Showing posts with label லால்குடி. Show all posts
Showing posts with label லால்குடி. Show all posts

Tuesday, August 11, 2015

நண்பர்களே 2

நண்பர்களே,

யான் தேசாந்திரியாக அலைகிறேன். எழுதுவதில் தாமதம். மன்னித்தீர்கள் அல்லவா!

ஆலாய் பறந்தாலும், பற்பல புராதனங்களை பார்த்துக்கொண்டு, ஆராய்ச்சிமணியின் டிங் டாங் கேட்டுக்கொண்டு, லால்குடியில் லா.ச.ரா. வின் சொல்லில் மயங்கிய தேவி தரிசனம், புதுக்கோட்டையில் நான் விட்டுசென்ற திரிசமன் தலங்களையும் திருகோகரணத்திலும், திருமயந்த்திலும், நார்த்தாமலையிலும் தரிசனங்கள் செய்து விட்டு, கானாடுகாத்தானில் டேரா போட்டு, பள்ளத்தூர் மஹாத்மியங்களை கண்டு களித்து, ஆத்தங்குடி பெரிய வீடு, சின்ன வீடு எல்லாம் சென்று, இன்னம்பூரில் திவ்யதரிசன்ம் செய்து விட்டு, நாளை பா.சே. க்கு பயணம். பிறகு என்ன? தொல்காப்பியம் தான்.

இன்னம்பூரான்
11 08 2015