Tuesday, March 19, 2013

லபோ திபோ!




லபோ திபோ!
17 messages

Innamburan Innamburan Wed, May 5, 2010 at 1:11 PM
To: mintamil

http://youthful.vikatan.com/youth/Nyouth/innambooranstory030510.asp

லபோ திபோ : அனுபவக் குறிப்புகள்

- இன்னம்பூரான்
ங்களுக்கு நெல்லையப்ப பிள்ளையைத் தெரியுமோ? அந்தக் காலத்தில் நெல்லையில் பிரபல வக்கீல். அவாள் ரெட்டைமாட்டு வண்டியில் தான் 'ஜல் ஜல்' என்று கோர்ட்டுக்குப் போவாக. ஒரு கட்சிக்காரர் மோட்டார் கார் வாங்கித்தரேன் என்றார். 'வேண்டாமப்பா! கார் ஓடினா செலவு. மாடு நின்றால் செலவு' என்றார். அந்த மாதிரி மிதக்கும் மாட்டு வண்டி இருந்தால், இந்த விமானப் பயணமும் வேண்டாம். அப்பறம் '"லபோ திபோ"ன்னு அடிச்சுக்கவும் வேண்டாம்.
அமெரிக்காவின் நிவெர்க் விமானதளத்தில் 13-03-2010 அன்று பயணிகள் எல்லாரும் 'லபோ திபோ' என்று அடித்துக் கொண்டிருக்க, விமான கம்பெனி ஊழியர்கள் நிச்சலதத்துவத்துடன் அசையா நிலையில் இருந்தனர். பயங்கர சூறாவளிக் காற்று, 'ஜோ'-ன்னு மழை, நடுநடுங்கும் குளிர். அநேக ஃப்ளைட்ஸ் ரத்து. அங்குமிங்குமாக ஓடோடிக்களைத்த கிழங்கள் அழாத குறை. தப்பித்தவறி எடுத்தெறிந்து பேசினோர்களோ, தொலைந்தீர்கள். 'இவர் உரக்க பேசினர்; கணினி ஆடியது.' என்று புகார் கொடுத்து விடுவார்கள். போலீஸ்காரன் வந்து, காலிலும், கையிலும் விலங்கு மாட்டி, நரகத்துக்கு அழைத்துச்செல்வான். தகனத்து உடல் கிடைக்காது. நான் மிகைப்படுத்தவில்லை. அப்படி இழுத்து செல்லபடுபவர்களை பார்த்திருக்கிறேன். எனவே, எல்லாரும் கெஞ்சல், முணுமுணுப்பு. அத்துடன் சரி. நானும் இந்த வலையில் வீழ்ந்தேன். இது நிற்க. முன்கதையை பார்க்கலாம்.
'முதல் கோணல் முற்றும் கோணல்'. டிக்கெட் வாங்கச்சே, லட்சம் தடவை எல்லா பயணங்களயும் உறுதி செய்யவும். சைவம் கூட இல்லை. ஒரு படி மேலே போய், ஜைன உணவு என்றும் சொல்லியாச்சு. (பயணங்களில் நான் ரொம்ப சுத்தபத்தம். 'சாமியார் கொடுத்த ஆப்பிள் கசந்தால் கூட!) வயசு வேறே ஆச்சா. தள்ளுவண்டியும் கேட்டாச்சு. டிக்கெட்டில் எல்லாம் போட்டாச்சு. எக்கச்சக்க காசும் கொடுத்தாச்சு. எதற்கும் பிரிட்டீஷ் ஏர்வேஸ் வெப்சைட் பாத்ருங்கோ என்று ட்ராவெல் ஏஜென்ட் சொன்னதை பொருட்படுத்தவில்லை. நான் தான் வாசலுக்கும் புழைக்கடைக்குக் போய்ட்டு வரமாதிரி போய் வந்து கொண்டிருக்கிறேனே என்ற அசட்டு தைரியம்.
பிடிச்சது சனியன். முதல்லே ஒரு பயண ஜாபிதா கொடுக்கிறார்கள். அப்பறம் இணையதள டிக்கெட். ஒன்றுக்கொன்று முரணான தகவல். ட்ராவெல் ஏஜென்ட், மறுபடியும் பாருங்கோ என்றாள். பார்த்தால், நம்ம விலாசங்கள் கூட இல்லை. அப்படி இருந்தால் தட்டிக்கழித்து விடுவார்கள். பவர் கட் வேறே. நடு நிசியில் இதையெல்லாம் பதிவு செய்த பிறகு (மூன்று மணி நேரம்), 'அப்பாடா' என்று பெருமூச்சு விட்டால், நாம் கேட்டது ஒன்றும் பதிவாகவில்லை. 'என்னடா இது' என்று கால் சென்டருக்கு ஃபோன். பாட்டு, கீட்டு எல்லாம் கேட்ட பிறகு, ஒரு பெண் சொன்னாள். மறுபடியும் பாருங்கள். நாங்கள் சரி பண்ணி வைத்திருக்கிறோம். இருந்தாலும், எங்கள் பதிவு மையம் தகராறு செய்கிறது. பிற்பாடு செய்யவும் என்று பதில். மேலும் மூன்று மணி நேரம் அவுட். ஆண்டவா! என்று அனவரதமும் இதே வேலை. இதே பதில்.
