Thursday, July 25, 2013

9/11:அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:2




அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:2
சித்திரத்துக்கு நன்றி: http://coolinterestingstuff.com/wp-content/uploads/2012/09/911-ground-zero.jpg


Innamburan Innamburan Sun, Sep 11, 2011 at 6:52 AM



அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:2

இந்த 9/11 பயங்கரத்தை தொலைக்காட்சியில் ‘ லைவ்’ ஆக பார்க்க நேரிட்டது, பத்து வருடங்கள் முன்னால். (2001 இன்றைய தேதி). அதை பற்றி பேச்சு எழுந்தால், முதற்கண்ணாக, ந்யூ யார்க் நகரின் தீயணைப்புப் படைக்கு, சிரம் தாழ்த்தி, வீர வணக்கம் செய்வது என் வழக்கம். கடமையாற்றுவதின் உயர்நிலையில் பணியாற்றி, அவர்களில் பலர் மாண்டனர். ‘ லொட்டு லொசுக்கு மண்ணாங்கட்டி’ என ‘இது உள்குத்து’, ‘இது வேண்டுமென்று செய்த கட்டிட நாசம்’ ‘பெண்டகனை தாக்கியது ஒரு ஏவு கணை’ போன்ற வதந்திகள், இன்னும் அதனுடைய பின்னணி மர்மங்கள் ஒளிக்கப்பட்டு இருக்கின்றன என்ற கசப்பு உண்மையை மறைக்கின்றன. சில மர்மங்கள் ~சுருக்கமாக:
வேவு துறைகளை பற்றிய அமெரிக்க நாடாளும் மன்றங்களின் 800 பக்க கூட்டறிக்கை ஜூலை 2004 ல் வெளியிடப்பட்டது, 28 பக்கங்களை தவிர்த்து. புஷ் மூடி வைத்த அந்த மர்மத்தை ஒபாமாவும் அடை காக்கிறார்! ஹேஷ்யங்கள் பல. அமெரிக்க ஆய்வாளர்கள் எதையும் விட்டு வைப்பதில்லை. உசாத்துணையில் சுட்டிருக்கும் நூல், ந்யூஸ்வீக் இதழின் அலசல், ஆகியவை இந்த வகை. அவற்றிலிருந்து, சில துளிகளின் தொகுப்பு:
  1. அக்காலத்து ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட்: ‘இத்தகைய பின்பலம் இல்லாமல் அல்-கொய்தா யாதும் செய்திருக்க முடியாது. இவர்களின் உதவி உண்டு. எனக்கு பல விஷயங்கள் தெரியும். அதனால் தான் அழுத்தம் திருத்தமாக, சொல்கிறேன்.’ விவரம் கேட்டபோது, யோசித்தார். சிக்கல் என்றார். வாயை மூடிக்கொண்டார்.
  2. பாப் கிரஹாம்: அந்த கூட்டறிக்கை கமிட்டி அக்ராசனர்களில் ஒருவர்:‘ஸெளதி அரேபிய அரசும், சில அன்னாட்டு பிரமுகர்களும் இந்த பயங்கரவாதிகளுக்கு (அவர்களில் 15 பேர் அன்னாட்டு மக்கள்) பல உதவிகள் செய்தனர். அவையில்லாமல், இது சாத்தியமே அல்ல.”
  3. அமெரிக்கா-வாழ் அரேபியர் (ஒமர் அல் பயொமி) இரு பயங்கரவாதிகள் அமெரிக்கா வர, காசு கொடுத்தார். மூன்று அரேபியர் மீது சந்தேஹம். ஆனால், ஆக்ஷன் ஒன்றுமில்லை.
