Saturday, February 8, 2014

காதல் மனோரதம் [1]



இன்னம்பூரான்
08 02 2014

Friday, February 7, 2014

மாணிக்கவாசகர்: திருப்பள்ளியெழுச்சி: [1-4] விழியம்

மாணிக்கவாசகர்: திருப்பள்ளியெழுச்சி: [1-4] விழியம்

https://www.youtube.com/watch?v=nFvVwXLIjNk

Sunday, February 2, 2014

திருப்பெரும்துறையும் சிவனடியார் மாணிக்கவாசகரும்.



திருப்பெரும்துறையும் சிவனடியார் மாணிக்கவாசகரும்.

Innamburan S.Soundararajan Sun, Feb 2, 2014 at 8:45 PM


இந்த பெருமிதம் தரும் செய்தி  வந்தவுடனேயே பகிர்ந்து கொள்வதில் ஆர்வம். ஹிந்து இதழுக்கு மனமுவந்த நன்றி.

இன்னம்பூரான்
*

Published: February 3, 2014 01:46 IST | Updated: February 3, 2014 01:46 IST

New inscriptions confirm Manickavasagar built temple

B. Kolappan
FRESH EVIDENCE: Inscriptions found at Aavudaiyar Koil in Pudukottai district.
FRESH EVIDENCE: Inscriptions found at Aavudaiyar Koil in Pudukottai district.

The Saivite savant of the 9th century used money meant for buying horses to construct the temple

Legend has it the Manickavasagar, one of the four Saivite savants, constructed the temple at Avudaiyarkoil, known as Thiruperunthurai, in Pudukottai district.
Now the State Archaeology department has stumbled upon inscriptions confirming that Manickavasagar, the Minister of Pandiya King Arimarthana Pandian, built the sanctum sanctorum and the kanagasabha mandapam.
“His contribution has been recorded in the form of a poem. The inscriptions, found in the Panchakshara mandapam of the temple built in the 16th century, also record that Thiruvachagam was inscribed on the walls,” said G. Muthusamy, registering officer of the department in Tiruchi region.
Manickavasagar belonged to the 9th century and was said to have used the money meant for buying horses for the cavalry to construct the temple at Thiruperunthurai, one of the ports of the Pandiya Kingdom. Manickavasagar penned Thiruvachagam and Thirupalliyezhuchi while camping in this temple and referred to it as Thiruperunthurai.
“So far, we have only oral narration about the temple construction. The discovery proved beyond doubt Manickavasagar's role,” said Mr Muthusamy.
Even as the temple construction was in progress, King Arimarthana Pandian waited for days for the arrival of Manickavasagar and the horses. Later, he realised that the money was already spent and commanded Manickavasagar to bring along the horses without further delay. According to tradition, Lord Siva transformed a pack of foxes into fine breed of horses. In the night, the horses became foxes and let out a deafening howl.
God appeared before the king and explained he was behind the mischievous drama. The story of ‘nariyai’ (fox) ‘pariyakkuthal’ (horse) is still enacted during temple festivals in Madurai, the capital of Pandiyas.










VAISHNAVITE PSALMS: First Three

VAISHNAVITE PSALMS: First Three 

Saturday, February 1, 2014

ஒரு வாய் தண்ணி! [2]



ஒரு வாய் தண்ணி! [2]

Innamburan S.Soundararajan Sat, Feb 1, 2014 at 6:22 PM
ஒரு வாய் தண்ணி! [2]
Inline image 1

தருமமிகு சென்னையில், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வாக்குக்குக் கட்டுப்பட்டு, 140 ஆண்டுகளுக்கு முன் கட்டுமானம் செய்யப்பட்ட செங்குன்றத்து நீர் நிலையின் மதகுகளிலிருந்து நீர் கசிந்து வீணாகிறது என்று அக்கம்பக்கத்து கிராம மக்கள் மன்றாடுவதாக செய்தி. பூண்டி, சோழவரம் போன்ற நீர்நிலைகள் இருந்தாலும், செங்குன்றத்து நீர்நிலை தான் பிரதானம். 10.56 கோடி ரூபாய் செலவில் அதற்கு மராமத்து வேலைகள் நடக்கப்போகின்றனவாம்.

அணைக்கட்டுகளை நீங்கள் பார்வையிட தருணம் கிட்டினால், நீர் கசிவதை தடுக்கக்கூடாது; அதற்கு அளவான வடிகால் அமைக்கவேண்டும்; அவற்றை நன்றாக பார்த்து அன்றாட மேற்பார்வையும், அவ்வப்பொழுது மராமத்தும் திட்டத்தில் இருப்பதையும் அதற்கான செலவு வருடாவருடம் ஒதுக்கப்படுவதையும், அந்த செலவுக்கு வரி வசூல், தீர்வையில் வரவு இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

ஆனால், இந்த நீர்நிலை கட்டப்பட்டதிலிருந்து யாதொருவிதமான ரிப்பேர் வேலை செய்யப்படவில்லையென்றும், இப்போது கூட ‘மராமத்து வேலை செய்ய துட்டுக்குக் காத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று ஒரு அதிகாரி சொன்னதாக செய்தி கூறுகிறது.

இந்த பிரச்னைக்கு தனியார் மயம் ஆக்குவது ஒரு தீர்வு அல்ல. டில்லியில் பாருங்கள், மின்சாரம், சாரம் பிழிந்து, அதீத விலைக்கு மக்களுக்கு விற்கப்படுவதாக தோற்றம். தனியார் மாயமாகிவிட்ட குடுவை நீர் வணிகத்தில் அடங்கியிருக்கும் சமூக முட்கள், நாம் யாவரும் அறிந்ததே.

