Friday, March 21, 2014

சடுதியில் உருப்படியாக முடிச்சவிழ்க்க…[2]

சடுதியில் உருப்படியாக முடிச்சவிழ்க்க…[2]
  1. Friday, March 21, 2014, 5:06
  2. Featured, இலக்கியம், பத்திகள்

பிரசுரம் & நன்றி: http://www.vallamai.com/?p=43250


இன்னம்பூரான்

ஆங்கிலத்தில் ‘the plot thickens’ என்பார்கள். அதாவது மர்மங்கள் கூடுகின்றன. மாஜி அதிகார வர்க்கம் CBI யின் தடாலடி செயலைக் கண்டித்தால் ‘இனம் இனத்தோடு சேர்கிறது என்று சால்ஜாப்பலாம். ஆனால் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் CBI யின் தடாலடி செயலைக் கண்டிக்கிறார். நிதியமைச்சர் ப.சிதம்பரனார் CBI யின் தடாலடி செயல், முழு விவரங்கள் அறியாமையிலே அமைந்து விட்டது என்று குறிப்பால் உணர்த்துகிறார். என்னடா இது? இவர்கள் சேம்ஸைட் கோல் போடுகிறார்களா அல்லது ‘the plot thickensaa?’ என்ற ஐயம் எழுகிறது. மேற்படி அரசியல்வாதிகள் யாதும் அறிந்த அரசியல் ஞானிகள். சேம்ஸைட் கோல் போடமாட்டார்கள். அது திண்ணம். ஆக மொத்தம், மர்மங்கள் கூடுகின்றன.
கொஞ்சம் புரிந்து கொள்ள SEBIயின் மாஜி தலைவர் பவே அவர்கள் சொல்வதை பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும்.
MCX-SX மேல் வைக்கப்பட்ட வருமானவரி குற்றத்தில் சத்து ஒன்றுமில்லை என்று நிதித்துறையே அறிவித்ததை, CBI ஏன் கண்டு கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது?
அவர்கள் ஏன் மகளுக்கு ஒரு நீதி, மருமகளுக்கு ஒரு நீதி என்று இயங்குகிறார்கள்?
என்னிடம் உள்ள சில மர்மங்களை பொது மன்றத்தில் வைக்கும் காலம் வந்து விட்டது.
சஹாரா நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதிற்கு, இது தண்டனையா என்று கேட்டதற்கு, ‘இருக்கலாம். நான் ஊடகங்களிலிருந்து தான் தெரிந்து கொள்கிறேன்’ என்றார்.
FTIL/MCX-SX உரிமங்கள் முறைகேடாகக் கொடுக்கப்படவில்லை. அதனால் அவர்களுக்கு ஆதாயம் இல்லை. அரசு கொள்கைக்கு உகந்தவாறு, போட்டி வரவேற்கப்பட்டது என்றார். குற்றச்சாட்டு பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என்றார்.
அவருடைய ஐந்தாவது பதிலுக்கு சான்று, அவருடைய கண்காணிப்பும், தரமுயர்ந்த நாணயமான புதுமை உத்திகளே. இதை CBI கூட மறுக்கவில்லை.
ஆட்டுவிப்பது யாரு?
ஒரு பழைய தகவல் நினைவுக்கு வருகிறது. ‘The Craft of Audit’ என்ற என் ஆய்வுக்கட்டுரையை ஒரு பன்னாட்டு ஆடிட் இதழுக்கு கேட்டிருந்தார்கள் அதன் சாராம்சம்:
உன்னால் தணிக்கை செய்யப்படுவர்களில் மூன்று வகை உண்டு. முதல் வகை விதிப்படி இயங்குவர். சின்ன சின்ன விதிவிலக்கு இருக்கலாம். அதை பெரிது படுத்தாமல், இடம், பொருள் , ஏவல் கருதி தணிக்கை செய்யவும். இரண்டாவது வகை எல்லா விதிகளையும், சரியோ தப்போ, கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு, இயக்கி இருப்பான். அவனை இரக்கமில்லாமல் தணிக்கை செய். பெருங்குற்றங்களை மறைக்க விதி வைக்கப்போர் கை கொடுக்கும். அவன் பாயில் புகுபவன் என்றால், நீ கோலத்தில் புகுந்து ஆடிட் செய். மூன்றாவது வகை விதியின் இலக்கணத்தை மீறாவிடினும், இட்ட காரியத்தை முடிப்பதில் கருமமே கண்ணாயிருப்பர். மதி குறைந்த விதியை அவர்கள் மீறிருப்பர். தாரதம்யம் அறிந்து அவர்களை ஆடிட் செய். தொழில் விவரங்கள் அறிந்து இயங்கு.
(தொடரும்)

சித்திரத்துக்கு நன்றி: http://kccollegegameday.com/wp-content/uploads/2013/11/theplotthickens.jpg

No comments:

Post a Comment