Wednesday, November 4, 2009

அம்மா சொல்படி ராஜூ: 8: இருக்காதா?

அம்மா சொல்படி ராஜூ: (ஆனா பின்ன இருக்காதா... ?) பகுதி 8: 24 10 2009

(ருக்மிணி கல்யாணம் வைபோகமே!)

... எனக்கு மூன்று நாத்தனார். பெரிய நாத்தனாருக்கு37 ஒரு பெண்38 அது என் கல்யாணத்தின் போது வயது 3. என் கல்யாண சமயத்தில் அந்த நாத்தனார் இரண்டாவது உண்டாயிருந்து பிறகு பிள்ளை39 பிறந்தது. மற்ற இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகவில்லை. என் வயதுக்கு ஒரு வயது பெ(ரி)யவர் ஒருவர்40. மற்றவருக்கு41 என் வயதை விட ஒரு வயது சின்னவர். நான் கல்யாணம் ஆகிப் போனபோது அவர்களுடன் ஏதாவது வேலை செய்வேன். என்னை மாமியார் ரொம்ப அழகாய் இருப்பார். குணமும் அப்படி. என்னை

ஒரு இடத்திற்கும் என் நாத்தனாரோடு (?)42 போகவிடமாட்டர். அது மாதுரி என்னை 16 வயது வரையில் நாள்கிழமைகளில் என்னை கொண்டுவந்து விடும்படி மாமனார் லட்டர் போடுவார், என்ன செய்வது என்று என் அப்பாவே கொண்டு விட்டுட்டு வருவார். ஆனால், என் புருஷனை சாத்தூரிலிருந்து, திருமங்கலம் என்கிற ஊர். மதுரைக்கு பக்கத்திலிருக்கிறது. அங்கு மாத்தல் ஆகி வந்து விட்டார். அங்கும் என்னை வரும்படி லட்டர் வரும். அப்போது என் அப்பா தான் கொண்டு விடுவார். எனக்கு ஒரு தம்பி இருந்தும், அவன் செய்யமாட்டான். அதனால் தான் என் அப்பா தான் கொண்டு விடுவார். கொஞ்ச நாள் ஆனதும், என் மாமியார் பிள்ளை சாப்பட்டுக்குக் கஷ்டப்படவேண்டாம் என்று தானும் மற்ற இரண்டு பெண்களும், மச்சினர் உள்பட எல்லாரும் திருமங்கலம் வந்து குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கும்போது, நானும் அவர்களோடு இருக்கவேண்டும் என்று வரும்படி லட்டர் (வரும்). என்னையும் அங்கு கொண்டு விடுவார்கள். அப்படி அங்கு இருக்கும்போது, மாமியார் நாமு என்ற பெண்ணுக்குக்கு ஜாதகம் வந்திருப்பதாகவும், அவளுக்குக் கல்யாணம் செய்யலாம் என்று இன்னம்பூருக்குப் போய்விட்டார். கடைசிப்பெண்னை பிள்ளைக்கு சமையல் செய்து போகும்படி வைத்துவிட்டுப்போனார். ஆனால், திருமங்கலத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டில் எல்லாரும் தெலுங்கர்கள். ரொம்ப நல்லவர்கள். அவர்களிடம் பெண்ணைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுப்போனார். அந்த சமயம் நான் அப்பாவாத்தில் இருந்தேன். இப்படியிருக்கும்போது, எனக்கு கல்யாணம் ஆகி முதல் வருஷம் பொங்கலுக்கு வரும்படி லட்டர் வந்த்தது. என்ன செய்வது. சீர் செய்து கொண்டு விடவேண்டுமே என்று(ம்), யார் போய் கொண்டு விடுவது என்று யோஜனையாக இருந்ததது. என் பெரியம்மாவிற்கு லட்டர் போட்டு வரும்படி எழுதி, அவள் வந்தாள். அவளிடம் என் அப்பா சீர்வரிசையுடன் ருக்மிணியை கொண்டு விடவேண்டும். உன் யோஜனை என்ன என்று கேட்டார். ஆனால், என் அப்பா சொன்னார்; அவளுக்கு வைரத்தோடு போடலாம் என்று நினைக்கிறேன். நீ என்ன சொல்கிறாய். அதற்கு அவள் சொன்னாள். அவளைக் கொடுத்த இடம் சாதாரண இடமமாக இருப்பதால், தோடு இப்போது வேண்டாம் என்று எனக்கு தோன்றுகிறது. அதற்கு அவளுக்குப் பாத்திரமாக வாங்கிக் கொடுப்பது தான் நல்லது என்று சொன்னாள். அவள் சொன்னபடி பொங்கல் சீர் என்று 5 பவுனுக்கு கழுத்துக்கு அட்டிகை பதக்கம் உள்பட செய்து, ஏதோ பித்தளைபாத்திரம், பொங்கலுக்கு வெண்கலப்பானை எல்லாம் கும்பகோணத்தில் வாங்கி என் பெரியம்மா தான் கொண்டு விட்டாள். நான் அங்கு ஒரு மாஸம் இருந்தேன், அப்போது தான் என் நாத்தனார் நாமுவிற்குக் கல்யாணம் நடந்ததது. அந்த மாப்பிள்ளையும்43 கும்பகோணம் தான். நான் கல்யாணத்திற்கு இருந்தேன். அதே சமயத்தில் என் தம்பிக்கும் கல்யாணம் என்றும், என்னை வரும்படி என் அப்பா எழுதியிருந்தார்.

­­­­­­­­­­­­­­­ அதனால், நாத்தனார் கல்யாணத்திற்கு என் புருஷன் வந்திருந்தார். கல்யாணம் குடவாசலில் நடந்ததது. நான் என் அப்பா அவர்களுடன் காரைக்குடி போய்விட்டேன். கல்யாணம் முடிந்ததும் நான், என் கடைசி நாத்தனார், என் புருஷன் எல்லாரும் (அடித்தல், திருத்தல்) போனோம். நாத்தனர், என் புருஷன் இருவரும் இன்னம்பூருக்கு போய்விட்டார்கள். என் புருஷன் திருமங்கலம் போய்விட்டார். இப்படி நாளாக எனக்கு வயது 15 தாண்டிவிட்டது. பெரிய ஆளாகவில்லை. இதனால், என் அப்பா, அம்மா கவலையாக இருந்தார்கள். அதே சமயத்தில் ஒரு லட்டர் வந்தது. என்னவென்றால், திருமங்கலத்தில் என் பெண்ணைத் தனியாக பிள்ளைக்கு சமையல் செய்வதற்கும், பிள்ளை ஓட்டலில் சாப்பிடவேண்டாம் என்று பெண்ணை அனுப்பியிருக்கிறேன். பெண் தனியாக இருப்பதால், உங்கள் பெண்ணையும் அங்கு அனுப்பி வையுங்கள் என்று லட்டர் என் அப்பாவிற்கு வந்தது. அப்பா லட்டரைப் பார்த்துவிட்டு என்ன செய்வது என்று என் அம்மாவிடம் சொன்னார். அதற்கு, அம்மா பெண் பெரிய ஆளாகிற சமயம் என்ன செய்வது என்று சொல்லிக்கொண்டிருந்தார்...

37. சிரித்தே இன்னல்களை சமாளிப்பாள், பெரிய அத்தை . புகுந்த இடம் ரொம்ப ஆச்சாரம்.