ஒருபாடாக, இயன்றதை செய்துவிட்டு, வாளா இருக்கமுடியாது. விமானம் காலை 4 மணிக்கு கிளம்பறதா. முதல் நாள் அதே நேரம், கணினி முன் அமர்ந்து உட்கார இடம் பிடிக்கவேண்டும், தரை மகாஜனங்கள் போல். பிறகு, விமானம் ஏற, போர்டிங் கார்ட் பிரிண்ட் செய்து கொள்ளவேண்டும். என்னே சலுகை என்று விளம்பரம் வேறு. சலுகையுமில்லை. கிலுகையுமில்லை. அவர்கள் வேலையை நாம் செய்துகொள்கிறோம். நாலு பேர் வைக்கவேண்டிய இடத்தில் ஒருவர் மட்டும், அங்கே. மூன்று மணி நேரம் முன்னால் போய், கல்லும் முள்ளுமாக பல இடர்பாடுகளை கடந்து, ஏறி உட்கார்ந்தால், ஜெயின் சாப்பாடு வருகிறது!
லண்டனில் இறங்கியாச்சு. தள்ளுவண்டியும் வந்தது. வாசலில் வண்டியும் காத்திருந்தது. வீட்டுக்கு வந்தாச்சு. இனிமேல் தான் 'லபோ' வருகிறது. ஆஸ்வாசபடுத்திக்கொள்கிறேன்.
இனி அமெரிக்கப் பயணத்துக்கு முஸ்தீப்புகள் செய்யவேண்டும். போறாத காலம், 13 ஆம் தேதி புறப்படுவதாக டிக்கெட். பதிமூன்று தீ நிமித்தமோ! திடீரென்று ஒரு பிரகடனம். 'ஒரு சிறிய மாற்றம். நியூயார்க்கிலிருந்து வேறு விமானத்தில் செல்கிறீர்கள். நேரங்களில் மாற்றமில்லை', என்று. முன் செய்த பதிவுகள் எல்லாம் காலி. 'அடியை பிடிடா, பாரதபட்டா!; என்று விலாசம், தொடர்பு, ஜைன சாப்பாடு, தள்ளுவண்டி எல்லாம் பதிவு செய்வதற்குள் தாவு தீர்ந்து போய்விட்டது.
தலைகீழ் நின்று கூட பார்த்தேன். நியுயார்க்கிலிருந்து (நிவெர்க் விமானதளம்) நான் போகுமிடத்திற்கு செல்லும் விமானத்தில் சீட் பிடிக்க அவர்களின் இணையதளம் மறுத்துவிட்டது. சாமான்களை ஆயிரம் தடவை எடை பார்த்த பிறகு (ஒரு கிலோ ஏறினால் கூட, சுமைகூலி பத்து பணம்!), ஒரு பாடாக விமானம் ஏறினால், சிலர் பெயர்களை (அறிந்து கொள்ளாத வகையில்) அறிவித்து, அவர்கள் முன் வரவில்லை எனில் விமானம் கிளம்பாது என்றார்கள். அரை மணி நேரத்திற்கு பிறகு, அவர்களது சாமான்களை இறக்கிவிட்டு, பறந்ததது விமானம். நம்ம சாமான்களை இறக்கிவிட்டார்களோ என்று யாவருக்கும் கவலை. அப்படி செய்திருக்கிறார்கள், சில சமயம். அதே பேச்சு. அதனால் நட்பு.
நியூயார்க்கில் இறங்கியது விமானம், 'தட தட தட்' வென்று. வடிவேலு ஸ்டைலில் சொன்னால், 'சொல்லப்டாது..' லாகவமாக தான் இறக்கினார், விமானி. காத்து தான் பிச்சுண்டு போறதே; கொட்டொன்னு கொட்றது மழை. நான் செல்லவேண்டிய விமானம் ரத்து என்று அறிய, பல மணி நேரம் பிடித்தது; விமானதளத்துக்கு உள்ளேயே, சென்ட்ரல், எக்மோர், தாம்பரம், கோயாம்பேடு எல்லாம் உலா வந்தமாதிரி, நடந்தும், தள்ளுவண்டியிலும், ரயிலிலும் பயணம். கவனமாக படிக்கவும். 'லபோ திபோ' தொடக்கம், இங்கே.
அமெரிக்கா விமான கம்பெனி எல்லாம், 'காசே தான் கடவுளடா' என்று இருப்பார்கள். அந்த கம்பெனியை சேர்ந்த மாமி ஒருவராவது, பயணிகளிடம் முகம் கொடுத்து பேசவில்லை. எங்களை துரத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். ஏதோ கொலு வச்சாப்போல, மித்யானந்த ரமஹம்ஸினி, காமானந்த அப்பிரமச்சர்யணி, காலபைரவமாயினி ஆகியோர் வரிசையாக நின்று கொண்டு எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். ஒன்று நிச்சியம். அமெரிக்காவில் பாட்டிகளுக்கும் விமானதளத்தில் வேலை கிடைக்கும். ஆனால், சம்பளம் நம்மூர் கூலிகளை விட குறைச்சல்; அதனால் எரிச்சல்.
