Thursday, June 20, 2013

அன்றொரு நாள்: ஜூன் 21



அன்றொரு நாள்: ஜூன் 21

அப்டேட்: தன்னிலை விளக்கம். கொஞ்சம் சுகவீனம். விட்டுப்போன வேலை பளு, ஆஸ்பத்திரி அலைச்சல், பிரயாணம். விட்டு விட்டுப் பிடிப்பதாக உத்தேசம். புள்ளி விவரப்படி,உலகில் பல இடங்களில் தமிழார்வம் இருப்பது தெரிகிறது; ஊக்கமளிக்கிறது. வாசகர்கள் பொறுத்தாளவேண்டும். 
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
21 06 2013
சித்திரத்துக்கு நன்றி:http://exurbe.com/wp-content/uploads/2013/02/The-Prince-Machiavelli-Niccolo-9780979415401.jpg


Innamburan Innamburan Mon, Jun 20, 2011 at 7:04 PM



அன்றொரு நாள்: ஜூன் 21
http://exurbe.com/wp-content/uploads/2013/02/The-Prince-Machiavelli-Niccolo-9780979415401.jpg
அனுதினமும் ஏதாவது நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஏன் ஒவ்வொரு வினாடியும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. நாட்காட்டியை வைத்துக்கொண்டு, அன்றைய தினம், இன்றைய தினம் என்றெல்லாம் எழுதினால் யார் தான் படிப்பார்கள்? இன்று புவனம் போற்றிய தத்துவ ஞானி ழான் பால் சார்த்தெரே (Jean Paul Sartre) அவர்களின் பிறந்த தினம் (1905). என் மனதுக்கு பிடித்தவர். அவருடைய தத்துவம் என்னை ஆட்கொண்டது. அதற்காக, எல்லோரும் அவரை போற்றவேண்டும் என்று எதிர்பார்க்கலாமோ? 
தவிர, இன்றைய தினம் நிக்கலோ மாக்கியவல்லி (Niccolò Machiavelli) என்ற இத்தாலிய அரசியல் குருவின் மறைந்த தினம் (1527). அரசாளுவது ஒரு கலை, வாழ்வியல், கர்ம மார்க்கம். பாரதவர்ஷத்தின் வரலாற்றில் சீதா தேவியின் தந்தை ஜனக மஹாராஜாவுக்கு, மஹரிஷி என்றும் பெயர். பிற்கால மன்னர் பர்த்துருஹரியும் அப்படித்தான்: நீதி/ வைராக்யம்/ காமம் மூன்றிற்கும், திருவள்ளுவர் மாதிரி நெறி வகுத்த முனிபுங்கவர். விதுர நீதி, சுக்கிரநீதி, தமிழ் நீதி நூல்கள், அர்த்த சாஸ்திரம் ஆகியவை நம்மிடம் (ஏட்டளவில்!) இருக்கும் வரை, நிக்கலோ மாக்கியவல்லியை பற்றி என்ன பேச்சு? என்ற எதிரொலி வருகிறது; என் காதில் விழவில்லை. ஏனெனில், மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் அறிவுரைத்தபடி, கிணற்றுத்தவளையாக இல்லாதபடி, உலக வழக்குகளும், வரலாறும், சிந்தனைகளும் அறிந்து கொள்வது நல்லது தானே.
அரசாளுபவர்கள் தன் ஆளுமையை தவறவிடக்கூடாது. மன்னனின் செங்கோல் வளையலாகாது. மக்கள் நலம் நாடுவதே, அவனது இலக்கு. அண்டை, அயல் மன்னர்களை தன் வசம் இழுக்கவும் வேண்டும். கண் காணிக்கவும் வேண்டும். பட்டியல் நீளமானது. அதை விதுர நீதி, சுக்கிரநீதி, தமிழ் நீதி நூல்கள், அர்த்த சாஸ்திரம் ஆகியவற்றிலும் காணலாம். நிக்கலோ மாக்கியவல்லியின் ‘அரசகுமாரன்’ என்ற நூலிலும் காணலாம். அவரை பற்றி எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும், சிலவற்றை மட்டும் கோடி காட்டிவிட்டு, இந்த நூலின் சுருக்கத்தின் சாராம்சத்தை மட்டும், இங்கு தருகிறேன்.