  4. இதே மாதிரி அன்வர் அல் லகி என்ற அமெரிக்க இஸ்லாமிய போதகரை தப்பிக்க விட்டார்கள். அவர் இப்போது ஏமன் நாட்டில். அமெரிக்கா அவரை கொலை செய்ய விரும்புகிறது.
  5. பயணிகளால் மீட்கப்பட்ட விமானம் பென்ஸில்வேனியாவில் வீழ்ந்தது. அதை சுட்டு வீழ்த்த ஆணையளித்ததாக அதிபர் புஷ்ஷும், துணை அதிபர் செய்னீயும் சொல்கிறார்கள். ஒருவர் விமானத்தில்; ஒருவர் பாசறையில். இந்த ஆணை பதிவே ஆகவில்லை!
  6. புஷ்ஷும், செய்னியும் தங்கள் வாக்குமூலம் பதிவு செய்யக்கூடாது என்றனர். ஏன்? ஏன்?
  7. ஈரான் இந்த சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிட்டவில்லை; ஆனால். மேற்படி கமிஷன், விமான பயணங்களுக்கு அவர்கள் செய்த உதவிகள் பற்றிய சாக்ஷியங்கள், வலுவான சந்தேஹங்களை கிளப்பின. சர்க்கார் காஷ்ட மெளனம்.
  8. ஈராக் இந்த சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிட்டவில்லை.
  9. ஸெளதி தூதுவர் இளவரசர் பண்டார் பின் சுல்தான், இந்த கமிஷன் தன் நாட்டின் வாய்மையையும், ஈடுபாடாததையும் நிரூபித்து விட்டது என்கிறார், ஒரு துணுக்கு ஆதாரமில்லாமல். 
  10.  எத்தனை டென்ஷன் இந்த ரிப்போர்ட் தயாரிப்பதில்! ராஜேஷ் டேயும் மைக்கேல் ஜாகோப்ஸனும் நோண்டி, நோண்டி எடுப்பதையெல்லாம், ஸ்னெல் குழி பறித்து மூடிக்கொண்டிருந்தார்!
  11.  அந்த கமிஷன் எண்ணெய் உறவு மட்டும் போதாது; வெறி பிடித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் நாட்டம் வேண்டும் என்றது. கேட்பார் இல்லையே.
  12.  9/11 க்கு ஏழு வருடங்கள் முன்னால், முகம்மது அல் கிலெவி என்ற ஸெளதி உயர் அதிகாரி. ஆயிரக்கணக்கான ஆவணங்களுடன் (கொடுங்கோல்; மனித உரிமை பறிப்பு; ஊழல்: பயங்கரவாதம்) அமெரிக்காவில் சரணடைந்தார். செளதி அரசரிடம் மக்களுக்கு அரசில் பங்கு நாடி விண்ணப்பித்தார். அமெரிக்கா அவரை கண்டு கொள்ளவில்லை. ஸெளதி அரசோ உயிருக்கு ஆபத்து என்றது.
உசாத்துணையில் சுட்டியிருக்கும் நூல் இன்னும் வெளிவரவில்லை. சில பகுதிகள் எட்டிப்பார்க்கின்றன. இன்னம் பல மர்மங்களை அலசினால், கட்டுரை நீண்டுவிடும். வாசகர்களுக்கு சலித்து விடும். கேட்பவர்களுக்கு, இணைப்பு தருகிறேன்.
இதெல்லாம் சரி. 9/11 வரலாறு ‘திக்’ ‘திக்’ என்று மாற்றி அமைக்கப்படலாம்.
நம் நாட்டிலும், எந்த புற்றில் எந்தப் பாம்போ?
இன்னம்பூரான்
11 09 20113mc3p33la5T05Z25X6b71584fc215a1571c9e.jpg
pastedGraphic.pdf
உசாத்துணை:
Summers.A & Swan.R:The Eleventh Day: The Full Story of 9/11 and Osama bin Laden 

Nagarajan Vadivel Sun, Sep 11, 2011 at 7:29 AM



ட்வின் டவரிலும் பெண்டகனிலும் பெற்ற வெற்றி வெள்ளை மாளிகையில் தோற்றுப்போனது
விமானம் வெள்ளை மாளி்கையைத் தாக்கப்போகிறது என்பதை உணர்ந்து உயிரைத் துச்சமாக மதித்து அமரிக்காவின் இறையாண்மைக் காக்க தங்களைக் காவுகொடுத்த அமெரிக்கக் குடிமக்கள் சிந்திய ரத்தம்
அதிபர் ஃப்ளோரிடாப் பள்ளியில் எலி வங்குக்குள்.  இங்கே நாட்டின் குடிமக்கள் போரிட்டு வெள்ளை மாளிகையைக் காப்பாற்றுகின்றனர்
தொலைக்காட்சியின் வெளிச்சத்தில் இரட்டைக்கோபுரம் கதை நாயகனாயிற்று.  உண்மைத் தியாகிகள் இன்றுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை
நாகராசன்
2011/9/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>

coral shree Sun, Sep 11, 2011 at 8:58 AM
To: Innamburan Innamburan

மனம் கனக்கச் செய்யும் சோக நினைவலைகள்..........

//, முதற்கண்ணாக, ந்யூ யார்க் நகரின் தீயணைப்புப் படைக்கு, சிரம் தாழ்த்தி, வீர வணக்கம் செய்வது என் வழக்கம். கடமையாற்றுவதின் உயர்நிலையில் பணியாற்றி, அவர்களில் பலர் மாண்டனர். ‘ // மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரும் எண்ணி , எண்ணி வீர வணக்கம் செலுத்த வேண்டிய செயல்........

//அந்த கமிஷன் எண்ணெய் உறவு மட்டும் போதாது; வெறி பிடித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் நாட்டம் வேண்டும் என்றது. கேட்பார் இல்லையே.//

ஆம் ஐயா......கேட்பார் இருந்தால் இன்று உலகம் இப்படி தீவிரவாதம் என்ற அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்காதே.........  நல்ல பகிர்வு . நன்றிகள் பல.

coral shree Sun, Sep 11, 2011 at 9:11 AM



மனம் கனக்கச் செய்யும் சோக நினைவலைகள்..........

//, முதற்கண்ணாக, ந்யூ யார்க் நகரின் தீயணைப்புப் படைக்கு, சிரம் தாழ்த்தி, வீர வணக்கம் செய்வது என் வழக்கம். கடமையாற்றுவதின் உயர்நிலையில் பணியாற்றி, அவர்களில் பலர் மாண்டனர். ‘ // மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரும் எண்ணி , எண்ணி வீர வணக்கம் செலுத்த வேண்டிய செயல்........

//அந்த கமிஷன் எண்ணெய் உறவு மட்டும் போதாது; வெறி பிடித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் நாட்டம் வேண்டும் என்றது. கேட்பார் இல்லையே.//

ஆம் ஐயா......கேட்பார் இருந்தால் இன்று உலகம் இப்படி தீவிரவாதம் என்ற அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்காதே.........  நல்ல பகிர்வு . நன்றிகள் பல.


Geetha Sambasivam Sun, Sep 11, 2011 at 5:04 PM


இன்னம் பல மர்மங்களை அலசினால், கட்டுரை நீண்டுவிடும். வாசகர்களுக்கு சலித்து விடும். கேட்பவர்களுக்கு, இணைப்பு தருகிறேன்.
இதெல்லாம் சரி. 9/11 வரலாறு ‘திக்’ ‘திக்’ என்று மாற்றி அமைக்கப்படலாம்.
நம் நாட்டிலும், எந்த புற்றில் எந்தப் பாம்போ?//

சலிக்காது ஐயா. விபரங்கள் கொடுங்கள். நம் நாட்டிலும் எப்போது என்ன நடக்குமோ என்ற பீதி தான்! :((((((((  நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் மட்டும் கிடைத்தால்!!!!!!!!!!!! கனவு தான்! :(


2011/9/11 Innamburan Innamburan <innamburan@gmail.com&gt

செல்வன் Mon, Sep 12, 2011 at 2:55 AM


தமிழ் புத்தாண்டு விஷயத்திலேயே கான்ஸ்பைரசி தியரிகள் ஓயவில்லை.9/11ல் அடங்குமா?

