Monday, November 25, 2013

மதி தந்தருளிய விதி:அன்றொரு நாள்: நவம்பர் 26


அப்டேட்: 26 11 2013
  1. ‘...அரசு ஊழியர்களைப் பற்றிய உங்கள் விமரிசனங்கள் உண்மையே.  எங்களாலும் ஏற்கப் படக்கூடியதே! (கிட்டத்தட்ட அதே தணிக்கைத் துறை; ஆனால் பாதுகாப்பு அமைச்சகம்; ) எழுபதுகள் வரை நிதி அமைச்சகத்தோடு இருந்த இந்த பாதுகாப்புத்  தணிக்கைக் கணக்குத் துறையை  எப்போது நேரடியாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்தார்களோ அப்போதே ஊழல் ஆரம்பித்ததாய்ச் சொல்லிக் கொள்வார்கள்...’.
~அன்றே சொல்லியிருக்கவேண்டிய ஒரு விளக்கம். பாதுகாப்புத்துறையின் தணிக்கை பத்திரமாக ஆடிட்டர்ஜெனரல் பாதுகாப்பில் தான் இருக்கிறது. அதான் ஹெலிகாப்டர் விஷயம் ஆலாய் பறக்கிறது. 1989-91 காலகட்டத்தில் அந்தப்பிரிவுக்கு நான் தலைமை வகித்த போது, யாதொருவிதமான தலையீடு வந்ததில்லை. இத்தனைக்கும் போஃபோர்ஸ் அனல் பறந்து வந்த தணல் நீறு பூத்துக்கிடந்த காலகட்டம். கீதா சொல்வது வேறு ஏதோ சமாச்சாரம். ராணுவக்கணக்குத்துறை என்றால் கூட அது பிரிந்து பல்லாண்டுகள் ஆயின. 150 வருடம் முன்னால் தலையெடுத்தது Military Accountant General தான்.
  1. அரசியல், பொருளியல், பொது நிர்வாகம் என்பதை உரிய முறையில் கண்காணிக்க வேண்டும். அரசு ஊழியர்களில் பெரும்பாலோர் நாணயஸ்தர்கள் 1948 வரை; பிறகும் தான். படிப்படியாக அவர்களின் மதிப்புக்குறைய விஸ்தாராணமான நடுநிலை ஆய்வு வேண்டும்.
  2. நோபல் பற்றி ஒரு தொடரே ஆரம்பித்தேன். நசுங்கிப்போச்சு, ஈயச்சொம்பு மாதிரி.
இன்னம்பூரான்

