Thursday, October 31, 2013

விடாது கருப்பு!

அப்டேட்! லாலுவையும், ஜகுவையும் என்ன செய்யல்லாம்?
இன்னம்பூரான்
31 10 2013



விடாது கருப்பு!

Innamburan S.Soundararajan 11 March 2013 21:57

விடாது கருப்பு!

‘நீதியிடமிருந்து, உயர்பதவியினாலும், அரசியல் ஆதிக்கத்தினாலும் தப்பிக்க முடியாது.’
~ பிரதமர்: 11 03 2013 
விதி வலியது என்பர் சிலர். மதியிழந்தோர் ‘தொப்’ என்று விழுவர் என்பர் சிலர். கதி இது தான், பொய்யும், புனைசுருட்டுமாக வாழ்வோருக்கு, என்பர் சிலர். எது எப்படி இருந்தாலும் நீதி வழுவாது என்பதற்கு ஒரு சான்று, இங்கே.

அவன் (58) அரசியல்வாதி; மக்களிடையே நன்மதிப்பு. தன் கட்சியின் தலைமை தாங்கும் வாய்ப்பு கிட்டக்கூடும். அது மட்டுமல்ல. மின்சக்தித் துறையின் திறன்மிகுந்த அமைச்சர். அவள் (60) பிரபல பொருளியல் நிபுணர். இருபது வருட இல்லற வாழ்க்கையில் ஐந்து குழந்தைகள். ஒளிமயமான வாழ்க்கை எனலாம். எல்லாம் இன்று குப்புறக்கவிழ்ந்தன. குழந்தைகள் பாவம்.

நீதியின் ராஜபாட்டையை, கல்லும், முள்ளுமாக, சிதைத்ததற்காக, இன்று எட்டு மாத சிறை தண்டனை அவர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்டது. உடனே பிரசுரமும் ஆகி விட்டது. முதலில் இழைத்த குற்றம்: அவன் 2003ல்  வேகத்தடையை மீறி காரை ஓட்டினான். அது பெரிய குற்றம். உரிமத்தில் பதிவு செய்து விடுவார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் காரோட்டும் உரிமம் ரத்து செய்யப்படும். ஏற்கனவே, மூன்று முறை பிடிபட்டதால், இந்த தடவை கேமராவிடமிருந்து தப்ப முடியாத அவன், அந்த நிமிட சூழ்நிலையை (கேமராவுக்குக் கிடைத்த பிரகாசம் கம்மி.) குறுக்குப் புத்தியுடன் கணித்து, குற்றத்தை மனைவியை ஒத்துக்கொள்ள வைத்தான். அந்த பினாமி பேத்து மாத்து பெரிய குற்றம். அவள் அதை ஒத்துக்கொண்டதும் குற்றம். நீதியின் ராஜபாட்டையை, கல்லும், முள்ளுமாக, சிதைத்தக் குற்றம்.  பல வருடங்கள் ஓடோடி போயின. இருவரும் மேலும், மேலும் பிரபலமாயினர்.

கனம் ஸெளத்வார்க் கோர்ட் ஜட்ஜ் ஸ்வீனி அவர்களின் தீர்வு 5 பக்கம் தான். எளிய ஆங்கிலம். சுற்றி வளைத்து ஒன்றும் பேசப்படவில்லை. அதை இணைத்திருக்கிறேன். அவனை (Chris Huhne) பார்த்து அவர் சொன்னது, அவனுக்கு, நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருந்திருக்கும்.

~ ‘நீ குறுக்கு புத்தியுடன் மற்றவர்களை ஆட்டிப்படைக்கும் கொடியவன்.’

~ ‘நல்லது என்ன நடந்தது என்றால், உங்கள் இருவரின் மாயாஜாலம் வெட்ட வெளிச்சத்தில் வந்து விட்டது.’