அமெரிக்காவில் ட்ரூத்தர்கள் என்ற இயக்கம் 9/11 பற்றிய உண்மைகளை வெளியே கொண்டுவர போராடுகிறது.பிளாட் எர்த் சொசைட்டிக்கு இருக்கும் வரவேற்பு இவர்களுக்கும் இருக்கதான் செய்கிறது:-)

[Quoted text hidden]
--
செல்வன்


Innamburan Innamburan Mon, Sep 12, 2011 at 3:02 AM

செல்வன்! கம் டு த பாயிண்ட்டு.

செல்வன் Mon, Sep 12, 2011 at 3:08 AM


பாயிண்ட் எளிமை ஐயா

கான்ஸ்பைரசி தியரிகளை நம்பவேண்டாம் என்பதே.


Innamburan Innamburan Mon, Sep 12, 2011 at 3:19 AM


நான் கண்டதையெல்லாம் நம்பச்சொல்லவில்லையே. ஆனால், கேட்டக் கேள்விக்கு பதில் எங்கே?எங்கே?எங்கே?

செல்வன் Mon, Sep 12, 2011 at 4:40 AM

9/11 பற்றி ஆயிரகணக்கில் ரிப்போர்ட்டுகள் இருக்கும்.அதில் எங்காவது இருக்கும்.

மற்றபடி 9/11 இன்சைட் ஜாப் என கருதுகிறீர்களா?இல்லை என்றால் மேட்டர் ஓவர்.
[Quoted text hidden]

Raja sankar Mon, Sep 12, 2011 at 4:47 AM


இரண்டு டவர்களும் இடிந்து விழுந்தது பற்றி பல ஆராய்ச்சி நடந்து பின் அமெரிக்காவின் பெரிய கட்டிடங்கள் கட்டும் விதியை மாற்றி உள்ளார்கள்.

கான்ஸ்பிரசி தியரிக்கள் எல்லாம் அடிப்படை ஆதாரமே இல்லாமல் எழுதப்படுபவை.

ராஜசங்கர்


Innamburan Innamburan Mon, Sep 12, 2011 at 7:40 AM


அக்காலத்து ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் சொன்னது/: பாப் கிரஹாம்: அந்த கூட்டறிக்கை கமிட்டி அக்ராசனர்களில் ஒருவர் சொன்னது/ஒமர் அல் பயொமி இரு பயங்கரவாதிகள் அமெரிக்கா வர, காசு கொடுத்தது/. அன்வர் அல் லகி என்ற அமெரிக்க இஸ்லாமிய போதகரை தப்பிக்க விட்டது/. அதிபர் புஷ்ஷும், துணை அதிபர் செய்னீயும் முரண் பேசுவது/புஷ்ஷும், செய்னியும் தங்கள் வாக்குமூலம் பதிவு செய்யக்கூடாது என்றது/.ஈரான் பற்றிய சாக்ஷியங்கள், வலுவான சந்தேஹங்களை கிளப்பின. சர்க்கார் காஷ்ட மெளனம்டென்ஷன் இந்த ரிப்போர்ட் தயாரிப்பதில்!/9/11 க்கு ஏழு வருடங்கள் முன்னால், முகம்மது அல் கிலெவி என்ற ஸெளதி உயர் அதிகாரி. ஆயிரக்கணக்கான ஆவணங்களுடன் (கொடுங்கோல்; மனித உரிமை பறிப்பு; ஊழல்: பயங்கரவாதம்) அமெரிக்காவில் சரணடைந்தார். செளதி அரசரிடம் மக்களுக்கு அரசில் பங்கு நாடி விண்ணப்பித்தார். அமெரிக்கா அவரை கண்டு கொள்ளவில்லை. ஸெளதி அரசோ உயிருக்கு ஆபத்து என்றது/ எல்லாவற்றிற்கும் மேலாக, மட்டுறுத்தப்பட்ட 28 பக்கங்கள்........?!