என்ன செய்யலாம்?
இன்னம்பூரான்
01 02 2014
சித்திரத்துக்கு நன்றி: http://www1.sulekha.com/mstore/kundankannan/albums/default/Puzhal%20-%20Red%20Hills.jpg
ஒரு வாய் தண்ணி![1]
pastedGraphic.pdf

“...அரசு இயந்திரமோ/ அதன் உருப்படியோ, அரசியல் சாஸனமிட்ட ஆணைக்கு அடி பணிந்து மக்களுக்கு அளித்து வரும் குடிநீர்/அதன் தரக்கட்டுபாடு உணவு பாதுகாப்பு சட்டத்திற்கும், தேசீய சுத்தீகரண நீதி ஆணையத்துக்கு உட்பட்டது அல்ல. எனவே, அரசு சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான நீர் வழங்க வேண்டும் என்று மனுதாரர் கோருவது தவறு, விஷமமானது..”
- அரசின் உருப்படியான அகில இந்திய உணவு தரம்/பாதுகாப்பு நிலையம் அளித்த சாக்ஷியம்.

“...தரக்கட்டுப்பாடு மையத்தின் முத்திரை இல்லாமல் யாருமே நீர் குடுவைகள், படா குடுவைகள் ஆகியற்றை தயாரிக்கவும் கூடாது/ விற்கவும் கூடாது...”
  • - அரசின் உருப்படியான அகில இந்திய உணவு தரம்/பாதுகாப்பு நிலையம்.

பேஷ்! இன்றைய காலகட்டத்தில் தருமமிகு சென்னையிலும், சுற்று வட்டாரங்களிலும், தொலை மக்கள் தொகைகளிலும், கொசுவை விட அதிபயங்கர ஆபத்து, தண்ணி. கிணறுகள் வற்றின. கேணிகள் உலர்ந்தன.
குளங்களில் ப்ளாஸ்டிக் குப்பை. ஊருணிகளை அடைத்து மச்சு வீடுகள். மதுரையில் சாமி தண்ணியில்லாதக் குளத்திலே தப்புத்தப்பா தெப்போத்ஸ்வம் பண்ணிக்கிறார். பாரபக்ஷமற்ற கார்ப்பரேஷன் குழாய்கள் சாக்கடையையும் குடிநீரையும் சரிசமமாக கலந்து வினியோகிக்கின்றன. தண்ணீர் குடுவை வியாபாரிகள்/ குறிப்பாக படா குடுவை வியாபாரிகள் கண்ட தண்ணியை பாக் பண்ணி விக்றாங்களாம். கேட்டா அடி உதை, ஷ்டிரைக்கு. தண்ணி சப்ளை செய்யாத காலத்திலேயே, தண்ணி வரியும், தண்ணி விலையும் வசூலிச்சாங்க, இந்த மெட்ரோ வாட்டர் நிர்வாகம்.  ஆற்றோரம் போய் அள்ளிக்குடிச்சா தண்ணி நிசம்மா இலவசம். அதை ராக்ஷஸ மோட்டார் போட்டு, உறிஞ்சி ராக்ஷஸ குழாய்களில் கொண்டு போய் கன்னாபின்னா என்று வரிப்பணத்தை கரியாக்கி க்ளாரிஃப்ளாக்குலேட்டர், வடிகட்டி, ரசாயனம், சுத்திகரிப்பு நிலையம் என்றெல்லாம் கோடிக்கணக்கில் செலவு செய்து ‘இது குடி நீர்; ஆனால் தரம் உத்தரவாதமே இல்லை’ என்று முரசு கொட்டுவது எந்த வகையில் நியாயம்? இது ஒரு புறம் தாகசாந்தி அளிக்காமல் உருண்டு பிரள:

மற்றொரு புறம் கண்ட இடங்களில் இறைத்த, சாக்கடையை அடுத்த குழாயில் நிரப்பிய அழுக்கே உருவான படாகுடுவை வியாபாரிகள், ஆட்டோரிக்ஷாக்காரர்களை போல நம்மை ஆட்டிப்படைக்கின்றன. 

இந்த அழகில் முக்காலே மூணு பங்கு வியாதிகள் சுத்திகரிக்கப்படாத நீரை பருகுவதால் என்று அரசு உடுக்கடிக்கிறது. மேல்நாடுகளில் குழாய் தண்ணீர் குடித்தால் சாகமாட்டோம். 

இன்னம்பூரான்

Tuesday, January 28, 2014

ஒரு வாய் தண்ணி!

ஒரு வாய் தண்ணி!
Inline image 1

“...அரசு இயந்திரமோ/ அதன் உருப்படியோ, அரசியல் சாஸனமிட்ட ஆணைக்கு அடி பணிந்து மக்களுக்கு அளித்து வரும் குடிநீர்/அதன் தரக்கட்டுபாடு உணவு பாதுகாப்பு சட்டத்திற்கும், தேசீய சுத்தீகரண நீதி ஆணையத்துக்கு உட்பட்டது அல்ல. எனவே, அரசு சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான நீர் வழங்க வேண்டும் என்று மனுதாரர் கோருவது தவறு, விஷமமானது..”
- அரசின் உருப்படியான அகில இந்திய உணவு தரம்/பாதுகாப்பு நிலையம் அளித்த சாக்ஷியம்.

“...தரக்கட்டுப்பாடு மையத்தின் முத்திரை இல்லாமல் யாருமே நீர் குடுவைகள், படா குடுவைகள் ஆகியற்றை தயாரிக்கவும் கூடாது/ விற்கவும் கூடாது...”
  • - அரசின் உருப்படியான அகில இந்திய உணவு தரம்/பாதுகாப்பு நிலையம்.

