Showing posts with label சீதாலக்ஷ்மி. Show all posts
Showing posts with label சீதாலக்ஷ்மி. Show all posts

Tuesday, April 19, 2016

இன்னம்பூரான் பக்கம் சுழலும் வட்டமேஜை

இன்னம்பூரான் பக்கம் 

சுழலும் வட்டமேஜை

Wednesday, April 20, 2016, 1:58

இன்னம்பூரான்.

பிரசுரம்: http://www.vallamai.com/?p=68165
இன்னம்பூரான் பக்கம் — சுழலும் வட்டமேஜை

சில நாட்கள் எழுந்தவுடன் நரிமுக தரிசனம் கிடைக்கும். அந்த நாட்களில் எல்லாம் அமோகமாக நடந்தேறும். இன்று நரிமுகம் என்னை வட்டமேஜைக்கு இழுத்துச் சென்றது. அதுவும் அது என்னுடைய மாஜி வட்டமேஜை. இன்று காலை, வழக்கம் போல் ‘ஆல் ஓவெர் சென்னை’ சுற்றாமல் தாம்பரம், சித்லபாக்கம், சேலையூர், கிரோம்பேட் என்று குண்டுசட்டியில் குதிரை ஓட்டியபோது அசாத்திய அனுபவங்கள் கிட்டின.
முதலில் அந்தமான் ‘கைதி’ கிருஷ்ணமூர்த்தி வசமாக நம்மிடம் சிக்கிக்கொண்டார். முனைவர் சதாசிவத்தை பார்க்கச் சென்றால், நெய்வேலி முரளி, சென்னை அரி (ஹரி அல்ல) பாபு புடைசூழ அமர்ந்திருந்த அந்தமானார் எம்மால் இற்செறிக்கப்பட்டார். ஜிலேபி, பழவகைகள், பசங்களோடு போட்டிப்போட்டுக்கொண்டு உண்டு, நான் மதிக்கும் சதாசிவத்தின் அன்னைக்கு வணக்கம், இல்லத்தரசிக்கு வாழ்த்துக்கள், சிறாருக்கு ஆசி கூறி, விடை பெற்றுக்கொள்ள முடியவில்லை. அத்தகைய புத்தகச்சுமையை தலையில் கட்டினார், அருமை நண்பர் சதாசிவம்; அந்தமானில் மாட்டிக்கொண்ட கம்பனும் கூட வந்தார்.
இந்த நால்வர் அணி பைலட் ஆக முன் ஆடி வர, (சுழல் விளக்குதான் இல்லை) யாவரும் கிருஷாங்கிணி வீட்டுக்குப் படை எடுத்தோம். எக்கச்சக்க வரவேற்பு. ‘சுழலும் வட்டமேஜை’ தரிசனம். அது பற்றிய திண்ணைக் கட்டுரை மறு வாசிப்பு. அரவக்கோன் ஓவியங்கள் மனதுக்கு ஆறுதல் அளித்தன. ஏன் தெரியுமா? வண்டி ப்ரேக்டெளன்.
அப்படியும் இப்படியும் கைபேசிகள் முணுமுணுத்த பின் மாற்று வண்டி பிடித்து, வீராங்கனை சீதாலக்ஷ்மி தரிசனம். அடேங்கப்பா! ராஜதர்பார் ஊஞ்சல். சீதாவை விட நல்லமாதிரி அவர்கள் தங்கை. உபசாரம் பலம். போனவிடம் எல்லாம் தண்ணீர்ப்பந்தல் தான், போங்கள். சீதாலக்ஷ்மியின் உறவினர்கள் விழுந்து கும்பிட்டார்கள். காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், ஜிப்பா!
ஒரு பாடாக தங்கை கமலா வீட்டுக்கு வந்து ஒரு தூக்கம் போட்டேன்.
இன்னம்பூரான்
ஏப்ரல் 17/19, 2016

சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, March 3, 2013

அன்றொரு நாள்: நவம்பர் 19 ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!




அன்றொரு நாள்: நவம்பர் 19 ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!
10 messages

Innamburan Innamburan Sat, Nov 19, 2011 at 6:10 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!

தலைப்பின் பெண்ணியம் தலை நிமிர்ந்தது; துணிச்சல் மிகுந்தது; அஞ்சாநெஞ்சத்தின் உறைவிடம்; ஒளி படைத்த கண்ணினாள்; துள்ளி வரும் வேலாக, பகையை அள்ளி, அலக்கழித்து விளையாடும் பெண்ணியம் எனலாம். ‘ஆணவம்’ என்ற சொல் ஆண்பாலின் ஏகபோக உரிமை என்றால், கோல்டா மீயர் (இஸ்ரேல்), இந்திரா காந்தி (இந்தியா), மார்கரெட் தாச்சார் (பிரிட்டன்) ஆகிய அல்லி ராணிகள், ஆண்மக்களே, முபாரக் அலி சொன்ன மாதிரி. யார் அந்த முபாரக் அலி? 