38. இவளைப் போன்ற அழகியை நான் கண்டதில்லை. அறியாப்பருவத்திலே, அவள் மேல் எனக்கு கைக்கிளை. நான் அவளை துரத்துவேன்; அவள் என்னை விரட்டுவாள். கல்யாணம் வேறு ஆயிடுத்து.. சமீபத்தில் இது பற்றி சிரித்து பேசிக்கொண்டிருந்தோம்’

39. எதிர்நீச்சல் மன்னன். நான் அவனை ‘ஜகதலப்பிரதாபன்’ என்று கூப்பிடுவேன்.

40. இவர் பெயர் நாமு. சிறந்த பரோபகாரி.. அதர்மம் பொறுக்கமாட்டார். என் மனைவி இவரை மிகவும் மதித்தாள்.

41. இளம் விதவை. மற்றவர்களுக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். எனது தாய், தந்தை, ஆசான் எல்லாம் இந்த அத்தை தான். அவரை பற்றிய சிறு கட்டுரை, ஒரு அனுபந்தத்தில்.

42. நாத்தனார் துணையில்லாமல் எங்கும் செல்லக்கூடாது என்று கூறுகிறார், என நினைக்கிறேன். பாட்டி கண்ஜாடையிலேயே பேசுவாளாம். பலவிதங்களில் அம்மாவுக்கு பாதுகாப்பாக இருந்தாளாம்.

43. அவர் ஒரு புதிர்.

(ஆனா பின்ன இருக்காதா...? )

அம்மா சொல்படி ராஜூ: ருக்மிணி கல்யாணம்

அம்மா சொல்படி ராஜூ: பகுதி 7: 23 10 2009

(என்னடாது ...!)

கடைசியில் மாப்பிள்ளை வந்துவிட்டார்31. நிற்க. 32

மாப்பிள்ளையோடு தம்பிக்கும்33 பூணூல் போட்டார்கள். ஆனால் இதில் ஆச்சரியம் (என்ன) என்றால் என்னுடைய அக்கா இந்த சமயம் மூன்றாவது குழந்தை உண்டாயிருந்தாள். ஆனால், எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்தாள்.அவளுடைய புருஷன் ஒரு மாதிரியான குணம்.34 பிறந்தவீட்டுக்கு அனுப்பமாட்டார். இதில் என் கல்யாணம் என்று தெரிந்த உடன், அக்காவை அவருடைய அம்மா வீட்டிற்கு கொண்டு போய் விட்டார். அவள் வராமல் எப்படிக் கல்யாணம் நடப்பது என்று என் அப்பாவிற்கு (கவலை). வெள்ளை தோடு, பட்டுப்புடவை, என் அத்திம்பேருக்கு வேஷ்டி, வெள்ளிச்சொம்பு, குளவாத்திரம்35 எல்லாம் செய்து, என் அப்பாவுடைய பெரியப்பா பிள்ளையை போய் என் அக்காவை அழைத்து வரும்படி என் அப்பா அவரை அனுப்பி வைத்தார். ஆனால், என் அக்கா வந்தது எப்போது என்றால் எனக்கு கழுத்தில் தாலி கட்டின சமயம். எட்டிப்பார்த்து விட்டு உடனே அக்கா அரியக்குடிக்கு போய்விட்டாள். என் கல்யாணத்திற்கு சொந்த மனுஷ்யர்கள் யாரும் இல்லை. ஆனால், புதுக்கோட்டையில் என் அப்பாவுடைய பெரியப்பா பெண்36 ஒருத்தி இருந்து கல்யாணத்தை நடத்தி வைத்தாள். ஆனால், கல்யாணம் ரொம்ப நன்றாக நடந்தது. எல்லாம் முடிந்து என்னை மாமியார் அழைத்துப் போனார். நானும் பயப்படாமல் போனேன்.

31. அப்பா ஆணழகன். கட்டுக்குடுமி. சிவந்த மேனி.. கட்டு மஸ்து . இளகிய மனது.. பட்டப்பா என்று உகந்த செல்லப்பெயர். ‘சட்’னு கோபம் வந்துடும். அவரது போஃட்டோக்களை பதிவு செய்து இருக்கிறேன்.

32. நிற்கறதாவாது! உப செய்திகள்:

ü முகூர்த்த்தின் போது, சிறுமியான ருக்மிணி, புரோகிதர் சொல்லுக்கு கட்டுப்படாமல் வேடிக்கைப் பார்க்க, கோபத்துடன், அப்பா அவரைத்தூக்கி வைத்தாராம். தாத்தா அதிர்ந்துவிட்டாராம்.!

ü பஸ் லேட்! அப்பா குதியா குதிச்சாராம்! வி..ஐ.பி. கெஸ்ட் அக்னிஹோத்ரம் ஸ்ரீ இராமானுஜ தாத்தாச்சாரியர் எங்கிட்டெ சொன்னார். ’’அவனுக்கு அப்பா கிட்ட பயம். அவருக்கு சம்பந்திட்ட பேச லஜ்ஜை. சம்பந்திக்கு நிஜமான கவலை. குறுக்கெ நெடுக்கெ ஓடின கிருஷ்ணன் தூது நான்.” ஆச்சாரியன் சார்பிலே வந்திருந்தாலும், மாப்பிள்ளை தோழன் மாதிரி.. அவரும் பால்யம் தானே!

ü சின்ன அத்தை குட்டிப்பொண்ணு. ஏதோ விஷமம். அம்மாவோட அப்பா ஒரு குட்டு குட்டிப்பிட்டார். அவ பண்ண ஆகாத்தியம் தாங்காம, அவர் மன்னிப்பு கேட்டாராம். தாத்தா கேட்ட முதல் & கடைசி மன்னிப்பு அதுவா தான் இருந்திருக்கும்.

ü

.

33. அண்ணனுக்கு தம்பி, முன்கோபத்தில் ஒரு படி மேல். ரோஷத்தில் இரண்டு படி. படிப்பை உதறி,ட்டு தன் வாழ்க்கையை பிற்காலம் திறம்பட அமைத்து செல்வம் சேர்த்தார், புனே சென்று . என்னை வாஞ்சையுடன் வளர்த்தவர். தோளில் சுமந்து, வித்யாரம்பம் செய்தவர், செக்கானூரணியில். நன்றாக பாடம் சொல்லிக்கொடுப்பார். இவர் தூண்ட, கொங்கணேஸ்வரர் வித்யாசாலையின் பாலு சார் சொல்லிக்கொடுத்தபடி. ஏழு வயதில், தஞ்சை திலகர் மைதானத்தில் பொதுமேடை ஏறினேன், பாரதியார் புகழ் பாட.. பாரதியின் பகவத் கீதை பரிசு. இன்றும் பொக்கிஷமாக வைத்து இருக்கிறேன். ஓரளவு தொடர்பு இருக்கிறது, சந்ததியுடன்.

34. முசுடு என்று பொருள் கொள்க. ஆனால், யாவரையும் கவர்ந்து விடுவார். சுயநலம் அறவே கிடையாது.. என் தந்தை அவரை கண்டு ஓடி ஒளிவார். ஏனென்றால், நடுத்தெருவில் அவரிடம் மாட்டிக்கொண்டால், எதிரில் உள்ளவரின் சட்டை பொத்தானைப் பிடித்துக்கொண்டு, சில மணி நேரங்கள், யோகக்ஷேமம் விசாரிப்பார். வண்டிகள் ஓரம் கட்டும். ஹிட்லர், நம்மாழ்வார், ஃபோர்ட் கார், கறிகாய் விலை: எல்லாரும் வருவார்கள். அவர் ரேஞ்ச் அப்படி. எங்கள் பெரியண்ணாவுக்கு இணை அவரே.

