Tuesday, November 19, 2013

மானஸ சஞ்சரரே…அன்றொரு நாள்: நவம்பர் 19


அப்டேட்: 20 11 2013
சாந்தி நிலவ வேண்டும்: நோபல் பரிசு: சான்றோர்கள் என்று தொடங்கிய இந்த இடுகை எல்லாருடைய தலைகளையும் குடைந்து, திசை மாறி/திரும்பி யாத்ரீகம் செய்ததை இரு வருடங்களுக்கு  பிறகு படித்தபோது சுவை கூடியது. ஓய்! நான் இடாக்கூடர் அரசியலில் தலையிடவில்ல்லைங்காணும்! முசிரியின் குடுமி நம்ம கைலெ சிக்கித்துப்பாருங்கோ!
மானஸ சஞ்சரரே…
இன்னம்பூரான்
அன்றொரு நாள்: நவம்பர் 19:பொன்மொழி இணைப்பில்.
33 messages

Innamburan Innamburan 20 November 2011 17:38


அன்றொரு நாள்: நவம்பர் 20
பொன்மொழி இணைப்பில்.

“சாந்தி நிலவவேண்டும் என்று வாழ்த்துக்கூறுவது எமது மரபு. எமது உணர்ச்சிகளையும், அபிலாஷைகளையும் அது பிரதிபலிக்கிறது. இது எமது மனோவாக்கு.”
~நோபல் பரிசு விழாவில் எகிப்திய அதிபர் அன்வர்-எல்-சாதத்: 1978
“அதிபர் அன்வர்-எல்-சாதத் அவர்கள் ஒரு வீரனாக போருக்குத் தலைமை தாங்கினார்; எனினும், அசாத்திய தைரியத்துடன் அமைதி நாடினார். ஜன்மவைரிகளான எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமைதி நிலவ வேண்டி, முதலடி எடுத்து வைத்து, உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார்., அவர் இன்று நம்மிடையில் இல்லையெனினும், அவருடைய மனிதநேயமும், பொறுப்புணர்ச்சியும் நமக்கு மார்க்கபந்துக்கள். மென்மையான போக்கு உடைய மூதறிஞர் அன்வர்-எல்-சாதத் அவர்களை என்றுமே ஒரு கதாநாயகனாக அமெரிக்க மக்கள் போற்றுவர்.”
~அமெரிக்க அதிபரின் சுதந்திர மெடல் விழா:26 03 1984: விருது மொழி: 
மறைந்த தந்தையின் சார்பில் பெற்றுக்கொண்டது: கமால் எல்-சாதத். 

எனக்கு பிடித்த இஸ்லாமிய சமயம் சார்ந்த சொல், ‘ரஹம்’; பொருள்: தனிப்பெருங்கருணை. மனித இனம் ஓரினமே. அன்யோன்யத்திற்கும், மனித நேயத்திற்கும் ‘ரஹம்’ தான் அடித்தளம். அதை புரிந்து கொள்ளாமல் ‘பத்து நாள்’ தாயாதிகள் பத்துத் தலைமுறைகளுக்கு பகைமை பாராட்டுவர். துவாரகையில் யாதவர்கள் உலக்கைத்தாக்குதல் நடத்தி தங்கள் குலத்தையே அழித்துக்கொண்டமாதிரி, தம்மையே மாய்த்துக்கொள்ளுவர். என்றோ ஒரு நாள் விவேகம் தலையெடுத்து விமோசன காண்டம் தொடங்கினால், அண்ணன் தம்பியென கட்டி மகிழ்வர். அதுவும் காலாவதியானால், வீராவேசம், பரவசம், உணர்ச்சி பிரவாகம், போர்க்களம், வெட்டு, குத்து, குண்டு வெடிப்பு. ‘இது தாண்டா உலகம்’ என்று அரட்டையடிப்பவர்களும் உண்டு. எதற்கும் இதையும் பாருங்கள். நாடு கடந்த தேசாபிமானம் யூதர்களுக்கு உண்டு;ஏனெனில் அவர்களுக்கு நாடென்று ஒன்றுமில்லையே! வல்லரசுகளின் உபய/ உபாயமாக இஸ்ரேல் நாடு நிறுவப்பட்டது என்றும், அதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் பாலஸ்தீனிய இஸ்லாமியர் என்றும், அதன் பொருட்டு இஸ்லாமிய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் ஏழாம் பொருத்தம் என்று சொல்வது மிகையன்று. இஸ்ரேலியர்களின் தேசாபிமானத்தை உடும்புப்பிடி எனலாம். இந்த பின்னணியில்...

காசி மாநகரம் போல, எகிப்திய தலை நகரம் கெய்ரோவும் பழைய பெருமை நிறைந்த, தென்மதுரையை போல ராப்பகலும் கூட்டம் நெருக்கும் நகரம், நவம்பர் 21,1977 அன்று இரவு தத்தளித்துக்கொண்டிருந்தது; அப்டியொரு ஜே ஜே கூட்டம். ஆயிரக்கணக்கான மக்கள், ஏதோ ஒரு வேலன் வெறியாட்டம் நடந்தது போலதொரு லாஹிரியில் மயங்கி, ‘சதத்~அமைதி நாயகனே! வாழ்க நீ எம்மான்!’ என்றெல்லாம் பாடி, 20 11 1977 அன்று இஸ்ரேல் சென்று, அமைதி நாடி, வாகை சூடி திரும்பிய அதிபரை அமர்க்களமாக வரவேற்றனர் என்று ந்யூ யார்க் டைம்ஸ் சொல்கிறது. நடை நடையாக நடந்து, ‘மதியாதார் தலை வாசல் மிதியவேண்டாம்’ என்ற அறிவுரையை, பொது நலம் கருதி, தள்ளி வைத்து, ராஜாஜி மு.கருணாநிதியின் வீட்டுக்கு வந்து ‘மதுவும், கள்ளும், சாராயமும், தேறலும் வேண்டாமப்பா’ என்று கெஞ்சியது நினைவில் வந்தது. சான்றோர்கள் தன்னலமும் கருதமாட்டார்கள்; சுயமரியாதையை பொது நலனுக்கு பலியிடுவார்கள். அம்மாதிரி: கேளும் பிள்ளாய்!

‘கத்தியை சுழட்டி கண்ட சுகம் என்ன? என்ன?
புத்தியை தீட்டி பகைவனுக்கு அருள்வோம் அப்பனே!
சத்தம் போடாமல் சமாதானம் பேசுவுமே என்று,
பத்திரமாகவே இஸ்ரேலுக்கு போனாரே, ஐய்யன் சாதத்.

‘வாங்க! அண்ணாச்சி! அப்டீனார் தம்பித்துரை அவுகளும்,
அங்கிட்டு  பிரதமர் மெனெச்சம் பெகின் ஐயாவை சொல்றேனுங்க.
சங்கதியெல்லாம் பேசிக்கிட்டாஹ, ஆனந்தமாகவே!
பொங்கப்பானையும் மங்களம் பாடியதே.

நல்லது நடக்கும் என்றால் நாலு பேருக்கும் சம்மதம். தன்னுடைய நோபல் சொற்பொழிவில் அதிபர் சாதத் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அவர்களுக்கு நன்றி கூறியது சாலத்தகும். அன்னாரின் நல்லெண்ண யாத்ரீகம் பயன் அளித்தது. ஐ.நா.வின் தீர்மானங்கள் 242ம் 338ம் வழி வகுத்தன. மார்ச் 26, 1979 அன்று இரு நாடுகளும் ஒரு அமைதி உடன்பாட்டில் கையொப்பமிட்டன. அண்ணனுக்கும், தம்பிக்கும் 1978ம் வருட நோபல் பரிசு கிடைத்தது. அந்த விழாவில் எகிப்திய அதிபர் சாதத் அவர்களின் அருமையான சொற்பொழிவின் ஈற்றடி:

‘...யாவரும் என்னுடைய பிரார்த்தனையில் கலந்து கொள்ளுங்கள். உலகெங்கும் சாந்தி நிலவட்டும். நியாயமும், தர்மமும், மனித உரிமையும் தலை நிமிர்ந்து பீடு நடை போடட்டும். மனித இனம், ஆங்காங்கே, தன்னுடைய வாழ்வியலை வகுத்துக்கொள்ளட்டும். அவரவருடைய வருங்காலத்தை நிர்ணயித்துக்கொள்ளட்டும். உலகின் சுபிக்ஷம் செழிக்கட்டும்.’

