Tuesday, January 24, 2017

ஜல்லிக்கட்டு/ இருவர் மரணம்/ இழப்பீடு

ஜல்லிக்கட்டு/ இருவர் மரணம்/ இழப்பீடு

Innamburan S.Soundararajan Wed, Jan 25, 2017 at 11:03 AM

Bcc: 

ராப்பூசல் ஜல்லிக்கட்டில்  நடந்த இந்த துர்மரண நிகழ்வை உள்ளது உள்ளபடியே தொலைக்காட்சியில் கண்ட போது மனம் பதைபதைத்தது. தமிழ் பண்பும் அங்கு சிதைக்கப்படுவதை கண்டு கவலை மிகுந்தது. இன்றைய சூழ்நிலையில் ட்றம்ப் கூட ஜல்லிக்கட்டை ஆதரிக்காமல் பேசினால், மெரினா கடற்கரையில், 'மாணவர்களால்'உதைப்பட்டு சாவார். ஆகவே, கலித்தொகை ஏறுதழுவலுக்கு ஒவ்வாத வகையில் தற்காலம் நடத்தப்படும் பந்தய சூதாட்டம், இளைஞர்கள் சாவு, காளையில் பீதி, அவசர சட்டம், போராட்டம், பொது மக்கள் அவதி ஆகியவற்றை பற்றி பேச காந்திஜியும், பாரதியாரும் நடுங்கக்கூடிய நன்னாள், இது.

எது எப்படியிருந்தாலும், அகாலமரணம் அடைந்த ராஜாவின்,மோஹனின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 

இரு வினாக்கள் எழுகின்றன:

1. திருமாவளவன் அவர்கள்,அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் சொந்த நிதியிலிருந்தோ/ கட்சி நிதியிலிருந்தோ, மற்ற ராப்பூசல் கிராமத்தில் அந்த காளையை பழக்கிய செல்வந்தரோ ஏதாவது உதவினார்களா?
2. இந்த துர்மரணங்கள் விபத்தினால் நிகழவில்லை. வரவழைத்துக்கொண்டவை, சுய விருப்பத்தின் அடிப்படையில். ராஜா ஏழை; குடும்பஸ்தர். மோஹன் படித்த மேதை. வரிப்பணத்தை மேற்படி இழப்பீடுகளில் செலவழிப்பது சரி தானா?
சிந்தனை செய்யுங்கள். காழ்ப்புணர்ச்சி தவிர்க்க வேண்டுகோள்.

இன்னம்பூரான்
*******************************
புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாகட்டிடத் தொழிலாளியான இவருக்கு மனைவி கலாமகன்கள் பொன்மணிநிதர்சன்உள்ளனர்.
ராப்பூசலில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றபோதுவாடிவாசலில் ராஜா நின்றுள்ளார்அங்கு சீறிப் பாய்ந்து வந்த காளைராஜாவின் இடுப்பில்முட்டியதால் காயம் அடைந்த ராஜா உயிஇழப்பீடுரிழந்தார்.இதேபோலகீரனூர் அருகே யுள்ள லெட்சுமணபட்டியைச் சேர்ந்த மோகன்எம்.., எம்.பில்படித்தவர்அதிமுக ஆதரவாள ரான மோகன்அமைச்சர் சி.விஜய பாஸ்கருடன் இருந்துராப்பூசல் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடு களைக்கவனித்துள்ளார்.
இந்நிலையில்நேற்று நடை பெற்ற ஜல்லிக்கட்டின்போது காளையை அடக்க மோகன் முயன்ற அவரது இடுப்பில் காளை முட்டியதால் இலுப்பூர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்பின்னர்இருவரது சடலங்களும் புதுக்கோட்டை அரசுமருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை முடித்து ஊருக்கு கொண்டு செல்லப்பட்டன.
அவர்களையே நம்பி இருந்த அவர்களது குடும்பத்தினரை தவிக்கவிட்டுச் சென்றதாக இவர்களது உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.'
~ தி இந்து ஜனவரி 23, 2017

'ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசர சட்டம் நிறைவேற்றிவிட்டோம் என தமிழக அரசாங்கம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில்புதுக்கோட்டையில் தமிழக அமைச்சர் ஒருவரால் தொடங்கிவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் 2 பேர் பரிதாபமாகஉயிரிழந்துள்ளனர்சுமார் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர்உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பாதுகாப்பாக நடத்துவதில் அக்கறைகாட்டாமல் அவசர சட்டம் கொண்டுவந்ததற்கு சொந்தம் கொண்டாடுவதில் மட்டுமேஆர்வம் காட்டிய தமிழக அரசின் நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம்உயிரிழந்த இளைஞர்களது மரணத்துக்குதமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா 25 லட்சம் ரூபாய்இழப்பீடு வழங்கவேண்டும்காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியும்தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கவேண்டும் என விடுதலைசிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். '

~ தினத்தந்தி &  தி இந்து ஜனவரி 23, 2017


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment