Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Wednesday, April 13, 2016

மொழியின் வரலாறு



தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை வரவேற்பாக பிரசுரித்த சிறப்பு மலரில் வந்துள்ள என் கட்டுரை, இது.


மொழியின் வரலாறு

இன்னம்பூரான்
ஏப்ரல் 9, 2016

தகவல்/கருத்து பரிமாற்றம் மனிதனின் நிகரற்ற திறமை என்பது ஒரு மாயை. எறும்புகள் அணி வகுத்து செல்லும் போது, நின்று பேசி விட்டு செல்கின்றன. பூனையும் நாயும் நமக்கு உற்ற தோழர்கள்; பாப்பி என்ற பூனை என்னை காலையில் 4 மணிக்கு எழுப்பி தின்பண்டம் கேட்பாள். டிஃபன் என்ற நாய் வீட்டுக்கு எஜமானனாக பீடு நடை போட்டாலும், நூறு ஆணைகளில் ஒன்றைச் சொன்னால் உடனடியாக பணிந்து இயங்குவான். ராணுவ நாய்கள் தியாகச்சுடர்கள். கிளியும் மைனாவும் திருப்பிச்சொல்லி நம்மை மகிழ்விக்கின்றன. விகடன் ஆசிரியர் அமரர் பாலசுப்ரமணியன் என்னை தனது பறவைப்பண்ணைக்கு அழைத்து சென்ற போது இரு ஈமு பறவைகள் அவருக்கு மெய்காப்பாளராயின. ஒரு கிளி அவர் வந்து கொஞ்சும் வரை, ‘பாலூ’ ‘பாலூ’ என்று கூவித்தீர்த்து விட்டது. சிங்கத்தையும் புலியையும் நன்கு பயிற்சிக்கு உட்படுத்தமுடியும். யானைக்கு வடமொழி புரியும் என்று மணக்குளத்து விநாயகர் கோயில் யானையின் பாகன் செய்து காண்பித்தார். அறுபது வருடங்களுக்கு முன்னால் இலங்கை பிரதமர் லண்டன் மிருக கண்காட்சி மையத்து யானையுடன் நீண்ட நேரம் பேசி, எல்லாரையும் அசத்தினார். பீடிகை முற்றிற்று.

c. 484–425 BC

தொல்காப்பியம் தொன்மை வாய்ந்த தமிழரின் வாழ்வியல் இலக்கணம். ‘என்மனார்’ என்ற தொல்காப்பிய அடக்கம் மிகுந்த சொல், அதற்கும் தொன்மையான தமிழ் மொழி படைப்புகளை கூறுகிறது. காலத்தின் பரிமாணத்தில் அத்துடன் ஒப்புமை உடையது எனலாம், ஹெரொடோட்டஸ் என்ற கிரேக்க அறிஞர் மூலம் சுமாராக 2500 ஆண்டுகளுக்கு முன்னால்கிடைத்த  ஒரு தகவலும், ஆராய்ச்சியும், முடிபும். முதலில் மூன்று வினாக்கள்:


  1. ‘கல் தோன்றி, மண் தோன்றா’ காலகட்டத்தில், மொழியில் புலமை, பெற்றபோதே கிடைத்ததா? பின்னர் பெறப்பட்டதா?;
  2. மொழி இயற்கையின் வரமென்றால், ஏன் பற்பல மொழிகள்?:
  3. பிறந்தவுடன் குழவியை கண்காணாதத் தேசத்திற்கு அனுப்பி தனிமையில் விட்டு விட்டால், அது பழகப்போகும் மொழி யாது?. 

ஹெரொடோட்டஸ் எகிப்தில் ( தமிழாக்கம் அருமையாக அமைந்திருப்பதை நோக்கவும்.) பயணம் செய்யும் போது, சாம்திக் ("Psamṯik") என்ற அரசன் மொழியின் மூலாதாரத்தை அறிய, இரு குழந்தைகளை ஒரு இடையனிடம் கொடுத்து, அவர்களிடம் யாரும் பேசக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவை போட்டு விட்டாராம். ஆனாலும் அவர்களுக்கு அன்னமிட்டு சிரத்தையுடன் கவனித்து, அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டு, முதற்சொல் அமைந்த விதத்தை தெரிவிக்கவேண்டுமெனெ ஆணை. ஒரு மழலை "βεκὸς" என்று கூவினானாம். மற்றொரு மொழியில் அது ரொட்டியை சுட்டும். அந்த மொழி தான் ஆதிமொழி என்று  சாம்திக் அறிவித்து விட்டானாம். ஆதாரம் இல்லாத கதை தான். ஆனால், ஹெரொடோட்டஸ் சொன்ன செய்தியல்லவா!  அப்படியிருந்தாலும் அவர் கூறிய ஆரூடம் பலித்தது எனலாம். என்ன தான் சொன்னாலும் மேன்மக்கள் மேன்மக்களே. 

1769 AD

பற்பல நூற்றாண்டுகள் கழிந்த பின் வந்த ஒரு ஆய்வை நோக்குவோம்.
கிட்டத்தட்ட 250 வருடங்கள் முன்னால் பெர்லின் அறிவியல் மையம், சில வினாக்களை எழுப்பி, ஒரு போட்டி வைத்தார்கள்: வினாக்கள்:
  1. மனித இனம் தன்னுடைய இயல்பான போக்கில் இயங்கி ஒரு மொழியை உருவாக்க முடியுமா? 
  2. அது சாத்தியம் என்றால், அவர்கள் கையாளப்போகும் உத்திகள் யாவை? 
  3. மேற்படி வினாக்களுக்கு, ஆய்வின் அடிப்படையில் விடை அளிக்கவேண்டும்.
வாகை சூடிய கொட்ஃப்ரிட் ஹெர்டர் என்பர் ‘மொழியின் மூலம்’ என்ற கட்டுரையில்  மனிதன் விலங்கினத்தை சார்ந்தவர் தான். அதனால் அவனிடம் மொழியறிவு ஏற்கனவே இருந்தது தான் என்றார். 170 வருடங்கள் கழிந்த பின் ‘மொழியை பெற்ற பேறுப் பற்றி அதிசயமான ஒரு நிகழ்வு நடந்தேறும் என்பதை அந்த அறிவியல் மன்றமே எதிர்ப்பார்த்து இருக்கமுடியுமா என்பது வியப்புக்குரிய கேள்விக்குறி தான்.


1937
டாக்டர் ரிச்சர்ட் ஆல்பெர்த் வில்சன் ‘மொழி பிறந்த வரலாறு’ [1937] என்ற நூலை எழுதினார். சிறிய நூல் தான்; ஆனால், இருபது வருட ஆய்வின் பயன். தன்னுடைய நூல்  புறவெளிக்கும் [Space] காலதேவனுக்கும்  [Time]  உள்ள உறவு பற்றி அமைந்தது என்றார். அவர் என்னமோ பெரிய கை அல்ல. காலாவட்டத்தில் அந்த நூலுக்கு சமாதி வைத்திருப்பார்கள். ஒரு எதிர்பாராத விந்தை நிகழ்ந்தது. நாடகத்துறையிலும், இலக்கிய விமர்சனத்திலும், சமத்துவ பிரச்சாரத்திலும் உலகப்புகழ் பெற்ற பெர்னாட் ஷா இந்த நூலை பரிந்துரை செய்ததுமில்லாமல், நீண்டதொரு முகவுரையும் அளித்தார். ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாயின. மொழியின் பிறப்பும், அது புறவெளிக்கும் காலதேவனுக்கும்  உள்ள உறவின் அரும்தவப்பேறு என்ற கருத்து, கடுகு சிறுத்தது ஆனாலும் காரம் போகாது என்பது போல, ஒரு நவீனத்துவமாக அமைந்து விடுகிறது என்பதை எல்லா மொழிகளிலும் காணலாம்.

