Thursday, September 1, 2016

சிவகாமியின் செல்வன் 1

I

சிவகாமியின் செல்வன் 1


Thu, Sep 1, 2016 at 6:53 PM

சிவகாமியின் செல்வன் 1

காமராசரின் மதம் பற்றிய பார்வையை பற்றிய தொகுப்பு பலருடன் அளவளாவியதை திரு. வீரபாண்டியன் என்ற சன் டி.வி தொகுப்பாளர் வழங்கியது. எனது அறியாமையினாலும், இயலாமையினாலும், அந்த இழையை என்னால் மீட்க முடியவில்லை. அதன் தொடர்பு இங்கே:

“வானவில்” 
பார்க்க:  ஆடி 2016 இதழ், பக்கம் 12-13    

*
அதன் கோணம் ஒரு புறம் இருக்க, 'பெரியவர்' என்று நெருங்கியவர்களால் அறியப்பட்ட 'சிவகாமியின் செல்வன்'  காமராஜர் என்ற பன்முகம் தாங்கிய மாமனிதரை பற்றி தற்கால தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலால், இந்த தொடரை துவக்கத் துணிந்தேன். தமிழ்நாட்டின் முதலமைச்சர்களின் -திருவாளர்கள் டி.பிரகாசம், ராஜாஜி, காமராஜர், ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, பக்தவத்ஸலம், கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோரின் ராஜ்ய பரிபாலனத்தை, பிரஜை, உத்யோகஸ்தன் என்ற முறையில் நேரடியாக அறிந்த நான் கூற விரும்புவது: 

அந்த பட்டியலில், பெரியவர் காமராஜர் ஒருவர் தான் மக்கள் நலம் மட்டுமே நாடி, பாமரனுடன் ஒன்றி, அதற்காக இடை விடாமல், பதவியை பொருட்படுத்தாமல், உழைத்தவர். ஐய்க்கண் அவர்களில் மேன்மக்களில் ஒருவர், அவர். மற்ற முதல்வர்களை பற்றி இங்கு கருத்து கூறப்போவதில்லை, திசை மாற்றத்தைத் தவிர்க்கவேண்டி.

அவரை பற்றி நான் முதலில் அறிந்து கொண்டது: விடுதலை போராட்டத்தில், அடிபட்டு இரு இளைஞர்கள் மூர்ச்சையில் தெருவில் கிடக்கிறார்கள். ஒருவர் நமது பெரியவர். அடுத்து கிடந்தது, டி. பிரகாசம். பிற்கால அரசியலில் அவர்கள் இருவரும் எதிர் துருவங்கள்!

கீழ்க்கண்டது மீள்பதிவு:

"அண்டை வீட்டுக்காரன் என்ற வகையில் பெருந்தகை காமராஜர் அவர்களை நான் நன்றாக அறிவேன். நான் ஜூனியர் உத்யோகஸ்தன். அவர் முதல்வர். அடிக்கடி அவர் வீட்டு வாசற்படி அளவுளாவுதல் சில நிமிடங்கள் நடக்கும். ஏனென்றால், என் மூன்று வயது மைந்தனை அவருக்கு பிடிக்கும். நன்முத்துக்கள் உதிரும். நான் புரிந்து கொண்டது:

அவர் அரசியலர். மதம் அவருக்கு ஒரு பொருட்டு அல்ல. அது தான் விதுர நீதி எனலாம். ஆனால், அவர் மத நம்பிக்கையை தகர்க்கவில்லை. இழிச்சொல் பேசவில்லை. அத்தகைய இழிச்சொல்லை கல்வெட்டில் பதிக்கவில்லை. திரு. உத்தாண்டராமபிள்ளை என்ற உயர் அதிகாரி ஒரு மாமனிதர். இந்து மத கோயில்களின் நிர்வாகம் செய்து வந்தார். மரபுகளையும். நாணயத்தையும் மீறும் கோயில் ஊழியர்களை அவர் தண்டித்தார். காமராஜர் அமைச்சைரவையில் இருந்த திரு பக்தவத்சலம் கோயில் செல்லுமம் பக்திமான். அவருடைய தெய்வநம்பிக்கையை காமராஜர் மதித்து நடந்தார். ஒரு மத்திய அரசு அமைச்சர் திரு ராமசாமி ஒரு கோயிலில் ஆத்திரம் மிகுந்து நடந்து கொண்டார். மரபுகளை நிந்தித்தார். திரு.பக்தவத்சலம் அவர்கள் திரு. ராமசாமிக்கு இனி கோயில்களில் வரவேற்பு இருக்காது என்று ஆணை பிறப்பித்தார்.


அன்புடன்,
இன்னம்பூரான்
*
பெரியவர் சுதந்திர இந்தியாவின் மைல்கல்கள் ஆன நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருந்த காலகட்டங்களில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களிலும், அவற்றின் பின்னணியிலும் முத்திரை பதித்தவர். இன்று கண்ணதாசன் அவரை பற்றி பாடிய கவிதையை பகிர்ந்து கொள்கிறேன்.

சொத்துசுகம்
நாடார்,
சொந்தந்தனை
நாடார்
பொன்னென்றும்
நாடார்,
பொருள் நாடார்,
தான்பிறந்த
அன்னையையும்
நாடார்,
ஆசைதனை
நாடார்,
நாடொன்றே
நாடித்தன்
நலமொன்றும்
நாடாத
நாடாரை
நாடென்றார்.

பிற பின்னர்.
[தொடரும்]

இன்னம்பூரான்


ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
தன் சுக துக்கங்களை நாடாத, தன் நாட்டு மக்களின் நலன் மட்டும் நாடிய தமிழ்நாடன் பற்றிய தங்களது பதிவு அருமை.
பெரியவரின் வாழ்க்கை நேரில் அறிந்தவர் என்ற வகையில் தங்களது பதிவுகள் சிறப்புப் பெருகின்றன ஐயா.
தொடர்ந்து பெரியவரின் சிறப்புக்களைப்
 பிரஜை, உத்யோகஸ்தன் என்ற முறையில் நேரடியாக அறிந்த தங்களது பதிவுகளைப் படிக்க  ஆவலாய் உள்ளேன்.

அன்பன்
கி.காளைராசன்




No comments:

Post a Comment