Sunday, March 3, 2013

அன்றொரு நாள்: டிசம்பர் 1 ப்ளாக்கும், ப்ளேக்கும்!


அன்றொரு நாள்: டிசம்பர் 1 ப்ளாக்கும், ப்ளேக்கும்!
அப்டேட்:
சித்திரத்துக்கு நன்றி
http://24.media.tumblr.com/9e3be002e9b8015293bb4b294100c6d1/tumblr_mhpugcanRx1ql6ld5o1_250.png
இன்னம்பூரான்
01 12 2013


Innamburan Innamburan Thu, Dec 1, 2011 at 5:28 PM




அன்றொரு நாள்: டிசம்பர் 1
ப்ளாக்கும், ப்ளேக்கும்
அரை நூற்றாண்டுக்கு முன் அமெரிக்காவின் நிறபேதம் தலை விரித்தாடிக்கொண்டிருந்தது என்பதும், ஒரு தனி மனுஷி தான் அதை முறியடிப்பதில் முந்நிலை வகித்தார் என்பதும், கடந்த ஐம்பது வருடங்களுக்குள் இந்த நிற பேதம் கணிசமாக குறைந்து விட்டது என்பது மட்டும் அல்லாமல், அந்த நாட்டின் ஜனாதிபதி நிறபேதத்தால் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர் என்பதும் வரலாறு. இது அமெரிக்காவுக்கு பெருமை சேர்க்கிறது. இது எளிதில் கிடைத்த சாதனை அன்று. பொது மக்களின் ஏகோபித்த மனமாற்றம் கண்கூடு. கன்னங்கரேர் அடிமைகள், 1865க்கு முன்னால் ~‘நிக்கர்’ என்ற இழிச்சொல் ~’நீக்ரோ’ ~‘ப்ளாக்’ (கருப்பன்) ~ ‘அஃப்ரோ-அமெரிக்கன்’. இது எல்லாம் சமத்துவம் நோக்கிய மாற்றங்கள். அநேகமாக, எல்லா துறைகளிலும், இந்த இனம் முன்னேறி வருகிறது. ஆங்காங்கே குறைகள் இல்லை என்று சொல்ல இயலாது. அலபாமாவில் சுலபமா? இருந்தும், முன்னேற்றம் போற்றத்தக்கது. நம் நாட்டிலோ இரட்டை டம்ளர் மனப்பான்மைக்கு, உரமிட்டு, நீர் ஊற்றி, நாற்று நட்டு, வளம் சேர்க்கிறார்கள், அரசியல் கட்சிகள். இது நிற்க.
ஒரு ப்ளாக்குக்கும்’,  ஒரு ‘ப்ளேக்குக்கும்’ தர்மயுத்தமொன்று நடந்த தினம், டிசம்பர் 1, 1955. திருமதி. ரோஸா பார்க்ஸ் என்ற அந்த கறுப்பி மழலை பருவத்தில் குக்ளுஸ்கான் என்ற பயங்கரவாதிகளின் கொடுமை, கறுப்பர்களுக்கு சவுக்கடி, வீடு கொளுத்தல் போன்ற சம்பவங்களுக்கு நடுங்கி வாழ்ந்தவர். பிற்காலம், கணவரோடு சேர்ந்து உரிமை போராட்டங்களில் கலந்து கொண்டவர்.  அலபாமா மாநிலத்தின் மாண்ட்கோமரி என்ற ஊரில்‘ தேசீய நிறபேதத்தால் பாதிக்கப்பட்டோர் முன்னேற்ற’ கழகத்தின் பொறுப்பாளர்களாக பணி ஆற்றியவர்கள் இருவரும். 1943லியே கறுப்பருக்கான பஸ்ஸின் பின்பக்கத்து வழியில் ஏற மறுத்ததற்காக, ஜேம்ஸ் ப்ளேக் என்ற பஸ் ஓட்டுனர், இவரை வெளியேற்றினார். அதே ஓட்டுனருடன் டிசம்பர் 1, 1955 அன்று லடாய். ரோஸா வால்-மார்ட் போன்ற ஒரு அங்காடியில் தையல்காரி. (மற்றொரு இழையில் அங்காடி சங்கடங்கள் பேசப்படுகின்றன. ஒன்று புரிந்து கொள்ளுங்கள். ஏழை பாழைகளை, அடி மாட்டுக்கூலி கொடுத்து வருத்துவதில், இந்த அங்காடிகளும், பெரிய ஹோட்டல்களும் லீடர்கள். ந்யூ யார்க்கில் உலகப்புகழ் மரியட் ஹோட்டலில் ஓரிரவு தங்கினேன். பெரும்பான்மை சமூகம் பணி பெற்றுக்கொள்வதில் பேதம் யாதும் காட்டுவதில்லை. முதலாளித்துவ கோட்பாடு: ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயிலாண்டி.’ விழுந்து விழுந்து என்னை உபசரித்த அஃப்ரோ-அமெரிக்கன் பெண்மணியிடம் மென்மையாக பேச்சுக்கொடுத்த போது தான் ஆணுடுப்பு தையல்காரி ரோஸாவின் களைப்பு புரிந்தது.) நாள் பூரா தையல் வேலை. கை கால் குடைச்சல். பஸ்ஸில் ஏறி அமர்ந்தால், ஓட்டுனர் ஜேம்ஸ் ப்ளேக்! ரோஸா அமர்ந்தது பெரும்பான்மை சமூகத்திற்கு ரிசர்வ்ட். ஓட்டுனர் முறைத்தார்.பெரும்பான்மை சமூகத்தின் பயணிகள் ஏற, இவரை இடத்தை காலி  செய்ய வற்புறுத்தினார். இவர் மறுக்க, அவர் முறைக்க, போலீஸ் வந்தது. நிற வேற்றுமை சட்டத்தை மீறிய குற்றம் சாற்றப்பட்டது. கைது. டிசம்பர் 5, 1955 அன்று கோர்ட்டில் வழக்கு.  பத்து டாலர் அபராதம். நான்கு டாலர் வழக்குச்செலவு. போட்றான்னான்! அன்று மாலை சிறுபான்மை இனத்து ஹர்த்தால் தொடங்கியது. ஆயிரக்கணக்கானவர்கள் வந்துள்ள கூட்டத்தில் மார்ட்டின் லூதர் கிங் பேசினார். ஹர்த்தால் ஒரு வருடத்துக்கு மேல், 381 நாட்கள் தொடர்ந்தது, வரலாறு காணாத வகையில். வாசகர்களே! சற்றே சிந்தியுங்கள். வேலை போச்சு; கூலியில்லை; பட்டினி; தர்மயுத்தம் தொய்வில்லாமல் நடக்கிறது. டிசம்பர் 20, 1956 அன்று உச்ச நீதி மன்றம், இந்த அநீதி சட்டத்தை தள்ளுபடி செய்கிறது. கையோடு கையாக, அங்காடி ரோஸாவை வேலை நீக்கம் செய்து விடுகிறது. அவரும் டெட்ராய்ட் நகருக்கு புலன் பெயர்ந்து 20 வருடங்கள், ஜான் கான்வெயர்ஸ் என்ற சட்டசபை அங்கத்தினருக்கு உதவியாளராக பணி செய்கிறார். அக்டோபர் 2005ல் கல்யாணச்சாவு, 92 வயதில்.
நண்பர்களே, இந்த தனி மனுஷி செய்த புரட்சி அமெரிக்க வரலாற்றில் அருமையான பதிவு. அநீதியை எதிர்க்கத்தான் வேண்டும். அசட்டையை துரத்தியடிக்கத்தான் வேண்டும். உரிமைக்கு போராடத்தான் வேண்டும். இந்த அடிப்படையில் தான் நான் புரட்சி ஓங்குக என்கிறேன். ஈற்றடி நோக்குக:
1948ல் காந்தி மஹானுடன் ஒரு உரையாடல். அக்காலத்தில் நீக்ரோ என்ற சொல் வழக்கில் இருந்தது. வந்திருந்த நீக்ரோ பெண் சொல்கிறார்: 
‘உங்கள் அஹிம்சை எனக்குப் புரியவில்லை. என் தம்பி கசை அடிப்பட்டுத் துடிக்கிறான். அவனை அடிப்பவர்களை தாக்காமல், நான் பார்த்துக்கொண்டு இருக்கலாமா? என்ன பேச்சு உங்களது?’
பதில்:
‘அம்மா! உனக்கு பதில் சொல்ல எனக்கு திராணி இல்லை. இந்த ஜன்மத்தில் என்னால், உனக்கு பதில் அளிக்கும் தெளிவு எனக்கில்லை. அது அடுத்த ஜென்மத்தில் பிராப்தம் ஆகலாமோ என்னமோ?’
இன்னம்பூரான்
01 12 2011
RosaParks.JPG
உசாத்துணை:

rajam Fri, Dec 2, 2011 at 4:12 AM

To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan

இந்த மாதிரி ethical கேள்விகளுக்குப் பதில் சொல்வது மிகவும் கடினம்.
ரோசா பார்க்ஸ் என் மானசீகத் தலைவி! அவரைப் பற்றித் தெரிவதற்குமுன்பே அவருடைய குணம் என் குருதியிலும் ஒரு இத்துனூண்டு கலந்திருப்பது எனக்குத் தெரியும்!



Innamburan Innamburan Fri, Dec 2, 2011 at 6:20 AM

அந்த இத்துணூண்டு சமாச்சாரம் இப்படித்தான் இருக்கும் என்று நான் ஊகித்ததுண்டு. என் அபிமான அத்தை கோமளம் அப்படித்தான். 'அம்மா சொல்படி ராஜூ' மாதிரி 'அத்தையும் மருமானும்' என்று எழுத ஆசைப்பட்டது உண்டு.  என் கண் கண்ட ரோஸா பார்க்ஸ்.இன்னம்பூரான்
02 12 2011




Nagarajan Vadivel Fri, Dec 2, 2011 at 12:15 PM


‘உங்கள் அஹிம்சை எனக்குப் புரியவில்லை. என் தம்பி கசை அடிப்பட்டுத் துடிக்கிறான். அவனை அடிப்பவர்களை தாக்காமல், நான் பார்த்துக்கொண்டு இருக்கலாமா? என்ன பேச்சு உங்களது?’
பதில்:
‘அம்மா! உனக்கு பதில் சொல்ல எனக்கு திராணி இல்லை. இந்த ஜன்மத்தில் என்னால், உனக்கு பதில் அளிக்கும் தெளிவு எனக்கில்லை. அது அடுத்த ஜென்மத்தில் பிராப்தம் ஆகலாமோ என்னமோ?’

அலபாமா பஸ் ஸ்ட்ரைக் காந்திய வழியை அடியொற்றி ஆய்வின் அடிப்படையில் நடந்த போராட்டம்.  காந்தியப் போராட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தது


War without Violence
A STUDY OF GANDHI'S METHOD
AND ITS ACCOMPLISHMENTS
by Krishnalal Shridharani
HARCOURT, BRACE AND COMPANY, NEW YORK
கிஷன்லால் ஸ்ரிதரானி குஜராத் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.  காந்தியாரின் தண்டி உப்புச் சத்யாக்கிரஹத்தில் பங்குபெற்றவர்.  அமெரிக்கப் பலகலைக் கழகத்தில் டாக்டர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு காந்திய நெறிமுறை வல்லவனுக்கு எதிரான போராட்டமுறை பற்றியது
நூல் மின் வடிவில் இங்கே

