Showing posts with label இதுவும் ஒரு பிரகிருதி. Show all posts
Showing posts with label இதுவும் ஒரு பிரகிருதி. Show all posts

Sunday, June 28, 2015

இதுவும் ஒரு பிரகிருதி ~II வது தொகுப்பு: 2


இதுவும் ஒரு பிரகிருதி ~II வது தொகுப்பு: 2


இன்னம்பூரான்
Monday, June 29, 2015, 5:23


திடீரென்று காரைக்குடி போக வேண்டியிருந்ததால், புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டுக்கு ஓடினேன். அடுத்த பஸ் கிளம்ப ஒரு மணி நேரம் ஆகும் என்று சொன்னார்கள். அந்தக்காலத்தில் டாக்சி, ஆட்டோ அதெல்லாம் கிடையாது. அடுத்த ரயில் ராத்திரி பெருத்த சங்கூதலுடன் நுழையும் போட் மெயில் தான். நிற்கக்கூட இடம் கிடைக்காது. அவசரம் தான். கு.ரங்காச்சாரியார் போய்ட்டார். அவருடைய அருமை மைந்தன் சாரங்கபாணி சிவகங்கையிலிருந்து வரணும். அதனாலே பாடியை வச்சிருப்பா என்று ஒரு எண்ணம். ஆனால் தந்தியில் வந்த சமாச்சாரம் சுருக்கமாக இருந்ததால் ஒன்றும் சொல்வதற்கில்லை. எல்லாத்துக்கும் மேலே, தான்தோன்றி சுயம்பு ஆலோசகர்கள் பங்கஜம் மாமியை துளைத்து எடுத்துக்கொண்டிருப்பார்கள். என் பேச்சு கொஞ்சம் எடுபடும். அதான் அவசரப்படறேன். திடீரென்று ஆபத்பாந்தவனாக வக்கீல் ஜம்புநாதன் மாமா காரை நிறுத்தி விசாரித்தார்; ஒரு கேசுக்காக தேவகோட்டைக்கு போய் கொண்டிருப்பதாகவும், வழியில் இறக்கி விடுவதாகவும் சொன்னவர், திரும்பிக்கொண்டு வருவது உத்தரவாதமில்லை என்ற நிபந்தனையும் விதித்தார். அவர் அப்படித்தான் ஜபர்தஸ்து ஆசாமி.
வழி நெடுக ஓயாமல் பேசினார். கு.ரங்காச்சிரியார் மாமாவை அவருக்குத் தெரியாது என்றாலும் அவருடைய குணாதிசயங்களை பற்றி, மெய்யும், பொய்யுமாக, விமரிசித்தார். திருமயத்தில் காஃபி குடித்தோம். பார்சல் நிறைய வாங்கிக்கொண்டார். ஆபத்து சம்பத்துக்குப் பரவாயில்லை, காஃபி குடிக்கலாம் என்று சாத்திரம் படைத்தார், பில்லை என் பக்கம் தள்ளி விட்டார். இதெல்லாம் விடுங்கோ, சார். அந்த வக்கீல் மாமா ஒரு மாதிரி. கறக்கறதெல்லாம் கறந்துடுவார், கட்சிக்காரன் கதற, கதற. ‘எச்சில் கையால் ஈ விரட்டமாட்டார்.’ என்று ஊர்ஜனங்கள், அவர் இல்லாத போது, அக்கம்பக்கம் பார்த்து, சொல்லிக்கொள்வார்கள்.