35. வைஷ்ணவ டம்ளர்.

36. பின்னணியும் முன்னணியும், பிறகு.

(ருக்மிணி கல்யாணம் வைபோகமே!)

அம்மா சொல்படி ராஜூ: பராக்! பராக்!

அம்மா சொல்படி ராஜூ: பகுதி 6: 22 10 2009

(மாப்பிள்ளை வரார்! பராக்! பராக்!)

அவர்களும் ஜாதகம் பொருத்தம் லட்டர் போட்டுவிட்டு, பையனை பெண்ணைப் பார்க்கும்படி பையனுக்கு லட்டர் போட்டிருக்கிறேன். அதன்படி பையன் வந்து பெண்ணைப் பார்த்து லட்டர் போடுவான். அதற்கு மேல் பேசிக்கொள்ளலாம். அதன்படி பையன் பெண்ணைப் பார்த்துப்போய் (?) அவர் அப்பாவிற்கு லட்டர் போட்டானாம். என்னவென்றால், பெண் நன்றாகயிருக்கிறது. 22 ஆனால், அம்மைதழும்பு இருக்கிறது என்று எழுதியிருந்தானாம். அதற்கு பையனுடைய அம்மா 23 பரவாயில்லை என்றும் லட்டர் பிள்ளைக்கு எழுதிவிட்டாராம். அந்த சமயத்தில் என் அக்காவுக்கு இரண்டாவது குழைந்தை பிறந்து இறந்துவிட்டது. மறுபடியும் இன்னம்பூர் 24 சம்பந்திக்கு25 என் அப்பா லட்டர் போட்டு, பையன் பெண்ணை பார்த்துவிட்டு போனான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அதன்படி செய்கிறேன். இந்த லட்டருக்கு உடனே லட்டர் போடும்படி ஒரு லட்டர் போட்டார்? அவர்கள் என்ன எழுதினார் என்றால் நாங்களும் பெண் பார்க்கவேண்டும். நீங்கள் கும்பகோணத்தில் வந்தால் நாங்கள் பெண் பார்க்க செளகரியம் என்று லட்டர் போட்டுவிட்டார்.

அதனால் அப்பா என்ன செய்வது என்று கவலை இருந்தாலும், கும்பகோணம் தன் மாமா பிள்ளை ஆராவமுதுவிற்கு லட்டர் போட்டார். இன்னம்பூரிலிருந்து சம்பந்தி சுவாமிகள் நாங்களும் பெண் பார்க்கவேண்டும். நீங்கள் கும்பகோணத்தி/ர்கு வந்தால் நாங்களும் பார்க்கவேண்டும் என்று சொல்லி லட்டர் போட்டிருக்கிறார். அதனால் உன் வீட்டில் தங்கி (அடித்தல் திருத்தல்) பெண் பார்க்க செய்யலாம் என்று நினைக்கிறேன். அதனால் உனக்கு லட்டர் போட்டிருக்கிறேன். நீ உடனே எனக்கு பதில் போடு.; எதிர்பார்க்கிறேன் என்று அவருக்கு என் அப்பா லட்டர் போட்டார். அவர் உடன் லட்டர், தாராளமாக வரலாம்; எப்போது வருவீர்கள் என்று எழுது. (நா)ங்கள் நான் ஸ்டேஷனுக்கு வருகிறேன் என்று பதில் போட்டுவிட்டார். உடனே என் அப்பா, அம்மா, நான், தம்பி எல்லோரும் கும்பகோணம் போய் அவர்கள் வீட்டில் தங்கினோம். மறுநாள் சாயங்காலம் இன்னம்பூரிலிருந்து பையன் அப்பா, அம்மா, மற்ற எல்லாரும் வந்து பெண் பார்த்துவிட்டுப் போனார்கள். நாங்கள் மறுநாள் திருப்பதி போய் தம்பிக்கு பூணூல் போட்டுக்கொண்டு26 கும்பகோணம் (போய்) முன்போல் அவர்கள் வீட்டில் தங்கி என் கல்யாணத்தை நிச்சியம் செய்தார்கள். சம்பந்தி அவர்கள் கையில் வரதக்ஷிணை என்று 500 ரூபாய் கொடுத்து மற்றதெல்லாம் என் அப்பா செய்வதாக சொல்லிவிட்டார். மறுநாள் கடைக்குப் போய் பித்தளை, வெள்ளிப்பாத்திரம், நகைகள், திருமாங்கல்யம்27உள்பட வாங்கிகொண்டு நேராக காரைக்குடி வந்தோம். அந்த சமயத்தில் உள்ளூரில் இருந்த அத்தை மாமியார் இறந்துவிட்டார் என்று என் அத்தை கல்யாணத்திற்கு வரமுடியவில்லை. ஆனால் எனக்கு விபவ வருஷம் ஆனி மாஸம் 8ம்தேதி 28 முஹூர்த்தம் வைத்தார்கள்.

அதற்கு கல்யாண பக்ஷணம் செய்வதற்கு, என் அப்பாவுடைய தங்கையும், பாட்டியும் தான் செய்தார். ஆனால், என் அம்மாவுடைய தங்கை சிறிய வயதில் விடோவாகப் (widow) போய்விட்டாள். ஆனால், அவளுக்கு நாங்கள் தான் குழந்தை. அதனால், அவள் தான் என்னுடைய கல்யாணங்களுக்கு 29 உதவி செய்வாள். கல்யாணம் நெருங்கிவிட்டது. ஜான்வாஸத்தன்று 30 இன்னம்பூரிலிருந்து எல்லாரும் வந்து விட்டார்கள். ஆனால், மாப்பிள்ளை ஜான்வாஸத்திற்கு வருவது லேட்டாகி விட்டது. அதற்குள் என் அப்பாவிற்கு கவலையாப் போய்விட்டு...

22. அன்றும், இன்றும் பெண் என்றால் அஃறிணை தான்! இத்தனைக்கும், பெண்களை பன்மையில் குறிக்கும் பண்பை, சேக்கிழாரே துவக்கி வைத்தார்.

23. இவரை பண்பின் சிகரம் என்று ருக்மிணி சொல்வார். கண்ஜாடையிலேயே குறிப்புணர்த்துவாராம். ருக்மிணிக்கு பலவிதங்களில் பாதுகாப்பு அளித்தாராம். நான் பிறக்கும் முன் புற்றுநோயால் இறந்துவிட்டார். போஃட்டோ உள்ளது. பதித்திருக்கிறேன்.

24. இன்னம்பூர் கும்பகோணத்திலிருந்து ஸ்வாமிமலை போகும் வழியில் உள்ளது. பெருமாள் கோயில் சிறியது; எழில் மிகுந்தது. சிவன் கோயில் பாடஸ்தலம். கஜபிருஷ்ட விமானம் சிறப்பு. ஹிந்து இதழ் குடும்பமும், இந்த மண் தான்.