பாவி மனுஷா! இத்தனை நல்லவனாக இருப்பாயோடா?
சாவி கொடுத்த பொம்மை மாதிரி அண்டை அரேபிய விரோதமடா!
ஆவி பறித்த சண்டாளர்கள், சுட்டுத்தள்ளினார்களடா.
கேவி, கேவி அழுதது எகிப்திய பிரஜைகளடா.’
இன்னம்பூரான்
20 11 2011
பின் குறிப்பு: இது 20 11 1979 தின நிகழ்வை பற்றி மட்டும். தலைமாந்தர்களின் வரலாறு அன்று. பக்கம் பக்கமாக எழுதலாம். தகும். ஒரு  நண்பர் கேட்டார், ‘யாருக்காக இதையெல்லாம் எழுதுகிறீர்கள்?’ என்று. பாயிண்ட் மேட். எனக்கு தெரியவில்லை. ஒரு சமயம் எனக்காகவே எழுதுகிறேனோ என்றும் தோன்றுகிறது. ஒரு சமயம் ‘புதியது தருவோம்’ என்ற அவா என்றும் தோன்றுகிறது. Que sera sera. 

993_001.jpg
... after '1979 Peace Treaty' with Israel signed by President Anwar Sadat.
















Sadat.pages
37K

Geetha Sambasivam 23 November 2011 22:15

‘மதியாதார் தலை வாசல் மிதியவேண்டாம்’ என்ற அறிவுரையை, பொது நலம் கருதி, தள்ளி வைத்து, ராஜாஜி மு.கருணாநிதியின் வீட்டுக்கு வந்து ‘மதுவும், கள்ளும், சாராயமும், தேறலும் வேண்டாமப்பா’ என்று கெஞ்சியது நினைவில் வந்தது. சான்றோர்கள் தன்னலமும் கருதமாட்டார்கள்; சுயமரியாதையை பொது நலனுக்கு பலியிடுவார்கள்//
நடு நடுவே இம்மாதிரியான மசாலாக்களைத் தூவுவது மெருகு ஏற்றுகிறது.  யாருக்காக எழுதறீங்கனு யார் கேட்டாங்களோ தெரியாது; என் மாதிரியான நிரக்ஷரகுக்ஷிக்கள் ஓரளவாவது பலனடைவோம்.
2011/11/20 Innamburan Innamburan <innamburan@gmail.com>


பின் குறிப்பு: இது 20 11 1979 தின நிகழ்வை பற்றி மட்டும். தலைமாந்தர்களின் வரலாறு அன்று. பக்கம் பக்கமாக எழுதலாம். தகும். ஒரு  நண்பர் கேட்டார், ‘யாருக்காக இதையெல்லாம் எழுதுகிறீர்கள்?’ என்று. பாயிண்ட் மேட். எனக்கு தெரியவில்லை. ஒரு சமயம் எனக்காகவே எழுதுகிறேனோ என்றும் தோன்றுகிறது. ஒரு சமயம் ‘புதியது தருவோம்’ என்ற அவா என்றும் தோன்றுகிறது. Que sera sera. 



Innamburan Innamburan 23 November 2011 22:27

நன்றி, கீதா. என் மீது யாருக்கு ஆளுமை தற்காலம் என்றால், அது, 'அன்றொரு நாள்'. அது எனக்கு டிஸ்கவரி ராஜபாட்டையாக அமைந்து விட்டது. அப்றம் ஒரு சீக்ரெட். தினம் உங்கள் கருத்தை எதிர்நோக்கிய நான், ராஜம், சீதாலக்ஷ்மி, ஸுபாஷிணி கருத்துக்களையும் நாட துவங்கிவிட்டேன். நானொரு வரலாற்று பைத்தியம்.


Geetha Sambasivam 23 November 2011 22:35

அனைவரும் படிக்கிறார்கள் ஐயா.  அவங்கல்லாம் கொஞ்சம் பிசி என்பதால் பின்னூட்டம் இட முடிந்திருக்காது.  இப்போது சுபாஷிணியும், சீதாம்மாவும், ராஜம் அம்மாவும் தினம் பின்னூட்டம் இட ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியாவும் இருக்கிறது.  பல்நோக்குப் பார்வையில் படிக்கவும் முடிகிறது. 


Innamburan Innamburan 23 November 2011 22:46

I wish to enhance the contents from others' contribution, as I am one of the many.
Thanks & Regards,
innamburan



2011/11/23 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>

நிரக்ஷரகுக்ஷிக்கள்  எபப்டி இருப்பார்கள் ??? 
சுபா

Innamburan Innamburan 25 November 2011 21:11

திருமதி.கீதா சாம்பசிவம் ஒரு சூப்பரக்ஷரகுக்ஷிணி, அபார நளபாகினி, அருமருந்து பின்னூட்டினி.  இது நிற்க.