ஒரு நாள் இப்படித்தான் கையேந்தி பவன் சங்கர ஐயர் ஜம்புநாதன் மாமாவிடம் இசைகேடாக மாட்டிக்கொண்டார். பேரென்னமோ ‘மங்களவிலாஸ் பிராமணாள் ஹோட்டல்’. (தப்பா நினைக்காதீர்கள். அந்த காலத்தில் இப்படித்தான் போடுவார்கள்.) அறுசுவை நாயகன் பாலு நாயர் கூட தன் ஹோட்டலுக்கு அப்படித்தான் பெயர் வைத்தார். கல்லாவில் அவர் தானே உட்கார்ந்திருப்பார். எல்லாம் ஒரு ஷோ தான், ஜம்புநாதன் மாமா சொல்றமாதிரி.
சங்கர ஐயருக்கு ஒரு வில்லங்கம். ஹாஜி மொய்தீன் சாயபு கடையில் தான் மளிகை வாங்குவார். நாலு நாள் முன்னால் வாங்கிய துவரம்பருப்பில் கல்லு ஜாஸ்தி இருந்தது. சாயபு கிட்ட இதமா சொல்லியிருந்தால், எல்லாமே மிதமாக முடிஞ்சிருக்கும். போறாத வேளை. சாயங்காலம் அன்யோன்யங்களை ஜமா சேர்த்து அதையும் இதையும் அருந்துவதற்கு ஸ்பென்சர் சோடா வாங்க வந்த ஜரிகைத்தலைப்பா இன்ஸ்பெக்டர் வரதாச்சாரியிடம் துவரம்பருப்பை காண்பித்து, அங்கலாய்த்துக்கொண்டார், சங்கர ஐயர். வரதாச்சாரிக்கு ஏற்கனவே ஹாஜி மீது காட்டம். எஃப்.ஐ.ஆர் போடறேன் பேர்வழி என்று வெத்துப்பேப்பர்லெ சங்கர ஐயர் கையொப்பம் வாங்கிக்கொண்டு போய் விட்டார்.
அலறினார், சங்கர ஐயர். அவர் கொடுத்தது என்ற சொல்லப்படும் பிராது ஹாஜியை உசுப்பி விட்டதாம். இருக்காதா பின்ன? நூடில்ஸ் தோத்தது போங்கோ. அரிசியில் கிராம ஃபோன் ஊசி, மண்டை வெல்லத்தில் கருப்பட்டி, கொட்டை எடுத்த புளியில் வீசைக்கணக்கில் கொட்டைகள், நல்லெண்ணெயில் நாற்றம், இத்யாதி கம்ப்ளைண்டை கண்ட ஹாஜி, ஆவேசமாக மங்களவிலாசில் புகுந்து, காச்சு மூச்சு என்று கத்த, சங்கர ஐயருக்கு எக்கச்சக்க நடுக்கம். அவருக்குத்தான் தெரியுமே, இதெல்லாம் பொய் என்று. அவசரமாக எடுபிடி கோபுவை போலீஸ் தாணாவுக்கு அனுப்பினால், அவன் ஓடோடி வந்து, வரதாச்சாரி திருச்சி போய்விட்டார் என்றான்.
சமய சஞ்சீவியாக அங்கு திடீர் பிரசன்னம் ஆன வக்கீல் மாமா, சாவகாசமாக ஹாஜியை கூப்பிட்டு, ‘நான் தான் ஹோட்டலுக்கு வக்கீல். உம்மீது மானநஷ்ட வழக்குப் போடுவேன். உமது வக்கீல் ஜலாலுதீன் அப்பாவி. நான் உம்மை தீர்த்துக்கட்டுவேன், ஓய்.’ என்றார்.
நீங்கள் இதையும் தெரிஞ்சுக்கணும். ஆதனக்கோட்டை முந்திருப்பருப்பு ரொம்ப ஃபேமஸ். ஏகபோகம், முத்தையா செட்டியாருக்கு. ஏதோ ஒரு சிக்கல். எனக்கு நினைவில் இல்லை. அவர் நம்ம வக்கீல் கிட்ட மாட்டிக்கொண்டார். அவர் செலவில் மசால் தோசை, ஃப்ரூட் சாலெட் சாப்பிட ஆசை கொண்டு, கையேந்தி பவனில் அவர் நுழைந்த மாத்திரம், சினிமா மாதிரி இது எல்லாம் நடந்து விட்டது. செட்டியாருக்கே என்னாடாது இது, பிள்ளையார் பிடிக்க அது சிவனாரின் நாடி பிடிக்குதே என்று தனக்குள் சூள் கொட்டிக்கொண்டார்.
