Saturday, April 19, 2014

அப்டியா?

அப்டியா?


லஞ்ச லாவண்யத்தை பற்றி, பிரதமர் மன்மோஹன் சிங் அவர்களின் நீண்ட நாள் அணுகுமுறை:
தான் பரிசுத்தமாக இருக்கவேண்டும், தன்னுடைய குடும்பம் தன்னுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்து ஆதாயம் நாடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்த பிரதமர், தன்னுடைய சகபாடிகளின்/ ஊழியர்களின் திருவிளையாடல்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்ற கொள்கையை பின்பற்றினார்...அவர்களின் நியமனத்தில் இவருக்கு முழு அதிகாரமில்லை என்பதும் ஒரு காரணம்...அந்த அந்த கட்சித்தலைவர்களுக்குத் தான் முறைகேடாக நடப்பவர்களை சிக்ஷிக்கும் பொறுப்பு என்பது அவரது நிலைப்பாடு. விளைவு என்ன? அமைச்சர்களின் இம்சைகளை அவர் கண்டு கொள்ளவில்லை. தன் மனசாக்ஷிக்கு விரோதம் இல்லாமல் நடந்த அவர், அவரவர் மனசாக்ஷிக்கு அவரவர் பதில் சொல்லட்டும் என்று தான் இருந்தார். மாஜி அமைச்சர் ஆ.ராஜா சிறையில் தள்ளப்பட்டதின் பின்னணி இவ்வாறு இருக்கலாம்: தான் சம்பந்தப்பட்டவரை கறார், மற்றவர்கள் சம்பந்தப்பட்டவை ‘போனாம் போகட்டும் போடா’ போல அணுகுமுறை... அதனால், அவருடைய கீர்த்தியும், அரசின் கீர்த்தியும் அதலபாதாளத்தில் வீழ்ந்தன...’
~ The Accidental Prime Minister.. என்ற நூலின் 84வது பக்கத்தில்: எளிய மொழியாக்கம்.
சித்திரத்துக்கு நன்றி: envijay.blogspot.com

No comments:

Post a Comment