தமிழில், தொன்மை வாய்ந்த பரிபாடலில்:
நிலனும், நீடிய இமயமும், நீ. 
அதனால், 
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என, 
அன்னோர் யாம் இவண் காணாமையின், 
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55 

மன்னுயிர் முதல்வனை ஆதலின், 
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே! 
நின் ஒக்கும் புகழ் நிழலவை; 
பொன் ஒக்கும் உடையவை; 
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60 

1979

ஹெரொடோட்டஸ்ஸின் ஆரூடம் நிக்கராகுவேயில் பலித்தது. காது கேளாத சிறார்களின் பள்ளிகளில் அவர்களுக்கு மொழியின் பயன் கிடைக்கவேண்டி செய்த முயற்சிகள் வியர்த்தமாயின. அமெரிக்காவிலிருந்து 1986ல் வரவழைக்கப்பட்ட நிபுணர் ஜூடி கெகல் கண்டு கேட்டு அனுபவித்த வியப்புக்குறிய விஷயம்: அந்த குழந்தைகள், பெரியவர்களின் பாடங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு, தாங்களே உருவாக்கிய மொழியில் பேசிக்கொண்டார்கள், இயல்பாகவே. ஆசிரிய பெருமக்களுக்குத் தான் அது புரியவில்லை. தற்காலத்தில் குழந்தைகள் கற்றுக்கொடுத்தது பல நூல்களாக உருவெடுத்து, ஆயிரக்கணக்கான சிறார்களுக்கு உதவுகிறது.

இந்த கட்டுரையின் இலக்கு ஆய்வுக்குறிய விதங்களில் எல்லாமொழிகளின் வரலாறு அமைகிறது, அதில் ஏற்படுத்தப்படாமல் ஏற்படும் விந்தைகள் தான் நமக்கு தாரகமந்திரங்களாக அமைகின்றன என்ற கருத்தை மற்றவர்கள் அலச வேண்டும் என்ற ஆர்வமமே.
-#-




சித்திரத்துக்கு நன்றி: http://biblelight.net/tower-painting-parliament.jpg

Monday, March 4, 2013

அன்றொரு நாள்: நவம்பர் 15 சாது மிரண்டால்...!


அன்றொரு நாள்: நவம்பர் 15 சாது மிரண்டால்...!
6 messages

Innamburan Innamburan Tue, Nov 15, 2011 at 5:25 PM
To: mintamil

அன்றொரு நாள்: நவம்பர் 15
சாது மிரண்டால்...!

~ ‘இரண்டு மிலியன் மக்கள் கூடி’ என்ற கூவலுடன்,கையோடு கையாக, அதை பாதியாக குறைத்து  ஒரு மிலியன் மக்கள் மட்டுமே(!),என்று கூறி,  வாஷிங்க்டனில் அதிபர் ஒபாமாவின் மக்கள் மருத்துவ மசோதாவை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ததாக, லண்டன் டெய்லி மெயிலில், 12 09 2011 செய்தி. எது நிஜமோ? யார் எதற்குப் பிணை?
~ கூடங்குளத்தில் எதிர்ப்பவர்கள் ஒரு கூலிப்பட்டாளமோ என்ற ஐயம், ஒரு மத்திய அமைச்சருக்கு! 
நவம்பர் 6, 1913 அன்று காலை 6:30 மணிக்கு, 57 குழந்தைகளும், 127 பெண்களும், 2,037 ஆண்களும் பின் தொடர, எல்லை கடந்து, சட்டத்தையே மாற்றியமைத்தார், அண்ணல் காந்தி, தென்னாஃப்பிரிக்காவில். ரெளலட் சட்டத்தை எதிர்த்து நாட்டையே ஒன்று திரட்டினார், அவர். 
~ அன்னா ஹஜாரேயின் எதிர்ப்பு அரசை ஆட்டிப்படைக்கிறது. உள்குத்து வலிக்கிறது. 
~ மார்ட்டின் லூதர் கிங் தன் கனவை காந்தீயமுறையில் நனவாக்கினார். 
~ லண்டன் ஹைட் பார்க்கில் யார் வேண்டுமானாலும் எதை பற்றி வேண்டுமானாலும் கையையும் காலையும் ஆட்டி, வாயாடலாம். 
~ இத்தனை பீடிகை, நவம்பர் 15, 1969 அன்று வாஷிங்டனில் வியட்நாம் போரை எதிர்த்து நடந்த மக்களின்  ஆரவாரத்தின் படிப்பினையை புரிந்து கொள்ள:

வியட்நாமிலிருந்து அமெரிக்க வீரர்களை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று ஒரு மாபெரும் மக்கள் எதிர்ப்பு, அமைதியாக, நடந்தது. 250 ஆயிரம் மக்கள் அதில் கலந்து கொண்டதாக,ஜெர்ரி வில்சன் என்ற உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். விமானத்திலிருந்து எடுத்தப் புகைப்படங்கள் மூலமாக அது 300 ஆயிரம் என்று ஊகிக்கப்பட்டது. 500 ஆயிரம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இன்று ஏதோ பெரிய கார்மேகமொன்று இறங்கி வந்தாற்போல், ஒரு மாபெரும் அமைதி பட்டாளம் வந்து இறங்கியது, வாஷிங்டனில். முக்கிய ராஜபாட்டைகளில், ஒரு மனிதக்கடல் ஊர்ந்து சென்றது. அதன் குறிக்கோள்: அதிபர் நிக்சனின் வியட்நாம் அன்னநடை போக்கை கண்டிப்பது. விரைவில் அமெரிக்க வீரர்கள் திரும்பவேண்டும் என்ற கோரிக்கை. அவர்களின் தலைவரான மினசாடோ செனேட்டர் யூஜின்.ஜே. மக்கார்த்தி அவர்களின் சொற்பொழிவின் சாரம், 