நவம்பர் 19, 1917 அன்று பிறந்த  ஸ்திரீ பிரஜையை, அவளுடைய ‘தலை நிமிர்ந்த’ பாட்டியே சூள் கொட்டித்தான், அரைமனதுடன், வரவேற்றாளாம்.  அந்த மாளிகையின் முதிய மாஜி ஊழியர் முபாரக் அலியிடம், வழக்கம் போல், எடுத்துச்சென்றால், அவர் குழவியை ஆணாக பாவித்து ‘சுபிக்ஷம் உண்டாகட்டும்’ என்று ஆசி வழங்குகிறார், சொன்னதை காதில் போட்டுக்கொள்ளாமல்.  இந்தியாவின் பிரதமராக இருந்த திருமதி. இந்திரா காந்தி அவர்களை பற்றி நேற்றைய (18 11 2011) எகனாமிக்ஸ் டைம்ஸ் இவ்வாறு கட்டியம் கூறுகிறது. இன்று எதிர்க்கட்சியும் புஷ்பாஞ்சலி செய்கிறது. தீர்க்க தரிசி தான் அந்த முபாரக் அலி, பத்தாம் பசலியாக இருந்தாலும்.

இந்த கட்டுரைக்கான ஆய்வில் பல மணி நேரம் வீணாயின, எனக்கு. கட்டுரைத்தலைவியை பற்றி அதிகம் கிடைத்தவை: பொய் மிகு மெய் கீர்த்திகள் & பொய் மிகு பொய் அபகீர்த்திகள். அது போகட்டும். மோதிலால் நேருவின் செல்ல பேத்தி இந்திரா பிரியதர்ஷிணி தனக்கே இழைத்துக்கொண்ட அநீதி: எமெர்ஜென்சி. எடுத்தவுடன் அது தான் பேச்சு, வாதம், விவாதம், விதண்டாவாதம், நிந்தனை. அவருடைய மற்ற சிறந்த பணிகள் மறக்கடிக்கப்படுகின்றன. அதை பற்றி நான் சொல்ல வேண்டியதெல்லாம், ‘அன்றொரு நாள்’ தொகுப்பில், ஜூன் 25 & 26 ஏற்கனவே சொல்லி விட்டேன். இங்கு அது பற்றி பேசப்போவதில்லை. ‘மின் வேலி’ என்ற கட்டுரையில் நான் எழுதியதிலிருந்து ஒரு துளி மட்டும் இங்கே.

“...இந்திரா காந்தியின் கொடுப்பினை: பாலப்பருவத்திலேயே அரசிலயர்களின் அவலக்ஷணத்தை கண்கூடாகப் பார்க்கும் தருணங்கள்; பலரின் தனிமொழிகளையும், உரையாடல்களையும், தள்ளி நின்று கேட்டிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்; அவர்கள் சொல்வதை செய்யாததையும், செய்ததை சொல்லாததையும் வைத்து அவர்களை எடை போடும் வாய்ப்பு. தாயை சிறுவயதில் இழந்த அபலையான இந்திராவின் தந்தையோ அரசியலில் மும்முரம்; பெண்ணுக்கு தனிமை தான் துணை. சிந்தனையும், சூழ்ச்சி செய்யும் திறனும் இந்திராவுக்கு வலுத்தன. கண்ணசைகளையும், சங்கேதங்களையும், நுட்பங்களையும் இனம் காணுவதில் பெண்ணினம் இணையற்றது. அந்த குணாதிசயம் இந்திராவுக்குக் கை கொடுத்தது. கூடப்பிறந்த பிடிவாதமும், துணிச்சலும், ஏற்கனவே பட்டியலிடப்பட்ட கை வந்த கலைகளும், ஆணினத்தை அடி பணிய வைத்தன. தேவ்காந்த் பரூவா என்ற அசடு ‘இந்திரா தான் இந்தியா’ என்று எக்காளமிட்டது. பாபு ஜகஜீவன் ராமே அச்சத்தில், என்கிறார், குல்தீப் நய்யார். ஓடோடி வந்து உடுக்கு அடித்தனர், சித்தார்த் ஷங்கர் ராயும், வித்யா சரண் சுக்லாவும். பூம் பூம் மாடு, ஓம் மேஹ்தா. ஜக் மோஹன் போன்ற அதிகாரவர்க்கம் தலை வணங்கிற்று. ஜனாதிபதி ஃபக்ருத்தீன் அகமது அடித்துப் பிடித்துக்கொண்டு கையொப்பமிட்டார். (அந்த கெஜட் பிரதி ஒன்று என்னிடம் உளது.) தடாலடிக்கு பிள்ளாண்டான் சஞ்சய்யும் அவனது கூஜாக்களும். இந்த ஆணடக்கம் பெரிய சாதனை. இந்திராவின் வாழ்க்கைப்பாடங்களும், குணாதிசயங்களும் ஒருசேர, வரலாற்றில் வேறெங்கும் புலப்படவில்லை. இந்த 1975 ~1977  இந்திய எமெர்ஜென்சிக்கு வித்து, உரம், பாசனம், வேளாண்மை எல்லாம் இந்திரா காந்தி அவர்களின் பின்னணி என்பது என் கருத்து...”

நான் அவரை முதலில் பார்த்தது 1962/63. குடியரசு தின ஜனாதிபதியின் தேனீர் விருந்தில். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. பலவருடங்களுக்கு பிறகு அமெரிக்க அதிபர் நிக்சனுடன் ஒரு புகைப்படம். நிஜமா சொல்றேன். மாமியாரிடம் அஞ்சும் மருமகப்பெண் போல நிக்ஸனார். அம்மையோ லண்டன் எகானமிஸ்ட் வரைந்த காளிப்படம் போல, சீற்றமான முகத்துடன், அதில் ஒரு புன்முறுவலுடன் . நிக்சனும், அவருடைய சகுனி கிஸ்ஸிங்கரும், திரைக்கு பின்னே வசை பாடுகின்றனர்.தந்தைக்கும் அருமந்த புத்திரிக்கும் ஒரு வித்தியாசம். முக்கியமான பொறுப்புகளில், முழுதும் பொருந்தாதவர்களை, அமர்த்திவிட்டு திண்டாடிய நல்ல மனிதர், நேரு. ~ சர்தார் கே.எம். பணிக்கர் ஒரு உதாரணம். உரிய நேரத்தில் சர்தார் படேல் எச்சரித்தார். நேரு கேட்கவில்லை. அசடோ, சமத்தோ, ஜகதல பிரதாபனோ, அபூர்வ சிந்தாமணியோ, அதற்கதற்கு ஆளை பொறுக்குவதில், அம்மணி நிகரற்றவரே. காமராஜரும், மொரார்ஜி தேசாயும் லகுவாக உதறப்பட்டனர். 

இந்த தீன் தேவிகளை சீனியாரட்டிப்படி ஒருகண் பார்த்து விடுவோம்.1898ல் பிறந்த கோல்டா மீயர் ஒப்பற்ற பிரதமர். இஸ்ரேல் பிறக்கும் முன்னரே தேசாபிமானத்தின் உருவகம், அன்னை கோல்டா மீயர். தன்னினம் ஈவிரக்கம் நாடலாகாது என்பதில் தீவிரமாக இருந்தார். ஏழு மிலியன் டாலர் நிதியுதவி புரட்டமுடியாத இடத்தில்  50 மிலியன் திரட்டினார். மூஞ்சியில் அடித்த மாதிரி பேசும் கறார் குணம். இஸ்ரேல் உருவாக்கத்துக்கு நான்கு நாட்கள் முன்னால், மாறுவேடத்தில் சென்று அப்துல்லா மன்னரிடம், ‘எம்மை எதிர்க்கவேண்டாமே’ என்று வேண்டுகோள் விடுவிக்க, அவரும் ‘அவசரப்படேல்’ என்றார், ஏதோ ஞானியை போல. பதில்: ‘அவசரமா? நாங்கள் இரண்டாயிரம் வருடம் காத்திருக்கிறோமே.’ ஒரே வார்த்தையில் கோல்டாமீயரின் புருஷலக்ஷணம். ம்யூனிச் நகர படுகொலை பற்றி, ‘அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 5’  இழையில் எழுதியிருந்தேன். கோல்டா மீயர் எதிர்ப்பார்த்த அளவுக்கு சர்வ தேச ஆதரவு கிட்டவில்லை. அந்த  கொலைகாரர்களை இருபது வருடங்களாகத் தேடி பிடித்து ஒழித்து விட ஆணை பிறப்பித்து, அதை செய்து காட்டியது கோல்டா மீயர். தேவி நம்பர் 1.
இந்திய பிரதமர் இந்திரா காந்தி நம்பர் 2 சீனியாரிட்டியில். பல விஷயங்களில் நம்பர் 1. அவருடைய குணாதிசயங்களை புரிந்து கொள்ள, சில் மேற்கோட்கள்: 
~ என் தந்தை ராஜாங்கம் ஆளுபவர்; நான் அரசியல் வாதி பெண். அவர் ஒரு ஸைண்ட். நான் அப்படியில்லை.
~ நான் செய்வதெல்லாம் அரசியல் விளையாட்டுக்கள். ஜோன் ஆஃப் ஆர்க் மாதிரி நான் அவ்வப்பொழுது பலிகடா ஆகிறேன்.
~ என் தாத்தா சொல்லுவார்: உழைப்பவர்கள் ஒரு இனம்; பேர் தட்டிச் செல்பவர் மற்றொரு இனம். முதல் இனத்தில் சேரு. போட்டி கம்மி.

உங்களுக்குத் தெரியாதது என்ன எனக்கு தெரிந்து இருக்கப்போகிறது? இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் அவரது புகழை நிலை நாட்டுகிறது. அதனுடைய முதல் துணை வேந்தர் டாக்டர் ராமி ரெட்டி எனது நண்பர். அடிக்கடி அந்த நிறுவனத்துக்காக, அவருடன் அநாமதேயமாக உழைத்தது உண்டு. அப்படி வேலை வாங்குவது இந்திரா காந்தி ஸ்டைல். டாக்டர் ராமி ரெட்டியை, தீவிர ஆய்வுக்குப் பிறகு தேர்ந்தெடுத்த பிரதமர் இந்திரா காந்தி சொன்னது, ‘உம்மை இங்கு அமர்த்தியதுடன் என் வேலை முடிந்தது. இனி வெற்றியோ தோல்வியோ,உம் கையில். யாரும் குறுக்கிடமாட்டோம்.’

இனி தேவி நம்பர் 3: 1925 ல் பிறந்த மார்கெரட் தேட்சர். இங்கிலாந்தின் பிரதமர் 1979 -1990. கன்செர்வேட்டிவ். அவரது ஆட்சி பல விதங்களில் ஒரு எதிர்நீச்சல். விலாவாரியாக பேச இது இடமில்லை. ஆனால், இரண்டு விஷயங்கள். 1. அவருக்கு இந்திரா காந்தி மாடல் எனலாம். 2. குடிசை மாற்று வாரியம் போல், இங்கிலாந்தில் முனிசிபாலிட்டிகளுக்கு சொந்தமான மலிவு குடியிருப்புகளில் ஏழை பாழை வாழ்வார்கள். அவற்றை பாதி விலைக்கு அவர்களுக்கு விற்கப்போவதாக இன்று (19 11 2011) அறிவிப்பு. இதற்கு நன்றி மார்கெரெட் தாட்சருக்கு சொல்ல வேண்டும். 
அதே போல், நாமும் இந்திரா பிரதர்ஷிணி காந்திக்கு பல விஷயங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். பல விஷயங்களை நினைத்து திருந்தவும் வேண்டும்.
இன்னம்பூரான்
19 11 2011  
scan0017-300x174.jpg




உசாத்துணை:

18 NOV, 2011, 12.10PM IST, IANS 


Seethaalakshmi Subramanian Sat, Nov 19, 2011 at 7:47 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அண்ணா, நவம்பர் மாதம் பிறந்த பொண்ணு எல்லோரும் ராணியாகிட முடியுமா? நானும் நவம்பர் மாதத்துப் பொண்ணு. சமத்தா, அடக்கமா வீட்டுக்குள் இருக்கேன்.
அண்ணா , நான் சாதுப் பொண்ணுதானே?
உங்கள் தங்கை சீதா

2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>


Innamburan Innamburan Sat, Nov 19, 2011 at 7:54 PM
To: mintamil@googlegroups.com
நீயும் நவம்பர் அல்லி அரசாணி தான், சீதா! எத்தனை பேரை ஆட்டிவைத்திருக்கிறாய்! ஆட்டிப்படைத்திடவே வந்துருளிய பெண்ணியத்தில் நீயும் அடக்கம். என் வாழ்த்து. படங்கள் எல்லாம் பார்க்கவும்.அரிய புகைப்படங்கள் உளன்.
அண்ணா இன்னம்பூரான்





Seethaalakshmi Subramanian Sat, Nov 19, 2011 at 8:12 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அண்ணா, நான் சிறுமியாக இருக்கும் பொழுதே என் அப்பா என் பொண்ணை இந்திராகாந்தி மாதிரி வளர்ப்பேன் என்றார். அப்பொழுது அந்த அம்மாள் எந்தப்பதவியிலும் இல்லை. நேருஜிக்கு ஒரே பெண். அப்பாவிடம் கேட்டதற்கு துணிச்சலான பொண்ணா இருன்னு சொன்னார். எனக்கு மிகவும் பிடித்தமான பெண். அவர்கள் செய்த செய்ல்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்தவில்லை. அவரது துணிச்சல் பிடிக்கும். அதுவும் அரசியலில், ஆண்கள் உலகில் துணிச்சலுடன் இருந்தே ஆக வேண்டும். அவர்களை ஒருமுறையாவது தொட்டுப் பார்க்க விரும்பினேன். போட்டொ எடுத்துக் கொள்ள விரும்பினேன். இரண்டும் நடந்தது அண்ணா
சீதா

2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நீயும் நவம்பர் அல்லி அரசாணி தான், சீதா! எத்தனை பேரை ஆட்டிவைத்திருக்கிறாய்! ஆட்டிப்படைத்திடவே வந்துருளிய பெண்ணியத்தில் நீயும் அடக்கம். என் வாழ்த்து. படங்கள் எல்லாம் பார்க்கவும்.அரிய புகைப்படங்கள் உளன்.
அண்ணா இன்னம்பூரான்


2011/11/19 Seethaalakshmi Subramanian <seethaalakshmi@gmail.com>
அண்ணா, நவம்பர் மாதம் பிறந்த பொண்ணு எல்லோரும் ராணியாகிட முடியுமா? நானும் நவம்பர் மாதத்துப் பொண்ணு. சமத்தா, அடக்கமா வீட்டுக்குள் இருக்கேன்.
அண்ணா , நான் சாதுப் பொண்ணுதானே?
உங்கள் தங்கை சீதா

2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!