புதுக்கோட்டை கீழ மூணாம் வீதி புகழ் வக்கீல் ஜம்புநாதன் மாமா ஒரு அலாதி பிறவி. தூண்டில் போட்டு கட்சிக்காரனை இழுப்பார். அவருடைய குமாஸ்தா ராமராவ் நாமமும், விபூதியும், கரும்சாந்துப்பொட்டும், இடம், பொருள், ஏவல் கருதி மாற்றி மாற்றி அணியும் ஜகஜ்ஜால கில்லாடி என்றாலும், வக்கீல் மாமா வக்கீல் மாமா தான்.
இரண்டு பக்கத்து கட்சிக்காரர்களிடமும் இணக்கமாக பேசுவார். எல்லா வக்கீல்களோடும் விரோதம் பாராட்டுவார். அவன் மண்ணாங்கட்டி, இவன் பூஜ்யம், அது, இது என்று ஏசுவார். கூச்சமே இல்லாமல், பொய்யும் புனைசுருட்டுமாக, கட்சிக்காரர்களிடம் தற்பெருமை சாற்றுவார். ஏதாவது கேட்டால், பிரிவி கெளன்சிலில் தான் வாதாடும்போது லார்ட் தாமஸ் ஹோர் பாராட்டினார் என்பார். கதை அளப்பதில் மன்னர். அவர் ஹாஜியின் புறப்பாட்டுக்கு பிறகு சங்கர ஐயரிடம் சொன்னதே ஒரு சான்று.
ஐயர்வாள்! பஜ்ஜி போட்டா போறாது. சொஜ்ஜி, கொஞ்சமாவது இனாம தொட்டுக்குக் கொடுக்கவேண்டும்.
யாராவது துவரம்பருப்பில் கல்லு என்றால் கோர்ட்டார் கேட்பார்களா? வழித்துக்கொண்டு சிரிப்பார்கள். நாம தான் தூபம் போடணும்.
அதனால் தான் அந்த கடங்காரன் வரதாச்சாரி வெத்துக்கடுதாசிலெ உம்ம கை நாட்டு வாங்கினான்.
நல்ல வேளை! நான் வந்து சேர்ந்தேன். போலீஸ் கேசை ஜலாலுதீனே தோக்க அடிச்சுடுவான். நீர் விஷ்கிக்கப்பம் கட்டாட்டா, ஜரிகை உன்னை முழுங்கி ஏப்பம் விட்டுடும்!
போடும் மான நஷ்ட வழக்கு, லக்ஷ ரூபாய்க்கு. எனக்கு ஃபீஸ் வேண்டாம். நம்ம ஃப்ரெண்டாச்சே! ஃப்ரீ. வந்ததிலே பாதி கொடுத்தா போதும். உமக்கு என்ன கசக்குது,ஓய்?
வக்கீல் ஜம்புநாத ஐயர் ஒரு பிருகிருதி: இல்லாட்டா, தன்னுடைய அம்மா கிட்டவே எக்கச்சக்க ஃபீஸ் வாங்கிண்டு, ராமராவை விட்டு பொய் சாட்சிகளை தயார் செய்வாரா? எனக்கு அவருடைய சித்தி புத்திகள், வித்தைகள் எல்லாம் தெரியும். எதிர் வாடையில் நாலாவது வீடு தானே.
-#-
சித்திரத்திற்கு நன்றி: http://ecx.images-amazon.com/images/I/51px9X4yqeL._SY344_BO1,204,203,200_.jpg

