Showing posts with label Trichy. Show all posts
Showing posts with label Trichy. Show all posts

Tuesday, July 28, 2015

எந்தரோ மஹானுபாவலு! [1]

எந்தரோ மஹானுபாவலு! [1]


சித்திரமெதுக்கடி, குதும்பாய்!
சாத்திரம் படைப்பதற்கு? நீயும்
பத்திரமாகவே இருக்க வேணும்,அவனும்
காத்திரமாகவும் இருக்க வேண்டுமடி, குதும்பாய்!

இன்னம்பூரான்
செவ்வாய்கிழமை, ஜூலை 28, 2015

நான் சொல்றதை தப்பா நினைக்காதீர்கள். மாணவ பந்துவாகிய ‘ஜன அதிபதி’ ஜனாப் அப்துல் கலாம் அவர்கள் கொடுத்து வைத்தவர். இன்றைய நாளிதழ்களை அலங்கரிக்கும் தமிழ்நாட்டு ‘மாணவ செல்வங்களை’ பற்றி படிக்காமல், அநாயசமாக மகராசன் போய் சேர்ந்தார்.

நடந்தது என்ன,ஓய்?!:

திருச்சி திமிலோகப்பட்டது. நேற்று சட்டக்கல்லூரி மாணவர்களின் கும்பல் ஒன்று ‘விடியலை’ நோக்கி குடியலுலகம் ஆகிய டாஸ்மேக் மீது படையெடுத்தார்கள், மது விலக்குப் பிரச்ச்சாற்றம் செய்ய. குடி குடியை கெடுக்கும் (எந்தக்குடி எந்தக்குடியை கெடுக்கும் என்று என்னை கேட்காதீர்கள். லவ்பெல் அவர்களை கேளுங்கள்.) ‘களவும் கற்று மற’ என்ற தமிழ்பண்பை மீறலாகாது என்ற தலைவிதிக்கிணங்க, ஆளாளுக்கு மிடாக்குடியனாக மாறி தடுமாறவே, போலீஸுடன் லொள்ளு. சட்டம் படிக்கிறதாக சொல்லிக்கொள்ளும் அந்த ‘வித்யாதரர்கள்’ உடனுக்குடன் உரிமை போராட்டம் நடத்தவே, திருச்சியே சூடு பிடித்து அனல் பறந்ததாம். சட்டாம்பிள்ளை பசங்களல்லவா! மதியிழந்தாலும் சதி செய்யவேண்டாம் என்ற பகுத்தறிவு தலை தூக்க, ப்ளேட்டை மாத்திப்போட்டு, ‘நாங்கள் விழா எடுக்கப்போகிறோம். அதற்கு முன்னுரையாக, ஆளுக்கு ஒரு போத்தலில் குடியிருந்து விட்டுப் போய்விடுவோம்’ என்று சத்திய பிரமாணம் செய்தார்கள். ஆனால், இந்த போலீஸ் ‘அதெல்லாம் முடியாது. நோ அட்மிஷன் வித்தவுட் பெர்மிஷன்.’ என்று சவால் விட்டவுடன், சட்டம் பேசும் மட்டம் கேட்டதாம்,’ நாங்களும் இன்னாட்டு பிரஜைகள் அல்லவா? மற்றவர்களுக்கு உள்ள டாஸ்மெக்குடியுரிமை எங்களுக்கும் உண்டு’ என்றவுடன், போலீஸ் டைலமாவில்.! 

 தெரியாமத்தான் கேட்கிறேன்.கேள்விக்கு என்ன பதில், இந்நாட்டு மன்னர்களே?
-#-





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com