நிரக்ஷரகுக்ஷி ஆண்பால். படிக்காத மேதை. எழுத்தறியா கழுத்தறுப்பு கனவான். தனித்தமிழில் தற்குறி. சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்.


Geetha Sambasivam 25 November 2011 21:18


நன்றி ஐயா,  பல சிறப்புப் பெயர்களைத் தாங்கி வந்திருக்கும் இந்த மடலுக்குப் புத்தம்புதிய மடிக்கணினியில் இருந்து, முதல்முறையாகப் பதிலளிக்கிறேன்.  பையர் சொந்தமாய் எனக்கே எனக்கென வாங்கித்தந்திருக்கிறார்.  தாங்க்ஸ் கிவிங்  நாளுக்கான பரிசு.

Innamburan Innamburan 25 November 2011 21:51

அடி சக்கை! உங்களுக்கு வாழ்த்துக்கள், பையருக்கு வாழ்த்துக்கள். கணினி (பெண்பால்)க்கு வாழ்த்துக்கள். போய்ட்டுப்போறதுன்னு சாம்பசிவத்துக்கும் வாழ்த்துக்கள். 
இன்னம்பூரான்
Innamburan Innamburan 25 November 2011 21:54


 
[Quoted text hidden]


Geetha Sambasivam 25 November 2011 23:33


நன்றி.
[Quoted text hidden]

Hari Krishnan 26 November 2011 02:05




2011/11/26 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நிரக்ஷரகுக்ஷி ஆண்பால். படிக்காத மேதை. எழுத்தறியா கழுத்தறுப்பு கனவான். தனித்தமிழில் தற்குறி. சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்.
இன்னம்பூரான்

Manager, Director என்பனபோல் பாலில்லாப் பெயர்ச்சொல்.  இதன் நேரடிப் பொருள் வேடிக்கையானது.  நிர் அக்ஷர குக்ஷி.  குக்ஷி என்றால் வயிறு.  வயித்துல எழுத்தில்ல. தொப்பைல ஏன் ஒரு எழுத்தையும் காணும்?  ஏன்னா இது எந்த எழுத்தையும் இதுவரைக்கும் தின்னு தொலைக்கல. அதான் குக்ஷி நிர் அக்ஷரமா இருக்கு.  எழுத்தையே இன்னமும் கற்காதவன்.  (எழுத்தைக் கற்றால்தானே படிக்கிற கஷ்டம்?)  கல்வியோ கேள்வியோ அற்ற வயிறன்.  என் ஸ்டைல்ல மொழிபெயர்த்தால் நிரக்ஷரகுக்ஷி=இடாகுடர்.  

(டிஸ்கி: ‘நீ டாக்டரா‘ என்று அடிக்கடி கேள்விகேட்கும் கனவானுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், ‘இந்தத் துறையில் போதுமான பயிற்சி இருக்கிறது என்ற தகுதியே போதுமானது’ என்று சிலமுறை நான் சொல்வது இங்குள்ள டாக்டர் பெருமக்களுக்கு வருத்தத்தை அளிப்பதாக அறிந்தேன்.  நான், அளிப்பது தன்னிலை விளக்கம்.  அது மெய்நிலை டாக்டர்களை பரிகசிப்பதாகக் கொள்ளத் தக்கதன்று.  அந்த நோக்கத்திலும் செய்யப்படுவதன்று.  எல்லா டாக்டர் பட்டம் பெற்றவர்களையும் மதிக்கிறேன்.  பெறாதவர்களையும் மதிக்கிறேன். Kindly understand me and my predicament and kindly do not distort and brush me with another shade)
--
அன்புடன்,
ஹரிகி.



rajam 26 November 2011 02:19


நான் "நிரக்ஷர குஷி" ஆக இருக்க விரும்புகிறேன்! அப்படிப்பட்ட நிலையில் எனக்கு-னு எதாவது ஒரு பட்டம் குடுங்கோ, ஹரீ! :-) :-) :-) 


rajam 26 November 2011 02:23


ம்ம்ம் ... கீதா பையர் வீட்டிலெ எதோ திட்டம் நடந்திருக்கு! மாமியார் கைலெ கணினியெக் கொடுத்தாச்சுன்னா ... மத்தவங்களுக்கு கொஞ்சம் தனிமை கிடைக்குமில்லெ! :-) :-) -)
எதுன்னாலும், நல்லதே நடந்திருக்கு! மகிழ்ச்சி! :-) :-) :-)