~’ எத்தனை பொய்கள்! ‘

~ ‘துர்பாக்கியம் தான். நீங்கள் இருவரும் நெறி தவறாமல் வாழ்ந்திருந்தால் புகழேணியின் உச்சியில் இருந்திருப்பீர்கள். என் செய்வது? நீங்களே தலையில் மண் வாரி போட்டுக்கொண்டீர்கள்.’
~ ‘நீ உச்சாணிக்கிளைலிருந்து வீழ்ந்து விட்டாய். ஆனால், நீ உன் குற்றத்தை மறைக்காமல் இருந்தால், இந்த நிலைக்கு வந்து இருக்கமுடியாது.’ (நீ அதற்கு லாயக்கு இல்லை.)

~’ செய்த குற்றம் பெரிது. உனக்கு சால்ஜாப்புச் சொல்ல ஒன்றுமே இல்லை.’

அவளை (Vicky Pryce) பார்த்து அவர் சொன்னது, அவளுக்கு இரட்டை தண்டனை. ஏனெனில், அவன் கோர்ட்டுக்கு தன்னுடைய புதிய சிநேகிதியுடன் (Carina Trimingham) வந்திருந்தான்!

~’ நீ சூதுவாது நிறைந்தவள். கணவனுக்கு ஆசைக்கிழத்தி ஒருவள் இருக்கிறாள் என்று தெரிந்தவுடன், அவனை பழி வாங்கத்துடித்தாய்.’

~’ஆனால், தன் குற்றத்தின் பரிமாணத்தைப் புரிந்து கொண்டு, தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள நினைத்து, நீ போலீசிடம் சொல்லாமல், ஊடகங்களிடம் போனாய்.’

~’ விடாது கருப்பு’ என்பதை அறிந்தும், பேத்து மாத்து செய்தாய்.’

~ முதலில், கணவனுக்காக சட்டவிரோதமாக உதவி செய்ததை நீ பொருட்படுத்த வில்லை. கணவனின் கட்டாயம் என்கிறாய். அது உண்மைக்கு ஒவ்வாத வாதம்.’ 

~’ ஆனால். அவனுடைய ஆசைக்கிழத்தி சமாச்சாரம் உன்னை பழி வாங்கும் பாதையில் இழுத்துச்செல்லும்போது, உன்னையும் மாட்டவைத்துக்கொண்டாய்.

உபரி சமாச்சாரங்கள்:
~ இந்த வழக்கில் அரசு செலவு: £117,558/- அதில் ஓரளவாவது குற்றவாளிகளிடம் வாங்கியிருப்பார்கள் போல. மேலும், £31,000 கேட்கப்போவதாக, போலீஸ் சொல்கிறது.
~ அவனின் கட்சித்தலைமை தண்டனை முடிந்த பின் அவர்களுக்கு நல்ல நேரம் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறது.
~ குடும்ப நண்பர் ஓக்ஷாட் பிரபு, ‘இது அவர்கள் இருவருக்கும் பிரத்யேக வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் ஒரு துக்ககரமான சம்பவம்...’ என்றார்.

கொசுறு செய்திகள்:
அவள் பசங்களையே தந்தையை நிந்திக்க வைத்தாள்;
அவனுடைய ஆசைக்கிழத்திக்கு பெண்பாலார் சம்பந்தமும் இருந்தது வெளி வந்தது.
*
சரி. இது இங்கிலாந்து சமாச்சாரம். பொய் சொன்னதுக்காக மற்றொரு பிரபல அமைச்சர் ஜெயிலுக்குப் போனார். தன் சிநேகிதியின் தாதியின் வீசாவை பற்றி தன்னுடைய துறையிலேயே மென்மையாக விசாரித்த அமைச்சருக்கு வேலை போய் விட்டது.