http://www.questia.com/PM.qst?a=o&d=59343166

அலபாமா பஸ் ஸ்த்ரைக் வெற்றிகரமாக நடக்க காந்தியமுறையைத் தேர்ந்தெடுத்த அந்த இயக்கம் கிஷன்லால் ஸ்ரிதரானியை அழைத்துவந்து அதன் உறுப்பினர்ஞகளுக்கு காந்திய முறை பற்றிய பயிற்சி அளிக்கப் பட்டது.  அந்த முறையை பயன் படுத்தியே ஸ்த்ரைக் 381 நாட்கள் நடந்து வெற்றிகரமாக முடிந்தது.  அது தொடர்பான கட்டுரை கீழே குறீப்பித்த நூலில் இடம் பெற்றுள்ளது

http://www.amazon.com/My-Soul-Rested-Movement-Remembered/product-reviews/0140067531

என்னுடைய துறை சார்ந்த ஆய்வுகளில் காந்திய முறையைப் பெரிதும் வலியுறுத்தி அது ஒரு உலகம் தழுவிய ஆய்வு முறையாக மலர்ந்தது.
1976-ல் இந்தியா சமூக மாற்றத்துக்கு காந்திய முறையைப் பயன்படுத்தவேண்டும் என்ற தீர்மானத்துக்கான அடிப்படை நான் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் முன்மொழிய உதவினேன்
பார்டிசிப்பேட்டரரி ரிசர்ச் ட்ரான்ஸ்ஃபர்மேட்டரி ரிசர்ச் என்று ஆய்வுமுறைகளிலும் ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்கள் பலம்பெற காந்திய முறை பயன்படத்தப்பட்டு இன்று  உலகளாவிய இயக்கமாக நடைபெற்று வருகிறது
நாடு மற்றும் குழுக்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து அமைதி நிலவச் செய்யவும் காந்திய முறை பயன்படும் என்று ஆல்ஃப்ரெட் ஐன்ஸ்டின் நிறுவன வெளியிடுகள் எடுத்துக்கூறுகிறது

http://docs.google.com/viewer?a=v&q=cache:S0J6zoRi_sMJ:www.aeinstein.org/lectures_papers/INDIA_GANDHI_ANSWER.pdf+amazon+%2B+war+without+violence&hl=en&gl=in&pid=bl&srcid=ADGEESileBBT6HhrHqsvHLjD6QWXkChW1mwpI_38D7FZMebODQCWzfaf0dRvp1nYHFn8go-oZ9Tc9h6ZPEX8Vc3cCoKOsdOAcLGVVjvNkDX4d2E0Ka6I-_BYuQhU_OpOPcyA2q63delQ&sig=AHIEtbRMWBgTCntpmSY10U0KwQmEYAmASg&pli=1

பெரிய பாமரன் பாடும் மெய்கீர்த்திக்கு இந்த சிறு பாமரனனின் பின்னூட்டம்
நாகராசன்
[Quoted text hidden]

Geetha Sambasivam Fri, Dec 2, 2011 at 12:22 PM


மார்ட்டின் லூதர் கிங் பற்றித் தெரிந்த அளவுக்கு இந்த அம்மையார் குறித்துத் தெரியாது.  பல தகவல்களையும் அளித்த இன்னம்புராருக்கும், பேராசிரியர் நாகராஜனுக்கும் நன்றி.

2011/12/1 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: டிசம்பர் 1
ப்ளாக்கும், ப்ளேக்கும்

1948ல் காந்தி மஹானுடன் ஒரு உரையாடல். அக்காலத்தில் நீக்ரோ என்ற சொல் வழக்கில் இருந்தது. வந்திருந்த நீக்ரோ பெண் சொல்கிறார்: 
‘உங்கள் அஹிம்சை எனக்குப் புரியவில்லை. என் தம்பி கசை அடிப்பட்டுத் துடிக்கிறான். அவனை அடிப்பவர்களை தாக்காமல், நான் பார்த்துக்கொண்டு இருக்கலாமா? என்ன பேச்சு உங்களது?’
பதில்:
‘அம்மா! உனக்கு பதில் சொல்ல எனக்கு திராணி இல்லை. இந்த ஜன்மத்தில் என்னால், உனக்கு பதில் அளிக்கும் தெளிவு எனக்கில்லை. அது அடுத்த ஜென்மத்தில் பிராப்தம் ஆகலாமோ என்னமோ?’
இன்னம்பூரான்
01 12 2011