Hari Krishnan 26 November 2011 02:31




2011/11/26 rajam <rajam@earthlink.net>
நான் "நிரக்ஷர குஷி" ஆக இருக்க விரும்புகிறேன்! அப்படிப்பட்ட நிலையில் எனக்கு-னு எதாவது ஒரு பட்டம் குடுங்கோ, ஹரீ! :-) :-) :-) 

ஐ!  ஆசைப்பட்டாலும் கிடைக்காதாக்கும்.  நீங்க ஸர்வக்ஷர குக்ஷி; ஸாதக பக்ஷி; ஸரஸ்வதி என்னை ரக்ஷி. :D

[Quoted text hidden]

Nagarajan Vadivel 26 November 2011 02:50


//Kindly understand me and my predicament and kindly do not distort and brush me with another shade)//
இடாக்குதர் இட்டகுடர் டாக்டர், ஹானரிஸ் காசா டாக்டர், நிழல் டாக்டர், டாக்டர் ஆக விரும்பாதோர், டாக்டர் ஆக வாய்ப்பில்லாதோர், டாக்டருக்கு ஆசைப்பட்டு அது நிறைவேராமல் போனவர் என சகல் (அறிவு)ஜீவ ராசிகளுக்கும் ஆதரவு தரும் அரசியல் கட்சி நடத்தும் தலைவியே,
ஒங்களைத் தப்பாச் சொன்னா தப்பிலையா

அருள் கூர்ந்து இன்னம் பூரனார் அரசியலிக் கொஞ்சம் கவனியுங்கள்

நிரக்ஷரகுக்ஷி Manager, Director என்பனபோல் பாலில்லாப் பெயர்ச்சொல் உங்கள் கட்சி
நிரக்ஷரகுக்ஷி ஆண்பால்
கணினி பெண்பால்
நிரக்ஷரகுக்ஷிக்குப் பொருந்துமா என்று நிங்கள் சொல்லவேண்டும்
Electronic chips cannot fill empty bellies
                                             - by Dr.Lalitha Ramdoss, Chair, International Adult Education Association
Hungry ... cannot understand Bhagavat Gita
                                              - byMahatma Gandhi
வயிற்றுக்குச்  சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் (முதலில்) பின்பு பயிறுப் பல கல்வி கற்றுப் பாரில் (டாஸ்மாக் அல்ல) உயர்த்திடவேண்டும்

//படிக்காத மேதை. எழுத்தறியா கழுத்தறுப்பு கனவான். தனித்தமிழில் தற்குறி. சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்.//
தமிழகத்தில் வாழும் எண்னற்ற படிக்க எழுத வாசிக்கத் தெரியாதவர்களும் படிக்க எழுத வாசிக்கத் தெரியாதவர்களும் ஒன்றாக இணயும் இடம் நிரக்ஷரகுக்ஷி
பிறந்த எல்லாத் தமிழர்களும் நிரக்ஷரகுக்ஷி
நாகராசன்

Geetha Sambasivam 26 November 2011 02:53

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நீங்க வேறே அம்மா; :)))  அப்படி நடக்கட்டும்; காத்திருக்கோம்.  ஆளுக்கு ஒரு கணினியை வைச்சுட்டு உட்காரத் தான் இந்த யோசனையோனு எனக்கு சந்தேகம்.  

Geetha Sambasivam 26 November 2011 02:53


சரஸ்வதி கடாக்ஷம்


Hari Krishnan 26 November 2011 03:51

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

2011/11/26 Nagarajan Vadivel <radius.consultancy@gmail.com>
இடாக்குதர் இட்டகுடர் டாக்டர், ஹானரிஸ் காசா டாக்டர், நிழல் டாக்டர், டாக்டர் ஆக விரும்பாதோர், டாக்டர் ஆக வாய்ப்பில்லாதோர், டாக்டருக்கு ஆசைப்பட்டு அது நிறைவேராமல் போனவர் என சகல் (அறிவு)ஜீவ ராசிகளுக்கும் ஆதரவு தரும் அரசியல் கட்சி நடத்தும் தலைவியே,
ஒங்களைத் தப்பாச் சொன்னா தப்பிலையா


எப்பாலிற் சென்றாலும் எதிர்ப்பாலில் வந்துநிற்கும்
அப்பாலின் அரவரசா! ஆண்பாலும் பெண்பாலா?
தப்பாலும் தலைவிக்கா? தவறாத தலைவலி்க்கா?
இப்பாலில் என்செய்தேன்? என்றானேன் பெண்பால்நான்!