  1. இவர் தான் ‘இன்னம்பூர் சிங்கம்’. இவரை நான் நன்கு அறிந்திருந்ததால், தனிக்கட்டுரை

அனுபந்தத்தில். ஊர் பட்டாமணியம். வைத்தது சட்டம் என்று வாழ்ந்த தடாலடி, ஆனால், ஜாலி மனிதர். இந்த நூலின் கதாநாயகர் இவரை விட வயதில் பெரியவர். அவர் முன்னிலையில் இவர் அடக்கி வாசிப்பது போல் பாவ்லா காட்டுவார். மற்றபடி ‘டோண்ட் கேர்’ மாஸ்டர். இந்த வம்சாவளியில் இன்னொரு ‘டோண்ட் கேர்’ மாஸ்டரும்னு பேசிப்பா இவர் பைய்ட் பைப்பைர்; செல்லும் இடமில்லாம், ஒரு சிறுவர் குழாம் தொடரும். தீவிர பிரிட்டீஷ் விசுவாசி.. ஆனால், மஹாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது, குழந்தை போல் விக்கி விக்கி அழுதார்.

  1. திட்டம் போடுவதிலும், சிக்கனத்திலும், தாத்தாவிற்கு ஈடு, இணை கிடையாது .

  1. நாண்
  2. என்னே ஞாபகசக்தி! என்னே தமிழ் நடை! யாராவது இங்கிலீஷ் தேதி சொல்லுங்களேன்.

  1. சுப காரியங்கள், லெளகிகம், பக்ஷணங்கள், மேற்பார்வை எல்லாம், அவருக்கு அத்துபடி. எப்படி தான் அந்த காலத்து மனிதர்கள் ‘தன் கடன் பணி செய்து கிடப்பதே என்று இருந்தார்களோ!

  1. திருமணத்திற்கு முந்திய நாள். மறுபடியும் நிச்ச்சியதார்த்தம், ஊர்வலம் எல்லாம் அன்று தான். விமரிசையாக, மேளதாளங்கள், பேண்டு வாத்தியம், காஸ்லைட், வெடி, மத்தாப்பு, ஆண்கள் முன்னாலும், பெண்கள் பின்னாலும். கோலாஹலம் தான். மாப்பிள்ளையை ஊருக்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பு. ஸைடு அடிக்கறத்துக்கும்!

(என்னடாது ...!)

அம்மா சொல்படி ராஜூ: கல்யாணம் வந்த்து

அம்மா சொல்படி ராஜூ: பகுதி 5. 21 10 2009

(நகரத்தார் வாழ்க)

நாங்கள் ஒருவீட்டில் ஒரு போர்ஷனில் குடியிருந்தோம். அதே சமயத்தில் என் அக்கா வேறு குடுத்தினம் நடக்கும்படி செய்து கொண்டார்களாம். இந்த சமயத்தில் என் தம்பிக்கு பெரிய அம்மை போட்டியிருந்தது. அப்போது நானும் என் தம்பியும் சிவன் கோவில் தெருவில் இருந்த ஹேட்ஸ்கூலில் நாங்கள் படித்தேன். என் தம்பியும் அங்கு தான் படித்தான். அந்த நாளில் ஐந்து க்ளாஸுக்கு மேல் தான் இங்கிலீஷ். நான் ஏதொ 8 வரையில் படித்தேன். தம்பிக்கு அம்மை போட்டினதால், நான் வீட்டிற்கு போகமாட்டேன். எனக்கு அம்மை போட்டவில்லை. அதனால் என் அத்தை அதே தெருவில் இருந்தாள். அங்கு போய் சாப்பிடுவேன். இப்படியிருக்கும் (போது) திடீரென்று எனக்கு அம்மை போட்டுவிட்டது. என் அப்பாவும் இல்லை. அம்மா தான் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டாளாம். என்ன செய்வது. நானும் தம்பியும் அம்மையில் பிழைக்கமாட்டோம் என்று இருந்தாளாம், என் அம்மா. ஏதோ மகமாயி அருளால் இருவரும் உயிர் பிழைத்து எழுந்தோம். அம்மை போட்டின (து) நினைவு இருக்கிறது. நான் அம்மை வேகத்தில் பட்டுப்பாவாடை வேணும் என்று கேட்டேனாம். எங்களுக்கு மூன்று ஜலம் தலைக்கு விட்ட பிறகு என் அப்பாவுக்கு லெட்டர் போடும்படி என் அம்மா சொன்னாளாம். லட்டர் கிடைத்துவிட்டது. அந்தக்கணக்கும் முடிந்ததாம். உடனே என் அப்பா மெட்றாஸ்ஸில் ஒரு பட்டுப்பாவாடை வாங்கிவந்தார். அதை உடனே தைத்து நான் உடுத்திக்கொண்டேன்.15 அப்போது எனக்கு 10 வயது. ஆனால், அக்காவைக்கொடுத்த மாப்பிள்ளை அவர்கள் உறவில் ஸ்வீகாரம் போனவர்? 16

என் பெரியப்பா தஞ்சாவூருக்குப் போனவர், திடீரென்று என் வீட்டை விற்கப்போகிறேன். நீ வாங்கிகொள் என்று சொன்னாராம். அவருக்குக் காரைக்குடியில் மேல ஊரணீக்கரை மேல் ஒரு வீடு இருக்கிறது. அதைத்தான் வாங்கும்படி சொன்னாராம். உடனே என் அப்பா சரி என்று சொல்லிவிட்டாராம். தான் வேலை பார்க்கும் செட்டியாரிடம், நான் வீடு வாங்கப்போகிறேன் என்றும், அதற்கு பண உதவி நீங்கள் தான் செய்யவேண்டும் என்று சொன்னதின் பேரில், அப்பாவிற்கு அந்தச் செட்டியார் 1000 ரூபாய் கொடுத்தாராம். அதை வாங்கி பெரியப்பாவிடம் கொடுத்து வீட்டின் பேரில் பத்திரம் எழுதி வீட்டை வாங்கிக்கொண்டார்.

நாங்கள் எல்லோரும் வீட்டிற்கு வந்து விட்டோம். எங்களுக்கு அம்மை போட்டினபோது என் தம்பிக்கு திருப்பதியில் பூணூல் போடுகிறேன் என்று என் அம்மா வேண்டிக்கொண்டாளாம். இதற்கிடையில் என் அக்காவுக்கு தலைக்குழந்தை இறந்து போயிற்று. அப்பாவுக்கு செட்டியார் வீட்டில் நல்ல பெயர். அவர்கள் கார் வாங்கி, அதில் வெள்ளித்தகடு போட்டு இருக்கும். அந்தக்காரில் தான் என் அப்பா போவார். 17 நான் ஐந்தாவது பெண்ணாம். அதனால் எனக்கு 10 வயது ஆவதற்குள் நல்ல காலம் என்று என் அம்மா சொல்லிக்கொண்டிருப்பாள்? இப்படியிருக்கும் போது தான் எனக்குக் கல்யாணம் செய்யவேணும் என்று என் அப்பா நினைத்தார்.