அவர் தத்துவம் பேசியதில்லை. அனுபவமும், வரலாற்று சான்றுகளுமே அவருடைய ராஜதந்திரத்தின் தூண்கள். எனவே, முன்னும் பின்னுமாகவும், முரண் தோற்றமுள்ள கருதுகோள்களையும் எடுத்துரைத்திருக்கிறார். தத்துவம் பேசுபவர்கள், அவற்றை கையாளுகிறார்கள் என்பதும் உண்மை. இத்தாலியின் ஃப்ளாரன்ஸ் குறுநிலத்தின் சார்பாக, பல நாடுகளில் ராஜதந்திரியாக பணி செய்துள்ளார். அவர் எழுதிய முதல் நூல் ‘அரசகுமாரன்’(1514); அதை பதிப்பிக்க 18 வருடங்கள் ஆயின. பல தொல்லைகள்; வேலை போயிற்று; ஆட்சி மாறியது. அந்த நூலில் தனித்துவமே, அக்காலம் ஆளுமையையும், வாழ்நெறியும் இணைத்து உதட்டளவில் பேசப்பட்டதை, கேள்விக்குறியாக்கிய விசாரணை. எது என்னவாயினும் அரசன் ஆளுமையை தக்கவைத்துக்கொள்ளவேண்டும்; நன்னெறி மட்டும் போதாது; ஆளுமையை பயன்படுத்தும் கலையை மன்னன் கற்றுக்கொள்ளவேண்டும்; இல்லையெனின், தனிமனிதர்கள் தன்னிச்சையாக செயல்படுவார்கள்; அத்தருணம், தேசத்தின் பாதுகாப்பும், காபந்தும் அடிபடும் என்கிறார்.
சட்டமும் நல்லதாக இருக்கவேண்டும்; ஆயுதங்களும் கூர்மையாக இருக்கவேண்டும் என்பது, இவரது கூற்று. அவருடைய வாக்கும், போக்கும்: ‘ வலிமை மிக்க ஆயுதங்கள் இல்லையெனின், நல்ல சட்டங்கள் இருக்க வாய்ப்பில்லை. எனவே, நான் சட்டத்தை பற்றி பேசவில்லை. தளவாட வலிமையை பற்றி பேசுகிறேன்...பெரும்பாலும், மனித இனம் நன்றி/ பற்று/ வாய்மை ஆகியவற்றை மதிப்பதில்லை. ஆதாயம் தேடுவார்கள். அபாயம் வந்தால் காத தூரம் ஓடுவர்... எனவே, கனிவை விட கட்டுப்பாடு வேண்டும்...’. (மஹாகவி பாரதியாரின் ‘நடிப்பு சுதேசிகள்’ ஒரு தடவை படித்து விடுங்கள்). தயவு தாக்ஷிண்யம் இல்லாமல், இவர் கொடுங்கோல் ஆட்சியை ஆதரிக்கவில்லை. போலி ‘நல்லாட்சியை’ உதறி விடுகிறார். அதனால் தான் கட்டு காபந்து என்ற கடமையாற்ற, அரசகுமாரனுக்கு சிறந்த பயிற்சி தரவேண்டும் என்கிறார்; அதற்கு தான் இந்த நூல். திட்டவட்டமாக அதிகாரபலத்தை சிபாரிசு செய்யும் இவர், அரசகுமாரன், கால தேச வர்த்தமானத்தை அறிந்து விவேகமாக செயல் படவேண்டும் என்கிறார். அத்துடன் நிற்காமல், காட்டாறு போல் பெருகி வந்து, ஒரு சமயம் வெள்ளத்தில் அடித்து போவதும், சில சமயம் பாசனத்திற்கு பயன் என்பது போல் அதிர்ஷ்ட தேவதை, எதிர்பாராத சோதனைகளை தருவாள்; அதை தாக்குப்பிடிக்கும் வித்தை தெரியாத அரசகுமாரன் அழிந்து போவான் என்று பொருள்பட கூறுகிறார்.
இவரது அறிவுரைகள் என்றுமே சர்ச்சைக்குள்ளானவை. அதர்மத்தின் உறைவிடம் என்பார், லியோ ஸ்ட்ராஸ். அன்று. நடைமுறைக்கு உகந்த கட்டுப்பாடு என்பார் பெனெடெட்டோ க்ரோஸ் என்ற தத்துவ ஞானி. இது அரசியல் அறிவியல் என்பார், எர்னெஸ்ட் காஸியர். ஆனால், என்றோ ரூஸோ என்ற தத்துவ ஞானி சொன்னார், ‘இது அரசு இலக்கணம் அன்று; ஆளும் தரப்பினதின் கடூர போக்கை, மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது, இங்கே.’ என்று.
இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். படிப்பதும் நான் தானே? தமிழாக்கம் என் பொறுப்பு. 