அருள் கூர்ந்து இன்னம் பூரனார் அரசியலிக் கொஞ்சம் கவனியுங்கள்


அது பெரிய அரசியல்தாங்கண்ணா.  பெரியவங்க அரசியல் பெருமாளுக்கே வெளிச்சம்.   நமக்கெதுக்கு வம்பு?



நிரக்ஷரகுக்ஷி Manager, Director என்பனபோல் பாலில்லாப் பெயர்ச்சொல் உங்கள் கட்சி

நிரக்ஷரகுக்ஷி ஆண்பால்
கணினி பெண்பால்
நிரக்ஷரகுக்ஷிக்குப் பொருந்துமா என்று நிங்கள் சொல்லவேண்டும்


திருச்சி, சிவகாசி, திருப்பதி எல்லாம் பெண்பால்; பாம்பன், முடிகொண்டான், எல்லாம் ஆண்பால்னா, கணினி பெண்பால்தாங்கண்ணா; நிரக்ஷரகுக்ஷி ஆண்பால் தானுங்கண்ணா.  

[

K R A Narasiah 26 November 2011 04:37


கல்கி வ. ரா வை நிரக்ஷரக்க்ஷி எனக்குறிப்பிட்டார்!
நரசய்யா
[Quoted text hidden]
[Quoted text hidden]

Hari Krishnan 26 November 2011 04:55




2011/11/26 K R A Narasiah
கல்கி வ. ரா வை நிரக்ஷரக்க்ஷி எனக்குறிப்பிட்டார்!
நரசய்யா

தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.  இது எந்தச் சந்தர்ப்பத்தில் நடந்தது என்று சொல்ல முடியுமா?  நல்லகவி-மஹாகவி போரில் இந்த அஸ்திரப் பிரயோகம் நிகழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.  (அந்தச் சமயத்தில் கல்கி எழுதிய கட்டுரைகள் தேவைப்படுகின்றன.  கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?  விடை கிடைத்தால் மிக்க நன்றியுடையவனாவேன்.)  

[

K R A Narasiah 26 November 2011 05:33


கணையாழியில் எழுதியுள்ளேன். விகடனில் வந்த கடிதங்கள் மூலம் தெரிந்தது. சாதாரணமனிதனிலும் பதிவு செய்துள்ளேன். 3-11-1935 அன்று கல்கி, தாமே இலக்கிய மாணாக்கன் என்றபெயரில் ஒரு கடிதம் ஆனந்தவிகடன் ஆசிரியருக்கு எழுதினார். அதற்குப் பதிலும் அவரே அளித்துள்ளார். இங்கே பார்க்கவும்image.png

அதற்கு அவர் எழுதிய பதில் இதோ:

image.png


தவிரவும் கல்கி சொன்னது:
பாரதி எழுதிய வள்ளிப்பாட்டை டால்ஸ்டாய் படித்திருந்தால் அபாரதியின் எல்லாபாட்டுகளையும் தீயில் போட்டு கொளுத்தியிருப்பார்!

விவரம் எல்லாம் கணையாழியில் எழிதியுள்ளேன்
நரசய்யா


s.bala subramani B+ve 26 November 2011 07:00


மதிற்பிற்குரிய நரசையா அவர்களுக்கு 

சமிபத்தில் 59 களில் குமதத்தில் எழுதி பின்னால்  புகழ் அடைந்த பள்ளிஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 
வையவன்

 மற்றும் பல புனை பெயர்களில் எழுதி வந்த ம.ச.ப> முருகேசன் அவர்களை சந்தித்த போது நீங்கள் அவருக்கு எழுதிய கடிதம் பற்றி குறிப்பிட்டார் 

அன்புடன் பாலு 





Innamburan Innamburan 26 November 2011 09:12



அருள் கூர்ந்து இன்னம் பூரனார் அரசியலிக் கொஞ்சம் கவனியுங்கள்


‘கத்தியை சுழட்டி கண்ட சுகம் என்ன? என்ன?