    ~ உறங்குபவனை எழுப்பலாம். கண்ணை மூடிக்கொண்டு இருப்பவனை எழுப்ப முடியாது.
    இன்னம்பூரான்


    செல்வன் Mon, Sep 12, 2011 at 4:18 PM




    2011/9/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
    அக்காலத்து ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் சொன்னது/: பாப் கிரஹாம்: அந்த கூட்டறிக்கை கமிட்டி அக்ராசனர்களில் ஒருவர் சொன்னது/ஒமர் அல் பயொமி இரு பயங்கரவாதிகள் அமெரிக்கா வர, காசு கொடுத்தது/. அன்வர் அல் லகி என்ற அமெரிக்க இஸ்லாமிய போதகரை தப்பிக்க விட்டது/. அதிபர் புஷ்ஷும், துணை அதிபர் செய்னீயும் முரண் பேசுவது/புஷ்ஷும், செய்னியும் தங்கள் வாக்குமூலம் பதிவு செய்யக்கூடாது என்றது/.ஈரான் பற்றிய சாக்ஷியங்கள், வலுவான சந்தேஹங்களை கிளப்பின. சர்க்கார் காஷ்ட மெளனம்டென்ஷன் இந்த ரிப்போர்ட் தயாரிப்பதில்!/9/11 க்கு ஏழு வருடங்கள் முன்னால், முகம்மது அல் கிலெவி என்ற ஸெளதி உயர் அதிகாரி. ஆயிரக்கணக்கான ஆவணங்களுடன் (கொடுங்கோல்; மனித உரிமை பறிப்பு; ஊழல்: பயங்கரவாதம்) அமெரிக்காவில் சரணடைந்தார். செளதி அரசரிடம் மக்களுக்கு அரசில் பங்கு நாடி விண்ணப்பித்தார். அமெரிக்கா அவரை கண்டு கொள்ளவில்லை. ஸெளதி அரசோ உயிருக்கு ஆபத்து என்றது/ எல்லாவற்றிற்கும் மேலாக, மட்டுறுத்தப்பட்ட 28 பக்கங்கள்........?!
    இவை எல்லாம் என்ன சொல்கின்றன?வாட் இஸ் தெ பிக் பிக்சர்?ஹூ டிட் 9/11?
    --
    செல்வன்


    Innamburan Innamburan Mon, Sep 12, 2011 at 5:38 PM




    சில மர்மங்கள் ~சுருக்கமாக:
    வேவு துறைகளை பற்றிய அமெரிக்க நாடாளும் மன்றங்களின் 800 பக்க கூட்டறிக்கை ஜூலை 2004 ல் வெளியிடப்பட்டது, 28 பக்கங்களை தவிர்த்து. புஷ் மூடி வைத்த அந்த மர்மத்தை ஒபாமாவும் அடை காக்கிறார்! ஹேஷ்யங்கள் பல. அமெரிக்க ஆய்வாளர்கள் எதையும் விட்டு வைப்பதில்லை. உசாத்துணையில் சுட்டிருக்கும் நூல், ந்யூஸ்வீக் இதழின் அலசல், ஆகியவை இந்த வகை. அவற்றிலிருந்து, சில துளிகளின் தொகுப்பு:

    1. அக்காலத்து ராணுவ அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட்: ‘இத்தகைய பின்பலம் இல்லாமல் அல்-கொய்தா யாதும் செய்திருக்க முடியாது. இவர்களின் உதவி உண்டு. எனக்கு பல விஷயங்கள் தெரியும். அதனால் தான் அழுத்தம் திருத்தமாக, சொல்கிறேன்.’ விவரம் கேட்டபோது, யோசித்தார். சிக்கல் என்றார். வாயை மூடிக்கொண்டார்.
    2. பாப் கிரஹாம்: அந்த கூட்டறிக்கை கமிட்டி அக்ராசனர்களில் ஒருவர்:‘ஸெளதி அரேபிய அரசும், சில அன்னாட்டு பிரமுகர்களும் இந்த பயங்கரவாதிகளுக்கு (அவர்களில் 15 பேர் அன்னாட்டு மக்கள்) பல உதவிகள் செய்தனர். அவையில்லாமல், இது சாத்தியமே அல்ல.”
    3. அமெரிக்கா-வாழ் அரேபியர் (ஒமர் அல் பயொமி) இரு பயங்கரவாதிகள் அமெரிக்கா வர, காசு கொடுத்தார். மூன்று அரேபியர் மீது சந்தேஹம். ஆனால், ஆக்ஷன் ஒன்றுமில்லை.
    4. இதே மாதிரி அன்வர் அல் லகி என்ற அமெரிக்க இஸ்லாமிய போதகரை தப்பிக்க விட்டார்கள். அவர் இப்போது ஏமன் நாட்டில். அமெரிக்கா அவரை கொலை செய்ய விரும்புகிறது.
    5. பயணிகளால் மீட்கப்பட்ட விமானம் பென்ஸில்வேனியாவில் வீழ்ந்தது. அதை சுட்டு வீழ்த்த ஆணையளித்ததாக அதிபர் புஷ்ஷும், துணை அதிபர் செய்னீயும் சொல்கிறார்கள். ஒருவர் விமானத்தில்; ஒருவர் பாசறையில். இந்த ஆணை பதிவே ஆகவில்லை!
    6. புஷ்ஷும், செய்னியும் தங்கள் வாக்குமூலம் பதிவு செய்யக்கூடாது என்றனர். ஏன்? ஏன்?
    7. ஈரான் இந்த சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிட்டவில்லை; ஆனால். மேற்படி கமிஷன், விமான பயணங்களுக்கு அவர்கள் செய்த உதவிகள் பற்றிய சாக்ஷியங்கள், வலுவான சந்தேஹங்களை கிளப்பின. சர்க்கார் காஷ்ட மெளனம்.
    8. ஈராக் இந்த சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிட்டவில்லை.
    9. ஸெளதி தூதுவர் இளவரசர் பண்டார் பின் சுல்தான், இந்த கமிஷன் தன் நாட்டின் வாய்மையையும், ஈடுபாடாததையும் நிரூபித்து விட்டது என்கிறார், ஒரு துணுக்கு ஆதாரமில்லாமல். 
    10.  எத்தனை டென்ஷன் இந்த ரிப்போர்ட் தயாரிப்பதில்! ராஜேஷ் டேயும் மைக்கேல் ஜாகோப்ஸனும் நோண்டி, நோண்டி எடுப்பதையெல்லாம், ஸ்னெல் குழி பறித்து மூடிக்கொண்டிருந்தார்!
    11.  அந்த கமிஷன் எண்ணெய் உறவு மட்டும் போதாது; வெறி பிடித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் நாட்டம் வேண்டும் என்றது. கேட்பார் இல்லையே.
    12.  9/11 க்கு ஏழு வருடங்கள் முன்னால், முகம்மது அல் கிலெவி என்ற ஸெளதி உயர் அதிகாரி. ஆயிரக்கணக்கான ஆவணங்களுடன் (கொடுங்கோல்; மனித உரிமை பறிப்பு; ஊழல்: பயங்கரவாதம்) அமெரிக்காவில் சரணடைந்தார். செளதி அரசரிடம் மக்களுக்கு அரசில் பங்கு நாடி விண்ணப்பித்தார். அமெரிக்கா அவரை கண்டு கொள்ளவில்லை. ஸெளதி அரசோ உயிருக்கு ஆபத்து என்றது.
     

    No comments:

    Post a Comment