ஆனால், அரியக்குடி என்ற ஊரில் என் பெரி (ய) அத்தை இருந்தாள். எனக்கு நினைவு இருக்கிறது. அந்த அத்தைக்கு ஒரு பிள்ளை தான்.18 அதனால், அத்தை என் அப்பாவிடம் வந்து உன் பெண்ணை என் பிள்ளைக்குக் கொடு என்று கேட்டாள். அதற்கு அப்பா சொன்னது என்னவென்றால், வயது அதிகம், வேண்டாம் என்று சொல்லி விட்டார். அதற்குள் என் அத்தை வந்து என் மைத்துனர் பிள்ளை இருக்கிறான். நல்ல சம்பாத்தியம். நல்ல வேலை பார்க்கிறான். அவனுக்குக் கொடு என்றாள். அதையும் அப்பா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால், பையனுக்கு மூலா நக்ஷத்திரம் என்று வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எங்கல் வீட்டுக்குப் பக்கத்தில் திருவித்யானம்19, கல்யாணம் எல்லாம் செய்து வைக்கிற வாத்தியார் ஒருவர் இருந்தார். அவர் வந்து என் அப்பாவிடம் ஒரு ஜாதகம் வந்திருக்கிறது. அதை உன் பெண்ணுக்கு பார்க்கலாம் என்று சொன்னாராம். என் அப்பா அந்த ஜாதகத்தைப் பார்த்தாராம். ஜாதகம் பொருத்தமாக இருக்கிறது என்று தெரிந்ததும் என்ன செய்வது என்று யோசித்துப்பார்க்கும் போது, கும்பகோணத்தில் ரெட்டிராயர் குளத்தெருவில், என் அப்பாவுடைய மாமா பிள்ளை இருந்தார். அவருடைய பெயர் ஆராவமுது. 20 அவருக்கு லட்டர் (போட்டு) கேட்டார்களாம். அவர் வந்து என் தம்பி பெண்ணுக்குத் தான் பார்த்தது. பொருத்தம் இல்லை என்பதால் உனக்கு அனுப்பும்படி என் தம்பி சக்கரவர்த்தி எழுதியிருந்தான். அதனால் உடனே உனக்கு அனுப்பினேன். அவர்கள் நல்லவர்கள் தாம். சக்கரவர்த்தி சாத்தூரில் ஸ்கூல் வாத்தியாராக இருக்கிறான். அங்கு தான் அந்த பையனும் இருக்கிறான். பையன் நன்றாக இருப்பான். வேலை நல்ல கெவர்மெண்ட் வேலை. அதனால் சாத்தூருக்கு லட்டர் போட்டு தெரிந்து கொள் என்று அந்த ஆராவமுது லட்டர் போட்டுவிட்டாராம். பிள்ளைவீட்டுக்காரர்களும் ஜாதகம் பொருத்தம் என்றும் லட்டர் போட்டுவிட்டார். அதனால், என் அப்பா உடனே சாத்தூருக்குப் போய் பிள்ளையைப் பார்த்து எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டு ஊருக்கு வந்து விட்டார். என் அம்மாவிடம் பையன் நன்றாக இருக்கிறான், எனக்கு பிடித்து விட்டது; அவர்கள் பூர்வீக ஊர் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கிறதாம். அவர்களுக்கு லட்டர் போட்டு கேட்கிறேன் என்று சொன்னாராம். அதன்படி அவர்களுக்கு என் (அப்பா) லெட்டர் போட்டாராம். 21

15. இதற்குப் பிறகு, ருக்மிணி, தனக்கென்று ஒரு ஆசை வைத்ததாக, நான் அறியேன்.

16. நாங்கள் அறியாத செய்தி.. சில செய்திகள் தொடர்பில்லாமல் இருந்தாலும், இடம், பொருள், ஏவல் பொருத்தி புரிந்து கொள்ளவேண்டும். கேள்விக்குறி ருக்மிணியோடது..

17. நகரத்தார் நாகரீகத்தார் அல்லவா!

18. இவர் என் ஃப்ரெண்ட்., ஹீரோ, அனுகூலசத்ரு. ஒரு நாள் அரியக்குடி உத்ஸவத்தின் போது எனக்கு பிடிக்காததை இலையில் போட்டார். சட்ணு அதை பரிமாறும் பாத்திரத்தில் வீசி எறிஞ்சேன். சுத்திவர ஆசார பிராமணா. அடிச்சார். பிறகு, தனியா அக்காரவடிசல் கொடுத்தார். பல வருடங்களுக்கு பிறகு, மும்பைக்கு போகும் ரயில்வண்டியில் பார்த்து, பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டோம். அவரது மகவுகள் வளப்பமாக இருப்பதாக சொன்னார்.

19. இறந்தவர்களுக்கு வருடாவருடம் செய்யும் திதி..

20. முதல் தடவையாக, ஒரு பெயர். இத்தனைக்கும் துணை மாந்தர். தன் அப்பாவின் பெயரைக்கூட ருக்மிணி எழுதவில்லை.

21. காரியத்திலெ இறங்கினா, தாத்தா சட்புட்ணூ முடித்து விட்டு தான் மறுவேலைக்குப் போவார். ஏகாக்ரஹ சதாவதானி. அடிக்கடி இதை பார்ப்போம்.

(மாப்பிள்ளை வரார்! பராக்! பராக்)

அம்மா சொல்படி ராஜூ: நகரத்தார் வாழ்க

(ருக்மிணி சுபஜனனம்....)

அந்த சமயத்தில் என் அப்பாவிற்கு மூன்று குழந்தைகள் பிறந்து இறந்து போய்விட்டதாம். பிறகு நான்காவது ஒரு பெண் பிறந்தது.9 பிறகு என் அப்பா அம்மா வேண்டாத கோவிலை வேண்டி (பிறகு) ராஜமன்னார்குடிக்குப் போய் அங்கு ஒரு சந்தானகிருஷ்ணன் வைத்திருக்கிறார்கள். அந்த கிருஷ்ணனை என் அம்மா எடுத்துக்கொண்டபிறகு ஒரு பிள்ளை பிறந்தான்.10

ஆனால், என் அப்பா அதே செட்டியப்ப செட்டியார் வீட்டில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு மாதம் 50 ரூபாய் (அடித்தல், திருத்தல்) சம்பளம். அந்தச்சம்பளத்தில் தான் பெரிய பெண்ணுக்கு கல்யாணம் செய்தார். மாப்பிள்ளை படிப்பு அந்த நாளில் பத்து க்ளாஸ் படித்தால் போதும் என்று இருப்பார்களாம். அதனால் என் அப்பா மாப்பிள்ளையை ஆத்தில் வைத்துக்கொண்டு படிப்பதற்காக தன் வீட்டில் வைத்துக்கொண்டார். செட்டிநாட்டில் பெரிய பணக்கார செட்டியார் ஒருத்தர் இருந்தார். அவர் பெயர் சொக்கலிங்க செட்டியார் என்று பெயர் அவர் செட்டி நாடு என்கிற காரைக்குடியில் பெரிய சிவன் கோவில் தெருவில் ஹேட்ஸ்கூலும் 2. பாய் (Boy) ŠÜÖõ ¸ðÊÉ¡÷¸û. «Å÷¸û ¾¡õ ÌÆó¨¾¸ÙìÌ ÒŠ¾¸õ, §¿¡ð, ¦Àýº¢ø ±øÄ¡õ ¦¸¡ÎôÀ¡÷¸û. அதில் அப்பா மாப்பிள்ளையை படிக்க வைத்தார். அதே போல் பெண்ணும் ஹேட்ஸ்கூலில் படித்தாள். இருவரும் சின்னவர்கள் தாம்.

ஆனால், அந்தக்காலத்தில் செட்டியார்கள் கோவில் உத்ஸவம் நடத்துவது, குளம் வெட்டுவது செய்வார்கள்.11 தவிற ஒரு விஷயம். அவர்கள் வீட்டில் கல்யாணம் என்றால் ரொம்ப விமரிசையாக நடக்கும்.