நம் நாட்டில் எழும் வினாக்கள்:

~ சிசுவதை சட்டவிரோதம். ஹரியானா செல்வந்தர்கள் முதல் உசிலம்பட்டி ஏழைகள் வரை இந்த குற்றம். நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

~ கொத்தடிமை சட்டவிரோதம். செங்கல் சூளைகளிலும், மற்ற வகைகளிலும் நடக்கிறது. நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

~ சிறாரிடம் வேலை வாங்குவது சட்டவிரோதம். உங்கள் தெருவில் டீக்கடைகளில் காண்பது என்ன?
நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?
~
 இரண்டாம் தாரம் சட்டவிரோதம். அரசு ஊழியம் என்றால் வேலை இழக்க நேரிடும். எத்தனை அரசியல் தலைவர்கள் இந்த சட்டத்தை மீறி, பதவியில் இருக்கிறார்கள்! நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

கேட்கிறேன். சமுதாய பொறுப்பு உள்ள நீங்கள் பதில் சொல்லுங்கள்.

இன்னம்பூரான்
11 03 2013
உசாத்துணை:


1633204_efc43155.jpg
102K

sk natarajan 12 March 2013 02:17

சிந்திக்க வைக்கும் பதிவு 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

செல்வன் 12 March 2013 02:28

2013/3/11 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
~ சிசுவதை சட்டவிரோதம். ஹரியானா செல்வந்தர்கள் முதல் உசிலம்பட்டி ஏழைகள் வரை இந்த குற்றம். நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

~ கொத்தடிமை சட்டவிரோதம். செங்கல் சூளைகளிலும், மற்ற வகைகளிலும் நடக்கிறது. நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

~ சிறாரிடம் வேலை வாங்குவது சட்டவிரோதம். உங்கள் தெருவில் டீக்கடைகளில் காண்பது என்ன?
நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?
~
 இரண்டாம் தாரம் சட்டவிரோதம். அரசு ஊழியம் என்றால் வேலை இழக்க நேரிடும். எத்தனை அரசியல் தலைவர்கள் இந்த சட்டத்தை மீறி, பதவியில் இருக்கிறார்கள்! நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

கேட்கிறேன். சமுதாய பொறுப்பு உள்ள நீங்கள் பதில் சொல்லுங்கள்.


அரசு கம்பனிகள் அனைத்தும் தனியார் மயமானால் தான் இந்த பிரச்சனைகள் தீரும்.

--
செல்வன்

Nagarajan Vadivel12 March 2013 02:45


//அரசு கம்பனிகள் அனைத்தும் தனியார் மயமானால் தான் இந்த பிரச்சனைகள் தீரும்.//
திரும்பவும் மொதல்ல இருந்தா

அமெரிகா தாங்கும் உசிலம்பட்டி உட்பட தமிழ்நாடு தாங்காது
தனியார் மருத்துவம் தலைதூக்கியபின் கருவில் உள்ள பெண்குழந்தையை அழிக்கும் தொழில் கொடிகட்டிப் பறந்தது
நாங்க  தமிழர்கள்
சட்டத்தைச் சட்டப்படி மீறுவது எப்படின்னும் தெரியும்
சட்டவிரோதமான செயலைச் சட்டப்படி செய்யவும் தெரியும்
நாகராசன்


 

Tulsi Gopal 12 March 2013 03:13

நியூஸிலாந்து நாட்டிலும்  எனக்குத் தெரிஞ்சவரை 'ஏய் நான் யாருன்னு தெரியுமா'ன்னு  சவுண்டு வுட்டுக்கிட்டு சட்டத்தின் பிடியில் இருந்து பிரபலங்களு அரசியல் 'வியாதி'களும் தப்பிக்க முடியாது.

