Showing posts with label [2]. Show all posts
Showing posts with label [2]. Show all posts

Tuesday, January 2, 2018

அன்றும் இன்றும் [2]


அன்றும் இன்றும் [2]
“The arc of the moral universe is long, but it bends towards justice.” 
‘வில் போல் வளையும் தருமத்தின் நீளம் அதிகம்; எனினும் அது நீதியை நாடும்.’


இன்னம்பூரான்
ஜனவரி 2, 2018
பிரசுரம்:http://www.vallamai.com/?p=82521

அகஸ்மாத்தாக என் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஒரு முன்சாக்கிரதை மனிதர். வயது 92 என்பதால் எல்லாம் முன்கூட்டியே செய்து விடுவார். அடுத்த க்ஷணம் யார் கண்டா என்பார். 2019 வருட வாழ்த்துக்களை இப்போதே அளித்து விடுவார். அவர் எழுதும் எழுத்து ஒவ்வொன்றும் கம்பீரமாக நின்று நம்மை எடை போடும். அத்தனை அழகிய கையெழுத்து. ஆடாமல் அசையாமல் வாடா என்பார். வந்து கட்டியம் கூறும். அவர் எனக்கு பொங்கல் வாழ்த்துக்களை இன்றே எழுதி கொடுத்து விட்டார். அதற்கு பிறகு வருவோம். ‘கொற்றையருள்’ என்ற தன் புனைப்பெயரால் எழுதிய கவிதை ஒன்றை நீட்டினார். நம்ம ருத்ரனே அசந்து போகிறமாதிரி நீரோட்டம். இந்த தொடருக்கு உகந்த கருத்துக்கள்:

இன்னாளில்
அன்பினால் இவ்வுலகம் ஆட்படவேண்டும்
அறநெறி ஓங்க வேண்டும் பிறநெறி நீங்கவேண்டும்
தன்னலம் காத்தலோடு பொதுநலம் பேணவேண்டும்
பழியிலாப் பொருளீட்டிப் பயனுற வழங்கவேண்டும்
நல்லன எண்ணிடில் நல்லன விளைந்திடும்
நல்லன மொழிந்திடில் நட்பது மிகுந்திடும்
நல்லன ஆற்றிடில் நானிலம் உய்யுமால்
நல்லன எண்ணி, நல்லன மொழிந்து நல்லன ஆற்றுக!
நலமோங்க வாழ்க! நாடொறும் வாழ்க!
கொற்றவையருள்

எளிய தமிழில் வழங்கப்பட்ட கவிதை தான். எனினும், உள்ளே தொக்கி நிற்கும் பொருட்களஞ்சியம் கண்டு களித்து பேணத்தக்கது. சாங்கோபாங்காமாக அடுத்தத் தொடரில் அலசலாம்.

(தொடரும்)
-x-




















இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, October 24, 2017

ஞானச் சுடர் [2]





ஞானச் சுடர் [2]
இன்னம்பூரான்
அக்டோபர் 25, 2017
பிரசுரம்: http://www.vallamai.com/?p=80803

பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா எனப்படும் பாரதவர்ஷம் முழுவதையும் ஒரு மன்னர்பிரான் ஆண்டுவந்தார். வெண்குடை, கிரீடம், சாமரம், சிம்மாசனம், செங்கோல் போன்ற அரசாட்சி சின்னங்களும், பட்டு, ஜரிகை, பீதாம்பரம் போன்ற படோடாப ஆடைகளும், ஜொலிக்கும் வைரம், மரகதம், வைடூர்யம், பவழம், நன்முத்து போன்றவை மாசறு பொன்னில் பதித்த அணிகலன்களையும் அணிந்து அவன் யானை மீது அமர்ந்தோ, குதிரை சவாரி செய்தோ, இரதத்தில் பவனி வந்தோ, அந்தப்புரத்திலிருந்து அரண்மணை தர்பார் மண்டபத்துக்கு வருவது கண்கொள்ளாக்காட்சி என்று மக்கள் கூறுவர். ராஜகுரு, மந்திரிமார், தளபதி ஆகிய உயர் அதிகாரிகள் நாணயத்துக்கும், வாய்மை அணுகுமுறைக்கும், மக்கள் நலத்துக்கு உழைப்பதற்கும், ராஜவிசுவாசத்திற்கும் அழியா புகழ் பெற்றவர்கள். சுற்று வட்டாரங்கள் அவரவர் பொறுப்புகளை கவனத்துடன் சிறப்பாக ஆற்றுவதில் ஈடு, இணை இல்லாதவர்கள். சமுதாயத்தில் ஏற்ற தாழ்வு கிடையாது. தகுதிக்கு மட்டும் தான் மதிப்பு. சிபாரிசு என்பது மன்னனுக்கு ஒவ்வாதது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் இருந்தது என்று பேசிக்கொள்வார்கள்.