புத்தியை தீட்டி பகைவனுக்கு அருள்வோம் அப்பனே!
சத்தம் போடாமல் சமாதானம் பேசுவுமே என்று,
பத்திரமாகவே இஸ்ரேலுக்கு போனாரே, ஐய்யன் சாதத்.


*
அடுத்தபடியாக, ‘நிரக்ஷரகுக்ஷி’ சுழல, சுழல,  திரு.நரசய்ய அளித்த அருமையான பழம்பொருள் காட்சி அளித்த சுகானுபவம் என்னே! என்னே!
இன்ன்ம்பூரான்
26 11 2011

Geetha Sambasivam 26 November 2011 11:07

"நிரக்ஷரகுக்ஷி" என்ற பதத்தின் மூலம் பல அருமையான விளக்கங்கள் கிடைத்தன.  அனைவருக்கும் நன்றி.

Subashini Tremmel 27 November 2011 08:07


ஆஹா.. இந்த புத்தம் புது மடிக்கணினி கிடைத்திருக்கிறதா. அப்போது செல்லும் இடமெல்லாம் எடுத்துச் சென்று எழுதிக் கொண்டேயிருக்க் வாழ்த்துக்கள்.

சுபா

Subashini Tremmel 27 November 2011 08:09



2011/11/26 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
நீங்க வேறே அம்மா; :)))  அப்படி நடக்கட்டும்; காத்திருக்கோம்.  ஆளுக்கு ஒரு கணினியை வைச்சுட்டு உட்காரத் தான் இந்த யோசனையோனு எனக்கு சந்தேகம்.  


சரியா கண்டு பிடிச்சிட்டீங்க.. இப்போ எல்லோருக்கும் கணினிமேல் இருக்கும் மோகத்தைப் போல வேறெதிலும் இல்லை .. :-)

சுபா

[Quoted text hidden]

Nagarajan Vadivel 27 November 2011 08:24


எனக்கென்னவோ இரண்டு சிந்தனைகள்
1. ஒன்று கருப்பு வெள்ளியை ஒட்டி ஆடித்தள்ளுபடியைப்போல் 60%-80% வரை ஆடித் தள்ளிவிடுகிறர்கள்.  அந்த வலையில் இருந்து தப்புவது எளிதல்ல.  அதென்னவோ அமெர்க்காவில் இந்நாளில் அதிகம் கொடுப்பதும் பெறுவதும் மடிக்கணினியாகவே இருக்கிறது.  இந்தமுறை நோகணினி என்று சொல்லிவிட்டேன்
2. அந்தக் காலத்தில் காசைக் கரியாக்காமல் இருக்கு விரும்பும் விவரமானவர்கள் வீட்டுப் பெண்களுக்குக் கட்டாயம் கார் ஒட்டக் கற்றுக் கொடுத்து குறிப்பாக சேலை நகைக்கடை வழியாகப் பெண்களை ஒட்டச் செய்து அவர்களின் கவனம் கடைப் பக்கம் செல்லாமல் பார்த்துக்கொள்வார்கள்.  இப்போது அந்தபாச்சா பலிக்காதுபோகவே மடிக்கணியைப் பயன்படுத்தி அவர்களை இணையக் கயிற்றில் கட்டி விடுகிறார்கள்.   கூப்பிட்டாலும் எனக்கு மெயில் மடலாடல் வேலை இருக்கிறது என்று சொல்லிவிடுகிறார்கள்
புதுக் கணினி எந்தச்  சிந்தனைக்குப் பொருந்தும் என்பதை அவரவர் விருப்பத்துக்கு விட்டுவிடுகிறேன்
நாகராசன்

[Quoted text hidden]