உசாத்துணை:http://plato.stanford.edu/entries/machiavelli/ அது ஒரு கருவூலம். 
ஒரு சிந்தனை: இன்று இந்திய அரசியல் நடப்பில், நிக்கலோ மாக்கியவல்லியின் அறிவுரை எங்கெல்லாம் பொருந்தும். எங்கெல்லாம் சிந்தியுங்கள். அவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
21 06 2011


Tthamizth Tthenee Mon, Jun 20, 2011 at 7:07 PM




நல்ல பகிர்வு, கற்றுக்கொள்ள  நிறைய இருக்கிறது  எனக்கு
அன்புடன்
தமிழ்த்தேனீ


Innamburan Innamburan Mon, Jun 20, 2011 at 7:15 PM

யாரும் படிப்பதில்லை என்று நினைத்தேன், தமிழ்த்தேனி. இதற்கு முந்திய தங்களின் இடுகைகளை படிக்க முடிந்ததோ?


அவற்றையும் படித்தேன்
அன்புடன்
தமிழ்த்தேனீ


balarajan geetha Mon, Jun 20, 2011 at 7:45 PM





அன்புள்ள இ அய்யா,

வாழ்க வளமுடன்.
மறுமொழி எதுவும் வரவில்லை என்றால் யாரும் படிக்கவில்லை என்று தயவு செய்து நினைத்துக் கொள்ள வேண்டாம்.
என்றென்றும் அன்புடன்,

பாலராஜன்கீதா
= = = = = = = = =

Innamburan Innamburan Mon, Jun 20, 2011 at 7:55 PM


இருவருக்கும் நன்றி. எனது இடுகைகள் யாவும், interactive threads. அதாவது, அவை, மற்றோர் கருத்தை வேண்டுபவை. இல்லையெனில், வோல்டேஜ் குறைந்த மின் விளக்குகள் போல் மங்கும்; பிறகு கும்மிருட்டு. நமக்குள் ஒரு வார்த்தை. ஒரு நாளில் பல வேலைகள், படிப்பு, சிந்தனை, தியானம், உடற்பயிற்சி, மருத்துவம், இப்படி சகஸ்ர அலுவல்கள். அதையெல்லாம் விட்டு விட்டு, யாரும் படிக்கிறார்களா, இல்லையா என்று தெரியாத  interactive threads ல் மணிக்கணக்காக ஈடுபடலாமோ? மற்றவர்கள் நேரத்தை வீணடிக்கலாமோ? அந்த தயக்கம் தான்.
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்

