Friday, April 26, 2013

‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 6: கல்வி.




‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 6: கல்வி.
பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 6
Inline image 1

ஜனவரி 8, 2013 அன்று திரு. ஶ்ரீரங்கம் மோஹனரங்கம் ஹிமாலய மலைச்சாரலில், ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் சிறார்கள் பள்ளி செல்லும் கடினமான பாதையை பற்றியும், தந்தையர்களின் கல்வி அளிப்பதில் உள்ள ஈடுபாட்டைப் பற்றியும் ஒரு அருமையான விழியத்தை காண்பித்து, ‘... இந்தக் குழந்தைகளும், அவர்களது தந்தையும் கல்விக்காகச் செய்யும் சாதனையைவிட உலகில் வேறு எந்தச் சாதனையும் எனக்குப் பெரிதாகப் படவில்லை... எந்த நேரமும் பனித் தரை உடையலாம். அது முழுக்க ஆறு. ஆழமான ஆறு. அதன் உறை படலத்தின் மீதுதான் நடந்து வரவேண்டும். ஏதாவது எக்குத்தப்பாய் கால் வைக்கும் போது உடைந்தால் ஆற்றின் ஆழம் பனிக்கல்லறை...’ என்று வியந்து பேசினார். அவர் கூறியதை வழிமொழிந்து, அதே விழியத்தை நம் எல்லாருக்கும் முன்னுதாரணமாக, இத்துடன், நன்றி கூறி, இணைக்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளியின் மேன்மையை பற்றியும், அதனுடைய ஆசிரிய பெருமக்களின் வேள்வியை பற்றியும் நண்பர் கதிர் எழுதிய மடல் மகிழ்ச்சி அளித்தது. பத்து வருடங்களாக, பெங்களூரு கோரமங்கலா பகுதியில் இயங்கி வரும் ராயல் பரிக்கிரமா பள்ளியை பற்றி ஒரு ஊடகச்செய்தி: எல்.கே.ஜி. யிலிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வந்த வி.ஐ.பி. விருந்தினருடன் சகஜமாக அளவளாவினர்;  அவர்களில் பெரும்பாலோர் சமுதாயத்தின் விளிம்பில் உள்ளோர் (marginalized) வீட்டு சிறார்கள்; வந்தவர்,அவர்களின் தட்டுத்தடுமாறாத ஆங்கில உரையாடலையும், பல விஷயங்கள் அறிய விரும்பும் ஆர்வத்தையும் கண்டு வியந்து போனார். அந்த தன்னார்வபள்ளியின் இலக்கு, சமுதாயத்தின் விளிம்பில் உள்ளோர் வீட்டு சிறார்களுக்குக் கல்வி அளிப்பதில் புரட்சிகரமான ஆக்கப்பூர்வ வழிமுறைகளைக் கையாளுவதே. அதன் நிறுவனர் சுக்லா போஸ் அவர்கள் பள்ளி அறை, வசதி, கணினி ஆகியவை போதாது; ஆர்வமும், சூழலும் தான் முக்கியம் என்கிறார். அந்த பள்ளிக்கு நான்கு கிளைகள்; மூன்று அனாதை இல்லங்களிலிருந்து, 69 சேரிகளிலிருந்தும் மாணவர்கள் படிப்பதாக, ஹிந்து இதழ் கூறுகிறது. மாணவர்களுக்கு இலவச கல்வியும், சத்துணவும், அடிப்படை மருத்துவ வசதியும் அளிப்பதோடு நிற்காமல், வயது வந்தோர்களுக்குக் கல்வியும், தையல் வகுப்புகளும் நடத்துகிறார்கள். கடும்போட்டியில் வெற்றி பெற்ற ஒரு மாணவர் முதல் தர வழக்கறிஞர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாராம். இவர்களில் சிலர் மத்திய/மாநில அரசுகளின் உயர் பதவில் வகித்தால், சமுதாயம் மறுமலர்ச்சி அடையும் என்று எழுத நினைத்தவுடன் மற்றொரு செய்தி.
ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு முஸொளரியில் ஒரு பள்ளி இருக்கிறது. அங்கு பாடம் எடுத்தது ஒரு படிக்காத மேதை; ஆந்திர விவசாயி திருமதி. ஐதலா லலிதாம்மா அவர்கள். அவருடைய திறனும், அனுபவமும்: பூச்சிக்கொல்லி இல்லாத விவசாயம், மழைநீர் சேகரிப்பு; தரமான இயற்கை உரமும், வித்துக்கள் தயாரிப்பு. செல்வமும் ஈட்டினார். இதையெல்லாம் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.
இந்த செய்திகள் ‘பாரத தேசமென்று பெயர் சொல்ல’ துணிவை கொடுக்கின்றன.
இந்த சட்டத்தின் (RTE Act) அடித்தளமே, பள்ளிகளை நடத்துவதில் சமூக ஈடுபாடு. ஆந்திரபிரதேசத்தில், இதற்காகவே பிரசாரம் நடைபெறுகிறது. அஸ்ஸாமில் அன்னைமார் சங்கங்கள் பள்ளிகளை நடத்துவதில் பங்கு கொள்கின்றன.’ என்று போன இழையில் சொன்ன நான், அநாவசியமாக அருமை நண்பர் செல்வனுடன் முட்டி மோதியதால், திசை மாறிய இழை குலைந்தே போய் விட்டது. தவறு என்னுடையது; ஆர்வமிகுதியின் விளைவு. மேலும், சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு, ‘...மார்ச் 31 கெடு முடிந்த பின்னும் உங்கள் பேட்டை/ஊர்/ மாவட்ட நிலவரம் என்ன, எப்படி என்று உங்களுக்குத் தெரியும். என்ன செய்யப்போகிறீர்கள்?...’  என்று கேட்க எனக்கு உரிமை யாதும் இல்லை.  திரு.செல்வனிடமும், மடலாடும் தோழர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அந்த சட்டத்தின் அடிப்படையை அரசு தளத்திலிருந்து எடுத்து, இணைப்பதுடன், என் தற்காலிக பணி முடிந்தது; அடுத்து இவ்விழை தொடர்ந்தாலும், கல்வி உரிமையை பற்றி பேசுவதை தவிர்த்து விடுகிறேன்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
05 04 2013
RTE.pdfRTE.pdf
63K   View   Download  
YouTube - Videos from this email
செல்வன்
Apr 5