[Quoted text hidden]

Innamburan Innamburan Sat, Nov 19, 2011 at 8:48 PM
To: mintamil@googlegroups.com

கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது, சீதா. தற்கால வரலாறு எழுதும்போது, தெரிந்ததை எல்லாம் எழுதிவிடமுடியாது. எல்லாரும் மனிதர்கள் தானே. சந்ததிகள் மனம் நோகலாகாது. இந்திரா காந்தியின் அசாத்திய துணிச்சல் மோதிலால் நேருவுக்கு இருந்தது. பிறகு யாருக்கும் இல்லை. நான் குறிப்பிட்ட முப்பெருந்தேவிகளில் மார்கெரட் தாட்சரின் அணுகுமுறையை நான் ஏற்கவில்லை. ஆனால் அவருடைய தீர்மானத்தின் பிற்கால நல்ல பயனை புறக்கணித்தால், வரலாறு எழுதும் தகுதியை இழந்து விடுவேன். அம்மாதிரி தான் இந்திரா காந்தியின் தீர்மானங்களில் சில. என்றுமே, ஆளை பொறுக்குவதிலும், கழிப்பதிலும் அவருடைய அபார திறனை நான் வியக்காத நாள் கிடையாது.
அது சரி. உன்னை சேர்த்து எனக்கு ஐந்து தங்கைகள். கடைக்குட்டிக்கூட என்னை பன்மையில் விளிப்பதில்லை. நீயும் அந்த பழக்கத்தை நிறுத்தி விடு.
அண்ணா இன்னம்பூரான்
[Quoted text hidden]

Seethaalakshmi Subramanian Sat, Nov 19, 2011 at 10:01 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அண்ணா, ஒரு விஷயம். ஒரு பெரிய அரசியல் பிரமுகரிடம் நான் "நீங்கள் அரசியலுக்கு அவ்வளவு சரியில்லை" என்றேன்.அவர் என் மீது கோபித்துக் கொள்ளவில்லை. ஆனால் உடனே ஒரு கேள்வி கேட்டார். "நீ யாரை பொருத்தம் என்று நினைக்கின்றாய்? உடனே தயங்காமல் இந்திராகாந்தி என்றேன். நேருஜி நல்லவர். ஆனால் மகள் வல்லவர். 
அரசியலில் தலைமையேற்று நடப்பது சாதாரணமல்ல.
உங்களுக்குத் தெரியும். நாம் வேலை செய்வது எளிது. ஆனால் பலரிடம் வேலை வாங்குவது அவ்வளவு எளிதல்ல.  management is not easy. he should have special skill.
போர்க்களத்தில் கொலைகள் எப்படி நியயப்படுத்தப்படுகின்றதோ அரசியலிலும் சில போக்குகள் அவசியமாகின்றது. சாணக்கிய தந்திரம் என்கின்றோம். எதற்கும் அஞ்சாத ராட்சசி அந்த அம்மாள்
ஆனால் அவர்களும் சாதாரண மனுஷி என்பதை ஒரு முறை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அலக்பத் தீர்ப்பு வந்தது. எமெர்ஜென்சியும் வந்தது. அதன் பின்னர் அவர்கள் காஞ்சிக்கு மகாப் பெரியவரைப் பார்க்க வந்தார்கள். தேனப்பாக்கத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. பெரியவர் ஒன்றும் பேசவில்லை. நேரகப் பார்க்கக் கூட இல்லை. அங்கே அமைதியாக கிழே அமர்ந்திருந்த அம்மையாரின் கண்கணில் கண்ணீர் வழிந்தோடியது. அவர்கள் ஆத்மாவின்  கண்ணீர்
இதுவரை இதனை நான் யாரிடமும் சொன்னதில்லை. சிலர்தான் அக்காட்சியைக் காணமுடிந்தது
கண்ணன் பார்தப்போரில் செய்யாத சூழ்ச்சியா? அவனால் சிரிக்க முடியும். ஆக்கலும் அழித்தலும் அவனுக்கு ஒன்றே. நாம் மனிதர்கள். துணிச்சல் எத்தனை இருந்தாலும் ஏதாவது தவறுகள் செதிருந்தால் (மனிதன் செய்யாதிருப்பானா) என்றாவது ஒருநாள் 
கண்ணீர் சிந்தத்தான் வேண்டும். . முதுமை கால்த்தில் வேலைகள் எதுவும் செய்யாதிருந்தால் நம் பழங்கணக்கைப் பார்க்கத்தோன்றும். அப்பொழுது சிரிப்பதும் அழுவதும் நேரிடும்
இந்திராகாந்தி பெயரே என்னை எங்கோ இட்டுச் சென்றுவிட்டது. பலரும் புத்தகத்திலும் படங்களிலும் பார்க்க முடிந்த பல பெரியவர்களுடன் அருகில் இருக்கும் வாய்ப்பு நம்மிருவ்ருக்கும் அதிகம் உண்டு. நாம் பேசியிருக்கின்றோம்