மறுநாள் தான் செல்ல இயலலாம். ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒழிந்து போ என்ற வகையில் என்னை படுத்தினார்கள். நானும் விடாக்கண்டனாச்சே. பிரிட்டீஷ் ஏர்வேஸ் ஆஃபீஸுக்கு போகச் சொன்னார்கள். மறுபடியம், பல மணி நேர உலா. அவர்கள் இது எங்கள் வேலை இல்லை என்று சொன்னாலும், நான் பிரிட்டீஷ்க்காரர்களாக நடந்து கொள்ளவும் என்று அறிவுரை அளித்தபிறகு, அமெரிக்கன் கம்பெனிக்கு பேசி, நான் ராத்தங்க ஏற்பாடு செய்யச்சொன்னார்கள்.
மறுபடியும், பல மணி நேர உலா. கடும்பசி. குளிர். சில மணி நேரம் காக்கவைத்துவிட்டு, கொஞ்சம் 'விருதாவாக' பேசிவிட்டு, அந்த அம்மை சொன்னாள்: "நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஏதோ முதியவன் என்று இரக்கத்தினால், இந்த அரையணா ஹோட்டலில் இடம் போடுகிறோம். அது தொலைவு. சாப்பாடு, போக்குவரத்து ஒன்றும் கொடுக்கமாட்டோம்." ஒழி என்று சொல்லவில்லை. செய்கையால் காண்பித்தாள். கஷ்டகாலத்தில் மனிதாபிமானமும் தலை தூக்குகிறது. இந்த தள்ளுவண்டியில் நம்மை அழைத்து செல்லும் பெண்கள் பரம ஏழைகள். கடல் கடந்து கால் காசுகளுக்கு வந்தவர்கள். சுருங்கச்சொல்லின், அவர்கள் பொறுமை பூஷணங்கள். கொஞ்சம் இனாம் கொடுத்தல் கூட, புன்சிரிப்புடன் பெற்றுக்கொள்பவர்கள். அவர்களை வாழ்த்த வேண்டும். ஒரு ஜப்பானிய மாணவர் (கேம்பிரிட்ஜ்: விஞ்ஞானி: நோபல் பரிசு வாங்கு, அப்பா என்று என் ஆசி) மிகவும் உதவினார். ஒரு இந்தியர் மாதிரி காட்சி அளித்த பெண்: பாகிஸ்தானி என்றாள்; மூலம் ஒன்று தானே என்றேன். மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டாள்; அவளும் உதவினாள்.
இதற்குள், என்னுடைய மகளும் மருமகனும் படாத பாடு பட்டு எனக்கு ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் இடம் பிடித்து, முன் பணம் கட்டி, அங்கு போகச்சொன்னார்கள், ஃபோனில். அங்கு ஆகாஷ் என்ற இந்தியர் வரவேற்று முகமன் கூறினார்; பாஸ்போர்ட் கூட கேட்கவில்லை. நான் ஓய்வு எடுக்கவேண்டும் என்று நல்லபடியாக இயங்கினார். உயிர் தப்பினேன்.
சரி. மறு நாள் போனால், என் சாமான்களை காணவில்லை. அவர்களும். 'டோன்ட் கேர்'. அத்துடன் விட்டதா என் இன்னல்கள். என் கைப்பெட்டியை வைத்துக்கொள்ள மறுத்துவிட்டார்கள், விமானம் ஏறியபோது. நானோ பைத்தியக்காரன். என் மருமகள் படைத்த நேர்த்தியான மண்பாண்டங்களை, பரிசாக, என் மகளுக்கு. எடுத்துச்சென்றதால், அவை என் கைப்பெட்டியில். 'ஈஸ்வரோ ரக்ஷது' என்று நான் சரணாகதி. மற்ற சாமான்களைப்பற்றி அவர்கள்; 'கப்சிப்'.
கண்ணீரும் கம்பலையுமாக வந்த என் பெண்,என்னை பார்த்து 'கொல்' என்று சிரித்தாள். மன அழுத்தம் கலைந்தது. அப்படி கெட்-அப், ஐயா! தமிழ் மரபு அறகட்டளை, என் மின்னாக்கப் பணிகளுக்காக கெளரவித்து போர்த்திய பொன்னாடை அணிந்து நின்றேன். அமெரிக்கர்கள் பலர் வேடிக்கைப்பார்த்து கை தட்டினார்கள். இப்போ நான் 'டோன்ட் கேர்!'. இதோ படம். அந்த மண்பாண்டங்கள் உடையாமல் வந்தன. மறுநாள் எனது பெட்டிகள் வீட்டில் கொடுக்கப்பட்டன.
'லபோ திபோ' கதையும் முடிந்தது. கத்திரிக்காயும் காய்த்தது.

photo.jpg
482K

Tthamizth Tthenee Wed, May 5, 2010 at 1:31 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
என் மின்னாக்கப் பணிகளுக்காக கெளரவித்து போர்த்திய பொன்னாடை அணிந்து நின்றேன். அமெரிக்கர்கள் பலர் வேடிக்கைப்பார்த்து கை தட்டினார்கள். இப்போ நான் 'டோன்ட் கேர்!'. இதோ படம்.
 
மின்தமிழ்ப் பொன்னாடை இவ்வளவு இடர்ப்பாடுகளையும் தாங்கும்
  வல்லமையை தங்களுக்கு  அளித்ததே  என்று பெருமைப்படுகிறோம்
 
ஆமாம் அதென்ன 
 
 
ஏதோ கொலு வச்சாப்போல, மித்யானந்த ரமஹம்ஸினி, காமானந்த அப்பிரமச்சர்யணி, காலபைரவமாயினி ஆகியோர் வரிசையாக நின்று கொண்டு எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். ஒன்று நிச்சியம். அமெரிக்காவில் பாட்டிகளுக்கும் விமானதளத்தில் வேலை கிடைக்கும்.
 
 
இந்தப் பெயர்களையெல்லாம் எங்கிருந்து கண்டு பிடித்தீர்கள்
 
அசாத்தியக் குறும்பைய்யா  உமக்கு
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

devoo Wed, May 5, 2010 at 1:47 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
ஹிந்தி நடிகர் அசோக் குமார் மாதிரிதான் ஐயா இருக்கிறீர்கள் !
என்ன, கொஞ்சம் உயரம் கம்மி

தேவ்


On May 5, 7:11 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
http://youthful.vikatan.com/youth/Nyouth/innambooranstory030510.asp
>  லபோ திபோ : அனுபவக் குறிப்புகள்
>
> *- இன்னம்பூரான்*
>
> *உ*ங்களுக்கு நெல்லையப்ப பிள்ளையைத் தெரியுமோ? அந்தக் காலத்தில் நெல்லையில்
> பிரபல வக்கீல். அவாள் ரெட்டைமாட்டு வண்டியில் தான் 'ஜல் ஜல்' என்று
> கோர்ட்டுக்குப் போவாக. ஒரு கட்சிக்காரர் மோட்டார் கார் வாங்கித்தரேன் என்றார்.
> 'வேண்டாமப்பா! கார் ஓடினா செலவு. மாடு நின்றால் செலவு' என்றார். அந்த மாதிரி
> மிதக்கும் மாட்டு வண்டி இருந்தால், இந்த விமானப் பயணமும் வேண்டாம். அப்பறம்
> '"லபோ திபோ"ன்னு அடிச்சுக்கவும் வேண்டாம்.
>
[Quoted text hidden]
> நான் போகுமிடத்திற்கு செல்லும் விமானத்தில் சீட் பிடிக்க அவர்களின் இணையதளம் ...

[Quoted text hidden]

N. Kannan Wed, May 5, 2010 at 1:55 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
2010/5/5 Tthamizth Tthenee <rkc1947@gmail.com>
>
> என் மின்னாக்கப் பணிகளுக்காக கெளரவித்து போர்த்திய பொன்னாடை அணிந்து நின்றேன். அமெரிக்கர்கள் பலர் வேடிக்கைப்பார்த்து கை தட்டினார்கள். இப்போ நான் 'டோன்ட் கேர்!'. இதோ படம்.
>
> மின்தமிழ்ப் பொன்னாடை இவ்வளவு இடர்ப்பாடுகளையும் தாங்கும்
>   வல்லமையை தங்களுக்கு  அளித்ததே  என்று பெருமைப்படுகிறோம்
>
அடி சக்கைன்னானாம்!

மின்தமிழ்ப் பொன்னாடை இவ்வளவு இடர்ப்பாடுகளையும் தாங்கும் வல்லமையை
அறிந்தே தங்களுக்கு  பெருமைப்படுத்தினோம்.