தேவையில்லாமல் உங்கள் இழையில் புகுந்து சண்டைபோட்டதுக்கு நீங்க தான் என்னை மன்னிக்கணும் இ சார்:-). இழையை தொடருங்கள். நல்ல தலைப்பு. அது இதனால் எல்லாம் திசைமாறவேண்டாம்
கி.காளைராசன்
Apr 5

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
2013/4/6 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>

கடும்போட்டியில் வெற்றி பெற்ற ஒரு மாணவர் முதல் தர வழக்கறிஞர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாராம்.
திருப்பூவணத்தில் தெய்வீகப் பேரவையினர், திருக்கோயில் வளாகத்தில் கல்வி கற்றுக் கொடுக்கின்றனர். விடுமுறைநாட்களில் திருக்கோயில் உழவாரப்பணியும் உண்டு.

இங்கு படித்த மாணவர்களே இங்கு ஆசிரியர்கள்.
மாணவர் பலர் காவல்துறை, கல்வித்துறை எனப் பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

 உங்கள் பேட்டை/ஊர்/ மாவட்ட நிலவரம் என்ன, எப்படி என்று உங்களுக்குத் தெரியும். என்ன செய்யப்போகிறீர்கள்?...’ 
அன்பன்

பழமைபேசி
Apr 12

// தமிழகத்தில் கல்வி செழிப்பாகத்தான் இருக்கிறது இன்னம்பூரான் ஐயா? //

நானும் அப்படியே கருதுகிறேன். இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் வழியாக நான்
அறிந்து கொண்டது. கோவைப்பகுதியில் 10 பொறியியற் கல்லூரிகள் உட்பட 100
கல்லூரிகள் விற்பனைக்கு உள்ளனவாம். ஏனென்றால் அவ்வளவாக மாணவர் சேர்க்கை
இல்லையாம்.

நாட்டிற்குத் தேவை சமூகச் சீர்திருத்தம். அவை நல்ல கலை, இலக்கியத்தால்
மட்டுமே முடியும். ஊடகங்கள் அதற்குத் துணை புரிய வேண்டும். நூல்கள்
வாசிப்பதை ஊக்கப்படுத்தலாம். தனிமனிதனாக எனது வீட்டாருக்கும், என்னை
அண்டியுள்ளவர்களிடத்திலும் எனது கருத்தினைப் பகிர்ந்து விவாதத்திற்கு
அவர்களை ஆட்படச் செய்ய முடியும். அதுவே எனக்கான பெரிய வெற்றி!!
Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Apr 12

இது ஒரு முகம். ஏன் மாணவர் சேர்க்கையில்லை என்ற வினாவுக்கு பதில். தரமான பொரியியல் கல்வி கிடைப்பது அரிது. கல்வியை தவிர பல விஷயங்களிலும் பிரிதினித்துவ குடியரசு பொய்த்து விட்டது. 