2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>

[Quoted text hidden]

Geetha Sambasivam Sat, Nov 19, 2011 at 11:16 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
அரிய தகவல்கள். தெரிந்த தகவல்கள் எனினும் தொகுப்பு அபாரம். வழக்கம் போல் தெரியாத தகவல்களும் உண்டு.

2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!

இன்னம்பூரான்
19 11 2011  

Geetha Sambasivam Sat, Nov 19, 2011 at 11:18 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
அரிய தகவல்கள். தெரிந்த தகவல்கள் எனினும் தொகுப்பு அபாரம். வழக்கம் போல் தெரியாத தகவல்களும் உண்டு
2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
இன்னம்பூரான்
19 11 2011  


Subashini Tremmel Sun, Nov 20, 2011 at 9:01 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram
இப்பதிவை வாசித்து மகிழ்ந்தேன் திரு.இன்னம்புரான். 

இந்த இழையில் நீங்களும் சீதாம்மாவும் செய்யும் கலந்துரையாடலும் அனுபவத்தின் வெளிப்பாடாகவும் சுவாரசியாமகவும் இருக்கின்றது.


சுபா
2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!

தலைப்பின் பெண்ணியம் தலை நிமிர்ந்தது; துணிச்சல் மிகுந்தது; அஞ்சாநெஞ்சத்தின் உறைவிடம்; ஒளி படைத்த கண்ணினாள்; துள்ளி வரும் வேலாக, பகையை அள்ளி, அலக்கழித்து விளையாடும் பெண்ணியம் எனலாம். ‘ஆணவம்’ என்ற சொல் ஆண்பாலின் ஏகபோக உரிமை என்றால், கோல்டா மீயர் (இஸ்ரேல்), இந்திரா காந்தி (இந்தியா), மார்கரெட் தாச்சார் (பிரிட்டன்) ஆகிய அல்லி ராணிகள், ஆண்மக்களே, முபாரக் அலி சொன்ன மாதிரி. யார் அந்த முபாரக் அலி? 


-

Innamburan Innamburan Sun, Nov 20, 2011 at 10:16 AM
To: mintamil@googlegroups.com


2011/11/20 Subashini Tremmel <ksubashini@gmail.com>
இப்பதிவை வாசித்து மகிழ்ந்தேன் திரு.இன்னம்புரான். 

இந்த இழையில் நீங்களும் சீதாம்மாவும் செய்யும் கலந்துரையாடலும் அனுபவத்தின் வெளிப்பாடாகவும் சுவாரசியாமகவும் இருக்கின்றது.


சுபா
~ நன்றி, ஸுபாஷிணி, அரிய படங்களையும், ஒரு நேர்காணலையும் இணைத்திருக்கிறேன். நேரம் இருக்கும் போது பார்க்கவம்.
இன்னம்பூரான் 

2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!


அன்றொரு நாள்: நவம்பர் 24 ‘வர வர கழுதை மாமியார் போல ஆன கதை!