சீரியஸ் ·ப்ராடு ஆ·பீஸ்னு ஒண்ணு இருக்கு. அவுங்களுக்கு வேலையே கண்ணுலே விளக்கெண்ணெய்
ஊத்திக்கிட்டுப் பார்க்கறதுதான்.  பாராளுமன்றத்தின் மவொரி இனத்து பெண் அங்கத்தினர், ஒரு குறிப்பிட்ட
செலவுக்காகக் கொடுத்த அரசு நிதியை, தன்னோட உடல் இளைக்கறதுக்கான அறுவை சிகிச்சைக்குச் செலவு
செஞ்சுட்டாங்க. இவுங்களொட அறுவை சிகிச்சையையும், அழகான உடலையும் பாராட்டி, ஒரு பெண்கள்
பத்திரிக்கையில் வந்துச்சு. இது போதாதா? பொதுக் காசைத் தனக்குச் செலவு செஞ்சுக்கிட்டக் குற்றம்
நிரூபிக்கப்பட்டு இப்ப ரெண்டே முக்கால் வருஷம் சிறைதண்டனை கிடைச்சிருக்கு. குற்றத்துக்கு உடந்தையா
இருந்த அவுங்க கணவருக்கு ரெண்டு வருஷம்  ( home detention) ஹ†வுஸ் அரெஸ்ட்.


ஒரு மந்திரி, வீடு மாறிப்போகும்போது அவரோட பூனைகள் ரெண்டை அங்கேயே விட்டுட்டுப்போயிட்டார். 
11 நாள் கழிச்சுத்தான் அதுகளைக் கொண்டு போக வந்தார்னு பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லி,
 RSPCA அவர்மேலே மிருகவதைக் குற்றம் சாட்டி அவருக்கு எச்சரிக்கை விட்டுச்சு. இவரே ஒரு சமயம்
குடிச்சுட்டு கார் ஓட்டுனதாக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அடைஞ்சார். இதெல்லாம் மந்திரி பதவியில்
இருக்கும்போது நடந்துச்சு.

பிரதமரின் கார் குறிப்பிட்ட வேகத்தைவிட அதிகமாப் போச்சுன்னு போலீஸ் கேஸ் புக் பண்ணினது, கோர்ட்லே
வழக்கு பதிவாகி ஓட்டுனருக்குத் தண்டனையும், உள்ளெ இருந்த பிரதமருக்கு எச்சரிக்கையும் கிடைச்சது.

ஒரு பார்லிமெண்ட் அங்கத்தினர் மகளுக்கும், அவுங்க நண்பருக்கும் நண்பரின் காருக்குத் தீவச்சுட்டாங்கன்னு
குற்றம் பதிவாகி தண்டிச்சதுன்னு சிலதைச் சொல்லலாம்.

 பார்லிமெண்ட் அங்கம் ஒருவர் ரெஸ்ட்டாரண்டில் சாப்பிட்டுட்டு  பணம் கொடுக்காமப் போயிட்டார்ன்னு  ஒரு  குற்றம். கடைசியில் ஃபைன் கட்டினார். 

ஏய்...யாருடா அண்ணன் மேலே  குத்தம் சொன்னது. அடிச்சு நொறுக்குங்கடா  ஹோட்டலைன்னு  ஆங்காரமாக வரும் அடிபொடிகள் இங்கே இல்லாமப்போச்சு பாருங்க:-)))))
2013/3/12 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
விடாது கருப்பு!

‘நீதியிடமிருந்து, உயர்பதவியினாலும், அரசியல் ஆதிக்கத்தினாலும் தப்பிக்க முடியாது.’
~ பிரதமர்: 11 03 2013 

என்றும் அன்புடன்,
துளசி
[Quoted text hidden]

Subashini Tremmel 12 March 2013 05:20



2013/3/12 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
[Quoted text hidden]
இன்னும் கூட இந்தப் பட்டியல் நீளலாம். 

கேட்கிறேன். சமுதாய பொறுப்பு உள்ள நீங்கள் பதில் சொல்லுங்கள்.
சமுதாயத்தின் நன்மையில் அக்கறை கொண்டோர் குறைவே. சுயநலத்தை மட்டுமே பேணும் சமூகமாக இருக்கும் வரை இன்னமும் பட்டியல் நீளும்.  சிந்தனை  மாற்றம் அடிப்படையில் தேவை.