அன்றொரு நாள்: நவம்பர் 26 மதி தந்தருளிய விதி
9 messages

Innamburan Innamburan 26 November 2011 16:47

அன்றொரு நாள்: நவம்பர் 26
மதி தந்தருளிய விதி
‘சாலையோரம் ஆலமரங்கள் நட்டேன், மனிதர்களுக்கும், பிராணிகளுக்கும் நிழல் தருவதற்கு;ஆங்காங்கே மாந்தோட்டங்கள்; எட்டெட்டு கோசங்களிடையே கிணறுகள் வெட்டினேன்; இளைப்பாறும் விடுதிகள் அமைத்தேன்; ஆங்காங்கே பிராணிகளுக்கும், மனிதர்களுக்கும் நீர்ச்சுனைகள் அமைத்தேன்; இவை எல்லாம் சின்ன விஷயங்கள். மற்ற அரசர்களும் செய்தவை தான். யான் செய்ததெல்லாம், நமது மக்கள் யாவரும் ‘தம்மம்’ உயர் வாழ்நெறியை கடைப்பிடிக்க வேண்டும்” என்ற இலக்கை நோக்கி.
~ அசோக சக்ரவர்த்தியின் கலிங்கா கல்வெட்டு. 
‘சட்டத்தின் முன் யாவரும் சமமே. பாரபக்ஷமில்லாத பாதுகாப்பு எல்லாருக்கும் உண்டு. அரசு இந்நிலையிலிருந்து பிறழலாகாது... அரசு,சமயம், இனம், சாதி,பாலினம், பிறந்த மண் ஆகியவற்றை வைத்து, வேற்றுமை பாராட்டக்கூடாது. கடை, கண்ணி, நீர் நிலைகள், பொது ராஸ்தா இவைகளில் இத்தகைய வேற்றுமை பாராட்டக்கூடாது. பெண்கள்/சிறார்கள்/ ஹரிஜனம் ஆகியோருக்கு சலுகைகள் இருக்கக்கூடும்.
~ பகுதி 14 & 15: இந்திய அரசியல் சாஸனம்.
அசோகர் உயிரினங்கள் யாவற்றையும் போற்றினார். இந்திய அரசியல் சாஸனம் கொஞ்சம் சறுக்கி, மனித இனத்தை மட்டும் போற்றுகிறது என்றாலும், அது சுதந்திர இந்தியாவுக்கு ஏற்புடைய  நுழைவாயில். 
‘பேச்சு உரிமை வந்தாச்சுன்னு
கீச்சு கீச்சுன்னு கூவுவோமே.’
என்று இன்று, தொடை தட்டி கொட்டி முழக்கி துட்டுலெ புழங்கும் அரசியலருக்கு, நமது அரசியல் சாஸனம் வந்த விதம் மறந்து போயிருக்கும். சான்றோர் சபை ஒன்று பல முறை கூடி, ஆய்வுகளும், ஒப்புமைகளும் பல செய்து, பல துறை வல்லுனர்கள் ஆக்கபூர்வமாக கருத்துக்களை பரிமாறிக்கொண்டு, கட்டுக்கோப்பான ஒற்றுமையுடன், தேசாபிமானத்தை அடித்தளமாக அமைத்துக்கொண்டு, மக்கள் நலத்தை இலக்காக நிறுவிக்கொண்டு, சமத்துவத்தை நாடி, ஜனநாயகத்தை போற்றி, புகழ் வாய்ந்த அரசியல் சாஸனம் ஒன்றை நமக்கு அருளிய தினம், நவம்பர் 26, 1949. 
அரசியல் சாஸனங்கள் வேத பாடம் மாதிரி. பிரிட்டீஷ் அரசியல் சாஸனம் ஶ்ருதி. எழுத்து மூலம் இல்லை. அமெரிக்காவின் அரசியல் சாஸனம் கீர்த்தி மிகுந்தது. அது ஒரு அமர காவியம். ஐரோப்பிய நாடுகளில் தேச வரலாறும், அரசியல் சாஸன வரலாறும், ரயில் தண்டவாளம் போல: அடுத்தடுத்தும், ஒரே பயணத்திலும். ஒவ்வொரு நாட்டின் அரசியல் சாஸனம் அந்த சமுதாயத்தின் பண்பை பிரதிபலிக்கும் என்று பொதுவாகச் சொல்லலாம். இருந்தும் போலிகள் நிறைந்திருக்கும் உலகமல்லவா! கொடுங்கோல் அரசுகளின் த்வஜஸ்தம்பத்தில் ஜனநாயக அரசியல் சாஸனம் கொடி கட்டி பறக்கும், ஸோவியத் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் போல. 