coral shree 27 November 2011 08:39



2011/11/27 Nagarajan Vadivel
எனக்கென்னவோ இரண்டு சிந்தனைகள்
1. ஒன்று கருப்பு வெள்ளியை ஒட்டி ஆடித்தள்ளுபடியைப்போல் 60%-80% வரை ஆடித் தள்ளிவிடுகிறர்கள்.  அந்த வலையில் இருந்து தப்புவது எளிதல்ல.  அதென்னவோ அமெர்க்காவில் இந்நாளில் அதிகம் கொடுப்பதும் பெறுவதும் மடிக்கணினியாகவே இருக்கிறது.  இந்தமுறை நோகணினி என்று சொல்லிவிட்டேன்
2. அந்தக் காலத்தில் காசைக் கரியாக்காமல் இருக்கு விரும்பும் விவரமானவர்கள் வீட்டுப் பெண்களுக்குக் கட்டாயம் கார் ஒட்டக் கற்றுக் கொடுத்து குறிப்பாக சேலை நகைக்கடை வழியாகப் பெண்களை ஒட்டச் செய்து அவர்களின் கவனம் கடைப் பக்கம் செல்லாமல் பார்த்துக்கொள்வார்கள்.  இப்போது அந்தபாச்சா பலிக்காதுபோகவே மடிக்கணியைப் பயன்படுத்தி அவர்களை இணையக் கயிற்றில் கட்டி விடுகிறார்கள்.   கூப்பிட்டாலும் எனக்கு மெயில் மடலாடல் வேலை இருக்கிறது என்று சொல்லிவிடுகிறார்கள்


சரியாகச் சொன்னீர்கள் ஐயா.. கரெக்டா பாயிண்ட்டைப் பிடித்த ஐயாவிற்கு ஒரு மடிக்கணினி இலவசம்....


புதுக் கணினி எந்தச்  சிந்தனைக்குப் பொருந்தும் என்பதை அவரவர் விருப்பத்துக்கு விட்டுவிடுகிறேன்
நாகராசன்


                                                          

செல்வன் <27 November 2011 08:47


கருப்பு வெள்ளியை சாமர்த்தியமாக பயன்படுத்தினால் நிறைய காசை மிச்சபடுத்தலாம்.

வருடம் முழுவதும் நண்பர்கள்/எங்கள் பிறந்தநாள், ஏனிவெர்சரிகளுக்கு அளிக்கவேண்டிய பரிசு பொருட்களை கருப்பு வெள்ளியன்று வாங்கிவிடுவோம். இதனால் நிறைய பணம் மிச்சமாகிறது. அலைச்சலும் மிச்சம்.

--
செல்வன்

"அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி - அதன்
  அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் - இந்த
பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்"

Geetha Sambasivam 27 November 2011 11:21


நாள் என்னவோ கறுப்பு வெள்ளி. ஆனால் தள்ளுபடியில் வாங்கவில்லை. தள்ளுபடி சரக்கெல்லாம் காலை பத்துமணிக்குள் விற்றுவிடும் என்றார்கள்.  நான் போகவில்லை. :)))  கூட்டத்திற்கும் பயம்;  பையரோடும், மருமகளோடும் ஷாப்பிங் செய்யவும் பயம்.  :)))))

Nagarajan Vadivel 27 November 2011 13:11


சோதனைமேல் சோதனை போதுமடா சாமி. சிறு குழந்தைக் கணினி நாலு மடிக்கணினி மூனு ஏழில் அஞ்சு கருப்பு வெள்ளியில் கிடைத்தது
இப்பவும் நேற்று என் மகள் நியூயார்க் போயிருக்கிறாள். திங்கள் கூட்டம் முடிந்ததும் செவ்வாய் திரும்ப வரும்போது கணினி வேண்டாம் ஐபோன் வாங்கிவரச் சொன்னேன்.  இன்னொரு நண்பர் கனடாவிலிருந்து ப்ரீ-கிறிஸ்துமஸ் பர்சேஸ் பன்னி ஜனவரி 2-ஆம் தேதி கொண்டு வருவார் அவர் என்ன கொன்டு வருகிறாரோ நான் அறியேன்
இங்கே இந்தியாவில் இருக்கும்போதே கருப்பு வெள்ளி ஆன்லைன் மூலம் 60% தள்ளுபடிக்கு ஒரு செர்வர் ஸ்பேசும் வீடியோ தயாரிக்கும் மென் பொருளும் வாங்கினேன்
சென்றமாதம் என் மருமகன் சென்றபோது என்ன வேண்டும் என்று கேட்டார்.  அப்போ மின் தமிழில் நிறைய நறநறவென்று பல்லைக் கடிக்க வேண்டியிருந்தது.  இந்திய டென்டோபஃபிக்சர் தாக்கு பிடிக்க முடியாமல் பல் கழன்றுகொண்டே இருந்தது.  அவர் புன்னியத்தில் அரை டஜன் ட்யூப் கைவசம். நல்லா பல்லை நற நறவென்று கடிக்க முடிகிறது
நாகராசன்

[Quoted text hidden]

Geetha Sambasivam 27 November 2011 15:29


நல்லாக் கடிங்க! :))))))


No comments:

Post a Comment