மதுரையில் ஒரு பேராசிரியரிடமும் தினமலர் பத்திரிகை நிருபரிடமும் பேசிக் கொண்டிருந்தேன். இறைவழிபாட்டின் அடிப்படையில் எத்தனை ஏமாற்று வேலைகள் நடக்கின்றன என எங்கள் உரையாடல். நம் அறிவிற்கு நம்ப முடியாத ஒரு விஷயம்.. மதுரையில் ”அயல்நாடு செல்ல உதவி  செய்யும் மாரியம்மன்” என்று ஒரு அம்மன் கோயில் வந்துள்ளதாம். இதற்கு பத்திரிக்கையில் விளம்பரமும் தருகின்றார்கள். ஏமறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவருக்கு பலன் தான் என்ற சூழல். என்ன சொல்வது?

சுபா

இன்னம்பூரான்
11 03 2013
உசாத்துணை:




Innamburan S.Soundararajan 13 March 2013 15:00
To: mintamil@googlegroups.com
நன்றி பல. பேராசிரியர் காஷுவலாக பதில் போட்டிருக்கிறார். அவருக்கு உள்குத்து, ஊமைக்குத்து சமாச்சாரங்கள் நன்றாகவே தெரியும் என்பதால். சுபாஷிணி சொன்னமாதிரி, நமது சமுதாயம், தனது எல்லா பரிமாணங்களிலும், அடிப்படை சிந்தனை மாற்றத்தை அவசரமாக நாடாவிடின், தேசம் குட்டிச்சுவராகி, சரிந்து, உடைந்து விடும். ஒவ்வொருவரும் தன்னை சட்டபரிபாலன வழியில் இயக்கிக்கொண்டால் தான், தலை தப்பும். அது வரை பேசி, பயன் இல்லை. அந்த வழியில் ஒரு சிலராவது கருத்துத் தெரிவித்தால், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளலாம். அதற்கிடையில் டெலீட் சக்கரவர்த்திகள் டெலிட்ட்டு கொம்மாளம் போடலாம்.
இன்னம்பூரான்
13 03 2013

rajam 13 March 2013 15:35
To: "Innamburan S.Soundararajan"

On Mar 13, 2013, at 8:00 AM, Innamburan S.Soundararajan wrote:

நன்றி பல. பேராசிரியர் காஷுவலாக பதில் போட்டிருக்கிறார். அவருக்கு உள்குத்து, ஊமைக்குத்து சமாச்சாரங்கள் நன்றாகவே தெரியும் என்பதால். சுபாஷிணி சொன்னமாதிரி, நமது சமுதாயம், தனது எல்லா பரிமாணங்களிலும், அடிப்படை சிந்தனை மாற்றத்தை அவசரமாக நாடாவிடின், தேசம் குட்டிச்சுவராகி, சரிந்து, உடைந்து விடும். ஒவ்வொருவரும் தன்னை சட்டபரிபாலன வழியில் இயக்கிக்கொண்டால் தான், தலை தப்பும். அது வரை பேசி, பயன் இல்லை. அந்த வழியில் ஒரு சிலராவது கருத்துத் தெரிவித்தால், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளலாம். அதற்கிடையில் டெலீட் சக்கரவர்த்திகள் டெலிட்ட்டு கொம்மாளம் போடலாம். 


ஆகா, அப்படியே செய்துவிடலாமே!! :-) உங்கள் அனுமதியும் கிடைத்துவிட்டது! :-)







Innamburan S.Soundararajan 13 March 2013 15:40
To: rajam
ஒரு திருத்தம். டெலீட் மஹராஜிகளும்.


rajam 13 March 2013 15:48

பின்னே, மஹாராஜிகள் இல்லாமெ கொம்மாளம் போடமுடியுமா?!!! 

No comments:

Post a Comment