நமது அரசியல் சாஸனத்தின் வரலாறு, என்னுடைய கணிப்பில், தொடங்கியது 1909ல். பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் இந்தியாவை ஆளத்தொடங்கியது 1857ல். ஐம்பது வருடங்களிலேயே, தேசாபிமான புத்துணர்ச்சியை மதித்து இயங்கவேண்டியது, இன்றியமையாததாக ஆகி விட்டது. பாடம் புகுத்தியதில் ஆங்கிலேயரின் பங்கு உண்டு. மிண்டோ-மார்லி திட்டம் 1909ல் உள்ள முற்போக்கு நன்னெறிகளை மறக்கலாகாது. பின்னர் மாண்டேகு - செம்ஸ்ஃபோர்ட் திட்டம் 1919. அடுத்து இந்திய அரசியல் சட்டம் 1935. அதை முதுகெலும்பு போல் பாவித்துத் தான் நமது அரசியல் சாஸனம் வரையப்பட்டது.  இன்றைய அரசியல் பின்னணியில் வாசித்தால், மிண்டோ-மார்லி திட்டம் 1909ல் உள்ள முற்போக்கு நன்னெறிகள் தென்படவில்லையே என்ற கேள்வி எழலாம். வாஸ்தவம் தான். தனி மனிதன், சிறிய சமுதாயம், பெரிய சமுதாயம், அரசியல் ஆகியவற்றின் வேகம் ஒரே துரித கதி அல்ல. பாருங்களேன். 1950ல் ‘சட்டத்தின் முன் யாவரும் சமமே. பாரபக்ஷமில்லாத பாதுகாப்பு எல்லாருக்கும் உண்டு. அரசு இந்நிலையிலிருந்து பிறழலாகாது...’ என்று சட்டம் தீட்டி விட்டு, அறுபது வருடம் கழித்து இரட்டை டம்ளர்! கட்டப்பஞ்ச்சாயத்து! தேர்தலில் சாதீயம்! போலீஸ் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு! 
நமது அரசியல் சாஸனம் அமைத்த சான்றோர் சபை சுதந்திரம் வருமுன் நிறுவப்பட்ட இந்திய பார்லிமெண்ட் எனலாம், நேர் முறை தேர்தல் இல்லை என்றாலும். தொடக்கத்தில், பாகிஸ்தானும் இன்றைய பங்களா தேஷும் உள்ளடங்கியவை என்றாலும்.  அதனுடைய முதல் மீட்டிங் டிசம்பர் 9, 1946. 11 தடவை கூடி 165 நாட்கள் விவாதித்து, நவம்பர் 26, 1949 அன்று இறுதி கூட்டம் நடந்தது. ஜனவரி 26, 1929 அன்று தான், இருபது வருடங்களுக்கு முன்னால், பூர்ண ஸ்வராஜ்ய கோரிக்கை வைக்கப்பட்டது. அதனுடைய ஞாபகார்த்தமாக, இந்திய அரசியல் சாஸனத்தின் பிரகடன தினம் ஜனவரி 26, 1950. முதல் கூட்டத்தின் தலைர் சச்சிதானந்த சின்ஹா தலைமையில் பாபு ராஜேந்திர பிரசாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 17 உபகமிட்டிகள். சாஸனத்தை வரைந்து, உருக்கொடுத்து அமைக்கும் உப கமிட்டியின் தலைவர் பாபாசாஹேப் அம்பேத்கார். மெஜாரிட்டி கட்சியான காங்கிரஸை சார்ந்தவர் இல்லை. சொல்லப்போனால், அவர் எதிர்க்கட்சிக்காரர் எனலாம். அந்தக்காலத்தில் இந்த சின்ன விஷயங்கள் ஒரு பொருட்டல்ல. தேசாபிமானம், உண்மை உழைப்பு, திறன், பகிர்வு ஆகியவை தான் முக்யம்.  அதை கவனத்தில் கொள்ளாமல், பாபா சாஹேப் அம்பேத்கார் ஒருவர் மட்டுமே நம் அரசியல் சாஸனத்தின் ஆயனசிற்பி என்பவர்களும் உண்டு. 
