Thursday, June 20, 2013

அரசு-1 மக்கள் கருத்து:அப்டேட்


அரசு-1 மக்கள் கருத்து:அப்டேட்.அரசு-2 மக்கள் எழுச்சி: அடுத்து வரும்.
இன்னம்பூரான்
20 06 2013

Innamburan S.Soundararajan Tue, May 21, 2013 at 7:24 PM

அரசு-1
மக்கள் கருத்து
Inline image 1
இது புதிய தொடர். பல வருடங்களாக மடலாடும் குழுக்களில் எழுதி வந்ததை வலைப்பூவில் பதிக்கவில்லை. சில நண்பர்களின் விருப்பத்திற்கிணங்க, அவற்றை மீள்பதிவு செய்ய தொடங்கினேன். சேகரமும் ஆகிறது; வாசகர்களும் கூடினர். ஒரு பக்கம், அது தொடரும். நிகழ்காலத்துக்கும் வரவேண்டுமல்லவா. அதற்காக, புதிய தொடர்கள். சுருக்கமான தலைப்புகள். எளிய உரைநடை. ஆங்கிலம் கலக்கலாம். இவற்றை மடலாடும் குழுக்களுடனும், வல்லமை இதழுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
இரு வாரங்கள் முன்னால் ஸீ.என்.என்.ஐ.பி.என் ஒரு சர்வே நடத்தியது. தற்கால மத்திய கூட்டணி ஒன்பது வருடங்களாக அரசாளுகிறது. இனி தாக்குப் பிடிக்கமுடியாது என்ற அச்சம் அவர்களுக்கு இருப்பதாக ஒரு தோற்றம். இந்த சர்வேயில் பெரும்பாலோர் இது துணிவிழந்த அரசு, அரசியல் திறன் குறைந்து விட்டது என்கிறார்களாம் -95% டில்லியில்; லஞ்சலாவண்யம் கடந்த ஒரு வருடத்தில் அதிகரித்து விட்டதாக 94% டில்லியில் வருந்தினார்கள். விலைவாசி எக்கச்சக்கமாகவே உயர்ந்து விட்டது என்ற கவலை வேறு. சென்னையிலும் இதே மாதிரி தான் கணிப்பு. மும்பையில் சரி பாதி இந்த அரசுக்கு ஆதரவு. சரி பாதி அதை போற்றவில்லை. பெங்களுரில் ஆதரவு கொஞ்சம் கூட. அங்கே தான் பிஜேபியின் வண்டவாளம் வெளுத்து விட்டதே. இந்தியாவின் செல்வ நிலை (பொருளாதாரம் என்ற சொல்லை நான் பயன்படுத்துவதில்லை.) மங்கி விட்டதாக ஒரு கருத்துப் பரவலாக இருந்தாலும் சண்டிகரிலும், போபாலில் இதற்கு மாறான கருத்து. மிகவும் கவலை தரும் விஷயம்: 80 வயதான பிரதமர் மன் மோஹன் சிங் அவர்கள் கண்ணியத்துக்குப் புகழ் பெற்றவர். பிரமாதமான பட்ஜெட் அளித்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் முன்னால் உலகை அசத்தியவர். பொருளியல் நிபுணர். சமீபத்து உழல்களின் பின்னணி பயங்கரமானது. அவற்றில் சில தேசத்துரோகம் செய்தவை. கறுப்புப்பணம் ஈட்டியவை. வெளிநாட்டு மர்மக்கணக்குகளில் நம் செல்வத்தை முடக்கியவை. அவற்றை கட்டுப்படுத்தவில்லை என்று மக்கள் அவரை குறை சொல்வது அதிகரித்து விட்டது. என் செய்வது? நான் அவரை மதிப்பவன். ஆனால், நமக்கு எத்தனை நெருடல்!
இன்னம்பூரான்
21 05 2013






Tthamizth Tthenee Wed, May 22, 2013 at 9:43 AM

பதவிக்கு வரப் பயப்படவேண்டும்.