பிரசுரம் & நன்றி: http://www.vallamai.com/?p=59166
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, November 27, 2013

கில்ஜாய்’ கோமளா மாமி:இதுவும் ஒரு பிரகிருதி

இவாளால்லாம் பேசிக்கிறதைப் பாத்தா, அதுவும் ருத்ர வீணையிலேயே 'ய ஒன்டர்ஃபுல் ஸ்கெட்ச் ஆஃப் ஹ்யூமன் பெர்ஸனாலிடி.' அப்டிண்ணு மீட்டிப்பிட்டா என்றால், அடுத்த கட்டத்துக்குக் காய் நகர்த்தலாமோ, ஐயாமார்களே, அம்மாமார்களே?
இன்னம்பூரான்
01 12 20113

கில்ஜாய்’ கோமளா மாமி:இதுவும் ஒரு பிரகிருதி

Innamburan S.Soundararajan 27 November 2013 14:25








இதுவும் ஒரு பிரகிருதி
கில்ஜாய்’ கோமளா மாமி

ராஜா பாதர் தெருவிலே அந்த நெய்கொட்டான் மரத்துக்குப் பக்கத்து முடுக்கு தெருவில் மூணாவது வீட்டில்  ஏழாவது ஒண்டுக்குடித்தனக்காரி தான் அவள். நாப்பதிலெருந்து அறுபது வயசுக்குள்ளெ. ஒரு நாள் கைகேயி மாதிரி விரித்த தலை அலங்கோலமா நிக்கச்சே அறுபது வயசுன்னு தோணும். அவளே ஆரணி பட்டுப்புடவை சரசரக்க கார்த்திகை தீபம் ஏத்தச்சே நாப்பது வயசு மாதிரின்னு, (நான் என்னத்தைக்கண்டேன்.) சுடுகஞ்சி ஆராமுது சொன்னான்.  அவனுக்கு சுடுகஞ்சின்னு பேர் வச்சதே, அவள் தானே. அந்த கதை பெரிய கதை. சொன்னா, ஊர் சிரிச்சுப் போய்டும். தூணுக்குப் புடவை கட்டினாக்கூட மோகித்து போற ஆராமுது ஒரு பொம்மனாட்டிப்பித்து. இவ கிட்ட எங்கே மாட்டிண்டான், எப்போ மாட்டிண்டான், எதுக்கு மாட்டிண்டான்னு கேட்டா மழுப்புவான். நாக்கைத்துருத்தி சிரிச்சுப்பான். ‘போடா! சோப்ளாங்கி! உனக்கு வயசு பத்தாது’ என்று சொல்லி கை கொட்டி சிரிப்பான். உனக்கு இங்கிலீஷ் தெரியுமோ? இனண்டோ னு ஒரு வார்த்தை. சொல்லாம சொல்றது. தண்டியலங்காரத்திலெ விபாவனை அணி, விபரீத அணி என்றெல்லாம் சொல்றாளே, அது மாதிரியா ன்னு கேட்காதே. நான் என்னத்தைக்கண்டேன்? படித்துக் கரை கண்டவாளைக்கேளு. எது எப்படியோ? ‘சுடுகஞ்சியின்’ இனண்டோ எல்லாம் பொய். 

வாழாவெட்டின்னு கோமளா மாமியை பத்தி அம்புஜம் பாட்டி அலுத்துண்டா ஒரு நாள், அவளோட நாராசம் பொறுக்காம. வாஸ்தவம். அவளோட துக்கிரிநாக்குலெ மாட்டிண்டா சீதாப்பிராட்டியார் கூட தப்ப முடியாது. இந்து நேசன் தோத்தது போங்கோ. அப்டி படுக்கையறை மர்மங்களை, நேரில் பார்த்தமாதிரி அடுக்கிண்டு போவாள், குழாயடி வம்பின் போது. சிறுசுகள் எல்லாம் வாயை பிளந்துண்டு கேக்கும். பெரிசுகள் காதைப் பொத்திப்பா; செவியை தீட்டிப்பா. குடக்கூலியை ஒழுங்கா முதல் தேதியே, ‘தண்ணி வரல்லை; ஓடு மாத்தினாத்தானே, ஒரே தேளு; சாக்கடை அடச்சுண்டு இருக்கு.’ இப்படி லொட்டு, லொசுக்கு மண்ணாங்கட்டி என்று ஆயிரம் கம்ப்ளையிண்டோட கொடுப்பாளா, ஸ்டோர் ஓனர் மணி ஐயருக்கு ஒரு மாதிரியா இருக்கும். மெல்லவும் முடியாது; துப்பவும் முடியாது. ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன். ‘கில்ஜாய்’ கோமளா மாமி குடித்தனம் இருந்தாலும் பிரச்னை. காலி பண்ணாலும் பிரச்னை.

ஒரு உரையாடல்:

மணி ஐயர் (தனி மொழி): தெரியாமலா ‘கிருத்திரமம்’ கிட்டு அவளுக்கு ‘கில்ஜாய்’ னு பேர் வச்சான். ஊரையே வாழாவெட்டியாக பண்ணிடுவாளே! ( செயற்கை புன்வறுவல் வரவழைத்துக்கொள்கிறார்).

மணி ஐயர்: கோமளம்! (அவர் பார்வை அப்போ சரியாக இருக்காது. கோமளத்தின் கண்ணிலிருந்து அது தப்ப முடியுமோ? ஊஹூம்!) போனமாசம் தானே வடிவேலு சாக்கடையை க்ளீன் பண்ணான்.  நான் சொன்னா நன்னா இருக்காது. நீ கண்ட குப்பையை போட்றே. அதான்.

‘கில்ஜாய்’ கோமளம்: ‘ஐயர்வாள்’! நீங்க சொல்றது உங்களுக்கே நன்னாருக்கா! எச்சுமி மாமீ! (மணி ஐயரின் பார்யாள்) உங்காத்து....