அநேக பேர் அறியாத விஷயம். இந்த சான்றோர் சபையில் அங்கத்தினராக இல்லாத ஒரு மாமேதை தான் இந்திய அரசியல் சாஸனத்தின் சூத்ரதாரி. ராஜன் பாபு நவம்பர் 26, 1949 அன்று சொன்னார், ‘... ஊதியம் யாதும் பெற்றுக்கொள்ளாமல், தன்னார்வத்துடன் பணி புரிந்தார். இங்கேயே வாசம் எனலாம். தன்னுடைய அபார புலமை, அறிவாற்றல், நுண்ணறிவு மூலமாக சபைக்கு உதவியதோடு நிற்காமல், எல்லா அங்கத்தினர்களும், அறிவு கூர்மையுடன், முழுமையான ஆய்வுக்கு பிறகு இயங்குவதற்கு உதவியாக ஆதாரங்கள் கொடுத்து உதவினார்.‘  அவ்வாறு புகழப்பட்டவர், ஸர். பெனகல் நரசிங்க் ராவ் ஐ.சி.எஸ். சுருங்கச்சொல்லின், அவரில்லையேல் சாஸனமில்லை...'
சில ஊடகங்களில், மின் தமிழ் உள்பட, அரசு ஊழியர்களை சுய நினைவு இழந்தவர்கள் போல, திறனற்றவர்கள் போல, கண்ணியமிழந்தோர் போல சித்தரிப்பது ஃபேஷன் ஆகி விட்டது. பெரும்பாலும், அரசு ஊழியம் பற்றி அறியாதவர்கள் தான் இந்த உடுக்கடிக்கிறார்கள். நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கும் உளர். மனித சமுதாயத்தின் ஒரு பாகம் தான் அரசு ஊழியம். அங்கு தேர்ந்தெடுக்கும் முறை சரியாக இருந்தால், பிரச்னை குறைவு. எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை, பெனெகல் ராம ராவ், பெனகல் நரசிங்க் ராவ், வி.பி.மேனன், கிரிஜா சங்கர் பாஜ்பாய், பி.சிவராமன், ஹெச்.வி ஆர். ஐயங்கார், லோபோ பிரபு, எஸ்.கே.செட்டூர், பி.வி.ஆர். ராவ் போன்ற அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரையும் தங்கத்தட்டில் ஏந்தவேண்டும். ஏன்? இன்றைய காலகட்டத்தில் திரு.சகாயம் ஐ.ஏ.எஸ், திரு. ஆஸ்ரா கார்க் ஐ.பி.எஸ். நற்பணி செய்கிறார்களா? இல்லையா? கொஞ்சம் தெரிந்ததால் தான் சொல்கிறேன். 1950 களில் நேர் காணல் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஏ.எஸ். என்ற தணிக்கைத்துறையின் நடுத்தர நிலை ஊழியர்களில் பெரும்பாலோர் ரத்னங்களாக திகழ்ந்தனர். ஐ.ஏ.எஸ். தேர்வும் சிறந்த முறையில். நேர்காணல் செய்யும் பணியிலும் சில வருடங்கள் முன் வரை இருந்ததால், இதை சொல்ல துணிந்தேன். முதல் நிலை பயிற்சி மிக முக்கியம். ஐ.ஏ.எஸ். பயிற்சித்துறை முதல்வராக இருந்த பி.எஸ். அப்பு ஐ.ஏ.எஸ். முறைகேடான அரசியல் தலையீட்டினால் ராஜிநாமா செய்ய நேர்ந்தது. இருந்தும் ஒரு சம்சயம். அரசு ஊழியர்களை குறை சொல்லும் தமிழர்களின் கண்ணில் பட்ட  சமீபகால ஊழியர்களில் பலரை தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு தேர்வாலயம் இப்போது குற்றசாட்டுகளால் குளிப்பாட்டப்பட்டு, தலை விரிகோலமாக, நடுத்தெருவில் நிற்கிறது. ஊரே சிரிப்பாய் சிரிக்கிறது. மேலே சொல்ல வெட்கமாகுது. ஒரு சமயம், இந்த சிக்கலால், நல்லவர்களுக்கும் கெட்ட பேரோ! 
இன்னம்பூரான்
26 11 2011
Indian-Constitution.png1210.jpg