பேஷ்! இன்றைய காலகட்டத்தில் தருமமிகு சென்னையிலும், சுற்று வட்டாரங்களிலும், தொலை மக்கள் தொகைகளிலும், கொசுவை விட அதிபயங்கர ஆபத்து, தண்ணி. கிணறுகள் வற்றின. கேணிகள் உலர்ந்தன.
குளங்களில் ப்ளாஸ்டிக் குப்பை. ஊருணிகளை அடைத்து மச்சு வீடுகள். மதுரையில் சாமி தண்ணியில்லாதக் குளத்திலே தப்புத்தப்பா தெப்போத்ஸ்வம் பண்ணிக்கிறார். பாரபக்ஷமற்ற கார்ப்பரேஷன் குழாய்கள் சாக்கடையையும் குடிநீரையும் சரிசமமாக கலந்து வினியோகிக்கின்றன. தண்ணீர் குடுவை வியாபாரிகள்/ குறிப்பாக படா குடுவை வியாபாரிகள் கண்ட தண்ணியை பாக் பண்ணி விக்றாங்களாம். கேட்டா அடி உதை, ஷ்டிரைக்கு. தண்ணி சப்ளை செய்யாத காலத்திலேயே, தண்ணி வரியும், தண்ணி விலையும் வசூலிச்சாங்க, இந்த மெட்ரோ வாட்டர் நிர்வாகம்.  ஆற்றோரம் போய் அள்ளிக்குடிச்சா தண்ணி நிசம்மா இலவசம். அதை ராக்ஷஸ மோட்டார் போட்டு, உறிஞ்சி ராக்ஷஸ குழாய்களில் கொண்டு போய் கன்னாபின்னா என்று வரிப்பணத்தை கரியாக்கி க்ளாரிஃப்ளாக்குலேட்டர், வடிகட்டி, ரசாயனம், சுத்திகரிப்பு நிலையம் என்றெல்லாம் கோடிக்கணக்கில் செல்வௌ செய்து ‘இது குடி நீர்; ஆனால் தரம் உத்தரவாதமே இல்லை’ என்று முரசு கொட்டுவது எந்த வகையில் நியாயம்? இது ஒரு புறம் தாகசாந்தி அளிக்காமல் உருண்டு பிரள:

மற்றொரு புறம் கண்ட இடங்களில் இறைத்த, சாக்கடையை அடுத்த குழாயில் நிரப்பிய அழுக்கே உருவான படாகுடுவை வியாபாரிகள், ஆட்டோரிக்ஷாக்காரர்களை போல நம்மை ஆட்டிப்படைக்கின்றன. 

இந்த அழகில் முக்காலே மூணு பங்கு வியாதிகள் சுத்திகரிக்கப்படாத நீரை பருகுவதால் என்று அரசு உடுக்கடிக்கிறது. மேல்நாடுகளில் குழாய் தண்ணீர் குடித்தால் சாகமாட்டோம். 



இன்னம்பூரான்

Monday, January 27, 2014

காதிலே விழறதா?





காதிலே விழறதா?
இன்னம்பூரான்.27 01 2014
சித்திரத்துக்கு நன்றி: http://www.appusami.com/Versions/Images/v228appusaminakamukka2.jpg



Published: January 27, 2014 20:54 IST | Updated: January 27, 2014 20:54 IST

You’ve got text. In Tamil!
KARTHIK SUBRAMANIAN

pastedGraphic.pdf
The Hindu
REACHING OUT Muthu Nedumaran. Photo: K. Ananthan

Malaysian national Muthu. Nedumaran is the man behind the popular Sellinam Tamil input for mobile devices. During his visit to Chennai, this pioneer of Tamil computing speaks to Karthik Subramanian about what the future holds for the industry
Muthu. Nedumaran speaks with a certain assuredness and calm on the opportunities that lay ahead for Tamil language computing. Some of the things he says shock too — “As an industry, we have been completely blind to the requirement of the masses.”
But the words, coming as they are from easily one of the pioneers of not just Tamil but Indic language computing and a man who is privy to world’s biggest technology companies, make one want to sit up and listen. Muthu Nedumaran’s Tamil language input software Sellinam powers mobile devices of Apple and HTC, and has over 1,20,000 users all over the world. Many who have followed Tamil computing over the years see the Tamil input integration into iOS 7, Apple’s latest mobile operating system, as a tipping point that is one of the biggest leaps forward in terms of enabling users operate devices in their mother tongue.
One of the founders of International Forum for Information Technology in Tamil (INFITT), a forum of Tamil computing developers, and a person with over three decades of experience in Tamil computing, Muthu. Nedumaran is a respected voice in technology circles. He was in the city for a stop over recently before proceeding to Coimbatore to attend the Thaayagam Kadantha Tamizh conference organised by the Centre for Tamil Culture.
Long way to go
When I poke him with a fairly straightforward “Where is it (Tamil computing) headed now” question, he gets candid. “We have not even started. Forget addressing today’s or tomorrow’s needs. I think as a community of Tamil language computing developers, we have not even properly addressed yesterday’s needs,” he says. (தமிழ் கணினி விஷயத்தில் நாம் தொடங்கக்கூட இல்லையே. தமிழ் கணினி பயன் நாடுவோர்/படைப்பாளர் என்ற முறையில் நாம் நேற்றைய தேவைகளைக்கூட கண்டு கொள்ள வில்லை.)
“I have been involved with Tamil computing for over 30 years now, and we always looked at it as something to address the needs of knowledge seekers and sophisticated users. But Sellinam proved me wrong.” A bulk of the Sellinam Tamil input users, in fact, comes from Tamil Nadu, and a lot of them are using it for very basic reasons — such as reaching out to their loved ones, or sending out simple communication. And not for very sophisticated usage. (கடுதாசு போட்றதோட சரி. படைப்பாற்றல்???)
There is a lot of chatter about advanced tools such as optical character readers, text-to-speech engines and so on. But Nedumaran says that the most basic need — that of enabling people to be able to input words in their mother tongue — is only just being met in the Indian scenario. To him, those are the primary drivers of Tamil and other language computing right now.
Having extensive experience in working out computing solutions in the Indo-Chinese countries, he contrasts the scenario of Tamil-speaking population of India, Sri Lanka, Singapore, Malaysia and other countries with that of a smaller demographic of Vietnamese. “Since they don’t know English at all, mobile phones and other gadgets have always had Vietnamese language interface in them for several years now. They went past basic needs long ago,” he says. “Unfortunately, the device manufactures catering to the Tamil-speaking world never deemed it necessary until now to provide it with simple and easy-to-use tools.”
Nedumaran has been working on input method editors for several years now. He originally developed the Murasu Anjal suite of software tools, which helped create, edit, convert and publish Tamil content as early as 1985. Apple included Murasu Anjal as part of its Mac OS operating system in 2004.
The Malaysian-national seems most excited about the last two or three years, in terms of reach through the mobile devices. He sees a vast potential in terms of what could be achieved.