க.>
[Quoted text hidden]

நண்பன் Wed, May 5, 2010 at 1:17 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
பொன்னாடை  போர்த்திய  படம்  ரொம்பவும்  மிடுக்காக உள்ளது

வாழட்டும்  தமிழ்



நன்றியுடன் நாசரு  
[Quoted text hidden]

Chandra sekaran Wed, May 5, 2010 at 3:38 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
இன்னா? பூரா ஹாஸ்யம் களை கட்டுது, போட்டா அத விட ஜோராக் கீது மாமோய்! யூத் விகடன்ல யூத்ஃபுல்லா எங்க மாமூ! ஜமாய் ராஜா ஜமாய்!
சந்திரா
[Quoted text hidden]

Geetha Sambasivam Wed, May 5, 2010 at 4:43 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
வாழ்த்துகள் யூத்புல் விகடனில் வந்ததுக்கு. கட்டுரையும் அருமை. பல சமயங்களிலும் விமானப் பயணத்தில் இப்படித் தான் குளறுபடிகள் ஏற்படுகின்றன. நல்லா இருக்கு அநுபவங்கள்.



annamalai sugumaranWed, May 5, 2010 at 5:45 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஆகா ! பொன்னாடையிலே   மிளிர்கிரீர்களே  !
எழுத்தும் கூடத்தான் பொன்னாடை போல் இருக்கு !
அன்புடன்
சுகுமாரன்
[Quoted text hidden]

Venkatachalam Subramanian Thu, May 6, 2010 at 12:38 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஓம்
சென்னை பன்னாட்டு  விமானதளத்தில் பிரிடீஷ் ஏர்வேஸ் கவுண்டருக்கு கைச் சுமை இதரச் சுமைகளுடன் வந்தபோது, சக்கர நாற்காலிசேவை வேண்டும் எனக்கேட்டிருக்கிறோம் என்று கேட்டபோது இரண்டு கிழங்கள் வந்தபோதிலும் ஒன்றுதான் கிடைகும் என்று ஒரு நாற்காலிமட்டும் கொண்டுவந்தார் ஒருவர். டிராலியை ஒருகிழம் தள்ளிக்கொண்டே அவரைப் பிந்தொடர்ந்தபோது அந்தப் பணியாளர்  சுமைகளை கன்வேயர் பெல்ட் முகப்பில் இறக்கி வைத்துவிட்டு ரகஸியமாக இரண்டு கிலோ எடை அதிகமிருக்கிறது’ என்றான். சரியாக எடை சரிபார்த்துக் கொண்டு அதன் பின்னரே சுமைகளை ஏற்றிவந்தோம். அதிகமாக இருக்கமுடியாது என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒருவன் மெல்ல  வெளியில் காத்திருக்கும் வழியனுப்ப வந்த உறவினரிடம் சென்று இதே வகையில் பேசி அவரிடம் இருநூறு ரூபாய் பெற்றுவந்திருக்கிறான். அனைத்து சோதனைகளும் முடிந்து உட்கார்ந்தபோது காத்திருப்பவர்களை வீட்டிற்குச் செல்ல கைப்பேசியில் நன்றி சொல்லிய  போது அவன் பணம் பெற்றுச் சென்றது தெரிய வந்தது.

