 18, 1949 அன்றே, இந்த முதல் பாடம் நடந்த பின்னரும், இந்தியா பழைய சுருதியில் தான் இசைத்து வந்தது. பணவீக்கமும் 5.8%லிருந்து அடுத்த வருடத்திலேயே [1967] 6.7% அளவுக்கு ஏறி விட்டது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

சைனா, பாகிஸ்தான் போர்களினால் அதீதமான செலவு ஏற்பட்டதாலும், ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்ற கோட்பாட்டாலும், அதனால் பணவீக்கம் குறையும், இறக்குமதி தாராளமாகும், மேனாட்டு கொடை அதிகரிக்கும் என்ற எதிர்ப்பார்ப்புகளினாலும், இந்த தடாலடி நிறைவேறியது. வேறு வழிகள் தென்படவில்லை என்று கூட சொல்லலாம். ஆனாலும், அவ்வாறு நிறைவேறவில்லை. மறுபடியும். 1992ல், அக்காலத்து நிதி அமைச்சர் மன்மோஹன் சிங் ரூபாயின் மதிப்பை ( ரூ 25: டாலர் – ரூ.32: டாலர்) குறைத்தார். பின்னர், கோட்பாட்டை சந்தை உள்வாங்கிக்கொண்டது. அதனால் தான் நாள்தோறும் மாற்றங்கள். ரூபாய் மேலும் மேலும் அடி வாங்கிக்கொண்டிருக்கிறது, தற்காலம். எப்படி என்றால்:
  • 6. 6.66: $! = ரூ. 7.50.
  • 6..6.2016 $1 = ரூ. 67.
  • தற்காலத்து அன்னிய செலவாணி பற்றாக்குறை: 1.5% மட்டுமே.
  • இந்தியாவின் அன்னிய செலவாணி சேகரிப்பு $ 360 பிலியன் (ஒன்பது மாதம் தாங்கும்).
  • 2015ல் அன்னிய செலவாணி நல்வரவு அதிகமாக இருப்பது இந்தியா தான்.

நம் இந்தியா சுபிக்ஷம் அடைய வேண்டும். சுப்ரமண்யம் சுவாமி – ரகுராம் ராஜன் – பிரதமர் விவகாரம் ஒரு பெரிய காண்டம். பின்னர் பார்க்கலாமா? முதலில் இதற்கு வாசகர்கள் கிடைத்தால் தானே, அங்கே போகலாம்.

ஆவணப்பட்டியல்:
விழியம்:
http://www.youtube.com/watch?v=qUoB80sKxc4″ target=”_blank”>Try watching this video on


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, May 31, 2016

இன்னம்பூரான் பக்கம் [1]:சமுதாயமும், நீயும், நானும், அவரும்.:மண்ணின் மைந்தர்களா, இவர்கள்? 1

இன்னம்பூரான் பக்கம் [1]

சமுதாயமும், நீயும், நானும், அவரும்.
மண்ணின் மைந்தர்களா, இவர்கள்? 1
இன்னம்பூரான்

வல்லமை பிரசுரம்: http://www.vallamai.com/?p=69339

WORD CLOUD CONCEPT ILLUSTRATION OF DIABETES CONDITION
சில வருடங்களுக்கு முன் வல்லமையில் நீரிழிவு நோயை பற்றி எழுதியிருந்தேன். அதிகமான வாசகர்கள் என்றும் சொன்னார்கள். சென்னையின் ஒரு பிரபல டாக்டர் தன் ஆஸ்பத்திரியின் வரவேற்பு அறையில் லாமினேட் செய்து அதை வைத்ததாக கடிதம் எழுதினார். செல்வன் மாற்றுக்கருத்து கூறினார். அது டாக்டர்களை பற்றி. ஆனாலும், நம் மக்கள் நடந்து கொள்ளும் முறை அசட்டுத்தனமாக இருக்கிறது. நாட்தோறும், முறைகேடாகத் தான், அபாயமாகத்தான் எதிர்சாரியில்பயணம் செய்கிறார்கள். இது நிற்க.

