Creative Writings in Tamil: Series: 5: 1: 1: 7 ஆசிய ஜோதி
This is the Seventh instalment of a new series on creative writing of recent origin in Tamil.
It is wise to do a brief Retrospective for absorbing the message from Literary passages, particularly when Divinity is perceived. I present a string of such gems from Asia Jothi on episodes already covered.
இலக்கிய சோலைகளின் அழகை அனுபவிக்க, திரும்பி, திரும்பி பார்க்க வேண்டும். தெய்வீக மணம் வீசும் இலக்கியங்களை மனனம் செய்வது சாலத்தகும். கவிமணி அவர்களின் ஆசியஜோதியிலிருந்து கோர்த்த ஒரு சொல் மாலை. அது எனக்கு அளிக்கப்பட்ட வரமாகக் கருதுகிறேன்.
*
‘வையகத்தில் உயிர்கள்மிக வாடக் கண்ட (இறைவன்)... இன்னும் ஓர்கால் மனிதஉடல் தாங்கமனத்து ஆசை கொண்டு... சாக்கியர்தம் மன்ன னுக்கு யானுமொரு மகனாகச் (சென்றார்.)... விண்ணகம் விட்டு விரைந்திறங்கி - வரும் வீதி யெலாம்ஒளி வீசிவந்து, மண்ணகம் வாழ வலந்திரிந்து - தேவி மாயை வயிற்றில் புகுந்ததுவே... பட்ட மரங்கள் தளிர்த்தனவே - எங்கும் பாழ்ங்கிண றும்ஊறிப் பொங்கினவே; திட்டுத் திடர்மணற் காடும் - சுடுகாடும் சில்லென்று பூத்துச் சிலிர்த்தனவே... இடைவெளி யின்றி எவ்வெவ் வுலகும் பாதல மீறாப் படர்ந்து சென்றது;
மக்கள்
"பிறந்திட இறந்தீர்! இறந்திடப் பிறந்தீர்! எழுமின்! எழுமின்! யாவரும் எழுமின்! புத்த பெருமான் புவியில் உதித்தனன்; அவனை வணங்குமின்; அவன்வழி பற்றுமின்; அவனுரை கேண்மின்; அழிமனம் ஒழிமின்; நலமுறு மெனவே நம்பி நாடுமின்; உள்ளந் தெளிமின்; உறுதி கொண்மின்; உய்யும் வழிஈது; உண்மையும் ஈதாம்; என்னும் மொழிகள் எவ்வெவ் விடத்தும் மந்திர மொழிகளாய் வந்தெழக் கேட்டனர்...
... தேவி, நோவு நொம்பலம் நோக்கா டின்றியோர் மகவினைப் பெற்று மகிழ்ச்சி யுற்றனள். மகவின் அழகிய வடிவினில் அமைந்த எண்ணான் கரிய இலக்கணம் கண்டு, இது தெய்விக மகவெனச் செப்பினர் தெரிந்தோர். சோபன மறிந்து சுத்தோ தனனும் தாயை மகவொடு தண்டிகை ஏற்றி அரண்மனை உய்த்திட ஆணை யிட்டானன்...உம்பரும் அன்று மனிதராய் மாறி உலாவிக் களித்துநின்றார் - என்றும் அம்புவி வாழ இறைவனும் வந்தங்கு அவதரித் தான் எனவே.
நம்பினால் நம்புங்கள். இலாவிடினும் பரவாயில்லை. இந்த மணிமாலையை கோர்க்கும் போது என் மனம் வெல்லப்பாகாக உருகுகிறது.
This is the IIIrd instalment of a new series on creative writing of recent origin in Tamil.
ஆசிய ஜோதி: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
Asia Jothi: Kavimani Desika Vinayakam Pillai
We target the Tamil Diaspora who can barely understand the language; simple language and English explanations. Your preference is ours. All suggestions and criticisms will be attended to.
Mail to innamburan@gmail.com
*
இன்று ஏப்ரல் 20, 2014.
Reciting the next few stanzas along with related stanzas from Sir Edwin Arnold’s Light of Asia, tie original epic that inspired Asia Jothi.
இடைவெளி யின்றி எவ்வெவ் வுலகும்
பாதல மீறாப் படர்ந்து சென்றது;
"பிறந்திட இறந்தீர்! இறந்திடப் பிறந்தீர்!