போயிங் 747 லண்டன் வந்தடையும் வரை காத்திருந்து விமானப் பணியாளரை அழைத்து, ‘தயவுசெய்து உதவுங்கள்,சக்கர நாற்காலி சேவை வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்’ என்று  வந்தவர்களை ‘என் பின்னே வாருங்கள்’ என்று கூறி அழைத்துக் கொண்டுநடத்தியே கூட்டிவந்து இரண்டு பர்லாங் நடந்து வந்த பின்னர், ஒரு மனிதர் ’போர்டிங் பாஸ் பாஸ்போர்ட் காட்டுங்கள்’ என்றார். காட்டியபின்னர் மின்சாரத்தில் ஓடும் கார் ஒன்றில் கைச் சுமைகளுடன் அமரச்செய்தார்.டெர்மினல் 5 -இலிருந்து அழைத்து வந்தவர்களை நம்மூர் ஆட்டோகாரர்கள் தெரியாதவர்களைச் சுற்றி அழைத்துவருவது போல, எங்கெங்கோ சுற்றி, காருடன் பயணிகளையும், அவர்களின் கைவசம் சுமைகளையும் ஒருசேர பல லிஃப்டுகளில் ஏற்றியும் இறக்கியும்  ஓட்டிவந்து ஒரு கவுண்டரில் உட்காரவைத்தார். 4-00 மணிக்கு புறப்படும் அடுத்த விமானத்தில் தயவுசெய்து மீளவும் அழைத்துச் செல்லுமாறு கேட்டபின்னர் அந்தக் கவுண்டரில் போர்டிங் பாஸ் பாஸ்போர்ட் பயணச் சீட்டு ஆகியவை சரிபார்த்து விட்டு ஓய்வறையில் அமரச் சொன்னார்கள். 3-30 மணிக்கு மீண்டும் மின் காரில் ஏறச்செய்து அடுத்தவிமானம் புறப்படும் டெர்மினலுக்கு முன்போலவே சுற்றிச் சுற்றி மேலும் கீழுமாய்ப் பல தளங்களில் ஓட்டிவந்து அமரவைத்தனர். நல்ல சேவை. உண்மையிலேயே சிறப்பாகச் செய்தனர்.
இன்னம்பூரான் ஐயா அவர்களின் கட்டுரையில் மேலும் பல இடர்பாடுகளைக் கூறியிருக்கிறார்.வெ.சுப்பிரமணியன் ஓம்.
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, May 6, 2010 at 1:30 AM
To: mintamil@googlegroups.com
ஓம் ஐயா தப்பா நினைக்ககூடாது. உங்கள் மடலை பார்த்து ஒரு அல்ப சந்தோஷம். மற்றவர்களும் கஷ்டப்பட்டார்களே என்று. சும்மா அடிச்சுவுட்டேன்; நம்பவேண்டாம். இப்படி உங்களை அலக்கழித்தது எனக்கு 'அவர்'(பேர் எதுக்கு?) மாதுரி ரொம்ப கோபத்தை வரவழைத்தது. இரத்தம் கொதிக்கறது, ஐயா. அத வுடுங்க.

இப்போ வருங்கால பயணிகளுக்கு Citizen Advice:
  1. இது முழுமையான அறிவுரை அல்ல; நேரில் வரவும்.
  2. சென்னையில் நடந்த அக்ருமம் மற்ற நாடுகளில் நடப்பது அரிது. காசு கேட்கிறவங்கிட்ட எல்லாம் ரூ.0/- நோட் கொடுக்கவும். தமிழ்த்தேனிக்கிட்ட இருக்கு.
  3. தள்ளு வண்டி புக் செய்திருந்தால், அது வரும் வரை நகரக்கூடாது. கெளண்டரில் எழுதிக்கொடுத்துவிட்டால், ப்ளேன் கிளம்பமுடியாது, உம்மை விட்டு விட்டு. [வீட்டிலேயே எழுதிக்கொண்டு வரவும். அப்போ தான் வருமுன் காப்போன்.]
  4. விமானத்தில் சீட் அருகில் வந்தவுடன், பணிப்பெண்னை, கனிவுடன் அழைத்து, ஒரு க்ளாஸ் தண்ணீர் கேட்கவும், அர்ஜெண்ட்னு சைகையுடன். வந்தவுடன், அளவில்லா அன்புடன் நன்றி கூறி, " I know your problems. I shall wait. Please meet me once the 'seat belt off' sign is on." மறுபடியும் நன்றி; சிரிக்கணும்; இளிக்கக்கூடாது, அதுவும் அவள் இளமையாக இருந்தால்
  5. பணிஆணை கூப்பிடவேண்டாம்.
  6. ஓதும் மந்திரம்," We had booked Wheelchairs at both ends. We have also stated that we can make short climbs. I have confirmed it. This is the printout. Kindly note that we cannot deplane without wheel chairs." கொஞ்சம் சுளித்த முகத்துடன், அவள் நகருவாள். மறுபடியும் கூப்பிட்டு, மன்னிப்பிட்டு, போர்டிங்க் கார்டில் தள்ளுவண்டி விஷயம் இருக்கு என்று காட்டவும். இருந்தால், விஷயம் தெரிந்தவன் என்று சுதாரிப்பாக இயங்குவாள். இல்லை என்றால், அவள் இளிப்பாள். நாம் சுளிக்கவேண்டும். 
  7. இறங்குவதற்கு முன் பணிஆண் வருவான். ரகஸ்யமாக, தள்ளு வண்டி நாலு அடி தள்ளி கிடைக்கும். வசதி எப்டீ என்று கேப்பான். 'I can climb, but cannot walk; I shall just show the medical certificte' என்று பாவ்லா காட்டவேண்டும். உங்களை சோத்துக்கடை லிஃப்டில் இறக்கி, நாலு அடி சென்று. தள்ளு வண்டியில் தள்ளுவான். இது புதுமையான அனுபவம் இல்லையோ.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
[Quoted text hidden]

N. Kannan Thu, May 6, 2010 at 4:27 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
இதுலே இவ்வளவு சமாச்சாரம் இருக்கா!