நான் எந்ததொரு வைத்திய முறைகளையும், மேனாட்டு வைத்தியம், ஆயுர்வேதம், சித்தம், இயற்கை, ஹோமியோபதி, அக்குபஞ்சர் வகையறா எதையும் சிபாரிசு செய்யவில்லை. எல்லா முறைகளையிலும் நிவாரணமும் பக்க விளைவுகளும் உண்டு. ஆனால், நிச்சியமாக கொலை செய்யக்க்கூடியவர்கள், போலி டாக்டர்கள், அரைகுறை வைத்தியர்கள், சுற்றி வளைத்து, பொய்யை மெய்யாக்கும் விளம்பரங்கள், இயலாததை செய்து காட்டுவதாக உத்தரவாதங்கள். நீங்கள் உலகமெங்கும் சென்று உண்மையை ஆராய்ச்சி செய்து பாருங்கள். நீரிழிவு தீராத வியாதி. உணவு கட்டுப்பாடு, தேக பயிற்சி உதவும், ஆரம்பகாலத்தில். பின்னர் மருந்து, மாத்திரை. சிலருக்கு இன்ஸுலின் போட்டுக்கொள்ள வேண்டி வரும். அது தாய்ப்பால் போல. நான் நாட்தோறும் நான்கு முறை இன்ஸுலீன் போட்டுக்கொள்கிறேன். அதை நிறுத்தி விட்டு, அத்தையும், இத்தையும், கையாலகாதத்தையும் செய்வேன் என்ற வீராப்பு மக்களை ஏமாற்றுவது, வஞ்சகம், கொலைக்கு அஞ்சாத நெஞ்சம்.

இந்த கதையை கேளுங்கள்: உசாத்துணையும் கொடுத்து இருக்கிறேன்.
“இன்சுலின் ஊசியை நிறுத்தி சொன்ன அக்குபஞ்சர் டாக்டர்…. திருப்பூர் மாணவன் பரிதாப பலி By: Mathi Published: Saturday, May 28, 2016, 15:31 [IST] திருப்பூர்: “
“அக்குபஞ்சர் டாக்டர் ஆலோசனைப்படி இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தியதால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட திருப்பூர் மாணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த மெக்கானிக் ஜெகதீஷ் என்பவரது மகன் சுபாஷ். பிளஸ் 2 படித்து வந்த சுபாஷ் 5 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். அவருக்கு தினமும் 2 முறை இன்சுலின் ஊசி போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த அக்கு ஹீலர் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வரும் அக்குபஞ்சர் டாக்டரான பாலமுருகனிடம் சுபாஷை ஜெகதீஷ் அழைத்து சென்றிருக்கிறார். அப்போது இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்திவிடுங்கள்… அக்குபஞ்சர் சிகிச்சையில் சரி செய்கிறேன் என பாலமுருகன் கூறியிருக்கிறார். இதை கேட்டு ஜெகதீஷும் மகன் சுபாஷுக்கு இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தியிருக்கிறார். ஆனால் 2 நாட்களில் திடீரென சுபாஷின் உடல்நிலை மோசமடைந்தது. அப்போதும் ‘அக்குபஞ்சர்’ பாலமுருகனையே ஜெகதீஷ் தொடர்பு கொண்டு கேட்க நிலைமை சரியாகிவிடும் என கூறியிருக்கிறார். இருப்பினும் சுபாஷ் உடல்நிலை மோசடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அக்குபஞ்சர் மருத்துவரின் தவறான ஆலோசனையால் ஒரு இளம்தளிரின் உயிர் பறிபோயுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.”

ஒரு ஆங்கில இதழில் வந்த செய்தியின் பகுதி:
“…Asked about the matter, Balamurugan told Express that the boy might have been brought to him on the brink of death. “There are numerous patients whom I have cured. This case is one in a thousand. Other medical systems too do not guarantee saving life. They started taking treatment only after accepting my suggestion to stopping the insulin injections,” he said.
Balamurugan, who owned a photo studio till 2010, completed his Diploma in Acupuncture Science through an open university course. He has been running a clinic at Ramnagar in Coimbatore from 2011.
He accepted that there is no statutory body to register or regulate acupuncture healers, unlike systems of medicine like Siddha and Ayurveda.
The family of Subash, who are yet to overcome the grief caused by his death, are yet to take a decision on proceeding with legal action against the therapist.
There are numerous patients whom I have cured. This is one in a thousand. Other medical systems too do not guarantee saving life.”