அப்போது பிராமணர்களுக்கு வெத்திலைப்பாக்கு கொடுக்கும் போது, பித்தளை பாத்திரம் தருவார்கள். பிராம(ண)ர்களுக்கு தான் தர்மம் செய்வார்கள்?12 இப்படியிருக்கும்போது (அடித்தல், திருத்தல்) மாப்பிள்ளைய மெட்ரிகுலேஷன் எழுதவேண்டும் என்றால், புதுக்கோட்டை போய்த்தான் எழுதவேண்டும். அதனால், மாப்பிள்ளையை13 புதுக்கோட்டை போய் எழுதச்சொன்னார், என் அப்பா. அதே போல் அவர் எழுதி வந்தார். அப்போது என் அப்பா மாப்பிள்ளையைக் கூப்பிட்டு நான் இன்கம்டாக்ஸ் கணக்குகள் கொடுக்கிறேன். 14 அதைப்பார்த்துக்கொண்டுவந்தால் நல்லது. எனக்கு உதவியாக இருக்கும். எனக்குச் செட்டியார் கொடுக்கிற சம்பளம் போதவில்லை. அதனால் உன்னை என்னோடு சேர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

நீ என்ன சொல்கிறாய் சொல் என்று மாப்பிள்ளையைக் கேட்டார்.ஆனால் மாப்பிள்ளை இஷ்டபடவில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் என் அப்பாவிற்கு கொஞ்சம் வருத்தம். இப்படியாக வருஷம் ஆகிவிட்டது?அப்போது எனக்கு 9 வயது. என் தம்பிக்கு 7 வயது ஆகிறது என்றும் எங்களுக்கு கொஞ்சம் நினைவு தெரியும். செட்டியார் வீட்டில் வேலை பார்க்கும்போது நான் தான் டிஃபன் கொண்டு கொடுப்பேன். ஆனால் செட்டியாருக்கு ரங்கூன், சிங்கப்பூரிலிருந்து கடைக்கணக்குகள் வரும். அதோடு எங்களுக்கு பிஸ்கோத்து, பாவாடைத்துணி எல்லாம் வரும். என் அக்கா கல்யாணத்தின்போது நான் ஒரு வயதுக்குழந்தையாம். என்னை அத்திம்பேர் தூக்கி வைத்துக்கொண்டிருப்பாராம். என் அப்பா மாப்பிள்ளையை கோபிப்பாராம். அதே சமயத்தில் அப்பாவிற்கு குடும்பம் நடத்துவது கஷ்டமாக இருந்ததாம். அதனால் தான் வேலை பார்க்கும் செட்டியாரிடம் (அடித்தல் திருத்தல்) 500 ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு மத்ராஸ் போய் ஒரு குமாஸ்தாவை வைத்துக்கொண்டு கணக்கு முடித்து தருகிறேன் என்று வாங்கிக்கொண்டு, அம்மாவிடம் கொஞ்சம் கொடுத்துவிட்டு அப்பா மத்ராஸ் போய்விட்டார்.

9. ருக்மிணி, தன்னை தான் குறிக்கிறார் போலும்.

10. ஊழ்வினையோ, செல்லம் கொடுத்து கெட்டதோ, சகவாசதோஷமோ, மாமாவின் வாழ்க்கையை திசைமாற்றி அலக்கழித்துவிட்டது. திடீரென்று வருவார். திடீரென்று போவார்.

11. நகரத்தார் சமுதாயச்செய்திகள் இந்த வரலாற்றில் பல உள்ளன. வாழ்வு கொடுத்தவர்கள் அல்லவா.

12. கேள்விக்குறி ருக்மிணியின் தார்மீகநிலையை உணர்த்துகிறது.

13. பெரியண்ணாவுக்கு உலகமே நட்பு, தாத்தாவைத்தவிர! ருக்மணி அவரது பிரதாபங்களையையும் விட்டு விடவில்லை. எங்கள் மீது, அவருக்கு அளவு கடந்த வாஞ்சை. அவருக்கு வந்த வெளிநாட்டு கவர்களின் ஸ்டாம்புகளை லாகவமாக எடுத்துக்கொண்ட நான், அவற்றை என் பேத்தி ருக்மணியிடம் கொடுத்துள்ளேன். பெரியண்ணாவுக்கு பெருமிதத்துடன் தோள் கொடுத்தவன்ர்களில், நான் ஒருவன்.

14. அன்றிலிருந்து கடைசிநாள் வரை (என் திருமணத்திற்கு பிறகும்) தாத்தா காரைக்குடியில் பிரபல இன்கம்டாக்ஸ் பிராக்டிஷனர். மேற்படிப்புகள் படித்து உயர் பதவிகள் வகித்த எனக்கு, இன்றும் ஆங்கிலம் அறியாத அவரது ஆற்றலும், திறனும், புதிராகவே உள்ளன. அங்கும் ரகசியமாக ஸ்டாம்புகளை உருவிவிடுவேன். பெரியண்ணாவுக்கு இவருடன் போட்டாப்போட்டி. 1947க்குப்பிறகு, புதுக்கோட்டையில், எங்கள் வீட்டில் தாத்தா விளம்பரப்பலகை வைத்தார். பெரியண்ணாவும் பக்கத்திலேயே தனதையும் பொருத்தினார்! குட்டி சமஸ்தானமா? அங்கு வருமானவரி முன்பு கிடையாது. வருமானவரியை எதிர்த்து மாஜி திவான் ஒருவர் ஹிந்துவில் எழுத, மாணவனாகிய நான், ‘ Does he think tha Pudukkottai is an enclave in Free India?’ என்று மறுப்பு எழுதினேன், காரசாரமாக. என்றுமில்லாத திருநாளாக, பெரியண்ணா அதை தாத்தாவுக்கு வாசித்துக் காட்ட, தாத்தா என்னை அன்றிலிருந்து ‘முந்திரிக்கொட்டை’ என்று தான் கூப்பிடுவார். ‘ இப்போ மட்டும் என்ன வாழ்ந்த்தாம்?’ என்று மின் தமிழில் யாரோ கேக்கிறாளே! புதுக்கோட்டை மெர்ஜெர் ஆன நிகழ்வுக்கு நான் ஒரு சாட்சி..

(நகரத்தார் வாழ்க ,,,)

Saturday, October 17, 2009

Thiru. Vi. Ka, the Tamil Gandhi & His Times. Ch 3:ChinnaINNASAMY

IIIrd Chapter

CHINNASAMY

The native returned thrice to Thullum, his birthplace, which he left in 1890. Dismayed at the derelict remains of his hamlet in 1928, he went back to return in 1938 and met with playmate Appadorai Pillai. His hopes of resettling there were dashed on his third visit in 1940; Appadorai Pillai had died on the day of his visit. He savours though, his accosting Muniammal, his class mate by name, though she failed to recognize him. We see a vignette of rural frankness. She, a poor village housewife going about her humdrum chores, chided the scholar, ‘Chinnasamy! What will you do here? Go back’.