Keywords: Muthu. NedumaranSellinam Tamil input










© The Hindu & நன்றி

Saturday, January 25, 2014

பாருக்குள்ளே நல்ல நாடு எம் பாரத மணித்திருநாடு…! [1- 3]



பாருக்குள்ளே நல்ல நாடு எம் பாரத மணித்திருநாடு…! [1- 3]

அப்டேட்:
இரண்டு நாட்களுக்கு முன்னால்  யான் எழுதியது:
*
இன்று அவர் ஆற்றிய உரையில் சில பகுதிகளை ஆராய்வோமாக.
“...Some cynics may scoff at our commitment to democracy but our democracy has never been betrayed by the people; its fault lines, where they exist, are the handiwork of those who have made power a gateway to greed...”
~ ஜனநாயகத்தின் மீதுள்ள நமது பரிவை கேலி செய்வோர் உண்டு; நம் நாட்டு மக்கள் ஜனநாயகத்தை வஞ்சிக்கவில்லை. அதிகாரத்தை பேராசைக்கு பயன்படுத்தியவர்கள் தான் அதில் உள்ள நசுக்கலுக்குக் காரணம்... 
“...We do feel angry, and rightly so, when we see democratic institutions being weakened by complacency and incompetence. If we hear sometimes an anthem of despair from the street, it is because people feel that a sacred trust is being violated...”
~ அசட்டையும் திறனின்மையும் குடியரசின் தளங்களை தகர்ப்பது கண்டு நமக்கு கோபம் வருவது நியாயமே. தருமத்தை சூது வீழ்த்தி விட்டது என்பதால் தான் வீதிகளிலும் தெருக்களிலும் இயலாமை குறித்து மக்கள் பெருங்குரல் எடுத்து ஓலம் இடுகிறார்கள்.
“...We can be world leaders in education, if only we discover the will and leadership to take us to that pinnacle,..” 
~மன உறுதியும், தலைமை தாங்கும் திறனும் இருந்தால், நாம் கல்வி அளிப்பதில் உலகத்துக்கே முன்னோடி ஆக முடியும்.
Calling for an educational revolution, he said “education is no longer just the privilege of the elite, but a universal right. It is the seed of a nation’s destiny.”
~ கல்விப்புரட்சி ஒன்றை விழையும் நம் ஜனாதிபதி, “ கல்வி பெருந்தனக்காரர்களின் சொத்து அன்று: அது உலகளாவிய மனித உரிமை. ஒரு தேசத்தின் தலைவிதிக்கு அது தான் வித்தாகிறது.
ஊழலையும், லஞ்சத்தையும் அவர் நேரடியாக தாக்காதது எனக்கு விசனமே.
இன்று ஹிந்து இதழ் எழுதியது:
In his address to the nation on the eve of Republic Day, President Pranab Mukherjee seemed intent on tempering hope with caution and idealism with pragmatism. But what caught everyone’s attention was the political undertone of what he himself noted was his last address before the next government takes office. For someone who made a smooth transition from being a Cabinet Minister to becoming the President, Mr. Mukherjee was surprisingly forthright in his warning to the political class. Justifying people’s anger at the weakening of democratic institutions, he said: “If we hear sometimes an anthem of despair from the street, it is because people feel that a sacred trust is being violated.” For those looking for a warning to the Congress, Mr. Mukherjee had more than a few words on corruption. If Indians are enraged, he said, it is because they are witnessing corruption and waste of national resources. “If governments do not remove these flaws, voters will remove governments.” But the veiled attack on the Aam Aadmi Party, the reference to “populist anarchy”, now associated with its leader Arvind Kejriwal, captured more mind space. Arguing that populist anarchy cannot be a substitute for governance, the President said: “False promises lead to disillusionment, which gives birth to rage, and that rage has one legitimate target: those in power.” If the reference to communal forces is taken as thumbs down to the Bharatiya Janata Party, Mr. Mukherjee appears to have spared none in his address.
Whether read as notes of caution to the Congress, or as articulation of dissatisfaction with the ways of the AAP or the BJP, these remarks assume added importance in the current political context. President Mukherjee clearly wants it to be known that he is on the side of the people and democratic institutions, not blindly supportive of governments and certainly not sympathetic to those in power. Curiously, Mr. Mukherjee also wanted the people to vote in a stable government. True, as he noted, a fractured government, “hostage to whimsical opportunists,” would be an unhappy electoral outcome. But to ask the people to vote for a stable government can mean little more than to ask them to vote for a party widely seen as the front-runner. Whether this could be taken as an endorsement of the BJP in the current context is debatable, but it could lend itself to interpretation. So far, Mr. Mukherjee has played by the book in what he has done and what he has not, as President. The political sub-text of his lines and their varying interpretations notwithstanding, the address provides no indication that he is about to change his approach as the President of the Republic.
இன்னம்பூரான்
28 01 2014
சித்திரத்துக்கு நன்றி: http://presidentofindia.nic.in/images/sp250113.jpg




பாருக்குள்ளே நல்ல நாடு எம் பாரத மணித்திருநாடு…! [1] & [2]

மடலாடல் குழுவில் நடந்த அளவளாவுதல்
यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति |
तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति || 6-30||

இது பகவத் விஷயம். உயிர்மை யாவற்றிலும் என்னை எவன் காண்கிறானோ, என்னுள் அவற்றையெல்லாம் காண்கிறானோ, அவனுக்கு நான் அருகாமையில் தான் இருக்கிறேன்.

பாரதமாதாவும் நம் தெய்வம் தானே. அவளுடைய அரவணைப்பில் நாம் இருப்பது எப்படி?

இன்னம்பூரான்





Innamburan S.Soundararajan innamburan@gmail.com
8:19 PM (1 minute ago)


பின்னூட்டங்கள் என்று சொல்வதை விட கருத்துக்கணிப்பு என்பது தகும். அனைவருக்கும் நன்றி. இவற்றை நான் எதிர்ப்பார்ப்பதின் பலன் கண்கூடு.
  • பேச்சும், செயலும், பயனும், விளைவும் சங்கிலித்தொடர், காளை ராஜன். 