உசாத்துணை:

Geetha Sambasivam 26 November 2011 19:52

அதை கவனத்தில் கொள்ளாமல், பாபா சாஹேப் அம்பேத்கார் ஒருவர் மட்டுமே நம் அரசியல் சாஸனத்தின் ஆயனசிற்பி என்பவர்களும் உண்டு. //

உண்மையே.   அம்பேத்கரை மட்டுமே சொல்லுவது இப்போது வழக்கமாகி விட்டது.   அரசு ஊழியர்களைப் பற்றிய உங்கள் விமரிசனங்கள் உண்மையே.  எங்களாலும் ஏற்கப் படக்கூடியதே! (கிட்டத்தட்ட அதே தணிக்கைத் துறை; ஆனால் பாதுகாப்பு அமைச்சகம்; ) எழுபதுகள் வரை நிதி அமைச்சகத்தோடு இருந்த இந்த பாதுகாப்புத்  தணிக்கைக் கணக்குத் துறையை  எப்போது நேரடியாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்தார்களோ அப்போதே ஊழல் ஆரம்பித்ததாய்ச் சொல்லிக் கொள்வார்கள்.  இப்போது கேட்கவே வேண்டாம்.  நேரடியாகவே பார்க்கிறோம்.  அலுவலகத்தில் அலுவல்வேலைகள் நடைபெறும் அழகை!  ஏனெனில் தேர்வு சரியில்லை. இது குறித்து இன்னும்  சொல்ல ஆசை!  எனினும் வேண்டாம் எனக் கருதி நிறுத்திக்கொள்கிறேன்.   இதனால் நல்லவர்களுக்கும் கெட்ட பெயரே வந்து சேர்கிறது என்பதும் உண்மைதான்.  தமிழ்நாட்டுத் தேர்தல் கமிஷனராக இருந்த நரேஷ் குப்தா படாத பாடா! :(((((((  என்றாலும் அவர் மசியவில்லை.

2011/11/26 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 26
மதி தந்தருளிய விதி

இன்னம்பூரான்




Raja sankar 27 November 2011 01:29


அரசு ஊழியர்கள் ஏன் கிண்டல் அடிக்கப்படுகிறார்கள்? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அவர்கள் தங்களுடைய வசதிக்கு குறை ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக உரிமைகளை பெற சங்கம் வைத்துள்ளார்கள். அந்த சங்கம் எங்கேனும் அரசு ஊழியர்களின் கடமையை பேசியதுண்டா?

இதனாலே எல்லா இடங்களிலும் கிண்டல், கேலி, அவமானம் தொடர்கிறது.

ராஜசங்கர்

coral shree 27 November 2011 07:58

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
உண்மைதான்...... எப்போது பார்த்தாலும், உரிமைப் போராட்டம்தான். கடமை பற்றி எண்ணுவோர் வெகு சிலரே....


Geetha Sambasivam 27 November 2011 15:52


அரசு ஊழியர்கள் ஏன் கிண்டல் அடிக்கப்படுகிறார்கள்? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அவர்கள் தங்களுடைய வசதிக்கு குறை ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக உரிமைகளை பெற சங்கம் வைத்துள்ளார்கள். அந்த சங்கம் எங்கேனும் அரசு ஊழியர்களின் கடமையை பேசியதுண்டா?

இதனாலே எல்லா இடங்களிலும் கிண்டல், கேலி, அவமானம் தொடர்கிறது. //



தேர்வு முறையே காரணம்.  இதைப் பற்றி விபரமாய்ப் பேச முடியவில்லை.  பல தேர்வுகளிலும் தகுதியை விட சிபாரிசுக்கே முன்னுரிமை. இது வேலையில் சேர்ந்தப்புறம் ப்ரமோஷன்களிலும் காணமுடியும்.  தகுதி வாய்ந்தவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர். 


Innamburan Innamburan 27 November 2011 21:21
To: mintamil@googlegroups.com

அரசு ஊழியர்கள் ஏன் கிண்டல் அடிக்கப்படுகிறார்கள்? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அவர்கள் தங்களுடைய வசதிக்கு குறை ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக உரிமைகளை பெற சங்கம் வைத்துள்ளார்கள். அந்த சங்கம் எங்கேனும் அரசு ஊழியர்களின் கடமையை பேசியதுண்டா?


~ பொதுமக்களிடையே அரசு ஊழியர்களை பற்றி ஒரு கசப்புணர்ச்சி இருப்பதின் காரணங்கள் பல.
கடமையாற்றும் ஊழியர்களின் கறார் அணுகுமுறை தற்காலத்தில் விரும்பப்படுவது இல்லை. அரசியலர்கள் மூலம் சாதித்துக்கொள்ளலாம் என்றும் தெரியும். மாமூல் வாங்குபவனுக்கு மரியாதை இருக்காது.  சமுதாயத்தின் பல துறைகளில் -பொற்கொல்லர், கள்ளிறக்குவோர், ரயில் பிரயாணிகள், நுகர்வோர், வணிகர் வகையறா தன்னலம் காக்க சங்கங்கள் வைத்துள்ளனர். அவர்களுக்கும் வரிப்பணத்திலிருந்து மான்யம் போகிறது. அரசு ஊழியர்கள் மட்டும் விலக்கா? அது போகட்டும். 