ThiruViKa was born to Vriddachalam Mudaliyar and Chinnammal on August 26, 1883, the sixth child and the second son. The genealogy goes back to Thiruvarur Kandasamy Mudaliyar, which explains the ‘Thiru’ in his initials. The elder boy is ‘peria’ (the senior) and the younger is ‘chinna’ (the junior); ‘samy’ was the common suffix. Thus, his brother, Thiru. Vi. Ulaganatha Mudaliyar and ThiruViKa became Periasami and Chinnasami respectively in family circles. Colleagues and friends in later life referred to them as ‘Peria’ and ‘Chinna’ Mudaliyars. Given to tantrums, Chinnasamy was quite the brat in childhood, the school bully later and played the hooligan in his youth. His parents could hardly discipline him, with his doting grandmother hovering around. Well-built, he took to sports like fish to water, becoming an adept in athletics, martial skills, games like tennis and of all things, in a native form of fencing!

A scare to timid boys, he spared not elders either, if they displeased him. He recalls disturbing public meetings and pelting stones at speakers, whom he did not fancy. He was to become the Tamil Gandhi!

Vriddachalam Mudaliyar, a third-generation scholar, taught Tamil and English to his boys in his thinnaipallikudam, literally the home-school. Keen on reaching the best modern education to his boys, he returned to his Royapettah moorings when Chinnaswamy was seven. Chinnasvamy schooled at Wesley Mission School in 1894 and again from 1898 to 1904, preceded by two years at Aryan Primary School. The interruption in schooling was due to the sudden onset of a rheumatic disability. A diligent student, he always stood first, gaining accolades and winning prizes. He vividly recalls his schooldays and his teachers in his autobiography. He did not finish school, though. The contrarian in him missed a crucial examination, as he was caught up in litigation!

He had to earn a living, his father having died on September 11, 1905. He worked for Spencer & Co for about two years, having qualified himself as an accountant and taught Tamil in a nearby school for six years, thereafter. He became the head of the Tamil department in Wesley Institution in 1916, only to resign that post, the very next year. He was poised to jump into the political fray.

A calamity had befallen him in 1918. He married Kamalambikai on September 13, 1912. Two children were born and did not survive infancy. Devastated, she fell ill and consumption racked her weak physique.

She died on September 18, 1918. There is a moving account of his wedded bliss in his autobiography. The tragedy scarred him forever. Remaining single for the rest of his life, he took to his pursuits with single-minded devotion. Kamalambikai, a sad memory for ever, obviously influenced his feminism. His biographical sketches are from his close associates. They have, for some reason, dealt with this sensitive facet in his life, as though it is a closed chapter.

Reticent and abstemious in private life, he plunged into public life through the Indian National Congress, the Madras Labour Union and by accepting the editorship of Desabhaktan on February 28, 1919. His autobiography hints at the intrigues which made him resign his editorship on July 22, 1920; he would not elaborate. Nearing his forties, he was at crossroads. Coupled with the founding of Justice Party in December 1916, the ubiquitous schisms within the Indian National Congress and the rise of Annie Besant’s Home Rule Movement, for which Desabhaktan was the Tamil flagship, the mix was heady and in its midst, the widower found himself orphaned once again in 1920. He seriously considered withdrawing from public life for governing a girl’s school in distant Karaikudi. Unbeknownst to him, a twenty-year political tenure was beckoning him. Fond of him as they were, his workers bought him a printing press and Navasakthi was born, Periasamy owning the weekly. The gift was actually a rebirth of his working life.

He published his autobiography in 1944. His health deteriorated, diabetes ravaging his body. Cataract surgery failed and he lost his eyesight in 1950. He persisted and took to dictating his books, though he suffered much in later life. He was, for all practical purposes, evicted from his rented premises and found it difficult to go about his life in an unfamiliar rented accommodation, having lost his eyesight earlier.

The end came on September 17, 1953. Periasamy’s family had looked after him with steadfast devotion and sincere love for more than three decades after he was widowed in 1918. Periasamy was his bulwark throughout. Ever the backroom boy and the steam engine behind all the endeavours of his famous brother, he was the more self-effacing of the two. Possessed of practical wisdom, he took care of every thing and never questioned his brother’s judgment and was the Hanuman to the other’s Rama. His service and sacrifices have not been adequately acknowledged by the Tamil world.

The emergence of scholars in his and the earlier generation has some striking features. Most of them missed formal schooling. They took lessons from their fathers at home and then sought out teachers in distant villages. Great scholars, those teachers were obscure and poor. A modern university cannot instill the high academic standards and the wide spectrum of scholarship that they bestowed on their pupils, as to manner born. There is a fair sprinkling of reclusive spirits among them, like Gnaniyar Adigal, Pamban Swamigal, Maraimalai Adigal, Swami Vipulananda of the Ramakrishna Math, Fr. Xavier S. Thani Nayagam S.J, Suddhanantha Bharathi. A significant number of others lost their wives young, but got remarried without much loss of time!

அம்மா சொல்படி ராஜூ: அட்டை

அம்மா சொல்படி ராஜூ

இன்னம்பூரான்

2010

அம்மா சொல்படி ராஜூ: அட்டை

அம்மா சொல்படி ராஜூ

இன்னம்பூரான்

2010

Saturday, September 19, 2009

THE RED RAG & JOHN BULL

ThiruViKa, the Tamil Gandhi

&

His Times

Chapter II

THE RED RAG & JOHN BULL

A slow melancholy procession wended its forlorn way through the streets of Madras, all the way from Choolai to Mylapore on September 18, 1953. ThiruViKa had passed away the previous evening and it was his funeral procession. The workers came in their thousands. He was their father-figure. He gave them voice in 1918. S.C.C. Anthony Pillai (Toni), President of their union was arrested on March 29, 1947, three decades on. Though in frail health, ThiruViKa came to their rescue, donning the mantle of the President once again and was placed under house-arrest. The dubious credit goes to the Congress party, of which he was the Tamil Nadu President in 1927. They recalled those events and the strikes led by him, with misty eyes.

It is his spiritual concern for the oppressed that brought this self-effacing Tamil Scholar, tumbling forth into the confrontational world of unionism. A chance dharshan of James Keir Hardie (1856-1915) in 1908 settled the matter. ‘A scoundrel’ to King Edward VII, he was ‘still an honoured figure’ to Indians, reports his biographer, Kenneth O’ Morgan (later Lord Morgan) in 1967. Hardie was the first Labour leader in the United Kingdom (UK); he advocated of Indian self-rule, women's rights, free schooling and social security and had defied White Labourist ideology. ThiuViKa, a petty clerk in Spencer & Co, the shopping mall of those days, chanced upon him when he came shopping. Aware of Hardie’s work, he stood transfixed. He says that labour activism entered his soul, that very moment.

Great Britain shelters the persecuted as policy and granted asylum to Karl Marx, casting dire warnings from the Austrian Chancellor that he was seeking refuge in Britain for assasinating Queen Victoria, into the dust bin. The rest is history. He came out with the first volume of Das Capital in 1867 and its last volume was published posthumously 1894. The Soviet Revolution 1917, an uprising of the oppressed class, owes its political underpinning to that book. We find ThiuViKa devouring it–seventeen times, he says - and founding the first ever trade union in India, Madras Labour Union (MLU), close on the heels of the Soviet Revolution, in 1918. The British Communist Party, the laggard, came into being only in 1920.

Ki. Aa. Pe. Viswanatham (KiAaPe) (1899-1994), the renowned Tamil writer, recalls ThiruViKa leading the working class unlike the latter-day trade unionists, who deferred to militancy. Subbaraama Kamath (Kamath), owner of Desabakthan felt that he was the bridge between Gandhism and Marxism. Dr. B. Natarajan, the economist, put it this way. The human right activist in him sought integration of Gandhian non-violence with Marxist quest for social justice. He was inflexible in his standards for right conduct and thereby lost the confidence of a section of the working class. This is one of glossed-over areas in both of his biographical sketches. A Vedantin among Marxists, loosely termed as a Gandhian Marxist, he faulted Marxism for wanting in ‘sath’ meaning that it did not subscribe to right conduct of the highest form for the human.