திரு.பிரணாப் முக்கர்ஜியின் அரசியல் வரலாற்றை 1955லிருந்து அறிவேன்.

அதுவல்ல இங்கு என் குறி. அவருடைய இன்றைய பேச்சைப்பற்றி சில விமர்சனங்கள் எழும் முன் சில பகுதிகளை நான்

விமர்சித்தேன். அவை முக்கியமானவை. பிரதிநித்துவ அரசியலின் அசட்டுத்தனமான, பண்பற்ற போக்கை நிராகரித்து,

மக்களின் கருத்தை பாதரசமாக பிரதிபலித்த நமது ஜனாதிபதி செயலிலும் காட்டிவிட்டார் என்பதை மறக்கவேண்டாம்.

  • 'பாட்டிலுள்ளே பலவிதமா சோம ரசம்…' பாடிய கல்பட்டார் நம் அவல நிலையை சித்திரித்தாலும், நான் சொல்ல வந்த விஷயம் வேறு.

நமக்கு நாம் தான் நிவாரணம் தேடவேண்டும் என்பதே.
  • சரியாக சொன்னீர்கள், திரு.ருத்ரா: '...தண்டோரா போட்டாலும் ஏதாவது ஒரு "பண்டோரா"பெட்டியை திறக்காமல்

விடுவதில்லை நீங்கள்."திறந்திடு சீசேம்".' என்று. இனி விடுவேனோ? தண்டோரா ஒரு நாட்டுப்புறத்து ராஜ பேரிகை.

பண்டோரா பெட்டியை திறந்தால் தான் விழிப்புணர்ச்சி வரும். சீசேம் மந்திரக்கோலுக்கு நன்றி. 

  • கண்ணன் சில இன்றியமையாத விளக்கங்கள் கேட்கிறார்: நன்றி, ஐயா.

1.who is a politician? Is he not part of us? Who is greedy? We or them? A serious inquiry will reveal both are the same. We give power to them and with that power they manipulate us.

நன்றி, ஐயா. தேர்தலில் வாக்கு அளிக்கும் (நோட்டா உள்பட) ஒவ்வொரு நபரும் அரசியல் வாதி தான். வாக்குக்கேட்பதும், கொடுப்பதும் சேவை பொருட்டு. அதற்கான திடம் அதிகாரம். அதை துஷ்பிரயோகம் செய்தால், அடித்துத்துரத்த வழி செய்யாத பிரதிநித்துவ அரசு முறையை நாம் மாற்றியமைக்கும் காலம் வந்து விட்டது.



2.  In Indian situation with all its Mega corruption we are the stakeholders. They made it so. India has evolved a unique scheme where political representation is based on caste rather than region.
உண்மை. அதை ஒழிக்க வேண்டியது தான். வழி: மக்கள் குரல் ~ எழுச்சி ~புரட்சி?


3. People reap a % of corruption, in free schemes. Why do we want anything free? first of all.
கல்வியும், சமத்துவ உரிமைகளும், அடிப்படை சுகாதாரமும் இலவசமாக இருப்பதில் தவறு இல்லை. வாழ்வாதாரங்களை அளிப்பதில் அரசின் கடமை உளது.
வருமானத்தில் அதலபாதாளமும் உச்சாணிக்கிளையும் இருப்பது சமுதாயத்துக்கு நல்லதல்ல. அதற்காக மான்யங்கள் தேவை. ஆனால், நாம், அரசனிலிருந்து ஆண்டி வரை துஷ்பிரயோகம் செய்கிறோம். சில உதாரணங்கள் சொன்னால் கசக்கும். அது பற்றி கேள்வி எழுந்தால் பார்ப்போம்.



Democracy in India is certainly worth watching.
ஆம்.


We do believe in our 'own democracy'.
ஆம்.


I wonder whether Indian academics are working on the dynamics of Indian democracy. It is fascinating!
~ ஆம். இந்த இழையே ஒரு உதாரணம். நீங்கள் சொல்கிறமாதிரி பல பதிவுகள் உள்ளன. ஒரு உதாராணம்:

M.N. Srinivas (March 30, 1991: EPW) On Living in a Revolution.

கிட்டத்தட்ட 25 வருடங்கள் நாம் Rip Von Winkle. படித்தால் அசந்து போய் விடுவீர்கள்.

  • Speech writers and spin doctors pervade the political scene in all nations, Themozhi. I had written some. It is something like a think-tank. That is not the point. One day I shall write about President Reagan rejecting all, but, the least voted one.

In any case, it is obvious that President Pranab Mukerjee spoke his mind.

  • ஸுபாஷிணி விவரமாக அலசி சுயநலத்தை சுட்டிக்காட்டுகிறார். மிக்க நன்றி. சுயநலம் தலையெடுத்த அநாகரீகத்தைப்பற்றி விவரமாக எழுதுகிறேன்.

இந்தியன் ஒவ்வொருவரும் தன்னலம் ஒழித்த சமூகப்பணிக்கு வாரத்துக்கு இரண்டு மணி நேரமும், இருபது ரூபாயும் கொடுங்கள். கத்தியின்றி,ரத்தமின்றி,யுத்தமின்றி ஒரு

புதிய சகாப்தத்தை உருவாக்கிக்காட்டுகிறேன். ரூபாய் கணக்கு திவாகரிடம் கொடுத்து விடுவோம்.

  • கீதா மிகவும் ஆதுரத்துடன் ஆக்கப்பூர்வமாக 'விக்ரமாதித்யன் பெரிய எழுத்தில்'  நன்றாக பதில் அளித்து உள்ளார். நன்றி. அதுவும் கிருஷ்ண பரமாத்மா விளக்கத்துடன் எனக்கு முழு உடன்பாடு.

" நல்லவேளையா ஜனாதிபதி சுயமாச் சிந்திக்கிறவரா இருக்கார்.