காலங்காலமாக அரசு ஊதியம் மிகக்குறைவு; ஆளுமை, அதிகாரம் மிக அதிகம்; வேலை நிரந்தரம். மேலா நினைத்தால், இடமாற்றம். இந்த கலோனிய சூத்திரத்தை முறைகேடாக தலைகீழ் பாடம் ஆக்கியது அரசியலர்கள். அதற்கு துணை போனவர்கள், மக்கள். அரசு ஊழியர்கள் கடமையை பேசும் இடங்கள் பல உள்ளன. அவை பிரச்சாரம் செய்வதில்லை. முடிந்தால், சென்னை வரும்போது, திரு.ராஜசங்கரை அழைத்துச்சென்று காட்டுகிறேன்.

திருமதி. கீதா சொன்னமாதிரி, அரசு ஊழியம் இன்னல்களும், இடர்ப்பாடுகளும் நிறைந்தது. சொல்லவும் முடியாது; மெல்லவும் முடியாது. ஒரு உதாரணம். லஞ்சமிகு துறைகளில் சில மாநிலங்களில், மாநில அரசு பணியில் இருந்திருக்கிறேன். ஒரு மாநிலத்தில் கண்ணியத்துக்கு பெறுமை. மற்றொன்றில் சிறுமை. எனவே, விஷயம் தெரிந்தவர்கள் அரசு ஊழியர்களுக்கு வரிப்பணத்தில் ஊதியம் அளிப்பதை ஏதோ கொள்ளையடிப்பதாக நினைத்தால், வருத்தமாகத்தான் இருக்கும்.

ஊழியர் சங்கம் பற்றி சில வார்த்தைகள்: உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் கையாலாகாதவர்கள். ‘ப்ரமோஷன் மறுப்பு’, ‘பரிக்ஷை சமயத்தில் இடமாற்றம்’, ‘அன்றாட தலையீடு’, ‘அவமதிப்பது’ போன்ற சிண்டுகள், அரசியலர் கையில். அடிமட்ட/நடுத்தர ஊழியர் சங்கங்கள் ‘தங்களுடைய வசதிக்கு குறை ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக உரிமைகளை பெற’ நிழல் யுத்தங்கள் செய்வது உண்டு, வங்கி ஊழியர்களை போல, கள்ளிறக்குவோர் போல. சொல்லப்போனால், அந்த அணுகுமுறையுடன் நான் போரிட்ட காலங்கள் உண்டு. ஒரு சூக்ஷ்மம் என்னவென்றால், அவர்கள் அரசியலரை கைக்குள் போட்டுக்கொண்டிருப்பர்.

‘காலங்காலமாக அரசு ஊதியம் மிகக்குறைவு; ஆளுமை, அதிகாரம் மிக அதிகம்; வேலை நிரந்தரம். மேலா நினைத்தால், இடமாற்றம். இந்த கலோனிய சூத்திரத்தை முறைகேடாக தலைகீழ் பாடம் ஆக்கியது அரசியலர்கள்.’ என்பதை விளக்க வேண்டும். தற்காலம் அரசு ஊதியம் கணிசமாக ஏறியும், லஞ்சம் தென்படுகிறது. என் மாதிரி பத்தாம்பசலிகள் காலத்தில், எனக்கெல்லாம், மாதக்கடைசியில் டண்டெணக்கா!, ஆரம்பித்த தினம் முதல். 1991ல் பென்ஷன் பணம் சுண்டைக்காய். ஆனால், லஞ்சம் வாங்கினவர்களுக்கு அவமானம். மிகக்குறைவு. ஆளுமை/ அதிகாரம் இருக்கத்தான் செய்யும். ஒரு ரெவென்யூ இன்ஸ்பெக்டர் படாத பாடு படுத்த முடியும். அதற்கு கட்டுப்பாடு, மேற்பார்வை. அது காணாமல் போய்விட்டது. 