எழுமின்! எழுமின்! யாவரும் எழுமின்!
புத்த பெருமான் புவியில் உதித்தனன்;
அவனை வணங்குமின்; அவன்வழி பற்றுமின்;
அவனுரை கேண்மின்; அழிமனம் ஒழிமின்;
நலமுறு மெனவே நம்பி நாடுமின்;
உள்ளந் தெளிமின்; உறுதி கொண்மின்;
உய்யும் வழிஈது; உண்மையும் ஈதாம்;
என்னும் மொழிகள் எவ்வெவ் விடத்தும்
மந்திர மொழிகளாய் வந்தெழக் கேட்டனர்.
அதனால்,
அமைதி நிலவி, அன்பு தழைத்துக்
குவலய முழுதும் குதுகல முற்றது.
கடலும் மலையும், காடும் மேடும்,
பூவுல கறியாப் புதுமணம் கமழ,
இனிய தென்றல் எழுந்து வீசியது.
மறுநாட் காலை மகிழ்ச்சி மிகவே
கற்ற பெரியோர் கனவின் பயனைக்
கொற்றவன் அறியக் கூறியது இதுவாம்;
13
सहयज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः।
முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்: “இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.
देवान्भावयतानेन ते देवा भावयन्तु वः।
परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ॥११॥
இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர். (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.
*
அம்மா சொல்படி ராஜூ 34
அற்புதம்!அற்புதம்! அற்புதமே!:அம்மா சொல்படி ராஜூ: பகுதி 34: 24 11 2009
உ
ஸ்ரீ:
எல்லாம் அவன் செயல்
கதை சுருக்கம்
எனக்குத் தெரிந்த வரையில் இந்த உலகம் ஒரு மாயை. சினிமா இப்படியிருக்கையில் கலியுகம் முடியும் போது க்ருண் (கிருஷ்ண) பகவான் ஆலிலையில் துயில் கொள்கிறான். கடல் பொங்கி அமர்ந்த பிறகு ஸ்ரீராப்தி (க்ஷீராப்தி) நாராயணனாக அவதரிக்கிறார் என்று கேள்வி. அப்போது நாரயணன் ப்ரம்மாவை வரவழைக்கிறார். உடனே இருவரும் யோஜனையில் ஆழ்ந்து எப்படி உல(க)த்தை உண்டாக்குவது என்று நினைக்கிறார்கள். உடனே நாராயணன் நான் உலகத்தைப் படைத்து முடிக்கிறேன். நீ உலகத்தில் புல், பூண்டு, விலங்கினங்கள், மனிதன், ஆண், பெண் என்று பாகுபாடில்லாமல் படைத்து விடு என்று நாராயணன் ப்ரம்மவிற்கு சொல்லி விடுகிறார். அதே போல் நாராயணன் படைத்து விடுகிறான். ப்ரம்மா சிருஷ்டி செய்து விடுகிறார். பிறகு அவர்களுடைய செயல் கொண்டு, உலகப் ப்ரபஞ்சம் ஆகி மனிதர்கள், விலங்கினங்கள் எல்லாம் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். விலங்குகளும் எல்லாம் நன்றாக இருக்கிறது. இதர்(ற்)கிடையில் வருணபகவான் வந்து மழை பெய்து உலகம் செழிப்பாகவும் வைக்கிறான். நன்றாக ஜனங்கள் வாழ்கிறார்கள். அப்படி வாழ்ந்து குடும்பம் நடத்துகிறார்கள்.அவர்களுக்குக் கதம்பமாக குழந்தை பிறந்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்த சந்தோஷத்தை யார் கொடுக்கிறான். எல்லாம் அவன் தான் கொடுக்கிறான் என்று அவர்கள் நினைப்பதில்லை. அது வந்து அவன் தான் கொடுக்கிறான் என்ரு அவர்களுக்குத் தெரியாது. ஏதோ நமக்கு குழந்தை பிறக்கிறது. நல்லது என்று சந்தோஷப்படுவார்கள். அதனால் அவர்கள் பகவானை மறந்து விடுவார்கள். அதையும் பகவான் அவர்கள் என்னை நினைக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு, சிரித்துக்கொள்வார். ஆனால் அவர்கள் மேல் கோபப்படமாட்டார். அவர்களுக்கு மாயையாகப்பட்டது அவர்களை மறக்க வைத்து விடும்.