90களில் அட்லாண்டா விமான நிலையம்.
செக்கின் கவுண்டர். அவன் என்னை மேலே கீழே பார்த்துவிட்டு, ஓடுவாயா?
என்றான். ஏனென்றேன். விமானம் கிளம்பிக்கொண்டு இருக்கிறது என்றான். கண்ணன்
எடுத்தான் ஓட்டம் தலை தெறிக்க :-))

க.>

2010/5/6 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
 'I can climb, but cannot walk; I shall just show the medical
certificte' என்று பாவ்லா காட்டவேண்டும்.
[Quoted text hidden]

Tthamizth Tthenee Thu, May 6, 2010 at 5:22 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
லண்டன்  ஹீத்ரூ  விமான நிலையத்தில்
Metal dedector  சோதனை போடும் கருவியை  வைத்து  என் மனைவியை பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்த  ஒருவர் என்னையும் சோதனை போட்டார்

கருவி  பீஈஈப் பீஈப்  என்று அலறியது

என்னை ஓரம் கட்டி அங்கே உட்காரவைத்தார் வலுக்கட்டாயமாக்

எல்லோரையும்  சோதனை செய்து அனுப்பிய பின்னர்   என்னிடம் வந்து மீண்டும் என்னை சோதனை செய்தார்
மீண்டும் அக்கருவி கத்த ஆரம்பித்தது

எனக்கு மூளையில் ஒரு மின்னல்

அடடா  நினைவுக்கு வந்தது

என்னுடைய தோள்பட்டை  பந்து கிண்ணமூட்டு  ஒரு விபத்தில் இரணடாக உடைந்ததும்
அறுவை சிகிச்சை செய்து கிட்டத்தட்ட  பத்து வருடங்களுக்கு மேலாக  இரும்புப் பட்டைய்யினால்  இணைத்திருப்பதும்


அதை அவரிடம் சொன்னேன்

அவர் என் தோள் பட்டையில் வைத்தார் கருவியை

ஏதோ  கண்டேன் கண்டேன்  என்று ஆதி மூலத்தையே கண்ணால் கண்ட
ஆழ்வார் போல்  அலற ஆரம்பித்தது  கருவி

அந்த சோதனை போடும் நபர் என்னிடம ்மன்னிப்பு கேட்டுக்கொண்டு

என்னையும் என் துணைவியாரையும் அனுமதித்தார்  விமானத்துக்கு

தோள் கண்டார் தோளே கண்டார்

அதனால் தப்பித்தான் இந்தக் கிருஷ்ணன்

அன்புடன்
தமிழ்த்தேனீ



6-5-10 அன்று, N. Kannan 
[Quoted text hidden]

N. Kannan Thu, May 6, 2010 at 9:05 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
2010/5/6 Tthamizth Tthenee <rkc1947@gmail.com>:
> அவர் என் தோள் பட்டையில் வைத்தார் கருவியை
>
> ஏதோ  கண்டேன் கண்டேன்  என்று ஆதி மூலத்தையே கண்ணால் கண்ட
> ஆழ்வார் போல்  அலற ஆரம்பித்தது  கருவி
>
அண்ணா! வரும் காலங்களில் இன்னும் கெடுபிடி கூடும். நியூயார்க் நியூஸ்
வாசிக்கிறீர்கள்தானே! அமெரிக்கா அரண்டவன்! அவன் கண்களில் இருண்டதெல்லாம்
பேய்! எதற்கும் ஒரு மெடிக்கல் சர்டிபிகேட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
தோளைப் பேர்த்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை! :-(

க.>
[Quoted text hidden]

