Monday, November 25, 2013

அடி தங்கமே! அபரஞ்சி தங்கமே!

அடி தங்கமே! அபரஞ்சி தங்கமே!

தாய்லாந்து பாங்காங்லெ $15000த்துக்கு தங்கச்சங்கிலி வாங்கிக்கொண்டு, தாய்நாட்டு பம்பாய்லெ விற்றால் லாபம் லக்ஷம் ரூபாய். ஆனால் சட்டவிரோதம். பொன்னுக்கு வீங்கும் இந்தியர்களை கட்டுப்படுத்த அரசு விதிகளும், வரிகளும் விதித்தாலும், புள்ளி விவரங்கள் சொல்வதற்கு மாறாக, முறைகேடாக இந்தியர்கள் தங்கம் வாங்குவது அதிகரித்து விட்டது என்கிறது, லண்டன் எகானமிஸ்ட், இன்று. அபு தாபி, பஹ்ரைன், டுபாய் நாடுகளிலிருந்து வருபவர்களிடம் முறை கேடான இறக்குமதியை சட்டரீதியாக பறிப்பது அதிகரித்து வருவதாக சுங்க அதிகாரிகளே சொல்கிறார்கள். நமது நில எல்லைக்கோடு 15 ஆயிரம் கி.மீ. கடல் 7.5 ஆயிரம் கி.மீ. யார் யார் எங்கெல்லாம் சட்டத்தை மீறுகிறார்களோ! இப்போ தாய்லாந்திம் இறக்குமதி அதிகம். இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் கொண்டு போகவே தான், இது என்கிறது அகில உலக பொன் கவுன்சில். தாய்லாந்து பிரச்னைகளும் ஒரு காரணம் எனலாம். அது போகட்டும். இந்தியாவில் சட்டத்தை நைசாக மீறி தம்மாத்தூண்டுத் தங்கம் உமக்குத் தெரிந்து யாராவது கொண்டு வந்தார்களா?
உசாத்துணை:
http://www.economist.com/blogs/schumpeter/2013/11/gold-trade-thailand?fsrc=nlw%7Cnewe%7C11-25-2013%7C7065087%7C36856225%7C

Image Credit: http://www.howcashforgold.net/wp-content/uploads/2012/10/gold_photo.jpg


No comments:

Post a Comment