Thiruvengada Mani T.K Tue, Jun 21, 2011 at 2:54 PM



பலர் படிக்கிறார்கள்் என் உட்பட! சிலர் பதில் எழுத சோம்புகிறார்கள் அதுவும் என்னைப்போல.. அதற்காகச் சுவையான கட்டுரைகள் நிற்கலாமா என்ன?
மணி

Dr.T.K.Thiruvengada Mani


meena muthu Tue, Jun 21, 2011 at 3:12 PM



பதில் சொல்லத்தெரியாமல் மௌனம் காக்கிறேன் என்பதைத் தவிர 
தாமதமாக வந்தேனும் அருமையான பல பதிவுகளை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். 


Geetha Sambasivam Wed, Jun 22, 2011 at 5:46 AM



அரசன் ஆளுமையை தக்கவைத்துக்கொள்ளவேண்டும்; நன்னெறி மட்டும் போதாது; ஆளுமையை பயன்படுத்தும் கலையை மன்னன் கற்றுக்கொள்ளவேண்டும்; இல்லையெனின், தனிமனிதர்கள் தன்னிச்சையாக செயல்படுவார்கள்; அத்தருணம், தேசத்தின் பாதுகாப்பும், காபந்தும் அடிபடும் என்கிறார்.//

இதை நம் பிரதமர் அன்றோ படிக்கவேண்டும்?? என்ன செய்வது?? இந்தியா இதுவரை கண்ட பிரதமர்களிலேயே மிக மிக மோசமான ஒரு பிரதமரை இப்போதே காண்கிறோம். :(((((

2011/6/20 Innamburan Innamburan <innamburan@gmail.com>


ஒரு சிந்தனை: இன்று இந்திய அரசியல் நடப்பில், நிக்கலோ மாக்கியவல்லியின் அறிவுரை எங்கெல்லாம் பொருந்தும். எங்கெல்லாம் சிந்தியுங்கள். அவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
21 06 2011


Geetha Sambasivam Wed, Jun 22, 2011 at 5:46 AM


பாலராஜன் கீதா??? நல்வரவு, நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப் பின்னர் சந்திக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி. 
2011/6/21 balarajan geetha <balarajangeetha@gmail.com>



அன்புள்ள இ அய்யா,

வாழ்க வளமுடன்.
மறுமொழி எதுவும் வரவில்லை என்றால் யாரும் படிக்கவில்லை என்று தயவு செய்து நினைத்துக் கொள்ள வேண்டாம்.
என்றென்றும் அன்புடன்,

பாலராஜன்கீதா
உங்கள் நிதர்சனமான கருத்துக்கு நன்றி, கீதா. என்னுடைய செய்தியை புரிந்து கொண்டு எழுதியிருக்கிறீர்கள்.
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்
22 06 2011


யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Wed, Jun 22, 2011 at 9:09 AM


நாங்கள் எல்லோரும் படிக்கிறோம் இ சார்.

நான் தான் எப்போதாவது உங்களுடைய பதிவுகளுக்கு பதில் எழுதுவதாக நினைத்து பெரிய மொக்கை பிளேடாகப் போட்டு உங்களைப் பழிக்குப் பழி வாங்கவும் செய்கிறேனே...

கவனிப்பதில்லையா நீங்கள்?



அன்புடன்

பென்
--------------------------------------------------------



Innamburan Innamburan Wed, Jun 22, 2011 at 10:18 AM

சேத்து வச்சுண்டிருக்கேன், பென். டபால்னு பதில் பாயும்!

நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Wed, Jun 22, 2011 at 10:26 AM
அய்யோ இ சார்.

நான் சும்மா ரொம்ப நாள் கழிச்சு அய்யம்பேட்டை வேலை பார்க்கலாம் என்று பார்த்தேன்.

ஆரம்பத்திலேய மிரட்டல் கனஜோராக வருகிறதே...

தங்கள் பாதாரவிந்தங்கள் பணிந்து

பென்







No comments:

Post a Comment