Innamburan Innamburan Fri, Dec 2, 2011 at 2:13 PM


பெரிய பாமரன் பாடும் மெய்கீர்த்திக்கு இந்த சிறு பாமரனனின் பின்னூட்டம்
நாகராசன் 

பின்னூட்டமா, இது? முன்னேற்றம் ஐயா. பெருமளவுக்கு விஷயதானம் செய்தீர், ஐயா? அதற்கு ஒரு கும்பிடு. அன்றாடம் நம்ம கிட்டே கும்பிடு வாங்கிக்கொள்ளவும். காந்தி மஹான் உரையாடலை பதிவு செய்தவர், கிங்க்ஸ்லீ மார்ட்டின்.
 ந & வ.


Subashini Tremmel Fri, Dec 2, 2011 at 9:05 PM





2011/12/1 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: டிசம்பர் 1
ப்ளாக்கும், ப்ளேக்கும்

..நகருக்கு புலன் பெயர்ந்து 20 வருடங்கள், ஜான் கான்வெயர்ஸ் என்ற சட்டசபை அங்கத்தினருக்கு உதவியாளராக பணி செய்கிறார். அக்டோபர் 2005ல் கல்யாணச்சாவு, 92 வயதில்.
கல்யாணச் சாவு என்பதன் பொருள் என்ன?

காலங்காலமாக அடிமைப்படுத்தப்படும் சமூகங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உருவாகும் சிலரது தியாகங்களால் சமூக மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றது.

சிந்தனைக்கு விஷயங்களை வழங்கும் பதிவு. நன்றி

சுபா


நண்பர்களே, இந்த தனி மனுஷி செய்த புரட்சி அமெரிக்க வரலாற்றில் அருமையான பதிவு. அநீதியை எதிர்க்கத்தான் வேண்டும். அசட்டையை துரத்தியடிக்கத்தான் வேண்டும். உரிமைக்கு போராடத்தான் வேண்டும். இந்த அடிப்படையில் தான் நான் புரட்சி ஓங்குக என்கிறேன். ஈற்றடி நோக்குக:
1948ல் காந்தி மஹானுடன் ஒரு உரையாடல். அக்காலத்தில் நீக்ரோ என்ற சொல் வழக்கில் இருந்தது. வந்திருந்த நீக்ரோ பெண் சொல்கிறார்: 
‘உங்கள் அஹிம்சை எனக்குப் புரியவில்லை. என் தம்பி கசை அடிப்பட்டுத் துடிக்கிறான். அவனை அடிப்பவர்களை தாக்காமல், நான் பார்த்துக்கொண்டு இருக்கலாமா? என்ன பேச்சு உங்களது?’
பதில்:
‘அம்மா! உனக்கு பதில் சொல்ல எனக்கு திராணி இல்லை. இந்த ஜன்மத்தில் என்னால், உனக்கு பதில் அளிக்கும் தெளிவு எனக்கில்லை. அது அடுத்த ஜென்மத்தில் பிராப்தம் ஆகலாமோ என்னமோ?’
இன்னம்பூரான்
01 12 2011

Geetha SambasivamSat, Dec 3, 2011 at 11:13 AM


கல்யாணச் சாவு என்பதன் பொருள் என்ன//

எண்பது வயதுக்கும் மேல் இருந்துவிட்டுச் செல்பவர்கள் இறந்தால் "கல்யாணச் சாவு"  என்பார்கள்.  வாழ்க்கையில் அனைத்தையும் பார்த்துக் கழித்து, களித்து, ஆண்டு அனுபவித்து இருப்பார்கள் அல்லவா!  ஆகையால் அப்படிச் சொல்வது வழக்கம்.




No comments:

Post a Comment