அன்றொரு நாள்: நவம்பர் 24 ‘வர வர கழுதை மாமியார் போல ஆன கதை!
5 messages

Innamburan Innamburan Thu, Nov 24, 2011 at 6:02 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: நவம்பர் 24
‘வர வர கழுதை மாமியார் போல ஆன கதை!
தலைப்பு கொஞ்சம் கிருத்திரமமாக இருந்தாலும், இலக்கு உன்னதமாக இருப்பதால், இந்த இழையும் சீதாலக்ஷ்மி ஸ்பெஷல். அவருக்கு பிடித்த சமாச்சாரம்: வசீகரம். உரையாடல் நடை. புகுந்து விளி ஆடுவது எளிது. என்ன தான் திசை மாற்றினாலும், வள்ளிசா புறமுதுகுக் காட்டி, கம்பாஸ் போல துருவ நக்ஷத்திரம் நோக்கி திரும்பிக்கொள்ளும். 
அன்றொரு நாள் ஆண்டோ பீட்டருடன் கதைத்துக்கொண்டிருந்தேன். வாழ்நாளில் ஒரே ஒரு நாள் தான் அந்த அரிய தருணம் கிடைத்தது என்பதையும் தக்கதொரு தன்னடக்கத்துடன் கூறிக்கொண்டு, விஷயத்துக்கு வருகிறேன். ஆருத்ரா தரிசனம் கிடைத்தாலும் ஆண்டோ தரிசனம் கிடைக்குமோ? அந்த சமயம் கூட இருந்த நண்பர் ஒருவர் சுயமுன்னேற்றத்தை பற்றி ஆர்வத்துடன் பேசி வரும் போது, வழக்கம் போல் குறுக்கிட்ட யான், டேல் கார்னீகீ பற்றி அறிவீரோ என்று கேட்டேன். ‘லபக்’ என்று அவர் திசை மாற்ற, எனக்கும் பசியெடுக்க, சு.மு. பேச்சு அபார்ஷன் ஆகிவிட்டது! அது தொடர்ந்திருந்தால்.....!
ஒரு கற்பனை உரையாடல்:
பாத்திரங்கள்: ஆண்டோ பீட்டர், நண்பர், இன்னம்பூரான்.
நிழல் மாந்தர்: சாமுவேல் ஸ்மைல்ஸ், டேல் கார்னீகீ, நெப்போலியன் ஹில், மரியன் ரூடி கோப்மேயர், மற்றும் பலர்.
தமிழ்ச்சாயலில்: சிபி.கே.சாலமன், சோம.வள்ளியப்பன், ‘வல்லமை’ புகழ் N.கணேசன், மற்றும் பலர்.
நண்பர் சுனா.முனா. ஏணியில் விரைவாக ஏறி வரும் வேளையில்:
இ: நீங்கள் டேல் கார்னீகீ எழுதிய ‘How To Win Friends And Influence People’ படித்திருக்கிறீர்களோ?
ந: நான் சுனா. முனா. பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன், சார்.
இ: (தனி மொழி) இவர் தமிழர் என்பதில் ஐயமில்லை. இனி பேசியும் பயனில்லை. நவம்பர் 24,1888 அன்று வறுமையில் பிறந்து,உழன்று, ஒரு ‘ஜயங்கொண்டான்’ விற்பனை பிரதிநிதியாக, ஊரெல்லாம் சுற்றி, பல அனுபவங்களை சுவைத்து, அசைபோட்டு, ஒரு சொற்பொழிவாளாராகத் திகழ்ந்தார், டேல் கார்னீகீ. அவர் எழுதிய மேற்படி நூல் தன்னை ஒரு ‘ஜயங்கொண்டானாக‘ மாற்றியது என்கிறார், வாரன் பஃபெட். அந்த நூல் 1955லியே 50 லக்ஷம் பிரதிகள் விற்று வாகை சூடியது. 29 மொழிகளில் மொழி பெயர்ப்பு.
சுருங்கச்சொல்லின், மக்களை வசீகரித்து ஆட்டிப்படைப்பது எப்படி, அவர்கள் நம்மை நாடவைக்க ஆறு வழிமுறைகள், நம்ம ரூட்டுக்கு அன்பர்களை கட்டி இழுத்து வருவது எப்படி, மற்றவர்களுக்கு கசப்பு ஏற்படுத்தாமல் தலைமை எடுத்துக்கொள்ளும் உத்திகள் என்ற தலைப்புகளில் அவர் அளித்த அரிச்சுவடி, தன்னம்பிக்கை வளர்ப்பதற்கும், தமது திறன்களை பலப்படுத்துவதற்கும், பயனளிக்கும் பேச்சு வார்த்தை திறமைகளை தரமுயர்த்துவதிலும், தலைமை தாங்கும் சக்தியை விளக்குவதிலும், தமது நோக்கு, போக்கு, சுளிவுகளை சரி செய்து, அநாவசிய அழுத்தங்களை குறைப்பதிலும், லக்ஷக்கணக்கான மக்களுக்கு தக்கதொரு அறிவுரையை உரிய தருணத்தில் அளித்துள்ளது.
ஆண்டோ: இவற்றையெல்லாம் தன் வாழ்க்கையில் அவர் கடை பிடித்தாரோ?
நண்பர்: அதெல்லாம் இருக்காது சார். இவங்க எல்லாம் பேச்சோடு சரி.
இ: அதான் இல்லை. விற்பனை வேலையை அவர் விட்டதும் விவேகம். முதல் லெக்சரில், மக்கள் கருத்துக்கேட்டு, அதன்படி இயங்கியது, வசீகரம். மனுசன் கில்லாடி, சார். அவர் பெயர் “Carnagey”. அக்காலம் Andrew Carnegie பிரபல தொழிலதிபர், செல்வந்தர், வள்ளல். தன் பெயரை Carnegie என்று மாற்றிக்கொண்டு உலகையே வில்லாக வளைத்து விட்டார்! அது சூத்திரம். இத்தனைக்கும் ஆண்ட்ரூ கார்னீகி, இவருடைய போட்டியாளரான நெப்போலியன் ஹில் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்.
ஆண்டோ: எனக்கு புரிகிறது. சில நாட்களுக்கு முன்னால் என்னுடைய சுயமுன்னேற்றத்தை பற்றி மின் தமிழில் எழுதியிருக்கிறேனே. உங்களுடைய மேலான மீள் பார்வைக்கு:
இ: படித்து மகிழ்ந்தோம். ஆமாம். டையின் முடிச்சு தளர்ந்து இருக்கே.
அன்டோ: நான் தளரவில்லையே. அதான் பாயிண்ட்:-) உங்களுடைய வாத்தியார் யாரு?
இ: எனக்கு உத்வேகம் கொடுத்தது சாமுவேல் ஸ்மைல்ஸ். வேளை வந்தா எல்லாம் சொல்லலாம். கார்னீகியை கேட்டால் ‘வள வள’னு பேசாதே. நாலு பேர் கேட்டால் சொன்னால் போதும் என்பார். சீதாலக்ஷ்மியை கேட்டால், எத்தனையோ பேருக்கு சுயமுன்னேற்ற பாடம் எடுக்க வேண்டியிருக்கிறது. அதை விட உனக்கு என்ன வேலை என்பார். அவரே பாடம் எடுத்தால் நன்முத்துக்கள் உதிரும். இப்போதைக்கு ஒரு கார்னீகி மேற்கோள். ஃபெப்ரவரி 14, 1937 அன்று, இந்த நூலை மதீப்பிடு செய்த ந்யூ யார்க் டைம்ஸ் சொன்னது: ‘ டேல் கார்னீகி வாகை சூட தரும் சூத்திரம்,‘புன்சிரிப்பு, நட்புரிமை, வாதமிடுவதையும், குற்றம் காண்பதையும் தவிர்த்தல், மேலும் யாரிடமும் ‘நீ சொல்வது தவறு’ என்று அறை கூவாமல் இருத்தல்’. இது கொஞ்சம் cynical என்றாலும், "simple sound, practical common sense.".
இன்னம்பூரான் ~ சீதாலக்ஷ்மி தனி மடல்: “... என்னமோ நீங்கள் கொடுத்த ஊக்கத்தில் எழுதிவிட்டேன். தொடர்ந்து எழுதினால் ஒரு மின்னூலே ரெடி. உசாத்தூண்கள் பல நின்றாலும், உப்பரிகை எமதே. போகப்போக பார்க்கலாம்...”
இன்னம்பூரான்
24 11 2011
iStock_000011806154XSmall.jpg