Tthamizth Tthenee
Apr 13 (13 days ago)

கல்வியை தவிர பல விஷயங்களிலும் பிரிதினித்துவ குடியரசு பொய்த்து விட்டது.
கல்வித்
  ​ துறையும்   வியாபார நோக்கில்தான்  நடத்தப் படுகிறது
அன்புடன்
தமிழ்த்தேனீ ​   
​  
Subashini Tremmel
Apr 13 (13 days ago)

On Sat, Apr 13, 2013 at 6:30 AM, Tthamizth Tthenee <rkc1947@gmail.com> wrote:
கல்வியை தவிர பல விஷயங்களிலும் பிரிதினித்துவ குடியரசு பொய்த்து விட்டது.
கல்வித்
 ​ துறையும்   வியாபார நோக்கில்தான்  நடத்தப் படுகிறது

கல்வித்துறை கூட தேர்வு எனும் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுவதாகத்தான் நான் காண்கின்றேன். மாணவர்கள் பொது அறிவு, கல்வித்திட்டம் காட்டும் வரையறயை மீறி தேடல், பல நூல்கள் பல்வேறு துறையில் வாசித்தல்  என்ற வகையில் அழைத்துச் செல்லாத கல்வித்திட்டமாகத்தான் உள்ளது. 

சுபா


 
 


Tthamizth Tthenee
Apr 13 (13 days ago)

தேர்வு முறைகளே  
புரிந்து கொண்டு படித்தல் என்னும் சிறந்த முறையைக் கடைப்பிடிக்காமல் 
மனப்பாடம் செய்து யார்  அப்படியே  விடை எழுதுகிறார்களோ  அவர்களுக்கு உயர்ந்த  மதிப்பெண்  என்கிற முறையிலே  இருக்கிறது
பழமைபேசி
Apr 13 (13 days ago)

பிரசன்னா – சிநேகாவை காண மாணவ – மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள்
உட்பட ஏராளமானோர் கல்லூரி வளாகத்தில் குவிந்திருந்தனர். இதனால் தள்ளு
முள்ளு ஏற்பட்டது.

#விளங்கும் கல்வி!!

On Apr 13, 4:42 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> தேர்வு முறைகளே
>
> புரிந்து கொண்டு படித்தல் என்னும் சிறந்த முறையைக் கடைப்பிடிக்காமல்
>
> மனப்பாடம் செய்து யார்  அப்படியே  விடை எழுதுகிறார்களோ  அவர்களுக்கு உயர்ந்த
> மதிப்பெண்  என்கிற முறையிலே  இருக்கிறது
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
Nagarajan Vadivel
Apr 14 (12 days ago)

//பிரசன்னா – சிநேகாவை காண மாணவ – மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள்

உட்பட ஏராளமானோர் கல்லூரி வளாகத்தில் குவிந்திருந்தனர். இதனால் தள்ளு
முள்ளு ஏற்பட்டது.//


இந்தத் தள்ளு முள்ளுவில் பேராசிரியர்களும் முதல்வரும் இருந்தார்களா?
கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க ப்ளீஸ்
நாகராசன்

பழமைபேசி
Apr 14 (12 days ago)

பேராசிரியர்கள் இருந்திருக்கக் கூடும். :-)

Rishi Raveendran
Apr 14 (12 days ago)




கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
 
 
ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியேயாகும். ஏனைய மணி, பொன் முதலிய செல்வங்கள் அழியக் கூடியன. ஆதலால் அவை செல்வங்கள் ஆகா,
 
இந்த வாக்கியங்களை  கல்லாதவரிடல் சொல்லவேண்டும். என் சிநேகிதிகளில் சிலர் தங்கள்  பிள்ளைகளுக்கு படி்ப்பு
வராததை  சுலபமாக  ஜீரணிக்கிறார்கள்.”அவனுக்கென்ன  ஏதாவது பிசினஸ் பண்ணி  பொழச்சிப்பான்  படிச்சாதானா?” என்கிறார்கள்..படிக்காதபாமரர்களை  திருத்திவிடலாம் படித்த முட்டாள்களோடு வாதாடவே இயலாது.
 
சமுதாயத்தில்கீழ்த்தட்டுமக்களில்  பலருக்கு  இன்னமும் கல்வியின் மேன்மை தெரியவில்லை
 
மற்றும்..
 