அந்தக்காலத்தில் பல மனைவிகளை மணந்து கொள்ளும் வழக்கம் கிடையாது. ஆகவே, மஹாராணி என்ற அந்தஸ்து ஒரே ஒரு அழகிய பெண்மணியை மட்டும் சாரும். அவரும் சுயம்வரத்தின் போது தான் இவரை தேர்ந்தெடுத்தார். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்ற உலகவழக்குக்கிணங்க, அந்தபுரத்தில் அவள் தான் ராணி. ராஜா அவளை தாஜா பண்ணுவதே ஒரு சுவையான காட்சி என்று தாதிகள் தங்கள் தங்கள் கணவர்களிடம் கூறி, அடக்கி ஆள்வார்கள். அலங்காரத்தில், அரசனை விட ஒரு இம்மி அளவு குறைவு இல்லை என்றாலும், அவர் குணவதி. ராஜகுமாரி அரசு பள்ளியில் தான் படித்து வந்தாள். மதிய உணவு அரண்மணையிலிருந்து வராது. மற்றவர்களுடன், அவளும், வரகு சாதம், கம்பங்கூழ், கேழ்வரகு அடை, தினை பாயசம் போன்றவற்றை உண்டு ஆரோக்யமாக இருந்தாள். சுருங்கச்சொல்லின், அரசாட்சியின் மேன்மை பாதரசக்கண்ணாடி போல் மக்கள் முகத்தில் மகிழ்ச்சியாக திகழ்ந்தது.

இப்படியிருக்கும்ே, ராஜகுரு, மந்திரிமார், தளபதி ஆகிய உயர் அதிகாரிகள் அங்கு கூடி மந்திராலோசனை செய்தார்கள்; குழப்பம் கூடியது தான் மிச்சம்.
 போது ராஜாவின் முகம் ஒரு நாள் இருண்டது. அவர் கவலையில் ஆழ்ந்து விட்டதை கண்டு, ராணியும், ராஜகுமாரியும் கண் கலங்கினர். தாதிகள் மூலம் , ட்விட்டர் துணுக் போன்றவை தற்கால டெங்குவை விட வேகமாக பரவியதால், மக்களும் யாது செய்வது என்று தெரியாமல் தவித்தனர். அரண்மனைக்கு எதிர்வாடையில் ஒரு மினி தர்பார் மண்டபம் உளது. அங்கு அரசர் வரும் மரபு கிடையாது. எனவே, ராஜகுரு, மந்திரிமார், தளபதி ஆகிய உயர் அதிகாரிகள் அங்கு கூடி மந்திராலோசனை செய்தார்கள்; குழப்பம் கூடியது தான் மிச்சம்.

[தொடரும்]


சித்திரத்துக்கு நன்றி: https://i.ebayimg.com/images/g/~OAAAOSwCQZZB-lj/s-l225.jpg












இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, June 1, 2014

[2] காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370~

காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370~[2]