இந்தியா மண்ணின் மைந்தர்கள் ‘கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது’ என்றால் நம்பலாமா? நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.
உசாத்துணை:

சித்திரத்துக்கு நன்றி:https://smartypantsvitamins.com/wp-content/uploads/2013/04/Diabetes-wordcloud.jpg

பழங்கதை:
வல்லமை ஆரோக்கியத்தைப் போற்றும் இதழ். அது சம்பந்தமான ஆலோசனை கட்டுரைகள் மேலும் வர இருக்கின்றன. இத்தருணம் இங்கிலாந்தில் வசித்து வருபவரும், ‘வல்லமை’க்குப் பரிச்சியமானவரும் ஆன இன்னம்பூரானுடன் அளவளாவ நேர்ந்தது. அவர், பல வருடங்களாக தன் குடும்பத்திலும், சுற்றத்திலும், நண்பர் வட்டாரங்களிலும், பற்பல நோய்களின் தன்மையையும், நிவாரணத்தையும் பற்றி அனுபவப்பட்டவர். நீரழிவு தன்மையால் ஆரோக்கியம் குன்றிய நிலையிலும் சிறுநீரகம் ஒன்றை தானம் அளித்தவர். ஆலோசனை மையங்களில் தன்னார்வப்பணி புரிந்தவர். அத்துறையில் பட்டம் பெற்று தகுதி அடைந்தவர். இங்கிலாந்தில் மக்களுக்கு புரியும் வகையில், தரமுயர்ந்த, அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட்ட ஆலோசனைகள் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன என்று சொல்லும் அவர், அவற்றையும், தன் அனுபவத்தையும் ‘வல்லமை’ வாசகர்களுடன், வரவேற்பை பொறுத்து, நோயாளியின் அணுகுமுறையை முன்னிறுத்தி, பகிர்ந்து கொள்ள இணைந்துள்ளார். பரிக்ஷார்த்தமாக, இன்றைய தினம், நீரழிவு நோயை பற்றி,அவர் அனுப்பிய சிறிய அறிமுகக்கட்டுரை ஒன்றை, நன்றியுடன், பதிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
-ஆசிரியர்

Innamburan Innamburan
Mon, Nov 14, 2011 at 12:33 PM
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~1

சீரகச்சம்பாவும், சிட்டுக்குருவியும், சிங்கக்குட்டியும், நம்மைப்போல் டாக்டரிடம் ஓடுவதில்லை. ஆனால், மனித நாகரீகம் அவற்றையும் டாக்டரிடம் எடுத்துச் செல்கிறது. விவேகம் இங்கு கை கொடுக்கிறது. தனக்கு என்று வரும்போது, மனமும், உடலும்,‘அவரும் இவரும் சொன்னதும்’ ஒன்றையொன்று குழப்பி, திசை மாற்றி, உரியகாலத்தில் தக்கதொரு நிவாரணம் தேடுவதில் சிக்கல்கள்
விளைவிக்கக்கூடும். இது என் அனுபவம். எனக்கு ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ ஆசான், ரத்னவேலு சுப்ரமண்யம் என்ற அக்காலத்து பிரபல டாக்டர். என் தந்தை ஒரு தீராதப்பிணியினால் பீடிக்கப்பட்டிருந்தார். டாக்டர் ரத்னவேலு சுப்ரமண்யம் அவரிடம் நீங்கள் தான் உங்களுக்கு முதல் டாக்டர் என்றார். அதை படிப்பினையாக எடுத்துக்கொண்டேன். நாம் எல்லோரும் அறிந்த விஷயம்: டாக்டருக்கு எஃப். ஐ. ஆர். கொடுப்பது நாம் தான் என்பதும், அவரை சிறு தெய்வமாக அநேகர் கருதுவதும், அந்த நிலையில் நிறுத்தி வைக்கப்படுவதும். இந்த பின்னணியில், இன்றைய தின விழிப்புணர்ச்சியை அணுகுவோமாக.

உலகெங்கும் நவம்பர் 14 அன்று ‘நீரழிவு’/ டயாபிட்டீஸ் பற்றிய விழிப்புணர்ச்சி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஊடகங்கள் எல்லாம் 522/346 மிலியன் டயபிட்டீஸ் நோயாளிகள் என்று புள்ளி விவரங்கள் தருகின்றன. இது என்ன 2ஜி ஆடிட் சமாச்சாரமா என்ன? இரண்டு மதிப்பீடுகள் கொடுத்து, நம்மை அதட்ட? ஆனால், இது மட்டும் தெளிவு. தனி மனிதரும், மருத்துவத்துறையும், சமுதாயமும், அரசும் கூடி ஆவன செய்யாவிடின், வெள்ளம் தலைக்கு மேல். நாமே நம்மையும், வரும் தலைமுறைகளையும் வஞ்சித்தவர்களாவோம்.