‘மதி தந்துருளிய விதி’ கட்டுரையில் நான் சொன்ன விஷயம் வேறு. சென்னை தேர்வாலயம் பற்றிய பிரச்னையை, தனித்து, தியரட்டிக்கலாக, கவனிப்போம். பல வருடங்களாக, அரசு அதிகாரிகள் முறை கேடான வழிகளில், பணம் கொடுத்தோ, மற்ற நீசவழிகளிலோ வேலை வாங்கி இருந்தால், அவர்களிடம் கடமையை எப்படி எதிர்பார்க்கமுடியும்? துணை வேந்தர் ஒருவர் அப்பதவிக்கான ஏலத்தொகையை சொன்னார். பஸ் ஓட்டுனரும், ஆசிரியரும், டாணாக்காரரும், காசு கொடுத்து வேலை வாங்கியதாக சொல்கிறார்கள்.  
இதற்கெல்லாம் துணை போன பொது மக்கள் அரசு ஊழியர்களை மட்டும் காய்ச்சுவதை விஷயம் தெரிந்தவர்களே வழி மொழிந்தால், நம் நாட்டுக்கு விமோசனம் இல்லை. கிணற்றில் நச்சு கலந்து விட்டு, ஏதோ ஒரு லோட்டா தண்ணி தான் நச்சு என்றால், பரலோகயாத்திரை தான்.
கேலி சித்திரத்துக்கு நன்றி. காப்புரிமை அதில் சுட்டியபடி.


இன்னம்பூரான்

28 11 2011 


2011/11/27 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
அரசு ஊழியர்கள் ஏன் கிண்டல் அடிக்கப்படுகிறார்கள்? lfon445l.jpg

Geetha Sambasivam 27 November 2011 21:40


எனக்கெல்லாம், மாதக்கடைசியில் டண்டெணக்கா!, //

உண்மையே.  சொல்லப் போனால் மாதம் நடுவிலேயே திண்டாட்டம் ஆரம்பிக்கும்.  ஜனவரி, பெப்ரவரி, மார்ச், மூன்று மாதங்கள் சம்பளம் அப்படியே வருமான வரிக்குப் போகும்.  முன் கூட்டியே திட்டமிட்டு மாசா மாசம் கட்டக் கூடாதா என்பார்கள்.  சொல்வது சுலபம்.  மாசாமாசம் வரிக்குக் கட்டும் பணம் இருந்தால் பல செலவுகளைச் சமாளிக்கலாம்னு அப்போ தோணும்.  இந்த மூன்று மாதங்களுக்கும் குடித்தனம் நடத்த பிராவிடென்ட் ஃபன்ட் தான் கை கொடுக்கும். ஆறு மாசத்துக்கு ஒருதரம் பிராவிடென்ட் ஃபன்டிலே ஸ்பெஷல் சாங்க்‌ஷன்ன் வாங்கிப் பணம் எடுத்துத் திடீர்ச் செலவுகளைச் சமாளித்திருக்கிறோம்.  


----2011/11/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>




‘காலங்காலமாக அரசு ஊதியம் மிகக்குறைவு; ஆளுமை, அதிகாரம் மிக அதிகம்; வேலை நிரந்தரம். மேலா நினைத்தால், இடமாற்றம். இந்த கலோனிய சூத்திரத்தை முறைகேடாக தலைகீழ் பாடம் ஆக்கியது அரசியலர்கள்.’ என்பதை விளக்க வேண்டும். தற்காலம் அரசு ஊதியம் கணிசமாக ஏறியும், லஞ்சம் தென்படுகிறது. என் மாதிரி பத்தாம்பசலிகள் காலத்தில், எனக்கெல்லாம், மாதக்கடைசியில் டண்டெணக்கா!, ஆரம்பித்த தினம் முதல். 1991ல் பென்ஷன் பணம் சுண்டைக்காய். ஆனால், லஞ்சம் வாங்கினவர்களுக்கு அவமானம். மிகக்குறைவு. ஆளுமை/ அதிகாரம் இருக்கத்தான் செய்யும். ஒரு ரெவென்யூ இன்ஸ்பெக்டர் படாத பாடு படுத்த முடியும். அதற்கு கட்டுப்பாடு, மேற்பார்வை. அது காணாமல் போய்விட்டது. 