“...வரலாறு தெளிவாக கூறுவது யாதெனில்: பழங்காலமோ, தற்காலமோ, மக்களின் நம்பிக்கையை, சுய ஆதாயத்துக்காகவோ அல்லது தவறான அணுமுறையினாலோயோ, பலிகடா செய்த அரசியலர்கள், மக்களுக்கு தீமை விளைவித்தவர்கள் என்க. மக்களின் நம்பிக்கையயும் நன்றியையும் வைத்துக்கொண்டு, ரோமானிய சீசர் சக்ரவர்த்திகள் போருக்கு சென்றார்கள். அம்மாதிரியே மக்களின் ஆதரவை பணயம் வைத்து நெப்போலியன் செய்யாதன செய்தான். இவை எல்லாம் அமெரிக்காவுக்குப் பாடம்...”.
பெரும்பாலும் மாணவர்களே. கறுப்பினம்/இடது சாரி அதிகமாக தென்படவில்லை. கிட்டத்தட்ட 100 இயக்கங்கள் கலந்து கொண்டன. சமாதானம் நாடும் கோஷங்கள் எழுந்தன. அங்குமிங்குமாக போலீஸ் அதிகப்படி என்றாலும், கூட்டத்தின் கட்டுப்பாடு, அவர்களால், தமக்குள், நியமிக்கப்பட்ட வாலண்டியர்களிடம். அவர்கள் கறார். ராணுவம் தலை காட்டவில்லை. போலீஸ் போக்குவரத்து ஒழுங்குமுறையுடன் சரி. “ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, தந்திரம் செய்யும் டிக்கி, போரை நிறுத்து.” என்ற கோஷம் அதிகமாகக் கேட்கப்பட்டது. ஆகஸ்ட் 28, 1963 அன்று 200 ஆயிரம் மக்கள் கூடி மார்ட்டின் லூதர் கிங்க் அவர்களின் சொற்பொழிவை கேட்கக்கூடியது நினைவில் வந்தது. ரிபப்ளிகன் செனெட்டர் சார்லஸ்.இ. குடெல் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.சில சிறிய தீவிர எதிர்ப்பாளர்கள் குழுக்கள் மாலையில் அமெரிக்க தேசியக்கொடியை எரித்தனர். சில்லறை விஷமம் செய்தனர். புகை வாயு வீசப்பட்டது. சிலர் கைதாயினர். மாலை 8 மணிக்கு அவர்கள் கலைய ஆரம்பித்தனர். இரவு 11 மணிக்கு சகஜ நிலை திரும்பியது. மூவாயிரம் இளைஞர்களுக்கு போக்குவரத்து வசதி கிடைக்காததால், முனிசிபாலிட்டியே அவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது.
~~~~~~இதில் நமக்கு என்ன பாடம் இருக்கிறது?
இன்னம்பூரான்
Washington+War+Moratorium+1969.jpg

உசாத்துணை:
12 Sep 2009 – Demonstrators hold up banners on Capitol Hill in Washington on Saturday. 'I will not waste time with those who think that it's just good politics ... 

Thevan Tue, Nov 15, 2011 at 7:01 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அரசாங்கங்கள் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.

௧௫ நவம்பர், ௨௦௧௧ ௧௦:௫௫ பிற்பகல் அன்று, Innamburan Innamburan <innamburan@gmail.com> எழுதியது:


செல்வன் Tue, Nov 15, 2011 at 11:43 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2011/11/15 Innamburan Innamburan <innamburan@gmail.com>
வியட்நாமிலிருந்து அமெரிக்க வீரர்களை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று ஒரு மாபெரும் மக்கள் எதிர்ப்பு, அமைதியாக, நடந்தது. 250 ஆயிரம் மக்கள் அதில் கலந்து கொண்டதாக,ஜெர்ரி வில்சன் என்ற உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். விமானத்திலிருந்து எடுத்தப் புகைப்படங்கள் மூலமாக அது 300 ஆயிரம் என்று ஊகிக்கப்பட்டது. 500 ஆயிரம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இன்று ஏதோ பெரிய கார்மேகமொன்று இறங்கி வந்தாற்போல், ஒரு மாபெரும் அமைதி பட்டாளம் வந்து இறங்கியது, வாஷிங்டனில். முக்கிய ராஜபாட்டைகளில், ஒரு மனிதக்கடல் ஊர்ந்து சென்றது. அதன் குறிக்கோள்: அதிபர் நிக்சனின் வியட்நாம் அன்னநடை போக்கை கண்டிப்பது. விரைவில் அமெரிக்க வீரர்கள் திரும்பவேண்டும் என்ற கோரிக்கை.

இந்த கோமாளிகள் இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஊர்வலம் போயிருந்தால் இன்னும் ஐரோப்பா ஹிட்லரின் பிடியில் இருந்திருக்கும்.

லிப்ரல்களின் துரோகம் மட்டும் இல்லையெனில் கம்யூனிசத்தை இன்னும் பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பே வீழ்த்தி இருக்க இயலும். ஆனால் லிபரல்களால் நாட்டின் முன்னேற்றத்தை தாமதிக்க முடியுமே ஒழிய தடுத்து நிறுத்த இயலாது.

