Thursday, March 17, 2016

இன்னம்பூரான் பக்கம்: IV:2 சற்றே இளைப்பாற... [2]

இன்னம்பூரான் பக்கம்: IV:2
சற்றே இளைப்பாற... [2]


‘மொழிப்பிரச்னைகளில் ஒன்று: கலவாமை. மொழி தீர்வுகளில் ஒன்று: கலவை.’ என்று யாம் மொழிந்ததற்கு ஆதரவு கிட்டியதை ஒட்டி மனமகிழ்ந்தோம். சில சொற்களில் மொழி குழைவதைக் கண்கூடாக காணலாம். நேற்றைய நாளிதழ் ஒன்றில் கொட்டைக் கொட்டையான முதல்பக்க செய்தி அரங்கத்தில், ‘பம்மினாரே’ என்ற சொல் தலைமை தாங்கியது. சொல்லாக்கம் செவிக்கு ‘பம்மி, பம்மி’, ‘பம்ம/பம்ம/ பமரினா/பமரினா/பம்ம/பம்ம’ என்றெல்லாம் பாலபருவத்து தாளவாத்திய கச்சேரி நிகழ்த்தினாலும், இடம்,பொருள், ஏவல் புரிய நேரமாச்சுது, ஐயா!

தேர்தல் நெருங்க, நெருங்க, தேர்தல் மேலாண்மை செல்வபயணங்களை கழுகுப்பார்வையில் கண்ணோட்டம் செய்வதாலும், சித்திரப்பாவைகளை திரைமறைவில் கம்மலில்லா பொம்மலாட்டம் ஆடவைத்ததாலும், மேலாவிலிருப்போர் காலணா காசு செலவு செய்ய சுணங்குவதாலும், இலவசமும் கலசங்களை நிரப்புவதாலும், ருசி கண்ட வாக்காள பெருமக்கள், ‘குக்கராசை, வெள்ளி சிலம்பராசை, நோட்டாசை, (கரன்சி நோட்டாசை), துட்டாசை ஆகப்பட்ட ஆனானப்பட்ட ஆசைகளை உரமிட்டு வளர்த்ததாலும், உள்ளூர் அரசியல் தலைவர்கள் ஊரை விட்டு ஓடி ஒளிந்து கொண்டார்களாம். அதை அவ்விதழ் ‘பம்மினார்கள்’ என்றது.
அகராதி சொல்லும் பொருள்: பம்முவது: மேகம்மூட்டம்போடுதல்; செறிதல்; மறைதல்; மூடுதல்; ஒலித்தல்; நூலோட்டுதல்; பதுங்குதல்.

1842 ம் வருட இலங்கை தமிழகராதி: செம்முதல், பொருத்தி கட்டிசை,மந்தாரம், மந்திப்பு, மட்டிசை, மூடுதல் என்ற வகையில் பொருள் கூறுகிறது.

ஆகமொத்தம், காசு பரிவர்த்தனை குறையுமாம்!

குறையட்டுமே.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

களைப்பாறுவுமே, ஐயகோ!
சென்னை 3500
திருநெல்வேலி 1980
மதுரை 1300
கன்னியாகுமரி 748
கோவை 815
சேலம் 700
காஞ்சிபுரம் 416
விழுப்புரம் 475
விருதுநகர் 655
தூத்துக்குடி 605
தொம்தொம் 17,350




No comments:

Post a Comment