இன்னம்பூரான்
01 06 2014

1947ல் காஷ்மீரில் நடந்தது என்ன? லெப்டினண்ட் ஜெனெரல் ஶ்ரீ ராஜராஜஸ்வர் மஹாராஜாதி ராஜா ஶ்ரீ ஸர் ஹரிசிங் இந்தர் மஹீந்தர் பகதூர் ‘ப்ளா ப்ளா’ கலோனிய அரசின் விசுவாசி. எட்டு வயதில் கர்ஜான் பிரபுவின் கெளரவ எடுபிடியாக அமர்ந்து, 20 வயதில் காஷ்மீர் தளபதியாக (நம்மூர் ஸ்டாலின் மாதிரியில்லை; சீருடை, மெடல் எல்லாம் உண்டு!) பதவி உயர்த்தப்பட்டு, சொகுசு வாழ்க்கை அனுபவித்தவர். அவருக்கு காங்க்ரஸ்ஸும் பிடிக்காது; முஸ்லீம் லீக்கும் பிடிக்காது. சர்தார் படேலின் சமஸ்தான அணுகுமுறையும் பிடிக்காது. தன்னை மட்டும் பிடிக்கும். இழுபறி ‘ராஜதந்திரம்’ செய்து வந்தார். அக்டோபர் 1947ல் பாகிஸ்தான் ராணுவ உந்தலுடன் பாகிஸ்தானிய புஷ்டூன் பழங்குடி மக்கள் + காஷ்மீர் மீது படையெடுத்தார்கள். அவர்கள் அன்று லபக்கிய பகுதிகள் இன்றும் அவர்கள் கையில். தொடை நடுங்கிய ஹரி சிங் இந்தியாவிடம் ராணுவ உதவி நாடினார்.‘சரி தான். இந்தியாவுடன் சேரப்போவதாக உடன்படிக்கைப் போட்டால் தானே, அது முடியும் என்றார், மவுண்ட்பேட்டன். வேறு வழியில்லை என்று அக்டோபர் 26, 1947 அன்று தன்னுடைய நாட்டை ((including Jammu, Kashmir, Northern Areas, Ladakh, Trans-Karakoram Tract and Aksai Chin) அதில் கையொப்பமிட்ட ஹரி சிங்குக்கு மறுநாளே அளித்த பதிலில் மவுண்ட்பேட்டன் பிரபு எழுதிய முக்கிய வாசகம்: ‘படையெடுத்தவர்களை விரட்டி அடித்து, சகஜ நிலை திரும்பிய பின், மக்கள் கருத்தறிந்து செயல்படவும். இது எமது அரசின் விருப்பம்’. அதற்கிணங்க இந்திய அரசும் மக்களிடம் கருத்தறியும் தேர்தல் நடத்த தயார் என்றது. மற்ற எல்லா ஸமஸ்தானாதிபதிகளிடம் போடாத வழுக்கு மரம் இங்கே. அதனால் காஷ்மீருக்கு ஒரு திரிசங்கு நரக வாழ்க்கை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பகை. சென்னை செண்ட்றல் நிகழ்வு வரை பயங்கரவாதிகள் தாக்கம். நாம் இந்திய அரசை வசை பாடுவதற்கு இல்லை. சர்தார் படேலின் தீர்க்கதரிசனத்துக்கு முட்டுக்கட்டை போட்ட ஹரிசிங்குக்கு தேசாபிமானமும் இல்லை. சுய அபிமானமும் இல்லை. தீர ஆலோசித்துத் தான் ஒருமித்த கருத்துடன் நேருவும் படேலும் இயங்கினர். அவர்களின் அறிவுரை படி, படி இறங்கினார், ஹரி சிங், திருமகனார் கரன் சிங்கை படியேற்றிவிட்டு. கரன் சிங் தங்கமான மனிதர். ஆன்மீகவாதி, காங்கிரஸ் விசுவாசி. ஆனால், காஷ்மீர் விஷயத்தில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த தொடரில் ஒரு ஆவணத்தை இணைத்து, இந்த உடன்படிக்கை ஆவணம் காணாமல் போன கதையை சொல்லி, இப்போதைக்கு நிறுத்தி, பிறகு தொடருகிறேன். ஷரத்து 370 ஐ இத்தனை விவரம் சொல்லாமல், ‘ஏனோ தானோ’ என்று விவரித்தால். குண்டுச்சட்டியில் குதிரை ஓட்றமாதிரி! அதான்...
தொடரும்

சித்திரத்துக்கு நன்றி:http://aim4u.ch/wp-content/uploads/2014/04/imagesGRWM55QQ-150x150.jpg

பல உசாத்துணைகளில் படிக்க வேண்டிய ஒன்று: http://www.hindu.com/op/2005/09/18/stories/2005091800161400.htm