Krishna, the Hindu God, lists three attributes of the human – the saint-like, the pragmatic and the undesirable in 20 verses in Chapter 14 of the Bhagavat Gita, the Song Celestial of Sir Edwin Arnold. ThiruViKa aspired for the saint-like in Marxists. He does not acknowledge this fountainhead and cites his new-found wisdom from the 19th century saint, Ramalinga Adikal (Vallalar) (1823-1874), as the inspiration for his brand of Marxism. It appears from the unfolding events that he used Marxism as the medium for his rallying for the poor. He devotes one-seventh of his bulky autobiography to his labour activism.

ThiruViKa met Bomamji Pestonji Wadia (Wadia) (1881-1958) at Kanchipuram in 1917 and traslated his speech. He was the Annie Besant connection, along with Kamath. He was of capitalist stock, a descendant of the famous Wadia family of shipbuilders. He got involved in the Labour Movement following a recital of their woes by the textile workers of Madras in his office at New India, the mouthpiece of the Home-Rule movement. Preliminary meetings in the fall of 1917 and on March 2, 1918 led to the founding of Madras Labour Union on April 27, 1918, with Wadia as President at Venkatesa Gunamirtha Varshni Sabha, literally translating - the Association Celebrating the Showers of Lord Balaji’s Attributes. ThiruViKa was elected as one of the two Vice-Presidents. The meet is best described in his words,

“Thousands of workers attended that meeting; they filled the ground, sat on the walls, some perching on the trees!”

The unwitting Chair, a government official, thought it was a religious congregation (my words: justifiably so, one would think, given the divinity of the venue!). Aghast at ThiruViKa’s radicalism, he duly entered his plea of disassociation, only to be hooted down by the crowd. Police misbehaved; the workers kept their cool. They openly asked for the Union”. [ThiruViKa (1944). pp. 352-3]

Trade unions were formed in many sectors – railways, tramways, electricity, police, textiles, printing, barbers, scavengers, rikshah-pullers, domestics in European households and so on. The strategist, for once, ThiruViKa, persuaded Kasturiranga Iyengar (1859-1923), the Editor of the Hindu, to head the Police Union. He undertook whirlwind tours to press on and an apex body was constituted on July 4, 1920 with him as the President. He had to contend with intrigues, rival unions, stubborn managements and a hostile administration. White Labourists in the guise of the Anglo-Indian Railway workers and the domestics in British households, pelted stones at him. Torn between the British sense of fair play and colonial hegemony, the Governor of Madras Presidency opted for repressive measures, beating a hasty retreat, when opposition came from unexpected quarters.

An incident in Buckingham Mill led to a lock-out and litigation. Sir C.P. Ramaswamy Iyer (1879-1966), the reformist Anglophile Dewan of Travancore from 1936 to 1947, Sir Alladi Krishnaswamy Iyer (1883-1953), who was to draft the Constitution of India later, with two other luminaries, defended the Labour. In the meanwhile, repression was let loose. ThiruViKa was already under surveillance as a Congressman and a journalist.

Lord Pentland, the Governor, had told him off a few times. Lord Wellington, who succeeded him, summoned him along with others, on July 7, 1921 and admonished them for the violence and arson let loose. Irked by ThiruViKa’s, ‘in the wake of the Judgment Day…’ response, His Lordship threatened his expulsion. The air was already thick with such rumours. Lord Wellington consulted the then Premier, Panagal Maharaja of the Justice party and his colleague, Sir P. Theagaraya Chettiyar; both dissuaded him from this extreme step and offered to resign if he persisted. This displeased ThiruVika as he would take no favours. This was not a charitable response. For one, it was public knowledge that his interveners were more worried about escalating labour disaffection and onset of possible civil unrest. Secondly, he was hardly equal to the rigours of banishment. He had never courted arrest and was in poor health. Thirdly, Sir P. Theagaraya Chettiyar had told him then that his concern for ThiruViKa’s delicate health made him advise the Governor to drop the expulsion move. It is surprising that he did not revise this reaction, while reflecting over his life in 1944. This incident, however, brings out his life-long concern for the working class.

Thursday, September 17, 2009

பெளத்தம்

9/18/2009 2:46 AM

சாக்யமுனியோ, சோக்ரதரோ, வள்ளுவரோ, வள்ளலாரோ, ஒரு சமயத்தை சமைப்பதில் முனையவில்லை. அவர்கள் மனித சமுதாயத்திற்கு வாழ்நெறியொன்று அமைப்பதில் ஆர்வம் கொண்டு, அவரவர்களுக்கு அருளப்பட்ட ஞானப்பிரகாசத்தின் நல்வரவாக, புதியபாதைகள் வகுத்தனர். எனவே, அவை நலிவதில்லை. பிரபஞ்சத்தில் நிரந்தரம் என்று ஒன்று உண்டு எனினில், அவை, இவை போன்ற பாட்டைகளே. நடவுக்காகக் காத்திருக்கும் நாற்றுகள் அழைக்க, வரம்பின் மேல் விரையும் குடியானவன் எவ்வாறு சருக்கியும், வழுக்கியும், வீழ்ந்தெழுந்து காரணநடையை தவறவிட வில்லையோ, அவ்வாறே மனித இனம் தனக்குகந்த வாழ்நெறியிலிருந்து விலகாமல் இருக்கமுடியும்.

சாக்யமுனியின்(கெளதம புத்தர்) உபதேசங்களோ, அவரின் இடைவிடாத பயணங்களில், அவர் அருளிய எடுத்துக்காட்டுக்கள், பொன்மொழிகள் (‘தம்மபாதா’ என்ற தொகுப்பு), குட்டிக்கதைகள் எல்லாமே, எளிய மொழியில், விமர்சனத்தேவையற்றதாக அமைந்தன. பாமரமக்களே அவரது இலக்கு. பெளத்தம், ஒரு மதம் இல்லை, வாழ்நெறியே என்று தான் அவர் கூறினார். மேலும் இது பிக்ஷுக்களுக்கு மட்டுமல்ல, உனக்கும், எனக்கும் என்று தான் அவரது நேரடிநிலை. ‘மணிமேகலையில்’ இந்த வாழ்நெறியைப்பற்றி, அடிக்கொரு விளக்கம் கிடைக்கிறது. மணிமேகலை தொன்மையான தமிழ் இலக்கியம். ஒரு தொடர்கதையின் இரண்டாம் பாகம். அதன் காலம், சாக்யமுனியின் காலத்தை ஒட்டியது. ஒட்டுப்போடப்படாதது.

‘தம்மபாதா’ வின் முதல் செய்யுள், ஒரு உளவியல் ஆய்வு. மனநிலைகளை உந்துவது, அவற்றின் தலைவனாகிய மனம் என்றும், தூயமனம் இல்லை எனின், பேச்சும், செயலும், வண்டிமாட்டின் சுவடுகளை பின்பற்றும் வண்டிச்சக்கரத்தைப் போல, மாசுபடுத்ததாக அமையும், என்று அது தொடங்குவதே, புதியதொரு,நலிவில்லா வாழ்நெறியே.