இன்னம்பூரான்
28 11 2011 



Raja sankar 30 November 2011 07:49


கண்டிப்பாக ஐயா. அரசு ஊழியர்களுக்கு சங்கம் வைக்க உரிமை உண்டு. அதே நேரம் மற்றவர்களை போல் சங்க உறுப்பினர்கள் மேல் நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா? நகை செய்வோர் சங்கத்தில் போலி நகை பற்றி புகார் கொடுத்தால் உங்களுக்கு பணம் திருப்பி கிடைப்பது உறுதி. புகார் கொடுக்க போகிறோம் என்று சொன்னாலே உடனே பணம் வந்துவிடும். நகை செய்வோர் சங்கமே மத்தியஸ்த எடை போட்டு தருவார்கள். அதிலே பிரச்சினை வந்தால் உடனடியாக கேள்வி கேட்கலாம். சிறு வியாபரிகள் சங்கமே அவர்களை குண்டர்கள், அரசியல் கட்சி வசூல்களில் இருந்து பாதுகாக்கிறது. இப்படி நிறைய சொல்லமுடியும். உங்களுக்கும் தெரியும் என நினைக்கிறேன்.

ஆனால் அரசு ஊழியர்களிடம்? இந்த பிரச்சினை தான் கசப்புணர்வை உருவாக்குகிறது. உரிமை மட்டும் ஓக்கே கடமை கிடையாது என்றால் யாருக்கு தான் கோபம் வராது.

//இதற்கெல்லாம் துணை போன பொது மக்கள் அரசு ஊழியர்களை மட்டும் காய்ச்சுவதை விஷயம் தெரிந்தவர்களே வழி மொழிந்தால், நம் நாட்டுக்கு விமோசனம் இல்லை. கிணற்றில் நச்சு கலந்து விட்டு, ஏதோ ஒரு லோட்டா தண்ணி தான் நச்சு என்றால், பரலோகயாத்திரை தான்.//

பொது மக்களுக்கு வேறு வழி இல்லை. ஒன்று லஞ்சம் கொடுத்து உசிரை காப்பாற்றிக்கொள்வது இல்லையேல் லஞ்சம் கொடுக்காமல் இருந்து பட்டினியால் பரலோகம் போவது. இதிலே எது சரி என பொது மக்கள் முடிவு எடுப்பார்கள்????
அரசு ஊழியர்களிடம் இருக்கும் லஞ்சத்தை கண்டு சக அரசு ஊழியர்களுக்கே கோபம் வராத போது எப்படி மற்றவர்கள் முன்னெடுப்பார்கள் என எதிர்ப்பார்ப்பது?

எல்லோரும் திருந்த வேண்டும் தான். அதை அரசு ஊழியர்கள் சங்கங்கள் ஆரம்பித்து வைக்கலாம் என்று மட்டும் சொல்கிறேன்.

ராஜசங்கர்

Innamburan Innamburan 30 November 2011 08:02
To: mintamil@googlegroups.com
எல்லோரும் திருந்த வேண்டும் தான். அதை அரசு ஊழியர்கள் சங்கங்கள் ஆரம்பித்து வைக்கலாம் என்று மட்டும் சொல்கிறேன்.
~  நானும் அதை வழி மொழிகிறேன்.  சில இடங்களில் செய்தும் வருகிறோம். பொது மக்களுக்கு விஇப்புணர்ச்சி ஏற்படுத்துவதும் நலன் பயக்கும். ஒரு பெரிய சமுதாய பிரச்னையை, யாவரும் இணைந்து தான், தீர்க்கவேண்டும். இன்று நாம் மிகவும் அச்சப்படுவது: அரசியலர் ஆளுமை + குற்றம் புரிவோர் சங்கம்.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்



No comments:

Post a Comment