இப்போது லிபரல் ஜோக்கர்களின் கனவு புராஜக்டான யூரோ குப்புற கவிழ்ந்து கிடக்கிறது.சோஷலிச கட்சி ஆளும் கிரேக்கம் பணால் ஆகிவிட்டது. இன்று நியூயார்க் டைம்ஸில் பால் க்ருக்மன் இத்தாலி அவுட்டனால் யூரோவும் அவுட் என புலம்பி தள்ளி இருக்கிறார்.
--
செல்வன்


[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Nov 16, 2011 at 8:58 AM
To: mintamil@googlegroups.com
இந்த கோமாளிகள் இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஊர்வலம் போயிருந்தால்....

~ கனவலைகள் மோதுகின்றன. அப்பாவுக்கு சாமுவேல் தேவசகாயம்னு ஜிக்ரி தோஸ்த். நேரே கிட்சன்லெ வந்து ஃபில்டர் காபி கேப்பார். அவர் வீட்டுக்குப்போனா சுவை மிகுந்த கேக் கிடைக்கும். தோட்டத்திலெ கொடுக்காப்புளி பறிச்சுக்கோன்னு துரட்டி கொண்டு வந்து கொடுப்பார். ஆனா பாருங்கோ! அவர் கிட்ட என்ன பேச்சுக் கொடுத்தாலும் ~ நேருவும் சீனாவும், காந்தியும் திருவள்ளுவரும், சுருட்டில்லா சர்ச்சில், தொல்காப்பியமும் நாமக்கல் கவிஞரும், எப்படி வாணாப்பேசிப்பாருங்கோ, சுவிசேஷத்தவப்புதல்வரான, சாமுவேல் தேவசகாயம் மாமா, ‘கர்த்தர் என்ன சொல்றார்னா’, பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவே, இந்த சிவபிரான் படுத்துவதை பாரும்’, ‘விவிலியத்திலிருந்து ஒரு பகுதி தாண்டா, இந்த திவ்யபிரபந்தம்’ என்று விட்டு விளாசுவார்.
 அந்த மாதிரி...
இன்னம்பூரான்
16 11 2011 



செல்வன் Wed, Nov 16, 2011 at 2:24 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2011/11/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
~ கனவலைகள் மோதுகின்றன. அப்பாவுக்கு சாமுவேல் தேவசகாயம்னு ஜிக்ரி தோஸ்த். நேரே கிட்சன்லெ வந்து ஃபில்டர் காபி கேப்பார். அவர் வீட்டுக்குப்போனா சுவை மிகுந்த கேக் கிடைக்கும். தோட்டத்திலெ கொடுக்காப்புளி பறிச்சுக்கோன்னு துரட்டி கொண்டு வந்து கொடுப்பார். ஆனா பாருங்கோ! அவர் கிட்ட என்ன பேச்சுக் கொடுத்தாலும் ~ நேருவும் சீனாவும், காந்தியும் திருவள்ளுவரும், சுருட்டில்லா சர்ச்சில், தொல்காப்பியமும் நாமக்கல் கவிஞரும், எப்படி வாணாப்பேசிப்பாருங்கோ, சுவிசேஷத்தவப்புதல்வரான, சாமுவேல் தேவசகாயம் மாமா, ‘கர்த்தர் என்ன சொல்றார்னா’, பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவே, இந்த சிவபிரான் படுத்துவதை பாரும்’, ‘விவிலியத்திலிருந்து ஒரு பகுதி தாண்டா, இந்த திவ்யபிரபந்தம்’ என்று விட்டு விளாசுவார்.
 அந்த மாதிரி...

அந்த மாதிரி தோழர்கள் அனைத்தையும் கம்யூனிச கண்னாடி மூலமே பார்த்து ஆதரித்தும், எதிர்த்தும் வந்ததால் அவர்கள் செய்ததை மாத்திரம் இங்கே விளக்க அதே கம்யூனிச கண்னாடி தேவைபடுகிறது.

வியட்னாம் போரை விட மோசமான உலகபோரில் அமெரிக்கா இறங்கியது.அதை உலகெங்கும் இடதுசாரிகள் ஆதரித்தனர்.காரணம் அவர்களின் அபிமான சோவியத்யூனியன் காக்கபடவேண்டும் என்ர எண்ணத்தில். இந்தியாவில் சோவியத்யூனியன் மேல் ஹிட்லர் படை எடுக்கும்வரை "இந்தியா போரில் இறங்ககூடாது" என போராடி வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி சோவியத்யூனியன் மேல் ஹிட்லர் படை எடுத்தவுடன் பல்டி அடித்து "இந்தியா உலகயுத்தத்தில் இறங்கவேண்டும்" என்றது.இதே வியட்னாம் என்றதும் "போரை எதிர்க்கிறோம்" என பிளேட் திருப்பி போடபட்டது.
[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Nov 16, 2011 at 4:35 PM
To: mintamil@googlegroups.com
வியட்னாம் போரை விட மோசமான உலகபோரில் அமெரிக்கா இறங்கியது......
~ சாமுவேல் மாமா கிட்ட சொன்னேன். விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 19 - "திருப்பாடல்கள்" அதிகாரம் 2: திருப்பாட்டு 1 படிக்கச்சொன்னார்.
இன்னம்பூரான்
2011/11/16 செல்வன் <holyape@gmail.com>