மணி ஐயர்: (தனி மொழி) ஊர் வம்புனா அவளுக்கு லட்டு தின்ன மாதிரி.  வாய்ச்சவுடால்லெ அவளை மிஞ்சறத்துக்கு ஆள் பிறக்கணும். அதான் அவ புருஷன் ‘வெத்துவேட்டு’ வெங்கிட்டு காததூரம் ஓடிப்போயிட்டான்.
*
மணி ஐயருக்கு சமாதானம் ஆகல்லெ. எந்த புத்துலெ எந்த பாம்பு இருக்கோ? ‘கில்ஜாய்’ கவுத்துவிட்டுட்டா! முனிசிபாலிட்டிக்கு அநாமதேய மனு  கொடுத்தாட்டாள்ணா! எதற்கும் ஆலோசனை கேட்போம் என்று அம்புஜம் பாட்டியாத்துக்குப் போனார். மாயவரத்திலேயே அவள் ஒரு விஐபி. சிங்கிள் உமன் பஞ்சாயத்து. அவளுடைய ஹஸ்பெண்ட் ராகவைய்யங்காருக்கு நல்ல மதிப்பு இருந்தது. ஆஸ்திகர். நேர்மையான வக்கீல். அவர் காலத்துக்கு அப்றம் அம்புஜம் மாமி எலெக்ஷனுக்கு நிற்க வில்லையே தவிர, அவள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஐபி. அவள் சொன்னாள், “மணி! சில பேர் போக்கை மாத்தமுடியாது. கோமளம் கேட்டதைப் பண்ணி கொடுத்துடு. அவளும் ஒண்ணு கிடக்க ஒண்ணு கேட்டுண்டு தான் இருப்பாள்.’ 
இன்னம்பூரான்
27 11 2013






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Pandiyaraja
27 Nov (4 days ago)

திரு. இன்னம்பூரான்!
இது எங்கே எழுதியது? எதற்கு எழுதியது? யார் எழுதியது என்று கேட்கத்தேவையில்லை. நீங்கள்தான் என்று யூகிக்கின்றேன். படிக்க சுவாரசியமாக இருந்தது. வட்டார வழக்கு பலே!
ப.பாண்டியராஜா

Innamburan S.Soundararajan 
27 Nov (4 days ago)

நன்றி, ஐயா,
அடியேன் தான் அஞ்சு நிமிடம் முன்னால் என்னுடைய பொழுதுபோக்குக்காக  எழுதியது.  நான் தான் உசாத்துணை ஆசாமியாச்சே. மற்றவர்கள் படைப்பு என்றால் சொல்லி விடுவேன். சொற்கள் இரவல் வாங்கலாம். அவை பொது சொத்து. இது ஒரு தொடர். எண்ணிக்கை மறந்து விட்டேன். எல்லா பிரகிருதிகளும் யான் அனுபவத்தில் கண்ட மாந்தர்களே.
Pandiyaraja
27 Nov (4 days ago)

அருமையான அனுபவங்கள் - இயல்பான கதைமாந்தர் - சரளமான நடை - இனிமையான பகிர்வு தங்களது. தொடருங்கள்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா



கி.காளைராசன்
27 Nov (4 days ago)
to mintamilManramதமிழ்thamizhvaasalvallamaitamilpayanime
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2013/11/27 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>

சீதாப்பிராட்டியார் கூட தப்ப முடியாது. இந்து நேசன் தோத்தது போங்கோ. அப்டி படுக்கையறை மர்மங்களை, நேரில் பார்த்தமாதிரி அடுக்கிண்டு போவாள், குழாயடி வம்பின் போது. சிறுசுகள் எல்லாம் வாயை பிளந்துண்டு கேக்கும். பெரிசுகள் காதைப் பொத்திப்பா; செவியை தீட்டிப்பா.
சிறுசா இருந்தால் வாயைப் பிளந்துண்டு கேக்கலாம்,
பெரிசா இருந்தால் காதைப் பொத்திக்கிட்டு செவியைத் தீட்டிக்கலாம்,

நான் 
இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தேன்.

Your are a social auditor என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன?

அன்பன்
ருத்ரா இ.பரமசிவன்
28 Nov (3 days ago)

இது சிறுகதை இல்லை.
கடுகுக்கதை.
மூட்டைக்காரம் உள்ளே.
பொம்மனாட்டின்னு
கொஞ்சம் ஈரங்காட்டினா
அந்த பொம்மனாட்டிகளுக்கே
ஆயிரம் துரோகம் அது.
நாட்டாம மாமிக்கே
நடுக்கம் தான்.
மனுஷாளை
தோல உரிக்காமலேயே
அவா
நெறம் உரிச்சு
நன்னாக்காட்டிட்டேள்.
ய ஒன்டர்ஃபுல் ஸ்கெட்ச் ஆஃப்
ஹ்யூமன் பெர்ஸனாலிடி.
"இனா"ன்னா
இமயம் தான்
"சொல்"லையே பல்ல புடிச்சு
வித்தை காட்டுவதில்.
Sk Natarajan
29 Nov (2 days ago)

நேரிலியே நடப்பது போன்ற ஒரு நடை 
அருமை 
வாழ்த்துகள் ஐயா 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.