நீரழியா வேதம்:

பிறந்த குழவி முதல் தொண்டு கிழவி வரை எல்லோரும் மிதமான உணவு, சத்துக்கள் குறையாத பதார்த்தங்கள், வேளாவேளை உண்பது, ஃபாஸ்ட் ஃபுட் தவிர்ப்பது என்று இருக்கவேண்டும்;
தினந்தோறும், தவறாமல் தேகப்பயிற்சி செய்யவேண்டும். உடல் நிலையை பொறுத்து, மருத்துவ ஆலோசனை உசிதம்;
நீரழிவு போராட்டம் ஒரு கலை. எல்லாம் மிதமாகவே
என்பது தத்துவம். உரியகாலத்தில் உணவும், நேரம் தவறாத மருந்தும் வாழ்நெறி. எச்சரிக்கையாக இருப்பது விவேகம்.
‘கரணம். தப்பினால் மரணம்’ என்பார்கள். உஷாராக இருந்தால் குஷி தான். இல்லையென்றால், ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, கண் பார்வை மங்கல், சிறுநீரகக்கோளாறு. எல்லாம் மிஞ்சினால், அகால மரணம்.

என்னுடைய கணிப்பில் நீரழிவு ஒரு ஆரோக்கியம் குன்றிய நிலை,வியாதி என்பதை விட. நிச்சியமாக, அத்துடன், நீண்ட நாட்கள் வாழமுடியும். போக்கடிக்கமுடியாதது, இன்றைய மருத்துவம் அறிந்த வரை. போக்கடிப்பேன் என்று சூளுரைப்பவர்களை தவிர்ப்பது விவேகம்;

சிறார்களை ‘கஷ்குமுக்கு’ குண்டர் ஆக்காதீர்கள். எடை குறைத்தால், உடை சோபிக்கும். உப்பு குறைத்தால், நீங்களே சோபிப்பீர்கள்;
நீரழிவு வம்சபரம்பரை சொத்து. ஆகவே, முன்னோர்களை பொறுத்து, சந்ததியினர் இன்னல்படக்கூடும். இதையெல்லாம் பார்த்து இல்லறம் அமைப்பது எளிதல்ல. சாத்தியம். ஆனால், பிறக்கும் குழந்தைகளை விழிப்புணர்ச்சியுடன் வளர்க்கும் கடமை உளது;
இன்றைய மருத்துவ ஆலோசனை படி, வம்ச ஆஸ்திக்காரர்கள் கூட நீரழிவு நிலை வருவதை கணிசமாகத் தள்ளிப்போடமுடியும்;
உலக சுகாதார மையத்தின் டயபிட்டீஸ் துறைத்தலைவர், டா. ரோக்லிக்“கணிசமான அளவுக்கு நீரழிவு நோய் வருவதைத் தடுக்கமுடியும். ஆனால், நாம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லையானால், தீவிரமானதும், உடல் நலத்தைக் குலைப்பதும், உயிரை குடிப்பதுமான இந்த வியாதி நிலை, உலகை மிகவும் பாதிக்கும்.
மேலும் சொல்ல இருக்கிறதா? என்ற எதிரொலி கேட்கிறது. ஆம். இருக்கிறது. கேட்டால் பார்க்கலாம்.
(தொடரும்)
இன்னம்பூரான்
14 11 2011
இன்னம்பூரான்

Monday, May 30, 2016

No Comments

Like
6.1M


No Comments



Benami London home for Robert Vadra linked to arms dealer, suggests report accessed by NDTV

NEW DELHI: 
HIGHLIGHTS
NDTV accesses two government reports on Robert Vadra
Arms dealer bought benami London house for Vadra: Report
"Completely incorrect and false assumption": Vadra's lawyer

The government has begun a new investigation into Robert Vadra, the son-in-law of Congress chief Sonia Gandhi, to determine if a controversial arms dealer bought a "benami" or proxy-owned mansion in London for him in 2009.

Robert Vadra's lawyers have denied the charges completely. "Robert Vadra has been systematically prosecuted and hounded by Congress opponents," said Congress spokesperson Randeep Surjewala.

The government investigation is based on two reports by investigating agencies. The reports quote from emails allegedly sent by Robert Vadra and his executive assistant, Manoj Arora. NDTV has accessed the reports but cannot confirm the authenticity of the emails. The reports also include details from the questioning of controversial arms dealer Sanjay Bhandari.