வாசகர்கள் இல்லைனு எப்படிச் சொல்றீங்க?  படிக்கிறோம்.  ஆனால் பல சமயங்களில் படிக்க மட்டுமே முடிகிறது.
தன்னலம் செழிக்க ஆரம்பித்தது அறுபதுகளின் இறுதியில்….நாம் யாரும் இன்னும் அழைக்கலை.  அழைக்கலைனா உள்ளம் உருகி பூரணமாய்ச் சரணாகதி ஆகி 

திரெளபதி மாதிரி  தஞ்சம் புகுந்துக்கலை.  இன்னும் கொஞ்சம் "நான்" இருக்கு நம்மிடம்.  அது முழுதும் போகணும். இனி ஒண்ணும் இல்லை, னு பரிபூரணச் 

சரணாகதி ஆகணும். கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வருவான்.  கேள்வியே பதிலாகக் கண்ணன் வருவான்.

அது தான் என் ஆசை. அடுத்த இழையிலேயே தரிசனம். பார்த்தீர்களோ?  அதை விளக்கிக் கூறப்போவது யாரு?

அன்புடன்,


இன்னம்பூரான்

26 01 2014

பாருக்குள்ளே நல்ல நாடு எம் பாரத மணித்திருநாடு…! [1]

http://img.wallpaperstock.net:81/india-bandera-wallpapers_32961_1920x1200.jpg

இன்று குடியரசு தினம்.
விடுதலை பெற்றபின் இந்திய அரசியலில் நெடு நாட்களாக இராஜதந்திரத்தின் மறு உருவாகவும், காங்கிரஸ் கட்சியின் தூணாகவும், வளைந்து கொடுத்த நாணலாகவும் பரிமளித்த திரு. பிரணாப் முக்கர்ஜி இந்திய ஜனாதிபதிகளில் தனித்தன்மையுடைவராகவும், மக்களின் கருத்துக்களை எதிரொலிப்பவராகவும் செயல்படுவது போற்றத்தக்கதே. பதவி ஏற்றவுடனேயே, பிரதிநித்துவ அரசியலின் அசட்டுத்தனமான, பண்பற்ற போக்கை நிராகரித்து, மக்களின் கருத்தை பாதரசமாக பிரதிபலித்தக் கண்ணாடி ஆனார். இன்று அவர் ஆற்றிய உரையில் சில பகுதிகளை ஆராய்வோமாக.
“...Some cynics may scoff at our commitment to democracy but our democracy has never been betrayed by the people; its fault lines, where they exist, are the handiwork of those who have made power a gateway to greed...”
~ ஜனநாயகத்தின் மீதுள்ள நமது பரிவை கேலி செய்வோர் உண்டு; நம் நாட்டு மக்கள் ஜனநாயகத்தை வஞ்சிக்கவில்லை. அதிகாரத்தை பேராசைக்கு பயன்படுத்தியவர்கள் தான் அதில் உள்ள நசுக்கலுக்குக் காரணம்... 
“...We do feel angry, and rightly so, when we see democratic institutions being weakened by complacency and incompetence. If we hear sometimes an anthem of despair from the street, it is because people feel that a sacred trust is being violated...”
~ அசட்டையும் திறனின்மையும் குடியரசின் தளங்களை தகர்ப்பது கண்டு நமக்கு கோபம் வருவது நியாயமே. தருமத்தை சூது வீழ்த்தி விட்டது என்பதால் தான் வீதிகளிலும் தெருக்களிலும் இயலாமை குறித்து மக்கள் பெருங்குரல் எடுத்து ஓலம் இடுகிறார்கள்.
“...We can be world leaders in education, if only we discover the will and leadership to take us to that pinnacle,..” 
~மன உறுதியும், தலைமை தாங்கும் திறனும் இருந்தால், நாம் கல்வி அளிப்பதில் உலகத்துக்கே முன்னோடி ஆக முடியும்.
Calling for an educational revolution, he said “education is no longer just the privilege of the elite, but a universal right. It is the seed of a nation’s destiny.”
~ கல்விப்புரட்சி ஒன்றை விழையும் நம் ஜனாதிபதி, “ கல்வி பெருந்தனக்காரர்களின் சொத்து அன்று: அது உலகளாவிய மனித உரிமை. ஒரு தேசத்தின் தலைவிதிக்கு அது தான் வித்தாகிறது.
ஊழலையும், லஞ்சத்தையும் அவர் நேரடியாக தாக்காதது எனக்கு விசனமே.
சில வினாக்கள் எழுகின்றன, என் மனதில். பகிர்ந்து கொள்கிறேன்.
  • விடுதலை வேள்வியில் தன்னலம் ஆகூதியில் கொளுத்தப்பட்டது. அது இப்போது செழித்து தழைக்கிறது. களை பிடுங்கி தீயில் இடுவது எப்போது?
  • அரசியல் சாசனம் நமது செப்பேடு. அதை செதுக்குவதில் பலதரப்பினர் ஒற்றுமையுடன் சகஜமாக கலந்து இயங்கினர். அதை ஏன் தொலைத்தோம்?
  • முதல் தேசீய தேர்தல் எனக்கு நினைவில் பதிந்து உளது. அக்காலத்து மக்களின் மாண்பு திரு அமங்கலமானதின் பின்னணி என்ன?
  • மதச்சார்பும், மொழி வாரியும், சாதி அரசியலும் தலையெடுக்கக் காரணம் யாது? யாரிட்ட சாபம் அவை?
  • பாராளுமன்றம் தான் இருப்பதிலேயே பெரிய தாதா  என்கிறவாறு அரசியலமைப்பு அலங்கோலமானது..’ என்று இன்று ஜூனியர் விகடன் எழுதும் அளவுக்கு நாம் தரமிழந்து, மானம் இழந்து, உலக அவையில் (தாவோஸ் அவையிலும் கூட) துச்சாதனன் துகிலுரித்த பாஞ்சாலியாக நிற்கிறோம். கிருஷ்ணபரமாத்மா எப்போ வருவார்?
வாசகர்கள் இல்லையெனிலும், இந்த இழை தொடரும். எனக்கு ஆறுதல் கிட்டுமல்லவா?
சித்திரத்துக்கு நன்றி: http://img.wallpaperstock.net:81/india-bandera-wallpapers_32961_1920x1200.jpg
இன்னம்பூரான்
26 01 2014



Friday, January 24, 2014

ஓடுகாலி!

