Showing posts with label குரங்கு. Show all posts
Showing posts with label குரங்கு. Show all posts

Thursday, May 30, 2013

11. ‘குரங்குப்பிடிக்க…’…தணிக்கை




11. ‘குரங்குப்பிடிக்க…’…தணிக்கை

Innamburan S.Soundararajan Wed, May 30, 2013 at 12:14 PM

Inline image 1
அப்டேட் 3:

ஆடிட்காரனுக்கு ஆப்பு வைக்க பழம்பெருச்சாளிகள் வைக்கோல் 

போர் மாதிரி, கண்ட கண்ட கோப்புக்களை குப்பைக்கூளமாக 

தருவார்கள். அதற்கு நாங்கள் மாற்று மருந்து வைத்திருக்கிறோம்.

அது ரகசியம்.  2ஜி கனம் கோர்ட்டாரை கோழிக்குஞ்சு மாதிரி 

1029 மனுக்களை அம்பாரமாக குவித்துப்போட்டு ஆ ராசா, 

கனிமொழி போன்றோர் அமுக்குறாங்களாம். ஒக்கடி, கோர்ட்டு

என்ன நினைக்கிறது என்று விசாரிச்சுக்கலாம்; சுதாரிச்சுக்கலாம்.

கோர்ட்டு முக்கியமான வேலைகளை செய்ய முடியாமல் தவிக்க 

வைக்கலாம். அதுலே மீன் பிடிக்கலாம்ம்….

இது இன்றைய செய்தி.

இன்னம்பூரான்

02 12 2013

அப்டேட்: 2: அடுத்த விவகாரம், பிற்காலம் 2ஜி விஷயத்தில் கூடாநட்பு கொண்டு கம்பேனிகள் 
அரசை படுத்தி விட்டதை பற்றி ஆடிட்டர் ஜெனெரல் சில நாட்களுக்கு முன்னால் எழுதிய மடல் அடிபடுகிறது. அசைக்கமுடியாத ஆதாரங்கள் என்று தோற்றம். இன்று ஐபிஎன் கரன் தாபருக்கு கொடுத்த பேட்டியில், திரு.விநோத் ராய் தன்னிலை விளக்கத்தைத் தெளிவாகக் கொடுத்து இருக்கிறார்.
இன்னம்பூரான்
30 05 2013


அப்டேட்: கடந்த இரண்டு வருடங்களுக்குள் பல ஊழல்கள் வெளிவந்துள்ளன, தணிக்கைத்துறையின் தணியா வேகத்தினால். எனினும், கவலைகளும் அதிகரித்து வருகின்றன. ஒரு பக்கம், அரசாளும் சால்ஜாப்பு மையங்கள் வலுத்துவருகின்றன. மற்றொரு பக்கம், ஐபிஎல் சூதாட்டம், ஆள்மாறாட்ட புள்ளிகளின் பலகோடிகளும், தோழி, தடியர், சொகுசு கார்கள், பயிரு தின்னும் வேலிகள், தரகர்களின் கரகாட்டம் என்றெல்லாம் செய்திகள் குவிந்து, சமுதாயம், தனியார் எல்லாம் 'நுறைகடலோடி, நிழலாட்டம் ஆடி, கோடானுகோடி புரட்டுவதும்' அதை மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் கவலைகள் தான். 
இன்னம்பூரான்
30 05 2013
11. தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை -  ‘குரங்குப்பிடிக்க…’
இன்னம்பூரான்
Friday, June 10, 2011, 13:2


இந்த ஆனானப்பட்ட 2ஜி விவகாரம் ஒரே சமயத்தில் பற்பல இடங்களில் – தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிக்கைகள், நீதிமன்றங்கள், பாராளுமன்றம், அதனுடைய குழுக்கள், பொது மன்றங்கள், உலகமேடை என்றெல்லாம் – பேசப்படுகிறது. அவற்றில் ஒன்று பாராளுமன்றத்தின் பொது கணக்குக்குழு. அதனுடைய வரைவு அறிக்கை மே 2, 2011 அன்று வல்லமை இதழில் அலசப்பட்டது. அக்குழுவின் காங்கிரஸ், தி.மு.க. அங்கத்தினர்கள் பெருங்குரலெழுப்பி, அந்த வரைவு அறிக்கையை கண்டனம் செய்து, வெளி நடப்பு செய்ததும் வரலாறே.

நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு ஒன்று, அரசு ரதத்தின் ஐந்தாவது சக்கரமாகச் சுழல்வதையும், காண்கிறோம். அதனுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு, அதற்கு முன்னால் ஆஜரான இந்திய தணிக்கைத்துறையின் தலைவரும், இந்திய புலனாய்வுத்துறையின் தலைவரும் அளித்த சாட்சியங்கள், நம்மை எல்லாம் திணற அடிக்கின்றன. ஒரு புறம் பார்த்தால்,  தமிழகம் அறிந்த ஒரு சொலவடைக்கு ஏற்ப, ‘குரங்கு பொம்மை பிடிக்கப்போய், அது பிள்ளையாராக அமைந்த மாயமா!’ என்று தோன்றலாம். அல்லது, ‘கிணறு வெட்ட கிளம்பியது பூதம்’ எனலாம்.
ஜூன் 8, 2011 அன்றைய எகானமிக்ஸ் டைம்ஸ் இதழில் இந்திய தணிக்கைத்துறையின் தலைவரின் சாட்சியமும், ஜூன் 9, 2011 அன்றைய ஹிந்து இதழில் ஏற்றப்பட்ட, இந்திய புலனாய்வுத்துறையின் தலைவரின் சாட்சியமும், நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவின் அணுகுமுறைக்கு இசைந்ததாக அமையவில்லை என்ற கணிப்பு ஒரு புறம் இருக்க, கிளறப்பட்ட விஷயங்கள், ஆதாரக்கூறுகள் எல்லாம் நம்மை திகைக்கவைக்கின்றன. தலை குனிய வைக்கின்றன. பற்பல வருடங்களாக, அரசு ஆளுமை மக்களை வஞ்சித்து, சுயநலப் போக்கு உடையவர்களின் சாம்ராஜ்யமாக அதிகார துஷ்பிரயோகம் செய்து, ‘குரங்கு பிடித்ததா…’ என்ற அச்சம் எழுகிறது. எனினும். நம்மீது அளவிலா இரக்கம் கொண்டு, இந்த அச்சமில்லா சாட்சியங்களின் உருவகமாக, சித்தி புத்தி விநாயகர் காட்சி அளிக்கலாம்!
இந்திய தணிக்கைத்துறையின் தலைவரின் சாட்சியம்:
உகந்த முறையில் ஒரு அமைச்சர்களின் குழு, கலந்து ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவுகளை, திரு.தயாநிதி மாறன் தனது ஏகாதிபத்யமாக மாற்றி அமைத்துக்கொண்டார்;  2003ம் வருடம், நிதி அமைச்சரகத்திற்கு சம அளவு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.2006ஆம் ஆண்டு, கலந்து ஆலோசிக்க ஒரு அமைசர்களின் குழு அமைக்கப்பட்டது.
இதையெல்லாம்,திரு.தயாநிதி மாறன் தூக்கி எறிந்து விட்டார். நிதி அமைச்சரகம் இதை எதிர்த்தாலும், அதனுடைய சொல் எடுபடவில்லை. சொல்லப்போனால், அமைச்சரகம் முழுதுமே ஒருசேர 2003இல் இட்ட ஆணையை,திரு.தயாநிதி மாறன் புறக்கணிக்க ஏற்பாடு செய்துவிட்டார். (இந்த நடவடிக்கை எல்லாம், பிரதமரை கேட்ட பிறகு தான் என்று திரு.தயாநிதி மாறனுக்கு வேண்டப்பட்டவர் ஒருவர் சொன்னாராம். அவர் அநாமதேயமாகத்தான் பேசினாராம்!)  திரு.தயாநிதி மாறன் காலத்தில் விளைந்த நஷ்டம் ரூபாய் 38 ஆயிரம் கோடி என்று தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவரது துறையின் 2005ஆம் வருட வழிமுறைகள் கடாசப்பட்டன. அத்துடன் விட்டதா? 15 மனுக்களில், 14 மனுக்களின் மீது முடிவு எடுக்க தாமதம்: 608 =>969 நாட்கள்; அடுத்த 9 மனுக்கள் தாமதம்: 232 =>421 நாட்கள்; அடுத்த 29 மனுக்கள்: ‘கடப்ஸ்!’ அவற்றில் சிக்கிக்கொண்டதில் ஒன்று திரு. சிவசங்கரனில் ஏர்செல்; இதை இந்திய தணிக்கைத்துறையின் தலைவர் எடுத்துச் சொல்லவில்லை என்றாலும் (அது மரபு), அந்த விஷயம் வெளிச்சத்தில். அது போகட்டும். திரு.தயாநிதி மாறனுக்கு வேலை போனதுக்கு இதெல்லாம் காரணமில்லை: குடும்பப்பூசல் தான் காரணம்.
இந்திய புலனாய்வுத்துறையின் தலைவரின் சாட்சியம்:
திருவாளர்கள். ஆ. ராஜா, சித்தார்த் பெஹூரா, ஆர்.கே. சந்தோலியா அடங்கிய ஒரு  கும்பல், நேர்மையான அதிகாரிகளை மிரட்டி, அதட்டி, தண்டித்து, தன்னிச்சையாக முறைகேடுகள் செய்த வண்ணம். அனில் அம்பானியின் நிறுவனம் மறைந்திருந்து மர்மங்கள் செய்ததாகவும், அவர் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.
வாழ்க பாரதமாதா! வாழ்க மஹாத்மா காந்தியின் நாமம்! வாழ்க இந்திய பெருமக்கள்!
(தொடரும்)