Friday, March 15, 2013

அன்றொருநாள்: மார்ச் 15: கைக்கா உருளி




அன்றொருநாள்: மார்ச் 15: கைக்கா உருளி
6 messages

Innamburan Innamburan Wed, Mar 14, 2012 at 6:32 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: மார்ச் 15
கைக்கா உருளி
என்னது இது? நீயுமா? [“Et tu, Brute?"]

மூன்றே சொற்கள்! கதை முற்றிற்று,முதல் வரியிலேயே!  பெரும்பாலோர் ஜூலியஸ் சீஸரின் படுகொலை நடந்த தினம் மார்ச் 15, 44 கி.மு. அதை சொல்லி விட்டார் என்று அடுத்த இழைக்கு போய்விடுவார்கள். உலக இலக்கியங்கள் எல்லாவற்றிலும் நம்பிக்கைத்துரோகத்துக்கு உருவகமாகி விட்டன, இந்த மூன்று சொற்கள். இத்தனைக்கும், ஷேக்ஸ்பியர் சொன்னமாதிரி, ப்ரூடஸ் நாணயமான மனிதர் தான். 
அவர் படைத்த ஜூலியஸ் சீஸர் என்ற நாடகத்தில் ஒரு உரையாடல் துணுக்கு: ( Julius Caesar Act 1, scene 2, 15–19
சீஸர்: இந்த நெரிசலில் என்னை அழைப்பவன் யார்? ஒரு கீச்சுக்குரல் கேட்குது. நான் செவி சாய்க்கிறேன் (சொல்லு).
ஆருடம் சொல்பவன்: மார்ச் 15: சாக்கிரதை.
சீசர்: பேசுவது யார்?
ப்ரூடஸ்:  ஒரு ஆரூடம் சொல்பவன் உங்களை ‘இன்று மார்ச் 15: சாக்கிரதை.’ என்று எச்சரிக்கிறான்.
***
நான் பலதலைக்கொள்ளி போல் தவிக்கிறேன்.
‘கதை முற்றிற்றே’ என்று நன்றி நவின்று நகர்ந்து விடுவதா?
அல்லது
‘நீயிரும் வம்மின்’ என்று இலக்கியபோக்கில் பீடு நடை போட்டு உலகை அசத்திய ஷேக்ஸ்பியர் பாதையில் செல்வதா?
அல்லது
‘ப்ரூடஸ் நாணயமான மனிதர்’ என்ற மூன்று சொற்கள் படுத்திய பாட்டை விவரிப்பதா?
அல்லது
உயிரை த்ருணமாக மதித்த ஜூலியஸ் சீஸரின் நிஜமான மெய்கீர்த்தி பாடுவதா?
அல்லது
‘ப்ரூடசும், எடுபிடியும்’ என்று உளவியல் பேசும் சித்திரம் வரைவதா?
அல்லது
ரோமாபுரி உயர்ந்த கதையையும், வீழ்ந்த கதையையும், ஜூலியஸ் சீஸரின் படுகொலையை மையப்படுத்தி, வரலாற்றை கூறுவதா?
அல்லது
ஜூலியஸ் சீஸரின் படுகொலை எப்படி ஒரு வரலாற்று பாடமாக அமைந்தது என்று விமரிசிப்பதா?
அல்லது
இருப்பதோ ஆயிரமாயிரம் அற்புத செய்திகளின் நதி மூலம் என்று கூறி, அவற்றை குடைவதா?
நீங்கள் தான் சொல்லவேண்டும். ஏனெனில், மின் தமிழ் ஒரு கைக்கா உருளி. எந்த பதார்த்தமும் கச்சிப்போகாது (கெட்டுப்போகாது).
இன்னம்பூரான்
15 03 2012
Inline image 1

உசாத்துணை:
Willard Crompton, S. (1999) 100 Military leaders who Shaped World.

Mohanarangan V Srirangam Wed, Mar 14, 2012 at 7:27 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan


[Quoted text hidden]
அடங்கொப்புரான..!!! லெண்டன் சுந்தாச்சு என்னமா எளுதிப்புட்டாக...:-))) 

மின் தமிழ் ஒரு கைக்கா உருளியா.....போடு சவ்வாசு....சூப்பருங்கோவ்வ்வ்வ் 

ஏன் எழுத்தே ஒரு கைக்கா உருளிதானே......என்ன சொல்றீங்க...லண்டன் சீமானே..... 

இல்லன்னா..... அன்னிக்கு ஊறப்போட்ட சூலி சீசரு இன்னும் கெடாம ருக்காருல்லோ....பாமர ஊர்காய் கனக்கா....
:-)))


 


Subashini TremmelWed, Mar 14, 2012 at 8:08 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com



[Quoted text hidden]
நீங்கள் பட்டியல் போட்டுள்ள எல்லாவற்றையுமே எழுதலாமே.. அதிலும் குறிப்பாக

ரோமாபுரி உயர்ந்த கதையையும், வீழ்ந்த கதையையும், ஜூலியஸ் சீஸரின் படுகொலையை மையப்படுத்தி, வரலாற்றை கூறுவதா? 
பற்றி எழுத நேரம் கிடைத்தால் எழுதுங்கள். வாசிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

சுபா

 
இன்னம்பூரான்
15 03 2012

Innamburan Innamburan Thu, Mar 15, 2012 at 7:02 PM
To: mintamil@googlegroups.com
ஸுபாஷிணி சொல்லிவிட்டால், அப்பீல் ஏது?  இதே இழையில், தொடர்ந்து,
பட்டியலிட்டதெல்லாம் எழுகிறேன், அவ்வப்பொழுது. முதலில், ‘ப்ரூடசும்,
எடுபிடியும்’ வரும்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
2012/3/14 Subashini Tremmel <ksubashini@gmail.com>

கி.காளைராசன் Thu, Mar 15, 2012 at 11:35 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/3/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
‘ப்ரூடசும்,
எடுபிடியும்’ வரும்.
 
நன்றி, வணக்கம்.
--
அன்பன்
கி.காளைராசன்
[Quoted text hidden]

Subashini Tremmel Sat, Mar 17, 2012 at 8:08 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram
:-)
உடன் பதிலளிக்க முடியாத வகையில் கடந்த 2 நாட்கள் பணி அமைந்து விட்டது. முதல் தொடர் வந்திருப்பதை பார்த்தேன். வாசித்து விட்டு வருகிறேன்.

சுபா


[Quoted text hidden]

No comments:

Post a Comment