ஓடுகாலி!

Innamburan S.Soundararajan Fri, Jan 24, 2014 at 4:43 PM


ஓடுகாலி!
http://www.youtube.com/watch?v=TZyhj5NFbDs

நேத்திக்கு நடந்தது போல இருக்கு. முப்பது வருஷம் ஓடிப்போய்டுத்து. பெரியவா தானே கல்யாணம், காட்சி எல்லாத்துக்கும் பொறுப்பு.  ஒத்தனுக்குக் கால்கட்டு ஆக அவளை கட்டிப்போடுவதாக உத்தேசம். அவளோ ஓடிப்போய்ட்டா. பிடிச்ச ஓட்டம் அமெரிக்காவில் தான் மூச்சு வாங்கிண்டு நின்னது. முதலில் பாஸ்டன். முதல் உத்யோகம் ஒரு கிழத்தைப்பாத்துக்கிறது. அது அன்னிக்கே மண்டையை போட்டுடுத்தா, வேலை அபேஸ். அடுத்த கிழவிக்கு உடம்பு பூரா புண்ணு. அதையெல்லாம் கழுவி களிம்பு தடவணும். ஆறாது ஆனா. அன்னிக்கு நினுச்சுண்டா,‘இதுக்கு மருந்து கண்டு பிடிக்கணும்’ னு. செஞ்சாளே, அதை பாருங்கோ.

அப்றம் நம்ம மனுஷாளுக்கு பாந்தவ்யம் ஆன கால்டெக், கலிஃபோர்னியாலெ சேந்து மலக்யுலர் பயாலஜி படிச்சு ஒருபாடா தேறி வரச்சே, அவளுக்கே லுகிமியா புற்று நோய். சிலதுகள் மாஞ்சு போய்டும். இவளோ கெட்டி. திடமனசு, ஸ்வாமி. காஞ்சு போய் உலர்ந்த இலந்தைப்பழம் போல சுருங்கிப்போன தன்னோடெ தேகத்தை மின்ன வச்சாளே, தான் கண்டு பிடித்த மருந்தாலே.  டிகிரியை வாங்கிண்டா. கூட்டாளிகளெ சேத்துண்டா. ஜெனடா கார்ப்பெரேஷன் அப்டினு கம்பெனி ஆரம்பிச்சா. நெறைய களிம்பு, அரிதாரம் வகையறா. கையிலெ கோடிக்கணக்காப்பணம். ஆனா ஒரு குறை. பொறந்து வளந்த கொல்கொத்தாவை மறக்கமுடியல்லெயே. ஓடோடி வந்தா , இந்த பத்தாம்பசலி மார்வாரி குடும்பபெண்ணுக்கு ரொம்ப கெளரதை காட்றா.

*

மாமி பேரு: சந்தா ஜாவேரி புவால்கா: பேட்டை: கங்கர்குறிச்சி. ஊரு: கொல்கத்தா. அவளொரு கொல்கொத்தா கலிஃபோர்னியாள்.

செய்தி: இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா:http://timesofindia.indiatimes.com/city/kolkata/Woman-returns-to-Kolkata-after-three-decades-as-a-millionaire/articleshow/29268752.cms?intenttarget=no

பின்குறிப்பு: திருமணம் செய்து கொள்ளவில்லை. அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை.
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, January 23, 2014

கஷ்டோபனிஷத்: 1 -12: பகுதி 8 9முற்றும்]



கஷ்டோபனிஷத்: 1 -12: பகுதி 8

Innamburan S.Soundararajan Thu, Jan 23, 2014 at 7:50 PM

௵1800 ~ ௵2056: இது ஒரு 256 வருட சகாப்தம். ஆங்கிலேயரின் நடவடிக்கையில் குறை காண இயலாது. 18ம் நூற்றாண்டில் துரைத்தனத்தாரால் உயர்நிலை பள்ளிகளில் படிக்க அமைத்த தமிழ் பாடபுத்தகம் ஒன்றை த.ம.அ.வுக்காக, மின்னாக்கம் செய்துள்ளேன். தற்கால பட்டப்படிப்பின் தரக்குறைவு வெள்ளிடை மலை. 1940ம் வருடத்திய அண்ணா அவர்களின் மனவலி எனக்கு புரிகிறது. அவருடைய தம்பிகளுக்குத்தான் புரியவில்லை. அதனால், இன்று நிலைமை இன்னும் மோசம். விடுதலை பெற்று பத்து வருடங்களுக்கு பிறகு தான் ஆட்சி மொழி சட்டம்!  தொடக்க விழாவுக்கு மேலும் பத்து வருடம்! அடுத்த வருடம் தி.மு.க. பதவியேற்பும், நகாசு வேலையும்! 1969 வருட ஆணை 2011 வரை கிடப்பில். [இந்த அழகில்  வீரப்ப மொய்லி அவர்கள் இரண்டுங்கெட்டான் மொய் எழுதியிருக்கிறார். எல்லாரும் கை தட்டி இருக்கிறார்கள்!] 25 வருடங்கள் கழித்து, 1971ல் தனி அலுவலகம். மேலும், 25 வருடங்கள் கழித்து 1996ல் தனி அமைச்சகம்.  எல்லாம் டபிள் மாமாங்கம்! 15 வருடங்கள் கழித்து 2010ல் பலிகடா பாவ்லா! அசட்டுத்தனமான முரண்டு கெடுபிடி. எனக்கு நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருக்கிறது. மற்றவர்களை பற்றி பேச எனக்கு உரிமை இல்லை.
நன்றி, வணக்கம், வெட்கம்.