உசாத்துணை:

Geetha Sambasivam Thu, Nov 24, 2011 at 6:11 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
அருமை,   ஆன்டோவிற்கு கெளரவம் அளித்தமைக்கும், சீதாம்மாவின் ஆசையை நிறைவேற்றியதற்கும். நல்ல முடிச்சு!  கெட்டியாகப் போட்டிருக்கீங்க. 

2011/11/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 24
‘வர வர கழுதை மாமியார் போல ஆன கதை!

உசாத்துணை:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Geetha Sambasivam Thu, Nov 24, 2011 at 6:12 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
அருமை,   ஆன்டோவிற்கு கெளரவம் அளித்தமைக்கும், சீதாம்மாவின் ஆசையை நிறைவேற்றியதற்கும். நல்ல முடிச்சு!  கெட்டியாகப் போட்டிருக்கீங்க. 
2011/11/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 24
‘வர வர கழுதை மாமியார் போல ஆன கதை!


coral shree Sun, Nov 27, 2011 at 7:50 AM
To: Innamburan Innamburan
//‘ டேல் கார்னீகி வாகை சூட தரும் சூத்திரம்,‘புன்சிரிப்பு, நட்புரிமை, வாதமிடுவதையும், குற்றம் காண்பதையும் தவிர்த்தல், மேலும் யாரிடமும் ‘நீ சொல்வது தவறு’ என்று அறை கூவாமல் இருத்தல்’. இது கொஞ்சம் cynical என்றாலும், "simple sound, practical common sense.".//

அருமை ஐயா. எனக்கு மிக விருப்பமான புத்தகம் தொட்டுக் காட்டியுள்ளீர்கள்....... திருக்குறள் போல அடிக்கடி படிக்க வேண்டிய ஒரு புத்தகம் என்று நான் நினைப்பதுண்டு.. ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் பெருமை சேர்ப்பதுஎன்று கங்கணம் கட்டிக் கொண்டு தாங்கள் செய்வது பெரும் சேவை. மனித மனத்தை மதிக்கத் தெரிந்த தங்கள் வள்ளல்தன்மை போற்றுதலுக்குரியது. வாழ்த்துகள் ஐயா.
[Quoted text hidden]
--

                                                              
                 

Innamburan Innamburan Sun, Nov 27, 2011 at 8:21 AM
To: Antopeter Ramesh
[Quoted text hidden]