Venkatachalam Subramanian Fri, May 7, 2010 at 1:46 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
lஓம்
’லாஸ் ஏஞ்சலஸ்’ அப்படித்தான் இங்கு அழைக்கிறார்கள். போயிங் 747, பிரிடீஷ் எர்வேஸ் வந்து வாயுவில் பறந்து பூமியில் இறங்கிய பின்னர்  முன்போலவே தள்ளுவண்டியை வேண்டி மிகவும் இனிமையான மரியாதைத் தொனியில் கேட்க, ஒரு மனிதனிடம் செல்லுமாறு கைகாட்டினாள் அந்தப் பெண். உண்மையிலேயே தூக்க முடியாத கைச்சுமையுடன் தள்ளாடிச் சென்றதும், அவனும் ஒரே ஒரு தள்ளுவண்டியக் கொண்டுவந்து என் துணைவியை மட்டும் உட்காரச் சொல்லி என் கைச்சுமைப் பையினைப் பறித்து, துணைவியின் வண்டியில் வைத்துவிட்டும் என்னைப் பின் தொடரச் சொல்லிவிட்டு, நீ முன்னாலே போ நான் பின்னாலே வாரேன் என்றாற்போல பின் தொடர்ந்தேன்.கஸ்டம் இமிக்ரேஷன் உறுதிப் படிவம் பூர்த்தி செய்ததை கவுண்டரில் கொடுத்து, ஏன் வந்தாய்?, யாரை நம்பி வந்தாய்?,எத்தனை காலம் தங்குவாய்? என்று உசாவியவரிடம் பதிலிறுத்தவுடன் படிவத்தில் ஒரு பகுதியைக் கிழித்து கடவுச்சீட்டில் ஸ்டாப்பிள் செய்து ஆவணங்களை மீளவும் பெற்றுக்கொண்டு சுமைகள் நான்கு பெட்டிகளாக ஏற்றியவற்றை கன்வேயர் பெல்ட்டில் தேடியபோது அவை லண்டனில்  வெவ்வேறாக இடம் பெயர்ந்திருக்கும்  போலும். தனித்தனியே ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன. அவற்றை ஒரு டிராலியில்  ஏற்றி வைத்துவிட்டு அவன் என் துணைவியின் தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டே பின்னால் வருமாறு சைகை காட்டிவிட்டு வேகமாகச் சென்றான். டிராலியைத் தள்ளிக் கொண்டே வெளியே வரும்போது சாய்தளமாக அமைக்கப்பட்ட ஏற்றமான தளத்தில் மிகவும் சிரமத்துடன் மூச்சிரைக்கத் தள்ளிக்கொண்டே மேலே வந்து வரவேற்க வந்தவர்களைப் பார்த்ததும்  ஒரு நிம்மதி. இரண்டு தள்ளுவண்டியும் ஒரு டிராலியும் மூவர் வந்திருக்க வேண்டியதற்குப் பதிலாக ஒருவனே வந்ததற்குக் காரணம் கேட்கமுடியாது. ஏதோ கையில் டாலர் நோட்டு வாங்கிக் கொண்டு அவன் போய்ச் சேர்ந்தான்.ஓம்
2010/5/6 N. Kannan <navannakana@gmail.com>
[Quoted text hidden]

N. Kannan Fri, May 7, 2010 at 2:43 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
வெளிநாட்டில் இத்தகைய உதவி பெறுகின்ற வயதானவர்கள், பொதுவாக
செல்வந்தர்களாக இருப்பர். எனவே தாராளமாக ‘டிப்ஸ்’ கொடுப்பர். அது பழகிப்
போனால், உள்ளம் எதிர்பார்க்கும்தானே!

க.>

2010/5/7 Venkatachalam Subramanian <v.dotthusg@gmail.com>:

> வேண்டியதற்குப் பதிலாக ஒருவனே வந்ததற்குக் காரணம் கேட்கமுடியாது. ஏதோ கையில்
> டாலர் நோட்டு வாங்கிக் கொண்டு அவன் போய்ச் சேர்ந்தான்.ஓம்
> 2010/5/6 N. Kannan <navannakana@gmail.com>
[Quoted text hidden]

Innamburan Innamburan Fri, May 7, 2010 at 2:55 AM
To: mintamil@googlegroups.com
அப்படி அல்ல, ஐயா,
'லபோ திபோ'வில் கூறிய மாதிரி,
'...கஷ்டகாலத்தில் மனிதாபிமானமும் தலை தூக்குகிறது. இந்த தள்ளுவண்டியில் நம்மை அழைத்து செல்லும் பெண்கள் பரம ஏழைகள். கடல் கடந்து கால் காசுகளுக்கு வந்தவர்கள். சுருங்கச்சொல்லின், அவர்கள் பொறுமை பூஷணங்கள். கொஞ்சம் இனாம் கொடுத்தல் கூட, புன்சிரிப்புடன் பெற்றுக்கொள்பவர்கள். அவர்களை வாழ்த்த வேண்டும்...'

மேலும், தள்ளுவண்டி உடல் நிலையை பொறுத்து. என் மாதிரி உடல் நிலை உள்ளவர்கள் மயங்கி விழ ஹேது உண்டு, சர்க்கரை குறைந்து. இங்கிலாந்தின் கலாச்சாரம், இனாம் வாங்க தயக்கம். அமெரிக்காவில் அது உதவும்; ஆனால், புகார் செய்துவிடுவானோ என்ற அச்சம். செல்வத்திற்கும் , இதற்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறேன்.
இன்னம்பூரான்
2010/5/6 N. Kannan <navannakana@gmail.com>
[Quoted text hidden]

Innamburan Innamburan Fri, May 7, 2010 at 3:16 AM
To: "N. Kannan"
Dear Kannan,
Forget my Masters in Economics of 1954 vintage. I cherish my Masters in Applied Sociology [2006] more and observe these things, as an informed Sociologist and as an accredited Citizen Adviser.
Regards,
Innamburan 
[Quoted text hidden]

No comments:

Post a Comment