(முற்றும்)
இன்னம்பூரான்

27 12 2011
30 01 2014
சித்தரத்துக்கு நன்றி:https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1/p403x403/988338_534460486643301_1810643166_n.jpg

கஷ்டோபனிஷத்: 1 -12: பகுதி 7

A

COLLECTION

OF

OFFICIAL DOCUMENTS

IN

TAMIL LANGUAGE

CONSISTING OF ARZEES AND OTHER PAPERS FILED IN THE COURS OF JUSTICE

FOR THE USE OF CANDIDATES 

FOR THE INDIAN CIVIL SERVICE

COMPILED BY THE ORDER O THE RIGHT HONOURABLE THE SECRETARY OF STATE FOR INDIA

BY
LIEUT. W.F. WRIGHT

MADRAS STAAFF CORPS TAMIL TRANSLATOR TO THE GOVERNMENT OF MADRAS

MADRAS
PRINTED FOR THE GOVT OF MADRAS
BY
CALEB FOSTER
AT THE FOSTER PRESS, 23, RUNDALL’S ROAD
VEPERY
1868
மடலாடும் குழுவில் ஒரு நண்பர் இந்த தமிழ் புரியவில்லையே என்று எழுதியிருந்தார். பகுதி 5ல் கூறிய மாதிரி மராட்டி, பெர்சியன் மொழிகளின் தாக்கம், இன்று கூட அரசு மொழியில் உளது.
நுணுக்கங்களின் விளக்கம். 
1.கலைக்டர் பதில் போட்டால், அதில் நஜிமுத்தீனை பண்புடன் சாயபு என்று தான் விளிப்பார். 
2. கடிதத்தில் மரியாதை இருக்கிறது;அடிமைத்தனம் இல்லை.
3. அர்ஜி என்றால் கடிதம் எனலாம், மனு எனலாம்.
4. இனாயத்து நாமா என்றால் கடிதம் எனலாம். ஆணை எனலாம். ஆக்கியாபத்ததும் அது தான்: ஆஞ்ஞினை. இன்றளவும் ஒரியாவில் அது பேச்சு வழக்கில்.
5. பசலி, அடங்கல் எல்லாம் தமிழ்நாட்டில் புரியும், இன்றும். 
6. விதேயன் என்பது நேர்த்தியான சம்ஸ்க்ருத சொல். 'அடி பணிந்த' என்ற பொருளை தலை குனியாமல் சொல்வது.
7. அரசு மொழி மக்களுக்கு புரிவது இல்லை, டாக்டர் மொழியை போல. தலை சுற்ற ஆசை இருந்தால், ஒரு அரசாணையை( எந்த நாட்டினது ஆனாலும் படியுங்கள். சுற்றிய தலை நிற்காது!)

நான் இந்த கடிதத்தை இங்கு பதிவு செய்ததின் காரணம் இது ஒரு பாட நூலில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த நூலின் முகப்பு மேலே.
கேள்வி:
1868 லிருந்த அரசாளுபவரின் அக்கரை, சிரத்தை, தெளிவு, நிர்வாக பொறுப்பு எங்கே எப்போது தொலைந்தது?
இன்னம்பூரான்
29 01 2013


கஷ்டோபனிஷத்: 1 -11: பகுதி 6
Inline image 1


No. 68

மதிராஸ் ஜில்லா ஆக்டடிங்க் கலைக்டரவர்களாகிய ஜார்ஜி பான்புரி துரையவர்கள் சமூகததுக்கு,
     
திருவள்ளூர் தாலூகா தாசீல்தார் நஜமுத்தீன் சாயபு எழுதிக்கொண்ட அர்ஜி.
     
பாக்கி கட்டாத தண்டை செயது கொண்டிருந்த கல்லியாணகுப்பம் கிராம மணியக்காரர் கணக்குப்பி... இவர்களை அனுப்பும்படி துரையவர்கள்  ஆக்கியாபத்த 769வது நம்பர் இனாயத்துனாமா சேர்ந்து அறிந்து கொண்டேன்.

துரையவர்கள் இப்படி அனுபபிய உததரவின் பயத்தினாலே அவர்கள் இருவரும் செலுத்தவேண்டிய பாக்கியை கட்டிப்போட்டிருக்கிறார்கள்.

இப்போ அடங்கல் பார்க்கவேண்டிய காலமாயும் மேற்படி மணியக்கார, கணக்கபி.. இவர்கள் என் உத்தரவின்படி அந்த காரியத்தில் இருந்து கொண்டிருக்கிறபடியினாலே  நாலது பசலி ஜமாபந்தியின் போது மேற்படியார்கள் 2   பேரையும் அது வரையில் அவர்கள் நடத்தைகளைக்கண்டு மனுவு செய்து (நூபு நூபு) ஆஜர்ப்படுத்துகிறேன். ஆகையால் சங்கதி மனுவு செய்து கொண்டேன்.

1864 வருடம் ஜனவரி மீ 8 உ
திருவள்ளூர்
தங்கள் விதேயன்
என் பின் குறிப்பு:
நடைமுறை ஆட்சிமொழி இவ்வாறு இருப்பதில் என்ன குறை கண்டு,
நாடு விடுதலை ஆன பிறகும், 
சென்னை மாகாணம் தமிழ்நாடாக மறுபிறவி எடுத்த பிறகும், 
அந்த அந்த காலகட்டத்தில்
அமைச்சரகமும், அமர்வும், ஆணையும், ஆவேசமும், 
இசைவும், ஈர்ப்பும், உதட்டசைவும், ஊறுகாய் சுவையும், 
எடுத்தாளும் உத்தியும், ஏமாற்றமும் தந்து, 2014 வரை
ஒருமனதாக ஒதுக்கப்பட்ட தமிழை
ஓதாமல் இருக்க நம்மவருக்கு மனம் வந்தது?
*
ஜனாப் நஜிமுத்தீன் சாயபுவின் மடலில் நுணுக்கங்கள் பல உளன. அது பற்றி, கருத்துகளுக்குக் காத்திருக்கும்
இன்னம்பூரான்
23 01 2014 (150 வருடங்களுக்குப் பிறகு)