Showing posts with label அக்டோபர் 8. Show all posts
Showing posts with label அக்டோபர் 8. Show all posts

Tuesday, March 19, 2013

அன்றொரு நாள்: அக்டோபர் 8.1




அன்றொரு நாள்: அக்டோபர் 8.1
1 message

Innamburan Innamburan Fri, Oct 7, 2011 at 7:47 PM

To: mintamil
Cc: Innamburan Innamburan
Bcc: innamburan88 , coral shree , kalvi Thulir , anantha narayanan nagarajan , Soumya Srinivasan

அன்றொரு நாள்: அக்டோபர் 8.1
இன்று நம் விமானப்படை தினம். இந்திய விமானப்படை துவக்கிய தினம்: அக்டோபர் 8. 1932, ஆறு அதிகாரிகளுடனும், 19 ஊழியர்களுடனும், நான்கு சிறிய விமானங்களுடன். முதல் விண் போர் 1937ல், வடக்கு வஸிரிஸ்தானில். நாளொரு சின்ன மேனியாகவும், பொழுதொரு நுண்ணிய வண்ணமாகவும், மெல்ல மெல்ல வளர்ந்தது. ஆகஸ்ட் 1941ல் தான் புது வரவுகள் இடம் பெற்றன. இந்திய விமானப்படைக்கு முதல் சவால், பர்மாவில் ஜப்பானுடன் போரிட நேர்ந்த போது. இன்னல்களும், நஷ்டங்களும் அதிகம் என்றாலும், ரங்கூன் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி இருந்த கப்பல்களுக்கு பாதுகாப்பு, இந்திய விமானப்படை என்பதில் ஐயமில்லை. 1942ல் நிறுவப்பட்ட பத்து பயிற்சி மையங்கள் அடுத்த ஆகாய மைல் கல். 1943 வருகை தந்த   அமெரிக்க ‘பழிக்குப் பழி’ விமானங்கள் பெரிதும் பேசப்பட்டன, பிரச்னைகள் பல இருந்தாலும். 1944ல் ஹரிக்கேன்/ஸ்பிட்ஃபையர் விமானங்களுடன் பத்து விமானப்படைகள் இயங்கின. ரங்கூன் மே 3, 1945 அன்று கை வசம் ஆக்கும் பணியில் இந்திய விமானப்படை திறனுடன் இயங்கியது. ஆனால், தூசிப்படையின் உதவிக்கரமாகத்தான் கருதப்பட்டது. மார்ச் 1945 காலகட்டத்தில், இதன் முக்கியத்துவம் உணர்ந்து ‘ராயல்’ விருது. ஐந்தே வருடங்களில் அது காணாமல் போய் விட்டது! ஆகஸ்ட் 1947 காலகட்டத்தில் 1600 அதிகாரிகள், 27000 ஊழியர்கள். அக்டோபர் 27, 1947 அன்று காஷ்மீரில் சுதந்திர இந்தியாவின் விமானப்படைக்கு ஆகாயப்போர் வெள்ளோட்டம், அருமையாக நிறைவேறியது. இந்தோ-சீன போரின் போது, நமது விமானப்படை எல்லா சவால்களையும் சந்தித்தது, திறனுடன். 1965 ல் நடந்த இந்தோ-பாகிஸ்தான் போரில் வாகை சூடியது, நம் விமானப்படை. ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் அவர்களால் ஏப்ரல் 1, 1954 அன்று கெளரவிக்கப்பட்ட நம் விமானப்படையின் முதல் இந்திய தளபதி ஏர் மார்ஷல் முகர்ஜி. தபால் தலையில் இருக்கும் நாட் விமானம் சும்மா புகுந்து விளையாடும் ரகம்.
இன்னம்பூரான்
25.jpg08 10 2011
பி.கு. உசாத்துணை ஒரு அதிகாரபூர்வமான இணையதளம். அலுப்பும், சலிப்பும் தட்ட, உறக்கம் வர அதை படித்தால் போதும். நத்தை வேகத்தில் கழுகு புராணம்! அதை படித்து, இதை பிடித்த எனக்கு மின் தமிழர்கள் பரிசுகள் பல அளிக்கவேண்டும்! என்ன சொல்றேள்?
உசாத்துணை:

Tuesday, March 12, 2013

அன்றொரு நாள்: அக்டோபர் 8.2




அன்றொரு நாள்: அக்டோபர் 8.2
2 messages

Innamburan Innamburan Sat, Oct 8, 2011 at 7:25 AM
To: mintamil

அன்றொரு நாள்: அக்டோபர் 8.2
அமர காவியங்கள் ஒரு வரியிலும் இருக்கலாம்.
‘காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி! கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி!’ 
பிரபல சினிமா டைரக்டர் சி.வி. ஶ்ரீதர் மாதக்கணக்காக மனதில் சுமந்த ‘கல்யாண பரிசு’ கதையை சொல்கிறார். ஒரே வரியில் அதை முழுதும் குறிப்பால் உணர்த்திவிட்டார், கவிஞர். அதுவே சினிமாவின் ஊடுருவும் பாடலாயிற்று. முதலில் வந்தது; நடுவில் வந்தது; முடிவில் வந்தது. இன்றும் நினைவை விட்டு அகலவில்லை. கவிஞர் தான் அல்பாயுசில் போய்விட்டார். ஏதோ ஆபரேஷனாம். ஆள் காலி, 29 வயதில், அக்டோபர் 8, 1959. சார்! ஜீனியஸ்களுக்கு காலம் இல்லை. பாருங்களேன். குலை பட்டினியாக இருந்த போது அவர் இயற்றிய பாட்டு, ‘ஆரவல்லி’ சினிமாவில்:
'சின்னக்குட்டி நாத்தனா 
சில்லறைய மாத்துனா 
குன்னக்குடி போற வண்டியில் 
குடும்பம் பூரா ஏத்துனா!' 

‘டவுட் தனபாலுவுக்கு’ ஒரு அவுட்டுச்சிரிப்பு!

'ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- சிலருக்கு 
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு - இருக்கும் 
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா 
அதுவுங்கூட டவுட்டு!'
~ ‘நான் வளர்த்த தங்கை’


'பக்த ஜனங்கள் கவனமெல்லாம் 
தினமும் கிடைக்கும் சுண்டலிலே... ஹா... ஹா... 
பசியும், சுண்டல் ருசியும் போனால் 
பக்தியில்லை பஜனையில்லை' 
ஆஷாடபூதிகள் மேல் ஒரு எள்ளல்:
~'நான் வளர்த்த தங்கை'
புதுமைப்பித்தன் கத்தற மாதிரி இல்லெ?

'சித்தர்களும் யோகிகளும் 
சிந்தனையில் ஞானிகளும் 
புத்தரோடு ஏசுவும் 
உத்தமர் காந்தியும் 
எத்தனையோ உண்மைகளை 
எழுதி எழுதி வச்சாங்க 
என்ன பண்ணி கிழிச்சீங்க!'
~ பாண்டித்தேவன்
முண்டாசுக்கவி எதிரொலி கொடுக்கிறானோ?

'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை 
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான் 
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு 
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்... 

எழுதிப் படிச்சு அறியாதவன்தான் 
உழுது ஒளச்சு சோறு போடுறான். 
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி 
நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன் 
சோறு போடுறான் அவன் 
~ 'கண்திறந்தது'

'வீரத்தலைவன் நெப்போலியனும் 
வீடு கட்டும் தொழிலாளி! 
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின் 
செருப்புத் தைக்கும் தொழிலாளி! 
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு 
காரு ஓட்டும் தொழிலாளி! 
விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட 
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி 
எதற்கும் உழைப்பு தேவை!
  ~'சங்கிலித் தேவன்'

'நாடு முன்னேற பலர் 
நல்ல தொண்டு செய்வதுண்டு 
நல்லதை கெடுக்கச் சிலர் 
நாச வேலையும் செய்வதுண்டு 
ஓடெடுத்தாலும் சிலர் 
ஒற்றுமையாய் இருப்பதில்லை - இந்த 
உண்மையை தெரிந்தும், நீ 
ஒருவரையும் வெறுப்பதில்லை!' 
~‘பாண்டித்தேவன்'


'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி 
எடுக்கிற அவசியம் இருக்காது. 
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால் 
பதுக்கிற வேலையும் இருக்காது. 
ஒதுக்கிற வேலையும் இருக்காது. 
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா9218_169769332472_141482842472_2923972_3759807_n.jpg
'திருடாதே'
இவை உசாத்துணையில் சின்னராசு என்பவர் தேர்ந்து எடுத்தவை.
இன்னம்பூரான்
08 09 2011
pastedGraphic.pdf

̀ உசாத்துணை:




pastedGraphic_1.pdf

karuannam annam Sat, Oct 8, 2011 at 8:37 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
பகிர்வுக்கு நன்றி திரு இ.சார்.
இரை போடும் மனிதர்க்கே இரையாகும் வெள்ளாடே! போன்ற வரிகள் உணர்த்துவது எவ்வளவோ.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

2011/10/8 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]