Last month, enforcement agencies raided 18 premises owned by Sanjay Bhandari. Two preliminary reports prepared after the raids state that Robert Vadra and his executive assistant sent several emails discussing payments and renovations for a London home (12 Ellerton House, Bryanston Square) bought for 19 lakh GBP (R
s.
19 crores) in October 2009 and sold in June 2010.

The emails were sent to Sumit Chadda, a relative of Sanjay Bhandari's based in London.

One report says, "There was an email dated 4.04.2010 in which Sumit Chadda reported the progress of work of renovation and repair work to Robert Vadra and asked for reimbursement of expenses."

The report then quotes Robert Vadra replying to Sumit Chadda saying "He would look into the issue" and added that his "secretary" Manoj will be "in touch". Thereafter, the report says, "Subsequently Mr Manoj kept in touch with Sumit Chadda using an email ID 'Exim Real Estate'".

Government officers who spoke to NDTV on the condition of anonymity say the emails exchanged also refer to redecorating the property, including its chandeliers.

One of the reports says "Sanjay Bhandari was specifically questioned whether Robert Vadra was the beneficiary of the sale of the Bryanston Square property in London. He did not deny the same but avoided a direct answer by stating that he would he able to confirm it by referring it to sale deed kept with his lawyer in London."

Robert Vadra is being investigated for controversial land deals in Haryana when the Congress was in power (File photo)
Robert Vadra's lawyers have said he "does not own directly or indirectly, any house described by you as No 12, Ellerton House, Bryanston Square, London" and that Robert Vadra and his assistant "have not entered into any transaction of a financial nature with Mr Sanjay Bhandari and are not even aware that Mr Sanjay Bhandari is involved in any defense transaction."

"It is shocking but not surprising," said BJP parliamentarian Kirit Somaiya to NDTV. "I would approach the Enforcement Directorate, Income Tax, and request them to check the property and any non-transparency in the transaction."

Sanjay Bhandari is the owner of Offset India Solutions (OIS). A covert Intelligence Bureau report had red-flagged his business dealings in 2014 right after the Modi government took office and advised the Defence Ministry to keep him at a distance.

Sanjay Bhandari, government officers say, tried to destroy his BlackBerry phone during the raids. However, they were able to recover data from his handset and his computers. Sanjay Bhandari's public relations office asked NDTV for a detailed questionnaire which was sent to them, but they have yet to respond.

Sanjay Bhandari formed OIS in 2008 with a paid-up capital of only one lakh rupees. Its rapid escalation into a multi-crore venture caught the attention of financial crime investigators. He is now being investigated for financial violations linked to 35 suspected shell companies between 2009 and 2014. Recently, OIS won a deal to supply parts for 38 combat aircraft that India is buying from Dassault Aviation.

Robert Vadra is being investigated for land deals in Haryana while the Congress ‎governed the state to determine if he got special discounts and other benefits that allowed him windfall gain. He has denied any wrongdoing. 

Complete statement from Robert Vadra's lawyers



[if IE]> https://html2-f.scribdassets.com/static/4gen_ie.css?1452292598'
 /> <![endif] [if !IE]><! <![endif]
scribd. scribd. scribd. scribd.

BY E-MAIL

WITHOUT PREJUDICE

30
th
 May, 2016

1. Ms. Barkha Dutt
 NDTV
E-mail:

2. Ms. Tanima Biswas
 NDTV
E-mail:
Dear Ms. Barkha Dutt  Ms. Tanima Biswas,

Our Clients: Mr. Robert !"r! # Mr. M!no$ Aror!

Re.: Your en%uir& 'i"e &our e-(!ils "!te" )*
t+
 M!&, )/ !n" 0
t+
M!&, )/ !""resse" to our Clients b& Ms. T!ni(! Bis1!s

!ur "lients ha#e han$e$ %#er t% me a &%'y %( y%ur a(%rementi%ne$ e-mails sent t% them
with instru&ti%ns t% state as un$er:

1.

!ur "lients wish t% state that Mr. )%*ert Va$ra $%es n%t %wn, $ire&tly %r 
in$ire&tly, any h%use $es&ri*e$ *y y%u as h%use N%. 12, Ellert%n +%use, Bryanst%n
uare, %n$%n. !ur "lients re/ret that y%u are 'r%&ee$in/ %n a &%m'letely
in&%rre&t an$ (alse assum'ti%n.

2.

