Monday, April 4, 2016

பால் மாறினாலும் சொல் மாறாதே! சொல் மாறாதே, பால் மாறினாலும்!

பால் மாறினாலும் சொல் மாறாதே! சொல் மாறாதே, பால் மாறினாலும்!

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி. பல்லென்னவோ சொல்லுக்கு உறுதி. மாணிக்கவேலு முதலியார் உள்ளூரில் பெரிய புள்ளி. மாவட்டத்தில் சற்றே சிறிய புள்ளி. மாநிலத்தில் சின்ன புள்ளி. பாரத நாட்டில் தம்மாத்தூண்டு புள்ளி. அவரு ஒரு நாள் தன்னுடைய மாருதி காரில் மாருத துல்ய வேகமாக, செங்கல்பட்டிலிருந்து தருமமிகு சென்னைக்கு செல்லும் போது, மாமாண்டூரில் ஹெட் கான்ஸ்டபிள் முனுசாமி விசிலடித்து நிறுத்தி, பேரையும், ஊரையும் எழுதிக்கொண்டு ரெஜிஸ்ட்ரேஷன் புக்கை வாங்கிப்பார்த்தார். ‘ஐயா இங்கே 60 கிலோமீட்டதில் தான் ஓட்டலாம்னு ரூலு. நீங்க 61 கிலோமீட்டரில் ஓட்றீங்க. கண்ணுக்குக் கண்ணாடிப் போட்டு ஓட்டணும்னு போட்றிக்கு. போட்டுக்கில்லை. பிடி சாபம்’  என்று சலானித்தார். முதலியார் கிளம்பச்ச சம்சாரம் கொடுத்த தாம்பூலத்தைத் துப்பாமல், இது வரை தப்பி வந்தார். ஆகவே, ‘நான் காண்டேக்ஷ்ஷ்...’ என்றவுடன், ‘சாமி! இது எலெக்ஷன் டைம். நாங்க வணங்காமுடியா இயங்கலாம். நீங்க எந்த மந்திரி தந்திரி காண்டேக்ட் சொன்னாலும், நாங்க டோண்ட் கேர், இன்னம்பூரானைப்போல, என்றார்.
முதலியார் பாவம் சொத்து இருந்தததால், ஷோக்குக்கு காண்டேக்ட் கண்ணாடி...
சரி விடுங்க. வேந்தன் வந்தா பேசிக்கலாம்.
இன்னம்பூரான்
04 04 2016
சித்திரத்துக்கு நன்றி: 

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment