Monday, March 18, 2013

அன்றொரு நாள்: அக்டோபர் 6:III விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981):II



அன்றொரு நாள்: அக்டோபர் 6:III விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981):II
1 message

Innamburan Innamburan Wed, Oct 19, 2011 at 4:11 PM
To: thamizhvaasal
Cc: Innamburan Innamburan

அன்றொரு நாள்: அக்டோபர் 6:III
விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981):II
சற்றே தேற்றிக்கொண்டேன். பேராசிரியர் நாகநந்தி அவர்களின் குடும்பமும், திரு.ஹரிகி போன்ற மாணவர்களும் சிரத்தை எடுத்துக்கொண்டதால் தான் அவருக்கு மணிமண்டபம் நிறுவப்பட்டது. அவரது படைப்புகள் பத்திரப்படுத்தப்பட்டன. இனியாவது நாம் யாவரும் இயன்றவரையில் நம் மரபுகளை அழிக்காமல் இருந்தால், நலம். போற்றி பாதுகாத்தால் நன்மை. ஆய்வுகள் பல செய்து நம் இலக்கிய அறிவின் தரத்தை உயர்த்தினால் மேன்மை. இடைச்செருகல்கள்/ இரவலுக்கு சொந்தம் கொண்டாடுவது/ஒருவர் படைப்பை உருவி போர்த்திக்கொள்வது போன்ற குற்றங்களை தவிர்த்தால், பட்டொளி வீசி பறக்கும், தமிழன்னையின் புகழ். தடையேதும் இருந்தால், சொல்லுங்கள். கூடி, விடை காண்போம்.
திரு. வி.எம்.சுப்ரமண்ய ஐயர் (வி.எம்.எஸ்.) அவர்களுக்கு வருவோம். நேற்று தொடர்பு லேசாக பிரிந்தது. குடமுருட்டி ஆறு, துள்ளலும், ஓட்டமுமாக, அசைந்தாடி வரும் திருக்காட்டு பள்ளி என்னும் பாடஸ்தலத்தில் பள்ளிக்கல்வி, அவருக்கு. தமிழ்த்தாத்தா என்று பிற்காலம் புகழப்பட்ட திரு. உ.வே.சா. அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னோடியான மீனாக்ஷி கல்லூரியில் தமிழில் (வடமொழி வினாத்தாள் ஒன்றும் உண்டு.) வித்வான் பட்டத்துக்குப் படிக்கச்சொல்லி, அவர் ஆலோசனை தந்தார். முதலிடம் பெற்ற வி.எம்.எஸ். அவர்களுக்கு  திருப்பனந்தாள் மடம் 1000 ரூபாய் பரிசு அறிவிக்க, அதை 1929ல் கும்பகோணம் போர்ட்டர் ஹாலில் நடந்த விழாவில், தலைமை தாங்கி உவேசா அவர்களே வழங்கினார். அந்த உயர்ந்த பரிசை பெற்ற முதல் மாணவன், திரு. வி.எம்.எஸ். இரண்டாமவர்: வித்வான். வி.பூவராகம் பிள்ளை ~ 1930 (என்னே அழகிய திருமண் நாமம்.): மூன்றாமவர்: வித்வான்.கே.சுந்தரமூர்த்தி ஐயர் ~ 1931: நான்காவது: வித்வான் டி.பி. பழனியப்பப்பிள்ளை ~ 1932: ஐந்தாவது: கி.வா.ஜகந்நாத ஐயர் ~ 1933. நமக்கு பொதுவாக, கி.வா.ஜ.அவர்களை பற்றியும், அவருடைய சிலேடையை பற்றி திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் சொல்வதும் தெரியும். ஏதோ, தமிழன் செய்த பூர்வஜன்ம சாபல்யமாக,வி.எம்.எஸ். அவர்களின் புதல்வி நாகலக்ஷ்மியின் செவிவாய் செய்திகளை அடித்தளமாக வைத்து, ஃபிரான்ஸ் நாட்டு தமிழ் புலவர் ழான் - [Jean-Luc Chevillard]ம், முனைவர்  எஸ்.ஏ.எஸ். சர்மா அவர்களும் தராவிடில் திருவாசகத்தை ஆங்கிலத்தில் அருமையாக மொழி பெயர்த்த வி.எம்.எஸ். அவர்களை முற்றிலும் மறந்து இருப்போம். தமிழன்னை நம்மை மன்னித்திருக்கமாட்டாள். மற்ற மூவரை பற்றியும் செய்திகள் வந்தால் நல்லது. கூகில் தேடுபொறியில் அவர்களை பற்றி ஒரு தகவலும் இல்லை. எண்பது வருடங்களுக்குள், தமிழில் முதல் பரிசு வாங்கிய அறிஞர்களை பொது நினைவாற்றலிலிருந்து தமிழார்வலர்கள் தொலைத்து விட்டார்கள் என்று நேரடியாக குற்றம் சாற்றுகிறேன். இது நிற்க.
1929லிருந்து 1964 வரை சென்னை கிருத்துவக்கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்த வி.எம்.எஸ். அவர்கள் 1930 ல் பி.ஓ.எல். பரிக்ஷை எழுதினார், திருவல்லிக்கேணியில், உவேசா அவர்களில் இல்லத்தருகே, வசித்து, அன்றாடம் அவருடைய ஆய்வுப்பணியில் உதவி வந்தார்; விடுமுறை காலங்களில் ஏடுகள் தேடும் பணியில் அவருடன் இணைந்து உழைத்தார். ஐந்து நூல்களின் அறிமுகத்தில், உ.வே.சா. அவர்கள் வி.எம்.எஸ்.பற்றி எழுதியிருக்கிறார். உவேசா நூலகத்துடன் அவருக்கு தொடர்பு இருந்தது. முர்ரே ராஜம் என்ற ஏலமிட்டு வணிகம் செய்த பிரமுகர், பழைய தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிவு செய்து ரூபாய் 1/- வீதம், கிட்டத்தட்ட இலவசமாக, விற்பனை செய்தார். என்னிடம் சில உளன. அவருக்கு உதவியாக வி.எம்.எஸ் இருந்ததாகத் தெரிகிறது. 1966ல் பாண்டிச்சேரி வந்தடைந்தார். INSTITUT FRANÇAIS DE PONDICHÉRY ஆதரவு அளித்தது.
அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவை:
  1. அகநானூறு: 1975: மூன்று தொகுப்புகள்;
  2. தேவாரம்: 1976 -1984 15 தொகுப்புகள்
  3. 9வது -10வது திருமுறை - திரு. பி.பி.சேஷாத்ரி சொன்னது;
  4. 11வது திருமுறை - 2 தொகுப்புகள் தயாரான நிலையில் மறைவு; 3வது;
 தொகுப்பு: டி.வி.கங்காதரன்; 4 வது டி.வி.கோபால ஐயர்.
அவருடைய ஞாபகார்த்தக்கூட்டத்தில் பேராசிரியர் க்ராஸ் பேசிய உரையில் ஒலிப்பதிவு, உசாத்துணையில் உளது.
ரகசியமாக ஒற்றர்கள் சந்திக்கும்போது, ஒரே நூறு ரூபாய் நோட்டின் இரு துண்டுகளை பரிமாரிக்கொள்வார்களாம். அது மாதிரி, நேற்று இணைத்த அறிவிப்பின் கீழ் பாதியும், திரு.வி.எம்.எஸ் அவர்களின் விசால முகாரவிந்த சித்திரத்தைத்தையும், டிஜிடல் தேவாரத்தை பற்றிய ஒரு ஆய்வுத்க்ட்டுரையையும் இணைத்துள்ளேன். பொறுத்த்தாள்க.
This CD contains the Tamil text (PIFI text) [HTML format] of 798 patikam-s (=385+312+101) as it appears inside the 2 volumes of the Tēvāram edition (paṇ muṟai / பண்முறை) published by the French Institute of Pondicherry (IFP) under the guidance of T.V.Gopal Iyer and F. Gros:
Mūvar Tēvāram (vol. 1, Ñāṉacampantar), Publications de l'Institut Français d'Indologie (PIFI) 68-1, 1984
Mūvar Tēvāram (vol. 2, Appar and Cuntarar), Publications de l'Institut Français d'Indologie (PIFI) 68-2, 1985.
இன்னம்பூரான்
19 10 2011
உசாத்துணை

3 attachments
THEVAARAM 1.pages
198K
THEVARAM 3.pages
118K
THEVARAM 2.pages
830K

No comments:

Post a Comment