!ur "lients ha#e n% *usiness relati%ns with Mr. anay Bhan$ari. !ur "lients
(urther state that %ur "lients ha#e n%t entere$ int% any transa&ti%n %( a (inan&ial
nature with Mr. anay Bhan$ari an$ are n%t e#en aware that Mr. anay Bhan$ari









is in#%l#e$ in any $e(ense transa&ti%n. !ur "lients ha#e s&ru'ul%usly a#%i$e$
e#en *ein/ rem%tely in#%l#e$ in relati%n t% any $e(ense transa&ti%n.

3.

!ur "lients are $ee'ly an/uishe$ that a res'%nsi*le TV &hannel sh%ul$ un$ertake
a #enture int% s'rea$in/ in&%rre&t in(%rmati%n that &%ul$ un$%u*te$ly &ause
$isuiet. !ur "lients h%'e that *etter sense will 're#ail.

.

!ur "lients ha#e n%t *een sh%wn any s% &alle$ emails an$ %*#i%usly &ann%t
&%mment %n them. n any e#ent %ur "lients '%siti%n is &lear as state$ a*%#e.
4.

n the e#ent this &lari(i&ati%n %( %ur "lients is n%t su((i&iently a$$resse$, %ur 
"lients w%ul$ *e &%m'elle$ t% take re&%urse t% le/al reme$ies as they may *e
a$#ise$. !ur "lients a$$ that sin&e they res'e&t the 'ress this w%ul$ *e the last
&%urse t% *e a$%'te$.

6.

!ur "lients w%ul$ *e at li*erty t% 'r%&ee$ a/ainst any 'ers%n wh% is $ire&tly %r 
in$ire&tly ass%&iate$ %r res'%nsi*le (%r &ausin/ the sai$ tele&ast %r 'u*li&ati%n %( 
news.

5.

!ur "lients are law a*i$in/ &itien %( n$ia an$ ha#e at all times &arrie$ %n their 
 *usiness in a&&%r$an&e with law.
7.

This letter is *ein/ sent with%ut 'reu$i&e t% any ri/hts an$ &%ntenti%ns %( %ur 
"lients an$ n%thin/ &%ntaine$ herein sh%ul$ *e &%nsi$ere$ an a$missi%n %( any
(a&t %r a wai#er %( any %( the ri/hts an$ reme$ies %( %ur "lients.

8%urs (aith(ully,
9%r M;N <+;T;N = "!.

>M;N ?8!T <+;T;N@

----------------------------------------------------------------

















Suman Khaitan & Co.
Khaitan & Partners
 Advocates
Email: delhi@


Head Office:
W-1! West Win"! #reater Kailash Part-$$
%e 'elhi-11(()*
$ndia
Ph: +,1 11 )( ,)) / )1 ,, / )1) 0*0
2a3: +,1 11 ,1 01(*
Corporate Office:
S-)(! #reater Kailash Part-$$
%e 'elhi-11(()*
$ndia
Ph: +,1 11 ),( 1((
2a3: +,1 11 ),( 1,,
--------------------------------------------------------------------
4his messa"e 5includin" an6 attachment5s7 hereto7 is con8idential and ma6 also 9e privile"ed. $t is intended solel6 8or 
the addressee. 4his communication is 8or the e3clusive use o8 the addressee and the intended recipient5s7 and shall
not 9e 8orarded to an6 third part6 ithout 8irst o9tainin" ritten authorisation 8rom Suman Khaitan & Co./Khaitan &
Partners. $8 6ou are not the intended recipient 6ou are here96 noti8ied that an6 disclosure! cop6in"! distri9ution or 
takin" an6 action in reliance on the contents o8 this in8ormation is strictl6 prohi9ited and ma6 9e unla8ul. $t ma6
contain in8ormation hich is con8idential and le"all6 privile"ed and the same shall not 9e used or dealt ith 96 an6
third part6 in an6 manner hatsoever ithout the speci8ic consent o8 Suman Khaitan & Co./Khaitan & Partners. $8 6ou
have received this messa"e in error 6ou are reuested to delete it alon"ith all attachments and copies! i8 an6! 8rom
6our s6stem and to contact the sender 96 repl6in" to this messa"e immediatel6. Suman Khaitan & Co./Khaitan &
Partners is not lia9le 8or the improper transmission o8 this messa"e nor 8or an6 dama"e sustained as a result o8 this
messa"e. We do not "uarantee that this material is 8ree 8rom viruses or an6 other de8ects.

Source: NDTV a few minutes ago.
Innamburan