.சுயதொழில் என்று பரமபரையாக  தாங்கள் செய்யும்  தொழிலுக்கு
உதவியாக பிறகு தலைவனாக  தன் மக்களை தயார்ப்படுத்திவிடுகிறார்கள்.
 
கல் உடைக்கும்  பணியாளர்களில் பலர்  தன் பெண் குழந்தைகளை  வீட்டில்விட்டு மற்ற சின்னக்குழந்தைகளைப்பார்த்துக்கொள்ளும் பணிக்காக பள்ளிக்கு அனுப்புவதில்லை.
 
கன்னட சமூக அமைப்புடன் அருகில் சில  கிராமங்களுக்குச்சென்று இந்தமாதிரிப்பெண்களிடம் நான் பேசி இருக்கிறேன்.எல்லாவற்றையும்்   கேட்டு  விட்டு,
,”புருஷன் சரி இல்ல குடிக்கிறான் நாந்தான் வேலை செய்து குடும்பத்தைக்காப்பாத்தணும்  இதுல புள்ளங்களை எங்கம்மா படிக்க வைக்கிறது?“ என்று புலம்புவார்கள்.
 
 
அப்படியும் சிலர்  கல்வியின் அவசியத்தை நாங்கள்  வலியக்கூறும்போது கேட்டுவிட்டு  குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். கூடியவரை சிறுவர் சிறுமிகளை  காய்கறி விற்கும்போதோ பூ விற்கும்போதோ கட்டிட வேலையில்  இருக்கும்போதோ பார்த்தால்  ‘ஏன் படிக்காம இந்த வேலைக்கு வந்தே?” என்று கேட்பது வழக்கம்.
 
சிலர்  சிரித்துவிட்டுப்போய்விடுவார்கள்”இதெல்லாம்  உனக்கு ஒரு பிரச்சினையா?” என்பதுபோல
 
சிலர், குடும்ப நிலை சொல்லி புலம்புவார்கள்.
 
எனக்குத் தெரிந்து காலனியில் இரண்டு கன்னட சிறுமிகள்
 பள்ளிக்கூடமும் போய் பூவிற்கும் வேலையும் செய்து அந்த சம்பாத்தியத்தில் புத்தகம் வாங்கிக்கொள்வதாக சொல்வார்கள். அவர்களின் எதிர்காலம் கண்டிப்பாக மணக்கும் அல்லவா? ////

>>>>>>
பலரும் கல்வி என்பதனை மிகவும் சரியாக தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
கல்வி என்பது கலாசாலைகளுக்கோ அல்லது கல்லூரிகளுக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ சென்று பயின்று பட்டம் பெறுவதல்ல.
நீங்கள் கூறும் இலக்கணத்தின்படி கவனித்தால் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கல்லூரிக் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை  உலக நாடுகளை ஒப்பிடும்பொழுது அதிகமே.  நம் தேசம் முன்னேறியிருக்கின்றதா ?  இல்லை ஊழல் இல்லாமலிருக்கின்றதா ? அல்லது தனி மனிதனின் வாழ்க்கையில் தரம் உயர்ந்திருக்கின்றதா ? பிணக்குகள் தணிந்திருக்கின்றதா ?
கல்வி என்பது தெளிவான சிந்தனையைத் தருவதே. முறைப்படி கல்வி கற்காக எத்தனையோ மேதைகள் இருக்கின்றனர். இருந்திருக்கின்றனர். பல்வேறு ஆராய்ச்சிகளிலும் தலை சிறந்து விளங்கினர். தனி மனித ஒழுக்கத்திலும் தலை சிறந்திருக்கின்றனர்.
தெளிவான சிந்தனையே உண்மையான கல்வி !

Granny Visalam
6:27 PM (58 minutes ago)

அன்னையும் தான் ஆரம்பித்த பள்ளியில் இந்தக்கருத்தைக்கொண்டே   மேலே உயர்த்தினார்
காந்திஜியும் கல்வி என்றால் வெறும் புத்தகம் படிப்பது மட்டுமல்ல  என்று மிக விரிவாக கூறியிருக்கிறார் 


_________________________________________________________________________________________________________
 "பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ : கல்வி"
முற்றும்.   அடுத்து வருவது?

சித்திரத்துக்கு நன்றி:http://www.vikatan.com/entrichy/2012/10/ndriyz/images/school-1.jpg

இன்னம்பூரான்
26 04 2013

No comments:

Post a Comment