1. உருப்படியாக எதையும் செய்ய இயலாதென்றால் மக்கள் பாதிக்கப் படுவார்கள்  என்று உணர்ந்த நேர்மையான மனிதராயிருந்தால் பதவிக்கு வரப் பயப்படுவார்
2.அப்படியே பதவிக்கு வந்துவிட்டாலும்   அதற்குப் பிறகும் எதுவும் செய்ய இயலாதென்று உணர்ந்து விட்டால்  பதவியைத் தூக்கிப் போட்டுவிட்டு வெளியேறுவார்   அவர் உண்மையான மக்கள் தொண்டனாய் இருந்தால்,
3.தேசாபிமானியாய்  இருந்தால்,  அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி  அக்ரமங்களை  கண்டும் காணாமலும்   இருக்க மாட்டார்.
4.முகத்துக்கு நேரே  நீங்கள் சரியாக செயல்படவில்லை  என்று  கைநீட்டி குற்றம் சாட்டிய பிறகாவது  விலகி இருப்பார்  நேர்மையான மனிதராய் இருந்தால்
5.அல்லது உண்மையாகவே  நேர்மையான தேசாபிமான உணர்வு கொண்டவர் என்றால்  தவறு நடக்கும் இடத்தில்  தைரியமாக தட்டிக் கேட்பார்  தன் பதவி பறிபோனாலும் பரவாயில்லை, நாடுதான் முக்கியம், நாட்டு மக்கள்தான் முக்கியம் என்று .
இப்படிப்பட்ட எந்த நல்ல குணமும் இல்லாதவர் முதன்மை ஸ்தானத்தில் இருந்து கொண்டு தவறுகளுக்கு துணை செல்பவராக இருந்தால்  அவரைக் குற்றம் சாட்டுவதில்  தவறே இல்லை


பொருளாதார மேதை  என்றால் அவர் பதவிக்கு வந்த பின் நாடு பொருளாதாரத்தில் முன்னுக்கு வந்திருக்கிறதா? இல்லையென்றால் பொருளாதார மேதை என்னும் சொல்லுக்கு  பொருள் என்ன?
அன்புடன்
தமிழ்த்தேனீ

*




இன்னம்பூரான்






நேரம் செலவழித்து அருமையான பட்டியல் போட்டதற்கு நன்றி.
பதவிக்கு வரப் பயப்படவேண்டும்.

1. உருப்படியாக எதையும் செய்ய இயலாதென்றால் மக்கள் பாதிக்கப் படுவார்கள்  என்று உணர்ந்த நேர்மையான மனிதராயிருந்தால் பதவிக்கு வரப் பயப்படுவார்.
~ அச்சமில்லை. தயங்குவர். இரா.செழியன் அவர்கள் பதவி நாடியதில்லை.

2.அப்படியே பதவிக்கு வந்துவிட்டாலும்   அதற்குப் பிறகும் எதுவும் செய்ய இயலாதென்று உணர்ந்து விட்டால்  பதவியைத் தூக்கிப் போட்டுவிட்டு வெளியேறுவார்   அவர் உண்மையான மக்கள் தொண்டனாய் இருந்தால், 
~ மாஜி  ஜனாதிபதி ஜனாப் அப்துல் கலாம் கூட அவ்வாறு உணர்ந்த போது, பதவியை தூக்கிப்போட்டு வெளியேறவில்லை.

3.தேசாபிமானியாய்  இருந்தால்,  அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி  அக்ரமங்களை  கண்டும் காணாமலும்   இருக்க மாட்டார்.
~? 

4.முகத்துக்கு நேரே  நீங்கள் சரியாக செயல்படவில்லை  என்று  கைநீட்டி குற்றம் சாட்டிய பிறகாவது  விலகி இருப்பார்  நேர்மையான மனிதராய் இருந்தால்
~ நேர்மையானவர்களுக்கு அந்த குறிப்பு தேவையில்லை. 

5.அல்லது உண்மையாகவே  நேர்மையான தேசாபிமான உணர்வு கொண்டவர் என்றால்  தவறு நடக்கும் இடத்தில்  தைரியமாக தட்டிக் கேட்பார்  தன் பதவி பறிபோனாலும் பரவாயில்லை, நாடுதான் முக்கியம், நாட்டு மக்கள்தான் முக்கியம் என்று .
~ சான்றாக, ராஜாஜி, காமராஜர், நேதாஜி. 

இப்படிப்பட்ட எந்த நல்ல குணமும் இல்லாதவர் முதன்மை ஸ்தானத்தில் இருந்து கொண்டு தவறுகளுக்கு துணை செல்பவராக இருந்தால்  அவரைக் குற்றம் சாட்டுவதில்  தவறே இல்லை
~அது மட்டும் போதாது. 


பொருளாதார மேதை  என்றால் அவர் பதவிக்கு வந்த பின் நாடு பொருளாதாரத்தில் முன்னுக்கு வந்திருக்கிறதா? இல்லையென்றால் பொருளாதார மேதை என்னும் சொல்லுக்கு  பொருள் என்ன?

~ யார், யாரை அவ்வாறு கூறினார்கள்? 

No comments:

Post a Comment